சிக்னலில் நீண்ட நேரம் நிற்பதா? : மறியலில் ஈடுபட்ட பயணியர்
பதிவு செய்த நாள்15செப்
2017
00:50

அரக்கோணம்: சிக்னலில் நீண்ட நேரமாக ரயில் நிற்பதை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட பயணியரை, ரயில்வே போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து, அரக்கோணம் வழியாக, சென்னைக்கு தினமும் காலை, 7:40 மணிக்கு, பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. அதே போல், காலை, 6:25 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பதிக்கு சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
நடவடிக்கை இல்லை : இந்த, இரண்டு ரயில்களும், வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டையில் உள்ள சிக்னலில், தினமும், 40 நிமிடம் வரை நிறுத்தப்படுகிறது.
இதனால் வேலைக்கு செல்வோர், கல்லுாரி, பள்ளி மாணவ - மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பயணியர் பல முறை புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை, 7:40 மணிக்கு, மங்கம்மாபேட்டை சிக்னலில், வழக்கம் போல், இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டன.
இதனால் ஆத்திரம் அடைந்த பயணியர், காலை, 8:00 மணிக்கு, இரண்டு ரயில்களையும் மறித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர், ரயில் இன்ஜின் மீது ஏறி, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். அரக்கோணம் ரயில்வே போலீசார், மறியல் செய்த பயணியரிடம் பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சில், பயணியர் ஏற்க மறுத்து, ரயில் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
3 மணி நேர தாமதம் : இதனால் ரயில்வே போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின், இரண்டு ரயில்களும், மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இதனால் திருத்தணி - சென்னை மார்க்கத்தில் சென்ற மின்சார ரயில்கள் தாமதமாக சென்றன.
பதிவு செய்த நாள்15செப்
2017
00:50

அரக்கோணம்: சிக்னலில் நீண்ட நேரமாக ரயில் நிற்பதை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட பயணியரை, ரயில்வே போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து, அரக்கோணம் வழியாக, சென்னைக்கு தினமும் காலை, 7:40 மணிக்கு, பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. அதே போல், காலை, 6:25 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பதிக்கு சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
நடவடிக்கை இல்லை : இந்த, இரண்டு ரயில்களும், வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டையில் உள்ள சிக்னலில், தினமும், 40 நிமிடம் வரை நிறுத்தப்படுகிறது.
இதனால் வேலைக்கு செல்வோர், கல்லுாரி, பள்ளி மாணவ - மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பயணியர் பல முறை புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை, 7:40 மணிக்கு, மங்கம்மாபேட்டை சிக்னலில், வழக்கம் போல், இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டன.
இதனால் ஆத்திரம் அடைந்த பயணியர், காலை, 8:00 மணிக்கு, இரண்டு ரயில்களையும் மறித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர், ரயில் இன்ஜின் மீது ஏறி, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். அரக்கோணம் ரயில்வே போலீசார், மறியல் செய்த பயணியரிடம் பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சில், பயணியர் ஏற்க மறுத்து, ரயில் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
3 மணி நேர தாமதம் : இதனால் ரயில்வே போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின், இரண்டு ரயில்களும், மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இதனால் திருத்தணி - சென்னை மார்க்கத்தில் சென்ற மின்சார ரயில்கள் தாமதமாக சென்றன.
No comments:
Post a Comment