Friday, September 15, 2017

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முயற்சி: முதல்வர் உறுதி அளித்ததாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தகவல்

Published : 15 Sep 2017 08:03 IST

சென்னை



அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதாக தங்களிடம் முதல்வர் உறுதியளித்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருபிரிவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒரு பிரிவினர், தற்போதைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் உள்ளனர். முதல்வர் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். இந்நிலையில் அப்பிரிவைச் சார்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன் (தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர்), பெ.இளங்கோவன் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர்), தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் கே.மணிவாசகன் உள்ளிட்டோர் நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்துப் பேசினர்.


இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் இல்லாமல் இருப்பின் அக்டோபர் மாதத்தில் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இல்லையென்றால் 20 சதவீத இடைக்கால நிவாரணம் அளிக்கப்படும் என்று முன்பு முதல்வர் அளித்திருந்த அதே உறுதிமொழியை இப்போது மீண்டும் அளித்துள்ளார். அதேபோல், சிபிஎஸ் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு எந்த சூழ்நிலையிலும் காலநீட்டிப்பு செய்யப்படாது. முடிந்தவரை புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.

எனவே, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்கள் போராட்டத்தை அக்டோபர் வரை தள்ளிவைத்துவிட்டு பொறுமை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கணேசன் கூறும்போது, “கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, புதிய ஊதிய விகிதம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை செப்டம்பர் 30-ம் தேதி கிடைத்ததும் நடவடிக்கை எடுப்பதாகவும், சிபிஎஸ் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை நவம்பர் 30-ம் தேதி கிடைக்கப் பெற்றதும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் உறுதி அளித்தார். அதை ஏற்றுத்தான் எங்களின் போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளோம்” என்றார்.

இரா.சண்முகராஜன் கூறும்போது, “கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜாக்டோ-ஜியோவின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரக் கூடியவர் முதல்வர்தான். அவர் கொஞ்சம் அவகாசம் கேட்டுள்ளார். அந்த வகையில்தான், ஜனநாயகத்தின் அடிப்படையில் அவருக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

வேலூர் சி.எம்.சி பற்றி தெரியாத 6 விஷயங்கள்!

வேலூர் சி.எம்.சி
'மருத்துவர் ஆவதற்கு நீட் மட்டும் தகுதி அல்ல; சேவை மனப்பான்மையும் வேண்டும்' எனக் கூறி மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்த, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் செயல்பாட்டை சமூக ஆர்வலர்கள் வரவேற்கின்றனர். " இன்று நேற்றல்ல, 100 ஆண்டுகாலமாக மருத்துவப் படிப்பில் தனக்கான சுய அடையாளத்தோடு செயல்படுகிறது வேலூர் சி.எம்.சி" என்கின்றனர் மருத்துவர்கள். 
ஐடா ஸோபியா ஸ்கடர் என்ற அமெரிக்கப் பெண்மணியால் 1900-ம் ஆண்டில் நர்சிங் பள்ளியாகத் தொடங்கப்பட்டது வேலூர் கிறிஸ்துவக் கல்லூரி. 'தன்னைப் போலவே நிறைய பெண்களை மருத்துவப் பணிக்குக் கொண்டு வரவேண்டும்' என்ற நோக்கில் அவர் உருவாக்கியதுதான் இந்தப் பள்ளி. 1918-ம் ஆண்டில் இங்கு எல்.எம்.பி (லைசன்ஸ்டு மெடிக்கல் பிராக்டிஷனர்) என்ற மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டது. 1942-ல் எம்.பி.பி.எஸ் படிப்பை அளித்து வந்தனர். தற்போது எம்.பி.பி.எஸ், நர்சிங் உள்பட 179 வகையான படிப்புகள் இங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்காக மாணவ சமூகமே கொந்தளித்துக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தது வேலூர் சி.எம்.சி மட்டும்தான். 
வேலூர் சி.எம்.சி
இந்தியாவின் டாப் ரேங்கிங் கல்வி நிறுவனங்களில் ஒன்றான, வேலூர் சி.எம்.சி பற்றி வெளியில் தெரியாத சில விஷயங்களைப் பார்ப்போம். 
ஐடா1. பெண்களுக்காக செயல்பட்ட முதல் மருத்துவக் கல்வி நிறுவனம் என்னும் பெருமையை தன்னகத்தே கொண்டது வேலூர் சி.எம்.சி. தொடக்க காலங்களில் 100 சதவிகித மருத்துவக் கல்வி இடத்தையும் பெண்களுக்கே வழங்கியது சி.எம்.சி. இதற்குக் காரணம், அந்தக் காலகட்டங்களில் ஆண்கள் பிரசவம் பார்ப்பதை சமூகம் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பிரசவ மரணங்கள் நிகழ்வதைக் கண்டு வெதும்பி, வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலூர் திரும்பினார் ஐடா. பிரசவ மரணங்களைத் தடுக்க, அதிகளவிலான பெண்கள் மருத்துவர்கள் ஆக வேண்டு ம் என்ற நோக்கத்திலேயே 100 சதவிகித இடங்கள் அவர்களுக்கே ஒதுக்கப்பட்டது. 
2.  100 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட இக்கல்வி நிறுவனத்தில் 1918-47 வரை பெண்களை மட்டுமே மருத்துவ மாணவர்களாக சேர்த்துக்கொண்டிருந்துள்ளனர். 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்பன போன்ற மூட நம்பிக்கைகள் உலவிய காலத்தில், ஏராளமான பெண் மருத்துவர்களை உருவாக்கிக் காட்டியது வேலூர் சி.எம்.சி. 
3. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னரே இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்ட போதும், பெண்களுக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்கியது இக்கல்லூரி. இன்றளவும் மாணவிகளே இங்கு அதிகம் படிக்கின்றனர்.  
4. ’நீட்’ நுழைவுத்தேர்வு முறையை பலவித ஏற்றத்தாழ்வுகளுடன் இன்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும் இந்தியாவிலேயே முதன்முறையாக 1970-ம் ஆண்டிலேயே அனைவருக்கும் பொதுவான நுழைவுத்தேர்வு முறையையும் நேர்முகத் தேர்வு முறையையும் அறிமுகப்படுத்தியது வேலூர் சி.எம்.சி. இதன் நுழைவுத்தேர்வு வழிமுறைகளைத்தான் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் கடைபிடித்துவருகின்றன.  
5. மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது, இரண்டரை நாள்கள் சில அடிப்படைத் தேர்வுகளை நடத்துகிறது வேலூர் சி.எம்.சி. மாணவர்களின் தனித்தன்மையை பரிசோதிக்கும் வகையிலும் மருத்துவ சேவைக்கு அவர்கள் தகுதியானவர்கள்தானா என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தத் தேர்வு முறை அமைந்திருக்கிறது. இதில் மாணவர்களின் பதிவு எண்ணுக்குப் பதிலாக டம்மி எண்கள் கொடுக்கப்படுகின்றன. எந்த மாணவர் எவ்வளவு மதிப்பெண் எடுத்தார் என்பது யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியம் காக்கப்படுகிறது. உலகின் சிறந்த தேர்வு முறையாக வேலூர் சி.எம்.சி-யின் அணுமுகுறையைச் சொல்கின்றனர். முதன்முதலில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்த வேலூர் சி.எம்.சிக்கு கடந்த ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களும் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்ட நிலையில், வேலூர் கிறிஸ்தவக் கல்லூரி மட்டும் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரையில் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் துணிச்சலான முடிவை அறிவித்துள்ளது. 
6. இந்தியாவில் 20 மருத்துவமனைகளை நிர்மானித்து, அந்த மருத்துவமனைகளுக்கான சிறந்த மருத்துவர்களை உருவாக்கி அனுப்பி வைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆண்டுக்கு வெறும் 3,000 ரூபாய் கல்விக் கட்டணம் கொண்ட இந்நிறுவனத்தில் படிக்கத் தேர்வு செய்யப்படும் ஒருவர், 3 ஆண்டுகள் கிராமப்புற சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகின்றனர். இதுபோன்ற ஒப்பந்த முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமை வேலூர் சி.எம்.சியையே சாரும். 
“அடித்தட்டு மக்களுக்கான மருத்துவர்களை உருவாக்குவதே ஒரே பணி” என்ற கொள்கையுடன் இதுவரையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 100 ஆண்டுகள் பாரம்பர்யம் நிறைந்த இக்கல்வி நிறுவனத்தின் 100-ம் ஆண்டு விழா வருகிற 2018-ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மாணவர்கள் நிரம்பி வழிவார்களா என்ற கேள்விக்குறியோடு சி.எம்.சி மருத்துவக் கல்லூரி வளாகத்தை வலம் வருகின்றனர் மாணவர்கள்.
 

போராட்டங்களும், நீதிமன்றங்களும்... ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் என்ன சொல்கிறார்?

இரா.தமிழ்க்கனல்




பணமுடக்கம், ஜிஎஸ்டிக்கு அடுத்து நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவருகின்றன. ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் இணைந்த போராட்டமும் இதில் அடக்கம். இந்தப் போராட்டங்களுக்கு எதிராக நீதிமன்றம்வரை சிலர் போக, சில நீதிபதிகளின் அதிரடித் தீர்ப்புகளும்வெளியாகின.

அரசமைப்புச் சட்டத்தின்படி நீதிமன்றங்கள் வழங்கும் உத்தரவுகள், தீர்ப்புகளைத் தவிர, நீதிபதிகள் சிலர் வாய்மொழியாகத் தெரிவிக்கும் கருத்துகள் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன. நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தடைவிதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பாதிக்காதபடி நடத்தலாம் என்று கூறியது. அதையடுத்து, அரசு ஊழியர் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அதிக ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்கள் போராடக்கூடாது என்றெல்லாம் குறிப்பிட, அது சர்ச்சையாகி உள்ளது.

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான போராடும் உரிமையை கூடாது என நீதிபதி கூறுவதற்கு சட்ட முகாந்திரம் உள்ளதா என்பது எழுத்தாளர்கள், கலைஞர்கள், உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இது குறித்து உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கேட்டோம். சட்டரீதியான விசயங்களை நம்மிடம் அவர் விவரித்தார்.

“ஜி.எஸ்.மணி என்ற வழக்குரைஞர், நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்தக்கூடாது என்று ஒரு பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் போட்டார். இந்தப் போராட்டங்கள் சில அரசியல் கட்சிகளின் ஆதாயங்களுக்காக நடத்தப்படுவதாகக் கூறினார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், கடந்த 8ஆம் தேதி ஓர் உத்தரவு பிறப்பித்தது.

முதலில், நீட் தேர்வை எதிர்த்த போராட்டம் வேண்டாம் என்று கூறும் திரு. ஜி.எஸ். மணியின் கோரிக்கையில், அரசியல் ஆதாயம் இல்லையா? மத்திய அரசும் மாநில அரசும் கோருவது அதைத் தானே?

உச்ச நீதிமன்றம், மேற்சொன்ன இடைக்கால உத்தரவில், அமைதியான முறையில் போராடும் உரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டம் வழங்கி இருப்பதால், வன்முறையின்றி போராடலாம் என்று கூறியது. ஆனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாதபடி நீட் தேர்வை எதிர்த்த போராட்டங்கள் நடத்தலாம் என்றும் சட்டம் ஒழுங்கு பாதிக்கையில் அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19, இந்திய மக்களுக்கு சில அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. குறிப்பாக, பிரிவு 19(1) (ஏ), கருத்துசுதந்திரத்தை வழங்குகிறது. 19(1)(பி), ஆயுதமின்றி அமைதியாகக் கூடுவதற்கான உரிமையை வழங்குகிறது. அதாவது, பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்கள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று மக்கள் கூடி கருத்துகளை அமைதியான வழியில் தெரிவிக்கும் உரிமையை, அரசமைப்புச் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்குகிறது.

ஆனால், அரசமைப்புச் சட்டம் பிரிவு 19(2) கருத்துரிமைக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அத்தகைய கட்டுப்பாடுகளில், அரசமைப்புச் சட்டம் குறிப்பிடுவது என்னவென்றால், பொது ஒழுங்கை (public order) குலைக்கும்வகையில், கருத்துச்சுதந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான்.

அரசமைப்புச் சட்டம், சட்டம் ஒழுங்கை (law and order) பாதிக்கும்நிலை இருந்தால், கருத்துரிமையைப் பயன்படுத்தக்கூடாது என்று ஏதும் கூறவில்லை. அதற்கு மாறாக பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்காமல் கருத்துச்சுதந்திரம் இருக்கவேண்டும் என்கிறது.
சட்டம் ஒழுங்கு என்பது வேறு, பொது ஒழுங்கு என்பது வேறு. சட்ட ஒழுங்குப் பிரச்னை என்பது மிகச் சாதாரணமானது. அதைக் கூறி, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்க முடியாது. ஆனால் பொது ஒழுங்குக்கு பாதிப்பை உண்டாக்கும்வகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்த அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை.

பொது ஒழுங்குக்குக் குந்தகம் என்பதை விளங்கிக்கொள்ள, மூன்று உதாரணங்களைப் பார்க்கலாம்.

அரியானாவில் குர்மீத் ராம் ரகிம்சிங் சாமியார் வழக்கில் தீர்ப்பு சொல்வதற்கு நீதிபதி தனி ஹெலிகாப்டரில் செல்லும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாக இருந்தது. பொதுச்சொத்துக்கு மிகுந்த சேதம் ஏற்படுத்தப்பட்டது. 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. அதாவது பொது ஒழுங்கு (public order) பாதிக்கப்பட்டது. இம்மாதிரி பொது ஒழுங்கு பாதிக்கப்படும்போது, ஒருவர், அரசமைப்புச்சட்டம் கருத்துரிமையை அடிப்படை உரிமையாக வழங்குகிறது என்றும் மேற்சொன்னபடியான பொது ஒழுங்கை பாதிக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்றும் கூறமுடியாது. பொது ஒழுங்கை பாதிக்கும் அந்த மாதிரியான கூட்டங்களை, போராட்டங்களைத் தடுக்க அரியானா அரசும் முன்வரவில்லை. எவரும் உயர் நீதிமன்றத்தையோ உச்ச நீதிமன்றத்தையோ அணுகி, இப்படிப்பட்ட பொது ஒழுங்கை பாதிக்கும் கூட்டத்தைத் தடுக்கவேண்டும் என்று கோரவும் இல்லை.

இரண்டாவதாக, முன்னர் கன்னையாகுமார் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் விசாரிக்கச் சென்ற மூத்த வழக்கறிஞர்களையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களையும் பேராசிரியர்களையும் உச்ச நீதிமன்றத்திலிருந்து 500 அடி தொலைவே உள்ள பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் இந்துத்துவாவாதிகள் தாக்கியபோது, உச்ச நீதிமன்றமோ டெல்லி உயர் நீதிமன்றமோ ஏதும் செய்யவில்லை. நீதிமன்றத்திலேயே தாக்குதல் நடத்துவது பொது ஒழுங்குக்குக் குந்தகம் இல்லையா?

மூன்றாவதாக, 2002-ல் குஜராத்தில் அப்பாவி இந்துக்கள் கோத்ரா ரயிலில் தீவைத்து எரிக்கப்பட்ட பின், அவர்களின் சடலங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்றதை அடுத்து, சுமார் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். பொதுச்சொத்துக்களுக்கு இழப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டது. இது, பொது ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு. எனவே, கருத்துரிமை எனும் பெயரால் அப்படி ஒரு பிண ஊர்வலத்தை நடத்தமுடியாது.

ஆனால் அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கைப் பற்றி கீழ்வரும் உச்ச நீதிமன்ற வழக்கு தெளிவாக்கும்.

இந்து பத்திரிகைக் குழுமமானது, ‘ஒரே ஒரு கிராமத்திலே’ எனும் தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தது. அத்திரைப்படம், அரசமைப்புச் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுகிறது; இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்று காரணம் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் இத்திரைப்படத்தைத் திரையிடுவதற்கான அனுமதிச் சான்றை ரத்துசெய்து தீர்ப்பளித்தது. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இம்மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அதில், அரசமைப்புச் சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும் கருத்துச்சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது என்றும் அந்த அடிப்படை உரிமையை எந்த அரசும் சட்டம் ஒழுங்கு எனக் காரணம்கூறி பறிக்கமுடியாது என்றும் அப்படிப் பறிக்கமுயன்றால் உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் அரசின் அச்செயலை ரத்துசெய்வதுடன் அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையைத் தூக்கிப்பிடிக்கவேண்டும் என்றும் கூறியது.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக, நீட் எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக, வன்முறையின்றி, அறவழியில், காந்திய வழியில் நடைபெறுகிறது. மேற்சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், தமிழக அரசு அமைதிவழியில் போராடுபவர்களை வழக்குப்போட்டு கைதுசெய்யப் பயன்படுத்திக்கொள்கிறது. தமிழக அரசின் செயல், உச்ச நீதிமன்றம் ‘ஒரே ஒரு கிராமத்திலே’ வழக்கில் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்கு விரோதமானது.

ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 01-01-2016 முதல் ஊதியத்தைத் திருத்தி கூடுதல் ஊதியம் அளித்த்தைப் போல, பறிக்கப்பட்ட ஓய்வூதிய உரிமையைத் திருப்பி அளிக்கவேண்டும் என்றும் அமைதியான வழியில் வன்முறையின்றிப் போராடுகின்றனர்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1) (சி), சங்கம் வைக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக வழங்குகிறது. சங்கம் வைக்க அடிப்படை உரிமையை அளித்துவிட்டு, அமைதியாகக்கூடப் போராடக்கூடாது என்றால் அது பெரிய மோசடித்தனம், அல்லவா?

போராட்டம் தொடர்பாக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வேறு. ஒழுங்கு நடவடிக்கை எடுத்து என்ன தண்டனை வேண்டுமானாலும் அளிக்கலாம். தண்டனையை எதிர்த்து ஊழியர்கள் உயர் நீதிமன்றத்துக்குத்தான் வரவேண்டும். எனவே போராட்டத்தைப் பற்றி உயர் நீதிமன்றம் நடுநிலைமை வகிக்கவேண்டும்; போராட்டம் பற்றி கருத்து ஏதும் சொல்வது சரியாகாது.

போராட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் கருத்துக் கூறினால், ஊழியர்களுக்கு நீதிமன்றத்தின் மீது எப்படி நம்பிக்கை உண்டாகும்? ஆனால் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். போராட்டத்தில் வன்முறை ஏதும் இருக்கக்கூடாது.

ஒரு முறை, பாரத் பெட்ரோலியம் நிறுவன வேலைநிறுத்தம் நடந்தபோது, நீதிபதி சந்துருவிடம், போராட்டம் சட்டவிரோதம் என அறிவிக்குமாறு வழக்கு வந்தது. அதற்கு உனக்குத் துணையாக வராது என அவர் தீர்ப்பு கூறிவிட்டார். என்னிடம் நெய்வேலி என்.எல்.சி. போராட்டத்தின்போது இப்படியொரு மனு வந்தபோது, போராடும் தொழிற்சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் கேட்டு உத்தரவிட்டு, இரண்டு வாரத்துக்கு விசாரணையைத் தள்ளிவைத்தேன். ஆனால் அதிகாரிகள் தரப்பில், பெஞ்சுக்குச் சென்று போராட்டத்துக்குத் தடை வாங்கிவிட்டார்கள். அந்த உத்தரவை 10 ஆயிரம் தொழிலாளர்களும் எதிர்த்தார்கள். அவர்கள் அத்தனை பேரையும் அழைத்து அவமதிப்பு வழக்கா போடமுடியும்? எனவே, அரசமைப்புச் சட்டத்தின்படி பொது ஒழுங்கு கெடாதபடி நீதிமன்றங்கள் அக்கறை செலுத்துவது பொருத்தம்” என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொன்னார், நீதிபதி ஹரிபரந்தாமன்.

அவருடைய வார்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தின் மீதான அக்கறையையும் மரியாதையும் வெளிப்படுத்துகின்றன.

பொங்கலுக்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு இன்று தொடக்கம்


By DIN  |   Published on : 15th September 2017 02:55 AM 
trains

வரும் ஆண்டு (2018) பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குச் செல்வதற்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (செப். 15) காலை முதல் தொடங்கப்படவுள்ளது.
வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வெள்ளிக்கிழமை முதல் ரயில் பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்யலாம். பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஏராளமானோர் ஜனவரி 12 ஆம் தேதியே சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் ஜனவரி 12 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் வெள்ளிக்கிழமை (செப். 15) முதல் முன்பதிவு மேற்கொள்ளளலாம். அதேபோல ஜனவரி 13 ஆம் தேதி ஊருக்குச் செல்ல முன்பதிவு செய்பவர்கள் செப். 16(சனிக்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம்.
பயணிகளின் வசதிக்காக 4 மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை, வரும் ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் 16 வரை கொண்டாடப்படுகிறது. இதேபோல், பொங்கல் முடிந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது.


நாட்டின் தூய்மையான கல்வி நிறுவனங்கள்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில் தமிழகம் முன்னிலை


By DIN  |   Published on : 15th September 2017 01:52 AM  |  
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட நாட்டிலுள்ள தூய்மையான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் 12 இடங்களைப் பிடித்துள்ளன.
இதுகுறித்து அந்தத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தூய்மையான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற நாடு முழுவதிலும் இருந்து 3,500 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.
அவற்றில் 174 கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வின் முடிவில் முதல் 25 இடங்களைப் பிடித்த கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
முதல் 50 இடங்களில் அரசு கல்வி நிறுவனங்கள் ஒன்றுகூட இடம்பெறவில்லை. எனவே, அதற்கென்று தனி ஒரு பிரிவை உருவாக்கியிருக்கிறோம் என்றார் ஜாவடேகர்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் என 4 பிரிவுகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன.
தூய்மையான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் பின்வருமாறு:
ஹரியாணா மாநிலம், சோனிபட் நகரில் உள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகப் பிரிவில் முன்னிலை பெற்றுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 12 கல்வி நிறுவனங்கள்:
கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (ஈரோடு), அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் (கோவை), எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி (கோவை), கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (கோவை), ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி (சென்னை), ஆர்எம்டி பொறியியல் கல்லூரி (சென்னை), ஆர்எம்கே பொறியியல் கல்லூரி (சென்னை), விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (திருச்செங்கோடு), விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி (திருச்செங்கோடு), ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சென்னை), காமராஜ் பல்கலைக்கழகம் (மதுரை), அழகப்பா பல்கலைக்கழகம் (காரைக்குடி) ஆகிய நிறுவனங்கள் அந்தப் பட்டியலில் இடம்
பெற்றுள்ளன.
    ஆண்டாள் கோயிலில் நைவேத்தியம் : படி அளக்கும் அன்னை பட்டினி நிறுத்தம்
    பதிவு செய்த நாள்15செப்
    2017
    06:12


    ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில், முக்கிய நைவேத்தியங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. படி அளக்கும் அன்னை பட்டினி கிடப்பதாக பக்தர்கள் குமுறுகின்றனர்.

    ஆண்டாள் அவதரித்து பெருமாளுக்கு பாமாலையும் பூமாலையும் சூடிக்கொடுத்த பெருமையுடைய தலம் ஸ்ரீவில்லிபுத்துார்.குளிர்விக்கும் நைவேத்தியங்கள்ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம். காலை 8:30 மணி காலசந்தி. மதியம் 12:00 மணி உச்சிக்காலம். மாலை 6:00 மணி சாயரட்சை. இரவு 8:00 மணி அத்தாளம். இரவு 9:00 மணி அரவணை என தினமும் ஆறு கால பூஜைகள். வடபத்ர சயனர் சன்னதியில் காலை 7:00 மணி விஸ்வ ரூபம். காலை 9:00 மணி காலசந்தி.மதியம் 12:00 மணி
    உச்சிக்காலம். மாலை 6:00 மணி சாயரட்சை. இரவு 8:00 மணி அத்தாளம். இரவு 8:30 மணி அரவணை என தினமும் ஆறு கால பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் வேளாண்மை செழித்து ஓங்கும் என்பது ஐதீகம்.அரசியலும் ஆண்டாள் கோயிலும்கோயில் நிலங்களை அரசியல் கட்சியினர் அபகரிக்கத்துக்கொண்டு வருவாயை வழங்குவது இல்லை. இதனால் பூஜைக்கான செலவுகளை ஈடுகட்ட தனியார் பங்களிப்பை நிர்வாகம் நாடியது. 

    சிறப்பு தரிசனம், கட்டண தரிசனம் என நிர்ணயித்து கிடைக்கும் வருவாயில் நைவேத்தியம், பராமரிப்பு செலவுகளை சரி செய்தனர். கோயில் நிலங்களை மீட்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கவும் அறநிலையத்துறை எள் முனையளவு கூட முயற்சிக்கவில்லை.

    பல கோடி ஊழல் : அறநிலையத்துறை கோயில்களின் வருவாயை கணக்கிட்டு மூன்று பிரிவுகளாக்கினர். ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ள கோயில்கள் தரம் ஒன்று. 2 லட்சம் ரூபாய்க்கு மேல் 10 லட்சம் ரூபாய்க்குள் தரம் இரண்டு. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் தரம் மூன்று என பிரிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் தரக் கோயில்களுக்கு அறநிலையத்துறை நிதி வழங்காது. அனைத்து செலவுகளும் கோயில் வருவாய் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில்கள் வந்த பின் கோயில்களின் நில வருவாய், முடங்கியது. நன்கொடைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது.

    படி அளக்கும் ஆண்டாள் பட்டினி : கோயிலில் தினசரி நடக்க வேண்டிய அத்தாளம் இரவு 8:00 மணி பூஜை நடக்கவில்லை. தினமும் ஆறுகால பூஜைக்கு, நித்ய ஆராதனை கட்டணமாக பக்தர்கள் ரூ.5000 வீதம் செலுத்துகின்றனர்.இதில் ஆறு வேளை பூஜைக்கு 36 படி (54கி) அரிசி பிரசாதம் அம்மனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். ஒரு வேளைக்கு 9 கி., அரிசி பிரசாதம் படையல் செய்ய வேண்டும். அத்தாளம் பூஜை 1990 முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், இத்தனை ஆண்டுகளாக அத்தொகை எங்கே போயிற்று எனத்தெரியவில்லை. மீதி உள்ள ஐந்து வேளையும் ஒரே பிரசாதம் தான் படையல் செய்வதாக புகாரும் உள்ளது. உச்சிகால பூஜையில் முன்பு வழங்கும் சாப்பாடு தற்போது நிறுத்தப்பட்டது. இப்படி படி அளக்கும் அன்னை பசித்திருக்கிறாள். நித்திய ஆராதனை கட்டணம் ஒரு கோடி ரூபாய், வங்கியில் உள்ளது. நைவேத்தியங்கள் தடையின்றி நடக்க தேவையான வருவாய் ஆதாரங்கள் இருக்கிறது. அதை வைத்து முறையாக பூஜை, நைவேத்தியம் நடக்காதது பக்தர்களுக்கு வருத்தம் தருகிறது. நன்கொடை மூலம் நடக்கும் அன்னதானம் 100 பக்தர்க்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கோயில் நிதியில் இருந்து அதிக பக்தர்களுக்கு வழங்கலாம்.செயல் அலுவலர் சா.ராமராஜா கூறியதாவது: 1975ல் பஞ்சம் ஏற்பட்டது. நைவேத்தியத்திற்கு அரிசி கூட விலைக்கு வாங்கும் நிலை. இதனால் நைவேத்தியம் முழுமையாக நடக்கவில்லை. தற்போது உப கோயில்களான வடபத்ர சயனர், பெரியாழ்வார், கிருஷ்ணன், திருவண்ணாமலை ஸ்ரீநிவாசன், ஸ்ரீரெங்கர், ஸ்ரீகாட்டழகர் கோயில்களில் தினமும் 30 படி அரிசி மூலம் நைவேத்தியம் செய்வித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. உச்சிக்கால பூஜைக்கு பின் அன்னதானம், நித்திய ஆராதனை கட்டணம் மூலம் கிடைக்கும் வட்டி தொகையில் பூஜைகள், பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. அத்தாள பூஜை ஏற்பாடுகள் நடக்கின்றன, என்றார்.
    பாரதியார் பல்கலை., 'செனட்' தேர்தலில் தொடரும் முறைகேடு! : ஒட்டு மொத்தமாக வாங்கி ஓட்டு போட்டதாக புகார்
    பதிவு செய்த நாள்15செப்
    2017
    01:01


    கோவை பாரதியார் பல்கலை, 'செனட்' தேர்தலில், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்திருப்பதாக புகார் இருந்த நிலையில், தற்போது ஓட்டுப்பதிவிலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை பாரதியார் பல்கலை ஆட்சி மன்றக் குழு - செனட், உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல், 27ம் தேதி நடக்கவுள்ளது.
    பல்கலை எல்லைக்குட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், பட்டதாரிகள் தொகுதியின் சார்பில், 'செனட்' உறுப்பினர்கள் தலா இருவர் தேர்வு செய்யப்படுவர். இதில் தேர்வாகும் உறுப்பினர்களே, சிண்டிகேட் தேர்தலில் ஓட்டளிக்கவும், போட்டியிடவும் முடியும்.

    மொத்தமா போட்டாச்சு : சிண்டிகேட் உறுப்பினர் பதவியைத் தக்க வைக்கவும், மீண்டும் போட்டியிடவும் பலரும் எப்படியாவது, 'செனட்' தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என, தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். திட்டமிட்டே, சிலரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகள் இருந்ததாக, முதலில் புகார் எழுந்தது. பட்டியலை சரி செய்த பின், தேர்தலை நடத்த வேண்டுமென்றும், தேர்தலை தள்ளி வைக்குமாறும், அனைத்து பல்கலை ஆசிரியர் சங்கம் கோரியது.
    அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால், தேர்தலில் அடுத்தடுத்து முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன. கோவை மாவட்ட பட்டதாரி தொகுதியில், தற்போதுள்ள சிண்டிகேட் உறுப்பினர்கள் சரவணகுமார், வீரமணி ஆகியோரும், இவர்களை எதிர்த்து சண்முகசுந்தரம், செங்குட்டுவன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்களில், சரவணகுமாரை எப்படியாவது வெற்றி பெற வைக்க, பல்கலை நிர்வாகமே முயற்சி எடுப்பதாக புகார் எழுந்தது. பட்டதாரிகளுக்கு தபாலில் அனுப்பிய ஓட்டுச் சீட்டுகளை மொத்தமாகக் கைப்பற்றி, இவர்கள் இருவருக்கும் ஓட்டு போட்டுள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது.

    புகார் : தேர்தலுக்கான ஓட்டுச் சீட்டுகள், 7ம் தேதியில் இருந்து வினியோகிக்கப்படுகின்றன. வால்பாறையில் உள்ள பாரதியார் பல்கலை உறுப்புக் கல்லுாரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள், 86 பேருக்கு, ஓட்டுச்சீட்டு படிவங்கள், கடிதத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, வால்பாறை கல்லுாரி முதல்வர் ரமேஷ், அலுவலக உதவி யாளர்கள் வித்யா, அருண் விஜய் ஆனந்த் ஆகியோரே வாங்கி, சரவணகுமார், வீரமணிக்கு ஓட்டுப் போட்டு திருப்பி அனுப்பி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பட்டதாரி தொகுதி வாக்காளர் கருணாகரன் என்பவர், துணைவேந்தருக்கு புகார் அனுப்பியுள்ளார். 

    வேட்பாளர்களான சண்முகசுந்தரம், செங்குட்டுவன் ஆகியோரும், இந்த முறைகேட்டைக் குறிப்பிட்டு, தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துஉள்ளனர்.

    உயர் கல்வித் துறை செயலர் பங்கேற்ற சிண்டிகேட் கூட்டம் நடந்த நிலையில், இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    இதேபோன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு முடிந்த பின்னும், ஏராளமான வாக்காளர் பெயர்கள், கோவை மாவட்ட வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் மற்றொரு புகார் உள்ளது.
    நீலகிரியில், கூடலுார் உறுப்புக் கல்லுாரியில் மட்டுமே, பல ஆயிரம் மாணவ - மாணவியர் படித்து வெளியேறியுள்ள நிலையில், வெறும், 370 வாக்காளர் பெயர்கள் மட்டும் பட்டதாரி தொகுதியில் பதிவு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக பலரும் சந்தேகம் எழுப்பிஉள்ளனர்.

    தம்பதி வெற்றி! : நீலகிரி தொகுதியில், தம்பதியான ஜெயபால் - பரமேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜெயபால், ஏற்கனவே கவர்னர் நியமனத்தில், சிண்டிகேட் உறுப்பினராகவுள்ளார். அவரது, 'செனட்' பதவிக்காலம் முடிய உள்ளதால், அவர் பட்டதாரி தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பட்டதாரிகளின் பெயர்களை பதிவு செய்ய விடாமல், இருட்டடிப்பு நடந்ததன் பின்னணி, இது தான் என்று குமுறுகின்றனர், நீலகிரி பட்டதாரிகள். இவ்வாறு, பலவிதமான முறைகேடுகளும், 'செனட்' தேர்தலில் அடுத்தடுத்து அரங்கேறி வருவதால், தேர்தலை ரத்து செய்து, மீண்டும் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், குறிப்பிட்ட சிலரது, 'சிண்டிகேட்' உறுப்பினர் பதவியைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக, பல்வேறு முறைகேடுகளுடன், 'செனட்' தேர்தல் நடந்து வருகிறது. இவற்றை, தமிழக உயர் கல்வி துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

    - நமது சிறப்பு நிருபர் -
    சிக்னலில் நீண்ட நேரம் நிற்பதா? : மறியலில் ஈடுபட்ட பயணியர்
    பதிவு செய்த நாள்15செப்
    2017
    00:50




    அரக்கோணம்: சிக்னலில் நீண்ட நேரமாக ரயில் நிற்பதை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட பயணியரை, ரயில்வே போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து, அரக்கோணம் வழியாக, சென்னைக்கு தினமும் காலை, 7:40 மணிக்கு, பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. அதே போல், காலை, 6:25 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பதிக்கு சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

    நடவடிக்கை இல்லை : இந்த, இரண்டு ரயில்களும், வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டையில் உள்ள சிக்னலில், தினமும், 40 நிமிடம் வரை நிறுத்தப்படுகிறது. 

    இதனால் வேலைக்கு செல்வோர், கல்லுாரி, பள்ளி மாணவ - மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பயணியர் பல முறை புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை, 7:40 மணிக்கு, மங்கம்மாபேட்டை சிக்னலில், வழக்கம் போல், இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டன. 

    இதனால் ஆத்திரம் அடைந்த பயணியர், காலை, 8:00 மணிக்கு, இரண்டு ரயில்களையும் மறித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர், ரயில் இன்ஜின் மீது ஏறி, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். அரக்கோணம் ரயில்வே போலீசார், மறியல் செய்த பயணியரிடம் பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சில், பயணியர் ஏற்க மறுத்து, ரயில் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    3 மணி நேர தாமதம் : இதனால் ரயில்வே போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின், இரண்டு ரயில்களும், மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. 

    இதனால் திருத்தணி - சென்னை மார்க்கத்தில் சென்ற மின்சார ரயில்கள் தாமதமாக சென்றன.
    ஆறு மருத்துவ கல்லூரிகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் அனுமதி
    பதிவு செய்த நாள்15செப்
    2017
    01:32

    சென்னை: மதுரை, அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி உட்பட, ஆறு இந்தியமுறை மருத்துவக் கல்லுாரிகளுக்கு, இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

     தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளை நடத்தும், ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள், 22 சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. 

    இதில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும், 15 சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளுக்கு, ஆயுஷ் அமைச்சகம் ஏற்கனவே அனுமதியளித்துள்ளது. அதேநேரத்தில், மதுரை, அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி உட்பட, எட்டு மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள கட்டமைப்பு மற்றும் பேராசிரியர் வசதிகள் அடிப்படையில், மதுரை அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரியில், 50 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கிடைத்து உள்ளது. மேலும், ஐந்து சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், 300 இளநிலை; 21 முதுநிலை படிப்புகளுக்கும், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.கோவையில் உள்ள, இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், இந்தாண்டில், மாணவர் சேர்க்கை நடத்த அரசு தடை விதித்து உள்ளது.
    சிலம்பு எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிப்பு

    பதிவு செய்த நாள்14செப்
    2017
    23:44

    சென்னை: சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், வழக்கமான நேரத்தை விட, 50 நிமிடங்கள் முன்னதாக, செங்கோட்டை சென்றடையும்.

    சென்னை எழும்பூரில் இருந்து, புதன் மற்றும் சனி தோறும், செங்கோட்டைக்கு, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நாளை முதல், இதன் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதனால், எழும்பூரில் இருந்து, இரவு, 8:20 மணிக்கு புறப்படும் ரயில், செங்கோட்டைக்கு, காலை, 10:10 மணிக்கு செல்வதற்கு பதிலாக, 50 நிமிடங்கள் முன்னதாக, காலை, 9:20 மணிக்கு சென்றடையும்.
    அதே நேரத்தில், செங்கோட்டையில் இருந்து, எழும்பூருக்கு இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் நேரத்தில் மாற்றமில்லை என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



    தூய்மையான கல்லூரிகள் தமிழகம் புதிய சாதனை

    பதிவு செய்த நாள்
    செப் 14,2017 22:43



    புதுடில்லி: தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட, துாய்மையான உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில், முதல், 25 இடங்களில், 12 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த கல்லுாரிகள் பெற்றுள்ளன.

    துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2017ம் ஆண்டுக்கான, துாய்மையான தனியார் பல்கலை, கல்லுாரி, தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை, மத்திய அரசின், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தேர்வு செய்துள்ளது. நாடு முழுவதும் இருந்து, 3,500 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்தன.
    இதில், துாய்மையான, முதல், 25 உயர் கல்வி நிறுவனங்கள் பெயர் பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர், டில்லியில் நேற்று வெளியிட்டார். இதில், 12 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த, உயர் கல்வி நிறுவனங்கள் பிடித்துள்ளன.

    துாய்மையான கல்லுாரிகள் பட்டியலில், ஈரோட்டிலுள்ள, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, முதலிடம் பிடித்தது. தொழில் நுட்ப கல்லுாரிகள் பட்டியலில், கோவை, அம்ரிதா விஷ்வா வித்யாபீடம், முதலிடம் பிடித்தது.
    வியட்நாமில் இன்று புயல் எச்சரிக்கை
    பதிவு செய்த நாள்15செப்
    2017
    06:35




    ஹனாய்: வியட்நாமில் 'டோக்சுரி' என்ற சக்தி வாய்ந்த புயல் இன்று(செப்.,15) கரையைக் கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு ஆசிய நாடு வியட்நாம். இங்குள்ள ஹா டிங் மாகாணத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில், 'டோக்சுரி என்ற புயல் மணிக்கு 155 கி.மீ., வேகத்தில் இன்று கரையைக் கடக்கும்' என அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் எச்சரித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புயலால் ஏற்படும் மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்து 47 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக 2,50,000 வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மே முதல் அக்டோபர் வரை ஆண்டுதோறும் வியட்நாம், புயலால் பாதிப்புக்குள்ளாகிறது.
    'ஸ்மார்ட்' கார்டு இல்லாதோருக்கும் ரேஷன் பொருட்கள் உண்டு
    பதிவு செய்த நாள்15செப்
    2017
    01:28




    ரேஷன் கடைகளில், 'ஸ்மார்ட் கார்டு' பெறாதோருக்கு, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்க, ஊழியர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது; ஆனால், பழைய கார்டு வைத்திருப்போருக்கும், பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக ரேஷன் கடைகளில், பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். தற்போது, காகித ரேஷன் கார்டுகளுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள, 1.92 கோடி கார்டுகளில், 28 லட்சம் பேருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு, ரேஷன் பொருட்களை வழங்காமல், ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து, சென்னையில், பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், 'ஸ்மார்ட் கார்டு இல்லை என, பொருட்களை தராமல், ரேஷன் ஊழியர்கள் திருப்பி அனுப்பி விட்டனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும், அலட்சியமாக பதில் கூறுகின்றனர்' என்றார்.

    இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த மாதம் முதல், ஸ்மார்ட் கார்டு வாங்கியோருக்கு, அவற்றில் தான் பொருட்களை வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு இல்லாதோருக்கு, பழைய ரேஷன் கார்டின் கடைசி நான்கு எண்களை, கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்து, பொருட்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஊழியர்கள், பழைய கார்டுதாரருக்கு பொருட்கள் தர மறுப்பதாக புகார்கள் வருகின்றன.

    பாதிக்கப்பட்டோர், உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் புகார் அளித்தால், ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னையை தவிர்க்க, ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள், தெளிவான புகைப்படம் மற்றும் பிழை திருத்த விபரங்களை உடனே சரி செய்து, விரைவாக அந்த கார்டை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    - நமது நிருபர் -
    Kalanithi Maran row: SpiceJet deposits Rs 250 crore with High Court registrar

    FINANCIAL EXPRESS

    SpiceJet today said it has deposited Rs 250 crore with the Registrar General of High Court of Delhi in connection with a share transfer dispute with its previous owner Kalanithi Maran and his KAL Airways.

    By: PTI | Mumbai | Updated: September 14, 2017 11:10 PM


    The Supreme Court on July 28 dismissed the appeals of SpiceJet challenging the Delhi High Court verdict asking it to deposit Rs 579 crore in connection with a share transfer dispute with its previous owner Kalanithi Maran. (Reuters)

    SpiceJet today said it has deposited Rs 250 crore with the Registrar General of High Court of Delhi in connection with a share transfer dispute with its previous owner Kalanithi Maran and his KAL Airways. The Ajay Singh-promoted budget carrier said it has done so in compliance with court orders.

    “This refers to judgement and final order dated July 29, 2016 passed by the learned single judge of the hon’ble High Court of Delhi… further modified by the order of the hon’ble Supreme Court of India dated July 31, 2017… inter- alia directing the company to deposit Rs 250 crore to the Registrar General of High Court of Delhi on or before September 14, 2017.

    “In this regard, we wish to inform you the company has deposited Rs 250 crore with the Registrar General of High Court of Delhi on September 14, 2017, in compliance with the above said orders,” SpiceJet said in a regulatory filing.

    The Supreme Court on July 28 dismissed the appeals of SpiceJet challenging the Delhi High Court verdict asking it to deposit Rs 579 crore in connection with a share transfer dispute with its previous owner Kalanithi Maran.

    A division bench of the HC had asked SpiceJet to deposit the money, saying, “there is nothing worthwhile” in the petitions to show its finances were precarious or that its cash position was so stretched that it could not comply with its single judge order asking it to deposit the amount.

    However, the bench had provided it some relief by allowing it to deposit the amount in two parts. It had said part of the amount could be secured by a cash deposit of Rs 250 crore and the balance by a bank guarantee of Rs 329 crore.

    “With the deposit of above said Rs 250 crore and furnishing of bank guarantee of Rs 329 crore on August 14, 2017 with the Registrar General of High Court of Delhi, the company has complied with the above said orders,” the airline informed the market regulator.

    SpiceJet and Singh had challenged before the division bench the July 2016 interim order passed by a single judge alleging the court did not have the jurisdiction over the matter.

    The single judge’s order had come on a civil suit by Sun TV group’s chief Kalanithi Maran and his Kal Airways.

    In their suit, Maran and his airline company had sought issuance of stock warrants in SpiceJet to them as per a sale purchase agreement (SPA) of 2015 which had led to the transfer of ownership of the budget carrier to Singh.

    Maran and Kal Airways had alleged before the single judge that despite giving Rs 579 crore to SpiceJet, the carrier had failed to issue them the warrants or allot tranche one and two of convertible redeemable preference shares and that the amount was not utilised for paying statutory dues for which they were also facing prosecution.

    SpiceJet, in the BSE filing today, said, “Accordingly, the interim order dated May 18, 2016 and May 27, 2016 restraining the company and Ajay Singh (promoter) from allotting/ transferring/issuing/alienating and/or creating any third party interest and/or encumbrance on any shares of Ajay Singh, stands vacated….”

    DUBAI AIRLINR OFFERS DISSCOUNTS

    TEACHERS STRIKE

    PROUD MOMENT

    TTD to allow only 7,000 4-wheelers on Garuda seva day



    TTD has resolved to allow only 7,000 four-wheelers to reach the sacred abode of Lord Venkateswara on the auspicious day of 'Garuda seva' slated on Sept. 27.
    Talking to The Hindu, TTD Joint Executive officer K.S. Srinivasa Raju on Thursday said it was after a thorough exercise they had arrived at the figure.
    Once the number is reached, pilgrims will be asked to park their vehicles at the Devlok complex and Bharatiya Vidya Bhavan grounds adjacent to the Alipiri checking point, Mr. Raju said, and added that devotees shall be picked up from the parking lots and ferried to the town in APSRTC buses.
    TTD had already imposed a ban on plying of two wheelers on the Garuda seva day on its ghat roads.
    Power shutdown areas in Chennai on 15-09-17

    Posted on : 14/Sep/2017 15:52:32



    Power supply will be suspended in the following areas on 15-09-17 between 9.00 A.M. to 2.00 P.M. for maintenance work. Supply will be resumed before 2.00 P.M. if the works are completed.

    AGARAM AREA: SRP koil st (south), Thanthoniamman koil st, Kanakar st, Somasundaram st, Narayanan st, Sambasivam st, Babu Raja st, Loco works, GKM colony Ist to 5th st, Temple road 1st & 2nd cross, 1st main road (part) 70 feet road, Ciruclar road(part).

    KODUNGAIYUR AREA: Muthamizh nagar 1,4,5,6,8th blocks.

    AYANAVARAM: Part of K.H Road, Sathaniya flats, Sriram flats, Sayani flats, Joshi flats.

    Kannada varsity VC’s ‘suitcase’ remark creates a flutter

    Mallika Ghanti says statement ‘misinterpreted’

    Mallika Ghanti, Vice-Chancellor of Kannada University, Hampi, has created a flutter by stating that one has to “take suitcase” to Vidhana Soudha to get the university’s work done, implying corruption in the corridors of power. She, however, later claimed that it was a generic comment not targeted at anyone and suitcase meant “only files”. She also said in a statement that she was being “misinterpreted”.
    During a symposium on Wednesday, Ms. Ghanti said she was told by founder Vice-Chancellor Chandrashekar Kambar that Ministers used to extend full support earlier and allocate adequate funds required for the development of the university.
    “But today, I myself have to go with a suitcase to get the files cleared,” she said, underlining the need for additional academic staff. A video footage of her statement soon went viral.
    On the silver jubilee celebration day, Chief Minister Siddaramaiah had promised that the government would permit filling of the required number of posts in the university.
    Prof. Ghanti’s allegation has irked Higher Education Minister Basavaraj Rayaraddi. He said he would ask her to provide evidence for the charge made against the government. Reacting to journalists’ questions on the matter in Belagavi, Chief Minister Siddaramaiah said he was unaware of the context in which the allegation was made.
    Meanwhile, State BJP spokesperson S. Suresh Kumar hit out at the government for not meeting its promise of providing corruption-free governance. He said Prof. Ghanti’s remark has justified the BJP’s charge that corruption was rampant in the Siddaramaiah government.

    ‘50% bank accounts linked with Aadhaar’

    All bank accounts should be linked to the Aadhaar numbers of the account holders before November 30 as per the decision of the Union government, Collector K. Rajamani said here on Thursday.
    Inaugurating a seminar on Aadhaar seeding with bank accounts with bankers in the district, Mr. Rajamani said so far 50% of the accounts have been linked with the Aadhaar numbers. Customers should provide their Aadhaar numbers to the banks concerned at the earliest and the banks should expedite the seeding process, he said.
    Linking of Aadhaar numbers help direct disbursement of subsidies and compensations directly to the beneficiaries, he said.
    ‘4% of motorists booked for violations had original licences’

    CHENNAI,SEPTEMBER 15, 2017 00:00 IST




    Safe journey:Tamil Nadu has made it mandatory for motorists to carry original driving licences from September 1. 
     
    Rise in number of people applying for driving licences: official

    Only about 4% of the motorists out of the 1.5 lakh cases booked for various traffic violations had original driving licences, according to K. Periaiah, Additional Commissioner of Police (Traffic), Greater Chennai Police, said.

    “Based on the Supreme Court directive we have to collect the licences from those motorists violating norms and send it to the respective RTOs for suspending the licences. However, we found only 5,700 people had original licences out of the total cases booked,” he said speaking at a session of Chennaiinfra conference, organised by the Confederation of Indian Industry (CII) in Chennai.

    A Supreme Court panel had held that unless strong and urgent measures are taken to deal with speeding, drunken driving, red light jumping, violation of helmet and seat belt laws, use of mobile phones while driving, and overloading, the number of accidents and fatalities will continue to remain high. Tamil Nadu had made it mandatory for motorists to carry the original driving licences from September 1.

    Mr. Periaiah also said that there has been an increase in the number of people applying for driving licences, post the rule.
    Mumbai-Ahmedabad bullet train: All you need to know

    TNN | Updated: Sep 14, 2017, 11:05 IST




    Here's a look what India's first bullet train project connecting Ahmedabad to Mumbai will entail - the costs, the duration and what it will translate to in the long run.







    LATEST COMMENTIt''s like a poor man is trying to buy a Mercedes. Let''s spend previous resources on really useful things and masses.Sanjiwan Kumar





    No restrictions on H-1B visa: US official

    PTI | Updated: Sep 14, 2017, 22:18 IST

    HIGHLIGHTS

    The official said around 70% of the visas issued under the H-1B category over the past nine months have gone to Indians

    The H-1B is a non-immigrant visa that allows US companies to employ foreign workers in speciality occupations




    NEW DELHI: A senior US official on Thursday sought to allay India's concerns on the H-1B visa programme, which is being "reviewed" by the Trump administration, saying there are no "restrictions" in place.

    The official said around 70 per cent of the visas issued under the H-1B category over the past nine months have gone to Indians and that a record 1.2 million visas of Indians were adjudicated by the US last year.

    The year-over-year increase in terms of issuance of H-1B visas and L1 visas (work permit) to Indians is six per cent each, the official said.

    "The President (Donald Trump) spoke about review. There are no restrictions but it (H-1B) is under review," he said, adding the issue was not on the agenda for the upcoming Indo- US bilateral dialogue on consular relations, but it may come up in the course of the talks.

    The issue of the repealing of the Deferred Action for Children Arrival (DACA) programme, which has hit more than 7,000 Indian-Americans+ , may also figure in the talks scheduled to be held on September 27 in Washington.
    AIE to fly to Singapore from today

    tnn | Updated: Sep 14, 2017, 23:01 IST

    Friday will be a red letter day for Madurai international airport when Air India Express launches the first direct flight to Singapore. The service which operates four days a week also connects Madurai and Delhi, a first direct connection to the nation's capital.

    Flight (IX-163) originating from New Delhi at 7 pm will reach Madurai at 10.15 pm. It will depart from Madurai as flight IX-684 at 11.15 pm and reach Singapore at 6.15 am. In the return direction, flight IX-683 will depart from Singapore at 10.40 am and reach Madurai at 12.25 pm. IX-164 will depart from Madurai at 1.50 pm and reach New Delhi at 4.40 pm.

    While an inaugural event with the customary water cannon salute has been planned, passengers of the first flight to the Southeast Asian nation would be presented flowers and sweets. A group of enthusiasts who maintain a facebook fan page for the airport are planning to celebrate it in their own humble way by presenting the passengers a memento and greeting card. "It is a big day for Madurai airport. We will present a key chain and greeting cards highlighting the modernity of Singapore and culturally-rich Madurai," said Mohammed Mustafa.

    This is only the third international connectivity for Madurai after flights to Dubai and Colombo. According to tour operators, it is expected to get good patronage from the people of South Tamil Nadu who are either settled or are working in Singapore besides those looking for cheap international destinations. Apart from this, the service will also help to boost industrial development given the fact that Madurai-Tuticorin industrial corridor is expected to take off shortly.

    Members of Tamil Nadu Chamber of Commerce and Industry, who played an important role in pushing for the service, are celebrating it in their own way. A 25-member trade delegation of TNCCI will visit Singapore on the first flight. They will sign a memorandum of understanding with Singapore Indian Chamber of Commerce and Industry to improve two-way trade and investments.

    According to Air India officials, many industrialists and industry bodies have been invited to the inaugural function scheduled on Friday at 7 pm. Apart from them, a couple of elected representatives from Madurai and officials like regional passport officer Maniswara Raja have also been invited to the event, said airport manager, Air India, A Shahjehan.
    Engineer who built bus stand suspended

    TNN | Updated: Sep 15, 2017, 00:48 IST

    Coimbatore: The engineer, who oversaw the construction of Somanur bus stand in 1998, has been placed under suspension after it collapsed on September 7, killing five people and injuring 18.

    Commissioner of municipal administration G Prakash placed Paramasivam, who was working as an assistant engineer in Karumathampatti town panchayat in 1998, under suspension.

    After the construction of the bus stand, Paramasivam was promotion and was transferred to another district. He was working as an engineer at Virudhunagar municipality just before the suspension.

    Meanwhile, the one man inquiry committee set up by the State government to probe the incident is all set to visit Somanur on Friday. Senior IAS officer Gagandeep Singh Bedi will conduct inquiry at the office of the Karumathampatti town panchayat in the afternoon. Residents of Somanur and Karumathampatti can participate in the inquiry and lodge complaints.

    The bus stand had collapsed on September 7 following heavy downpour. As many as 23 people were trapped under the debris. While five of them died, 18 people were rescued by local residents with the help of police and firemen.

    People of Somanur, Karumathampatti and Samalapuram had closed shops to condemn the government for not taking any steps against the government officials and the building contractor. Subsequently, the government formed the one man inquiry committee on September 11.
    Vellore doctor quits service, says he was hounded by group

    TNN | Updated: Sep 14, 2017, 23:54 IST

    Vellore: Dr Sathiaraj Nesan, 44, who was honoured as the best government doctor in Vellore five times for his service, has tendered his resignation stating that he was targeted by people with vested interest. In his service, he outperformed doctors in the Government Vellore Medical College Hospital and other government hospitals in the district.

    Dr Nesan joined the Government Hospital (GH) in Vaniyambadi on August 20, 2007 after clearing the Tamil Nadu Public Service Commission exam. The state had allocated Rs 1 crore to establish an exclusive unit for the Ophthalmology department in the GH on seeing his performance. After the establishment of the department in 2010, he performed over 7,000 successful cataract (SICS and PHACO) surgeries, glaucoma surgeries, autograft and oculoplastic surgeries.

    It was an incident on August 29 that pushed Dr Nesan to tender his resignation. At 6.30pm on that day, he was attending a heart patient, when a boy aged about 20 approached him and said he had fever and cold. "I asked the boy to go to the staff nurse. The boy's father questioned me why I did not check his son. Though I explained him that the boy had seasonal flu, he was not in a mood to listen," Dr Nesan, told TOI, who had served for five years in a charitable hospital near Tirupattur before joining the Vaniyambadi GH.

    Within a few minutes, a group of 10-15 men barged into the doctor's duty room. "They took movie CDs that I had in my bag and spread it on my table. They questioned and harassed me that I was watching movies during duty. I explained them that I watch movies only when I am free, but they built a case against me to shame me and it was flashed on TV channels. It humiliated me and also put my family in an unwanted situation," said Dr Nesan who performed 99 surgeries out of the 167 that were done in the GH in August.

    After attending his duty on August 31, Dr Nesan offered his resignation letter. "I strongly doubt that it was not an instant reaction of the public. It was a planned one against me," he said. "I do not feel safe to continue my service in Vaniyambadi GH after the incident. Hence, I submitted my resignation letter to the medical officer (Dr Usha Gnanasekaran) on September 1. Though they did not accept my letter, I am not ready to go there," said Dr Nesan, an alumnus of JIPMER.

    LATEST COMMENTJealousy and bad blood can play a very bad role is proven in this case of Dr Sathiyaraj Nesan. His colleagues don''t like him to achieve better . It is purely spite. Who are behind these anti social ... Read MoreSrinivasan Narasimhan

    Senior officials in the health department said Dr Nesan has set a bench mark for his peers. In fact, "He did not turn up for duty since the incident. It is bad to lose good doctors due to bad incidents. We have also received a petition from the public demanding to bring him back to the GH," said Joint Director of MRHS Dr A Shanthi.

    Meanwhile, members of Sammam Kudimakkal Iyakkam along with CPI and farmers' associations staged a protest near Vaniyambadi bus stand demanding action against the people who forced Dr Nesan to resign, and ensure a safe environment for doctors to continue their service.


    Med admission malpractice: AIADMK seeks CBI probe

    TNN | Updated: Sep 15, 2017, 00:24 IST

    Puducherry: The opposition AIADMK on Thursday sought a CBI probe into the alleged malpractices in MBBS admissions in four deemed universities and three private medical colleges in the Union territory of Puducherry.

    Speaking to reporters, AIADMK legislature party leader A Anbalagan said the probe must unearth information on the quantum of fees collected by private institutions from 770 odd MBBS students, who were given admission without adhering to the rules and norms set by the Supreme Court (SC), Medical Council of India (MCI), University Grants' Commission (UGC) and other competent authorities.

    "We learnt that the private institutions had collected exorbitant fees and donations to a tune of Rs 365 crore from 770 odd students, including 75 from Puducherry. MCI must initiate stringent action against the private institutions for flouting the norms. We demand a thorough probe by CBI. The probe must unearth the quantum of money collected by the institutions as fees from students," Anbalagan said.

    He urged lt governor Kiran Bedi and chief minister V Narayanasamy to shed their differences and find ways to resolve the issue in an amicable manner as it concerned the future of 770 odd MBBS students.

    He wondered why the chief minister, who declared that the government will withdraw no-objection and essentiality certificates of the private institutions, if they were found to have made illegal admissions, did not initiate any action against erring institutions. He urged the chief minister to convene the cabinet and evolve strategies to resolve the issue. He termed chief minister's declaration that the government has no role in the admission of students under management quota 'irresponsible'.

    The managements of private institutions decided to approach Madras high court seeking to stay the discharge orders issued by MCI. The MCI issued a notice dated September 7 to Puducherry government and the private institutions directing to discharge (remove from the rolls of the institution) the 770 odd MBBS students (for the academic year 2016-17) on charges of failing to adhere to the prescribed rules and norms in the admission process.

    MCI joint secretary Rajendra Wahale said the institutions admitted students who were not allotted seats by the centralized admission committee (Centac). The institutions had also admitted students illegally after the last date of admission (September 30 every year) fixed by the Supreme Court and the MCI. Wahale asked the errant institutions to submit a compliance report within two weeks from the date of dispatch of the order.

    ரகசியம் காப்போம்!

    ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...