Saturday, August 12, 2017


மதுரையில் வெளுத்து கட்டிய மழை

பதிவு செய்த நாள்12ஆக
2017
05:13

மதுரை: மதுரை மாவட்டம் சாத்தையாறு அணை பகுதியில் நேற்று முன்தினம் மழை வெளுத்து கட்டியது. பெரியாறு, வைகை அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை.தென் மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்களாக மாலையில் துவங்கும் மழை இரண்டொரு மணி நேரம் தொடர்ந்து பெய்கிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி சண்முகாநதி 2 மில்லி மீட்டர், வீரபாண்டி 10, வைகை 1, மஞ்சளாறு 1, மருதாநதி 29:6. பேரணை 39, குப்பணம்பட்டி 5.2, ஆண்டிபட்டி 36.6, மதுரை 20.3, சாத்தையாறு 68, கள்ளந்திரி 11, சிட்டம்பட்டி 1, புளிப்பட்டி 3.2, மேலுார் 7.7, தனியா
மங்கலம் 2, கொடைக்கானல் 1 மி.மீ., என மழையளவு பதிவானது.நீர் வரத்து: பெரியாறு அணைக்கு 261 கன அடி வரத்து இருந்தது. வெளியேற்றம் 75. வைகை வரத்து 9. வெளியேற்றம் 40. சோத்துப்பாறை வரத்து 3. வெளியேற்றம் 3. சண்முகாநதி வரத்து இல்லை.
வெறியேற்றம் 10. மஞ்சளாறு, சண்முகாநதி,சாத்தையாறு அணைகளுக்கு வரத்து, வெளியேற்றம் இல்லை. பெரியாறு, வைகை உள்ளிட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணை நீர் மட்டம் உயரவில்லை.

அணைகள் நீர்மட்டம்
(நேற்றைய நிலவரம்)
பெரியாறு : 112.50 (மொத்தம் 152)
வைகை : 30.51 (71)
சோத்துப்பாறை : 70.52 (126)
மஞ்சளாறு : 30.50 (57)
மருதாநதி : 37.08 (64)
சண்முகாநதி : 20.95 (52)
சாத்தையாறு : - (29)

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...