Saturday, August 12, 2017

நேர்காணலில் பங்கேற்காதவருக்கு ஓய்வூதியம் நிறுத்தம் : முதன்மை செயலர் உத்தரவு


பதிவு செய்த நாள்12ஆக
2017
05:12


மதுரை: நேர்காணலில் பங்கேற்காத, வாழ்நாள் சான்று வழங்காத ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஆகஸ்ட் முதல் ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தும்படி கருவூலகணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் உத்தரவிட்டார்.இதுகுறித்து கருவூல மண்டல இணை இயக்குனர்கள், அலுவலர்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாவது

:ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, ஓய்வூதியர் நேர்காணல் ஏப்., முதல் ஜூலை வரை நடந்தது. 31.7.2017 தேதியின்படி நேர்காணலுக்கு வராதவர்களின் பட்டியல் தயார் செய்ய வேண்டும். நேர்காணலில் வருகை தராததால், ஆக., முதல் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களின் அலைபேசி எண்ணிற்கு, குறுந்தகவல் மற்றும் பதிவு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும், என கூறியுள்ளார்.''மதுரை மாவட்டத்தில் 42 ஆயிரம் ஓய்வூதியர்களில், 700 பேர் நேர்காணலில் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு ஓய்வூதியம் ஆகஸ்ட் முதல் நிறுத்தப்படும்,'' என, மாவட்ட கருவூலர் ஏ.ஜி.முரளி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

செல்வத்துப் பயனே ஈதல்!

 செல்வத்துப் பயனே ஈதல்! DINAMANI  10.12.2025  "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தே...