Saturday, August 12, 2017

4 நாட்கள் தொடர் விடுமுறை : கோயம்பேட்டில் நெரிசல்

பதிவு செய்த நாள்12ஆக
2017
00:01




சென்னை: நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, பல ஆயிரம் பேர், சொந்த ஊர் செல்ல திரண்டதால், கோயம்பேடு பகுதி, போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது. மழையும் பெய்ததால், பயணியர் பெரிதும் திணறினர்.

சனி, ஞாயிறு, கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தின விழா என, நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. இதனால், சென்னையில் வசிக்கும், பல ஆயிரம் பேர், நேற்று ஒரே நாளில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, சொந்த ஊர் செல்ல முயன்றனர். இதனால், அப்பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்துடன், நேற்று மாலை திடீரென மழை வெளுத்து வாங்கியதால், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றி வட்டார பகுதிகள் மழை நீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளித்தது. இதனால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், வடபழனி, 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மதுரவாயல் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், வாகனங்கள் நெரிசலில் சிக்கி, பல மணி நேரம், ஒரே இடத்தில் முடங்கின. இதுபோல், சென்னையின் பல பகுதிகளிலும், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதுகுறித்து, பயணியர் கூறியதாவது: போலீசார் மற்றும் போக்குவரத்து துறையின் குளறுபடியால், சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கி தவிக்கிறோம். போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய, போதிய போலீசார் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். பயணியர் வசதிக்காக, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

No comments:

Post a Comment

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer  The new SOP requires official government mandates, structured trai...