Friday, September 15, 2017

பொங்கலுக்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு இன்று தொடக்கம்


By DIN  |   Published on : 15th September 2017 02:55 AM 
trains

வரும் ஆண்டு (2018) பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குச் செல்வதற்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (செப். 15) காலை முதல் தொடங்கப்படவுள்ளது.
வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வெள்ளிக்கிழமை முதல் ரயில் பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்யலாம். பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஏராளமானோர் ஜனவரி 12 ஆம் தேதியே சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் ஜனவரி 12 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் வெள்ளிக்கிழமை (செப். 15) முதல் முன்பதிவு மேற்கொள்ளளலாம். அதேபோல ஜனவரி 13 ஆம் தேதி ஊருக்குச் செல்ல முன்பதிவு செய்பவர்கள் செப். 16(சனிக்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம்.
பயணிகளின் வசதிக்காக 4 மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை, வரும் ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் 16 வரை கொண்டாடப்படுகிறது. இதேபோல், பொங்கல் முடிந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...