Saturday, September 16, 2017

Power shutdown areas in Chennai on 16-09-17
Posted on : 15/Sep/2017 15:50:52


 
Power supply will be suspended in the following areas on 16-09-17 between 9.00 A.M. to 2.00 P.M. for maintenance work. Supply will be resumed before 2.00 P.M. if the works are completed. 

GUINDY AREA: Tiny sector & Mini Tiny sector (Developed plots and Adjacent areas), Guindy Industrial Estate,  Tiny Sector,  Labour colony, Guindy, Arulayampet, Reddy st, Parthasarathy koil st, Ambal nagar, North phase, Poonamallee road, Electronic complex, Inner ring road, Ekkattuthangal.

SEMBIUM AREA: M.H.road entire area, Chinna Kulanthai streets entire, Raja st, Kabilar st, S.S.V. koil streets (part), Doctor court, Maduma nagar, Kollan thottam, Chokkalingam st.

SAIDAPET WEST AREA: Kattabomman block, Muthurangan block, Anjuham nagar, Parry nagar, School st, RR colony all st, VSM garden, Bharathi block, Errikarai st, Entire Saidapet west areas, 7 & 11th avenue, LIC colony, Nagathamman koil st, Annamalai Chetty nagar, Ethiraj nagar, KV colony I to V st, Postal Colony I to IV st, Kamashipuram IInd & 10th avenue, Ashok nagar 58 to 64th st, Naikamman st, Muveender colony, Part of Ashok nagar,  Pillayar koil st, Sekar nagar, West Jones road, Ashok nagar 12th avenue, Ramapuram Ramaswamy st, Rajagopal st, Anjaneyar koil st, Ramanujam st, Barathiyar st, Mosque Pallam, Dhanasekaran st, VGP salai. 

SIDCO NAGAR AREA: Sidco nagar  part of 6th, 9th, 10th  Blocks, Sidco nagar Industrial area, Balaramapuram, Nehru nagar, South Jaganatha nagar.

AMBATTUR SIDCO AREA: Koramandal Town, Mangalapuram, Pattaravakkam, Kannan koil st, Sidco North phase, Bajanai koil st, Bramin st, Yadava st, Kulakkarai st, Katchanag kuppam, Tass estate one part, VSNL Telephone Exchange.

KODUNGAIYUR AREA: Part of Meenambal salai, Abirami avenue 1 to 16 streets, KKD nagar 1st Block, 2nd Block and 3rd Block and part of TH road. 

KOLATHUR SAI NAGAR AREA: Sai nagar, Kumaran nagar, Avai nagar, GKM colony 33rd to 37rd st, Kolathur main road, East Elavel cross road. 

KOLATHUR AREA: Kumaran nagar main road, Kumaran nagar 1st, 2nd, 3rd st, Vasu nagar 6 & 7th st, Ramani bai colony, Dr. Ambedkar nagar 1,2,3rd st, Nermai nagar 1, 2nd st, Thirupathi nagar one side, Thirupathi nagar 4th main road, Sundaram nagar 1,2 st, Bala kumaran nagar A part, Sathya sai nagar, Dhanammal nagar, Jayaram st, Valaramathi nagar main road, Bharathi st, Poongavanam st, Sri nagar colony.

FLOWER BAZAAR AREA: Ayyapillai st, one part of Devaraj Mudali st, Venkatachala Mudali lane, one part of Venkatachala mudali st, one part of Nainniappa naicken st and one part of Raghu naickulu st.

RADHA NAGAR AREA: Bharathipuram, Subash nagar, Chithambaram st, Valluvar High road, Purushothaman nagar, NGO colony, Bajanai koil st, GST road, Nanvamanai st, New colony 1st main road, RBI colony, Nemilichery high road, Bharatha matha st, Nellaiyappar st, Ashokan st, Balaji nagar, Jain nagar, Maruthi nagar, Chambers colony, Cholavaram, Sasthri colony.

THORAIPAKKAM AREA: Kannaki Nagar, PTC Qts., Karapakkam part, VGP avenue. Okkiyum pettai, Nehru nagar, Mettu kuppam, MK Chavadi, Part of OMR, Chandrasekaran Avenue, Sowdeswari nagar, Sakthi garden.
தினமலர்' செய்தி எதிரொலி: மாணவிக்கு குவியும் உதவி
பதிவு செய்த நாள்
செப் 16,2017 00:25



சேலம்: கல்லுாரி கட்டணம் கட்ட முடியாமல் தவித்த ஏழை மாணவி தவப்பிரியாவுக்கு, பல்வேறு நாடுகளில் இருந்தும், உதவிகள் குவிந்து வருகின்றன.

சேலம் மாவட்டம், ஆறகளூரைச் சேர்ந்தவர் தவப்பிரியா, 19; சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில், அக்ரி இரண்டாம் ஆண்டு படிக்கிறார். குடும்ப வறுமை காரணமாக, கல்லுாரி கட்டணம் கட்ட முடியாமல் தவிப்பதாக, 'தினமலர்' நாளிதழில், 13ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, பல்வேறு தரப்பினர், மாணவியின் தந்தை, ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு, அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர்.

நேற்று வரை, 1.65 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கத்தார், துபாய் ஆகிய நாடுகளில் வசிப்போர், ஆன் - லைன் மூலம், பணம் செலுத்தி உதவியுள்ளனர். அண்ணாமலை பல்கலை நிர்வாகமும், தவப்பிரியாவின் படிப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, ஆறுமுகம் மொபைலுக்கு தொடர்பு கொண்டு, 'மகளின் படிப்புக்கு உதவி செய்து, உயர்கல்வி படிக்க வைக்கிறேன். அவரை, நேரில் வந்து சந்திக்க சொல்லுங்கள்' என, தெரிவித்துள்ளார்.
வங்கியில் ரூ.150 கோடி மோசடி செய்த ஜேப்பியார் மகள், மருமகன்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

2017-09-16@ 00:17:01




சென்னை: போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் ரூ.150 கோடி மோசடி செய்ததாக ஜேப்பியார் மகள், மருமகன்கள் உட்பட 5 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை கழிப்பட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜேப்பியார் ஷீலா (49). இவர், சென்ைன மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘நான் ஜேப்பியாரின் இரண்டாவது மகள். ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர். இந்த அறக்கட்டளையின் பெயரை தவறாக பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் ஆயிரம் விளக்கில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.150 கோடி கடனாக பணம் பெறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜேப்பியார், மரிய ஜூலி மற்றும் அவரது கணவர் மரிய ஜான்சன், ஜேப்பியாரின் மூன்றாவது மகள் ரெஜினாவின் இரண்டாவது கணவர் முரளி, புனித ஜோசப் கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் பாபு மனோகர், மகள் ஜெசி பிரியா ஆகிய 5 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் கமிஷனர் உத்தரவுபடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 5 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து 5 பேர் மீதும் கூட்டு சதி மற்றும் போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் பண மோசடி செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜேப்பியாரின் இரண்டாவது மகள் ஷீலா கடந்த ஜூன் 29ம் தேதி சொத்துக்காக தன்னை வீட்டிலேயே சிறை வைத்ததாக தாய் மற்றும் சகோதரிகள் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் கூத்து: ஆட்டோ டிரைவருக்கு 'ஹெல்மெட்' அபராதம்
பதிவு செய்த நாள்16செப்
2017
01:29




கோவை: கோவையில் ஆட்டோ டிரைவர் 'ஹெல்மெட்' அணியவில்லை என்று, எஸ்.ஐ., அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

வாகன சோதனை:

கோவை, ஆலாந்துறையை சேர்ந்தவர் கருணாகரன், 40. இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். கடந்த, 13ம் தேதி மாலை சிறுவாணி மெயின் ரோடு, காருண்யா நகர் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காருண்யா நகர் போலீஸ் எஸ்.ஐ., சங்கரநாராயணன், ஆட்டோவை நிறுத்தினார். பின், கருணாகரனிடம் லைசன்ஸ், ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சரிபார்த்தார்.

அபராதம்:

அதன்பின், 'ஹெல்மெட்' அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ஆட்டோ டிரைவர் கருணாகரனுக்கு, 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அபராதம் விதிக்கப்பட்ட சார்ஜ் ஷீட், 'வாட்ஸ்அப்' உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆட்டோ டிரைவருக்கு 'வித்-அவுட் ஹெல்மெட்' என கூறி, அபராதம் விதித்தது வாகன ஓட்டிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவறுதலாக...

கோவை எஸ்.பி., மூர்த்தியிடம் கேட்டபோது, ''சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட எஸ்.ஐ.,யிடம் விசாரிக்கப்பட்டது. ஆட்டோ டிரைவர், சீருடை இல்லாமல் வாகன ஓட்டி வந்துள்ளார். அதற்காகத் தான், 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அதில், 'யூனிபார்ம்' என்பதற்கு பதிலாக, 'ஹெல்மெட்' என்று தவறுதலாக எழுதிவிட்டார். அந்த 'சார்ஜ் ஷீட்' தான் வைரலாகி வருகிறது. 'ஹெல்மெட்' அணியாததற்கு, 100 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படும்'' என்றார்.
ரயில் நிலையங்களில் ஏ.டி.எம்.,

பதிவு செய்த நாள்16செப்
2017
00:13

சென்னை : சென்னை ரயில்வே கோட்டத்தில், முக்கிய நிலையங்களில், பயணியரின் வசதிக்காக, வங்கி ஏ.டி.எம்., வைக்க ரயில்வேயால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், சென்னை சென்ட்ரலில், ஐந்து இடங்களிலும், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், வில்லிவாக்கம், திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சிபுரம், பெரம்பூர், செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் நிலையங்களிலும், வங்கி, ஏ.டி.எம்.,கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரி கூறியதாவது: முக்கிய ரயில் நிலையங்களில், வங்கி, ஏ.டி.எம்.,கள் அமைக்க, ஒப்பந்த அடிப்படையில், இடம் ஒதுக்கி கொடுக்கப்படுகிறது. இடவசதி மற்றும் வாடகை விபரங்களும் தெரிவிக்கப்பட்டு, வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பருக்குள், இந்த நிலையங்களில், ஏ.டி.எம்.,கள், அமைக்க, ஏற்பாடு நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


ராமச்சந்திரா கல்லூரிக்கு, 'ஸ்வச்சதா' விருது
பதிவு செய்த நாள்16செப்
2017
00:13

சென்னை : போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரிக்கு, தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் பிரிவில், மத்திய அரசின், 'ஸ்வச்சதா' விருது வழங்கப்பட்டு உள்ளது.சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி உள்ள பசுமை சூழல், துாய்மை, தண்ணீர் வசதி, கழிப்பறை, நவீன சமயலறை போன்ற காரணங்களால், மத்திய அரசின் ஸ்வச்சதா விருது வழங்கப்பட்டுள்ளது.தொழில் நுட்ப பிரிவில், மூன்றாவது இடத்துக்கான பரிசை, டில்லியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வழங்கி கவுரவித்தார்.இந்த விருதை, பல்கலை ஆய்வுத்துறை தலைவர், தியாகராஜன், பாதுகாப்பு மற்றும் வசதிகள் குழு துணை தலைவர், ஸ்ரீதர் ஆகியோர் பெற்றனர்.
கிரிக்கெட் சிறப்பு ரயில்கள்
பதிவு செய்த நாள்16செப்
2017
00:13

சென்னை : சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில், நாளை, இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடப்பதால், சென்னை கடற்கரை - திருமயிலை - வேளச்சேரி இடையே, மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இச்சிறப்பு ரயில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, 17ம் தேதி, பகல், 12:30 மணிக்கு புறப்பட்டு, சேப்பாக்கத்திற்கு, 12:40 மணிக்கும்; திருமயிலைக்கு, 12:49 மணிக்கும் சென்றடையும்.திருமயிலையில் இருந்து, மதியம், 1:00 மணிக்கு புறப்பட்டு, சேப்பாக்கத்திற்கு 1:10 மணிக்கும், கடற்கரை நிலையத்திற்கு, 1:20 மணிக்கும் சென்றடையும்.சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, இரவு, 10:30 மணிக்கு இயக்கப்படும் ரயில், 10:40 மணிக்கு சேப்பாக்கத்திற்கும், 11:15 மணிக்கு வேளச்சேரிக்கும் சென்றடையும்.வேளச்சேரியில் இருந்து, இரவு, 11:20 மணிக்கு இயக்கப்படும் ரயில், சேப்பாக்கத்திற்கு, 11:50 மணிக்கும், கடற்கரை நிலையத்திற்கு, இரவு, 12:05 மணிக்கும் சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
'குரூப் - 4' பதவியில் 4,682 பேர்

பதிவு செய்த நாள்16செப்
2017
00:08


சென்னை: அரசு துறையில் காலியாக உள்ள, 'குரூப் - 4' இடங்களுக்கு, 4,682 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 4'ல் அடங்கிய, இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டெனோ ஆகிய பதவிகளுக்கு, 2016, நவ., 6ல் தேர்வு நடந்தது.

இதன் முடிவு, 2017, பிப்ரவரியில் வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஜூலை, 17 முதல், செப்., 6 வரை கவுன்சிலிங் நடந்தது. இதில், 2,708 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. தட்டச்சர் பதவிக்கான கவுன்சிலிங்கில், 1,582 பேருக்கும், 'ஸ்டெனோ நிலை - ௩' பதவிக்கான கவுன்சிலிங்கில், 392 பேர் என, மொத்தம், 4,682 பேருக்கு, ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வானவர்களுக்கு, அந்தந்த அரசுத்துறைஅலுவலகங்கள் மூலம், பணி நியமன உத்தரவு வழங்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கு, விரைவில் கவுன்சிலிங் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டிரைக்' வாபஸ்: பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்
பதிவு செய்த நாள்16செப்
2017
00:06


ஒன்பது நாட்கள் நடந்த தொடர் போராட்டம் முடிந்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று உடனடியாக பணியில் சேர்ந்தனர். அதனால், மீண்டும் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கின.

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு சார்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செப்., 7 முதல், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால், வகுப்புகள் முடங்கின; காலாண்டு தேர்வு பாதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் நேற்று ஏற்பட்ட சுமூக நிலையை தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோ போராட்டம், வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை, நேற்று மதியமே கைவிட்டு விட்டு, பிற்பகலில் பணிக்கு சென்றனர். அதனால், பள்ளிகளில் மீண்டும் வழக்கம் போல் வகுப்புகள் துவங்கின.

- நமது நிருபர் -
பொங்கல் ரயில்கள் 'ஹவுஸ்புல்'

பதிவு செய்த நாள்16செப்
2017
00:04


சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு துவங்கிய, 30 நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்டுகள், 'ஹவுஸ்புல்' ஆகின.

பொங்கல் பண்டிகைக்காக, சொந்த ஊர்களுக்கு செல்ல, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம்.

அடுத்த ஆண்டு, ஜன., 14ல், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 120 நாட்கள் வரை முன் பதிவு செய்யலாம் என்பதால், ஜன., 13ல், சொந்த ஊர் செல்வதற்காக, நேற்று ஏராளமானோர் முன்பதிவு மையங்களில் குவிந்தனர்.
சென்னையில், சென்ட்ரல், எழும்பூர் உட்பட, ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில், காலையில், கூட்டம் நிரம்பி வழிந்தது. 

சென்னை, எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில், முன்பதிவு துவங்கிய, 30 நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கான டிக்கெட்கள் நிரம்பின. உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மாலை, 5:00 மணிக்கு முடிந்தன.

ஜனவரி, 13ல், பகலில் இயக்கப்படும் சில ரயில்களில், கணிசமான இடங்கள் மீதம் உள்ளன
கோவை - ஜபால்பூர்: சிறப்பு ரயில் இயக்கம்

பதிவு செய்த நாள்15செப்
2017
22:42

கோவை:பயணிகளின் தேவை கருதி கோவை - ஜபால்பூர் இடையே, வாராந்திர சிறப்பு ரயில், வரும், 30ம் தேதி முதல் அக்., 30ம் தேதி வரையும், ஹவுரா - திருவனந்தபுரம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயிலும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சிறப்பு ரயில்கள் அவ்வப்போது இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கோவை - ஜபால்பூர் (மத்தியபிரதேசம்) இடையே வரும், 30ம் தேதி முதல் அக்., 30ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது.

ஜபால்பூரில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை காலை, 11:00 மணிக்கு புறப்படும் ரயில், உடுப்பி, மங்களூர், கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட ஸ்டேஷன்களின் நின்று ஒரு நாள் கழித்து திங்கள் காலை, 5:00 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்த ரயில் வரும், 30 முதல் அக்., 28ம் தேதி வரை இயக்கப்படுகிறது.அதேபோல், கோவையில் இருந்து அக்., 2ம் தேதி முதல், 30ம் தேதி வரை ஜபால்பூருக்கு ரயில் இயக்கப்படுகிறது. வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு, 7:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில், போத்தனுார், பாலக்காடு, மடகான், ஹர்டா உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று ஒரு நாள் கழித்து, புதன் மதியம், 12:45 மணிக்கு ஜபால்பூர் சென்றடைகிறது.
அதேபோல், ஹவுரா(கொல்கத்தா) - திருவனந்தபுரம் இடையே வரும், 17 மற்றும், 21ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து, 17ம் தேதி மதியம், 12:40க்கு புறப்படும் ரயில், பாலக்காடு, கோவை, திருப்பூர், சேலம், சென்னை வழியாக, 19ம் தேதி காலை, 10:55 மணிக்கு ஹவுரா சென்றடைகிறது.

மறுமார்கமாக, 21ம் தேதி மதியம், 1:05 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் இரவு, 10:35 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொப்பை போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கம் கிடையாது!
பதிவு செய்த நாள்16செப்
2017
00:18

புதுடில்லி: தொப்பை இல்லாமல், நல்ல உடல் தகுதியுள்ள போலீசாரை மட்டுமே, பதக்கங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும், என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும், மாநில மற்றும் தேசிய அளவில் சிறப்பாக பணிபுரிந்த, போலீசாருக்கு, ஜனாதிபதி பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், மாநில அரசுகள் மற்றும் மத்திய போலீஸ் அமைப்புகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறந்த சேவைக்காக பதக்கம் பெறுவதற்கு பரிந்துரைக்கப்படும் போலீசார், அவர்களின் பணி மூப்பு மற்றும் சேவை மட்டுமல்லாமல், நல்ல உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும். தொப்பை இல்லாமல், பதவிக்கு சரியான நபராக இருக்க வேண்டும். தொப்பை உள்ள போலீசாரின் பெயர்கள் பரிசீலனைக்கு அனுப்பக்கூடாது.

போலீசாரின் உடல் தகுதி, ஷேப் - 1, ஷேப் - 2 என இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், ஷேப் - 1ல் உள்ள போலீசார் மட்டுமே, ஜனாதிபதி பதக்கம் பெறுவதற்கு பரிசீலிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வெளியூர் செல்லும் முன் ரேஷன் பொருட்களை விட்டு கொடுக்க வாரீகளா! 'கார்டு' ரத்து ஆகாமல் தடுக்கும் செயலி அறிமுகம்!
பதிவு செய்த நாள்
செப் 15,2017 22:52




நீண்ட விடுமுறையில் வெளியூர் செல்ல விரும்புவோர், வழங்கல் துறை இணையதளத்துக்கு சென்று, 'தற்காலிகமாக ரேஷன் பொருட்கள் வேண்டாம்' என்று பதிவு செய்யும், புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால், நீண்ட நாட்களாக ரேஷன் பொருள் வாங்காததால், கார்டு ரத்தாவதை தவிர்க்கலாம்.
ரேஷன் பொருட்கள் வெளி மார்க்கெட்டில் முறைகேடாக, அதிக விலைக்கு விற்கப்படுவதையும், வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதையும் தடுக்க, 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, அனைவரும் தங்கள் ஆதார் மற்றும் மொபைல் போன் எண்களை, ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டியது, மிகவும் அவசியமாகும்.

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கினால், அதன் விலை, பொருட்களின் அளவு உள்ளிட்ட விபரங்களை, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிந்து கொள்ளலாம். தற்போது நடைமுறையில் வந்துள்ள இந்த திட்டத்தின் உதவியால், ஒருவரின் கார்டை முறைகேடாக கடை ஊழியரோ, வேறு எவரோ பயன்படுத்தி, பொருள் வாங்குவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. மானியம் விரயமாவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஆனாலும், 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் குறித்த, போதுமான விழிப்புணர்வு இல்லாததால், இன்னும் பலர் தங்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் எண்களை, ரேஷன் கடைகளில் இணைக்காமல் உள்ளனர்.

இது குறித்து, மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 83 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதை தவிர, முகவரி சான்றுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் ரேஷன்கார்டுகள், 4500 உள்ளன. ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி, 95 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் இது குறித்து அறியாதவர்களே, மீதமுள்ள ஐந்து சதவீதம் பேர். ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாகவும், கடைகளில் அறிவிப்புகள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.விரைவில், அனைவரும் இத்திட்டத்தில் இணைக்கப்படுவர். மாவட்டத்தில் இதுவரை, 6 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு, 'ஸ்மார்ட் கார்டு'கள் வழங்கப்பட்டு விட்டன. மீதமுள்ளவர்களுக்கான கார்டு, சென்னையில் அச்சிடப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் அச்சிட்டு வந்து விடும். அதன்பின் ரேஷன் பொருட்கள் வினியோகத்தில், எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. ரேஷன் பொருள் தேவைப்படும் ஏழைகளுக்கு, பொருட்கள் கிடைப்பதில் தடை எதுவும் இருக்காது.

இணையமே துணை!
இந்த இணைய பயன் பாட்டின் மற்றொரு பயனாக, நீண்ட நாட்களாக ரேஷன் பொருள் வாங்க முடியாதவர்கள், அது குறித்து, வழங்கல் துறைக்கு தெரிவிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. www.tnepds.gov.in எனும் வழங்கல் துறையின் இணையதளத்தில், இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் வெளியூர் செல்வோர், இதற்கான பல்வேறு தலைப்புகளில், 'உரிமை விட்டுக்கொடுத்தல்' (Give it up) என்ற தலைப்பை தேர்வு செய்து விட்டால் போதும்.

இதன் வாயிலாக, மீண்டும் திரும்பி வரும் வரை, ரேஷன் பொருட்களை முடக்கி வைக்கலாம். விடுமுறை முடிந்து திரும்பியவுடன், மீண்டும் அந்த தலைப்பை நீக்கி விட்டு, பொருட்கள் வாங்கலாம். விடுமுறை காலத்தில் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காததால், ரேஷன் கார்டு ரத்து மற்றும் 'ஸ்டாப் சப்ளை' நடவடிக்கைகளை, இதன் வாயிலாக தடுக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

ஆனால், இந்த வழிமுறை குறித்து, யாருக்கும் தெரியாததாலோ என்னவோ, இதுவரை எவரும் விண்ணப்பித்ததாகத் தெரியவில்லை. இதற்கு, ஒரு முறை 'கிவ் இட் அப்' கொடுத்து விட்டால், மீண்டும் திரும்பப் பெற முடியுமா என்ற அச்சம், மக்களிடம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பயத்தைப் போக்கி, இது ஒரு நல்ல திட்டம் என்று, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், உணவு வழங்கல் துறைக்கு உள்ளது.

யார் மீது தவறு?

கோவை மாவட்டத்தில், 'ஸ்மார்ட் கார்டு' வினியோகிக்கும் பணி தாமதமாகி வருவது, இது கிடைக்காத மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எல்லா தகவல்களையும் சரியாகக் கொடுத்தும், தவறான புகைப்படம், பிழைகளுடன் பெயர் என 'ஸ்மார்ட் கார்டு'கள் தவறுதலாக வருகின்றன. இந்த தவறுகளை திருத்தம் செய்யவும், 'ஸ்மார்ட் கார்டு' வினியோகப் பணியை வேகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகத்தின் கடமை.-நமது நிருபர்-
 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்,போராட்டம்,வாபஸ்

மதுரை:உயர் நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையால், வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் உத்தரவாதம் அளித்தன. நேற்று மதியம், 2:00 மணி முதல் வேலைக்குத் திரும்பவும், தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும், 21ம் தேதி ஆஜராகவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.





மதுரை வழக்கறிஞர் சேகரன் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின், காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு, இடைக்காலத் தடை கோரி மனு தாக்கல் செய்தேன். செப்., 7ல் நீதிபதிகள், 'வேலை நிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது' என்றனர்.

ஆனாலும், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்களுக்கு, உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு பற்றி, தலைமைச் செயலர் அறிவிப்பு செய்துள்ளார். சம்பந்தப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அவமதிப்பு வழக்கு

மனுவை, நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, நேற்று காலை, 10:45 மணிக்கு விசாரித்தது.அவமதிப்பு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் தாஸ், தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தலைவர் மோசஸ் ஆகியோர் ஆஜராகி, தாக்கல் செய்த மனு:

நீதிமன்ற உத்தரவை மீறுவதோ, அவமதிப்பதோ எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள், ஏழு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரதிநிதிகள். எங்களுக்கு, 2006ல், திருத்தப்பட்ட சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. 2016 ஜன., 1 முதல் சம்பளத்தை உயர்த்தியிருக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் உயர்த்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கடந்த, 2016 பிப்ரவரி, 19ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 'மத்திய அரசு

ஊழியர்களுக்கான ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், உடனடியாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த படும். 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களை, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் கொண்டுவர குழு அமைக்கப்படும். குழு பரிந்துரைத்த, நான்கு மாதங்களில் முடிவு செய்யப்படும். தற்காலிக ஊழியர்கள் வரன்முறைப்படுத்தப்படுவர்' என,அறிவித்தார். இவ்விவகாரத்தில், இதுவரை நடவடிக்கை இல்லை. 2016 மத்தியில், ஏழாவது சம்பளக் கமிஷனின் சம்பள உயர்வு அமல்படுத்தபட்டது.

பேச்சுக்கு அழைப்பு

தமிழக அரசு சம்பளத்தை உயர்த்தவில்லை. அரசுடன் பேச்சு நடந்தது; அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். கோரிக்கைகளை வலியுறுத்தி,போராட்டம் நடத்தினோம். 9ம் தேதி, ஈரோட்டில் முதல்வர் முன்னிலையில், பேச்சு நடத்த அழைப்பு வந்தது.அங்கு வெளியில் வந்த ஒரு அமைச்சர், 'இவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளனர்' என, பேட்டியளித்தார்.

நாங்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இடையூறின்றி போராட்டம் நடத்துகிறோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.

நீதிபதிகள்: சட்டரீதியாக தீர்வு காண, இதர வழிகள் உள்ளன. ஏன் போராட்டத்தை கையில் எடுத்துள்ளீர்கள். உடனடியாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும். வேலை நிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், போராட்டத்தை தொடர்வது தவறு. அரசு அலுவலகங்களுக்குள் சமைத்துச் சாப்பிட்டு, ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன. உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு கூறி, சற்று நேரம் விசாரணையை ஒத்திவைத்தனர்.மீண்டும் பகல், 11:15 மணிக்கு நீதிபதிகள் விசாரித்தனர்.

சங்கங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்: பொதுக்குழுவை கூட்டி, முடிவெடுக்க அவகாசம் அளிக்க வேண்டும்.

சங்க நிர்வாகிகள்: எங்கள் பிரச்னையையும் கருத்தில் கொள்ளுங்கள்.

நீதிபதிகள்: இது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. முதலில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுங்கள். உங்கள் பிரச்னைக்கு தீர்வு காண நாங்களும் விரும்புகிறோம். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றால், தமிழக அரசின் தலைமைச் செயலரை இங்கு வரவழைத்து, உங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உதவுகிறோம்.

வாபஸ் பெறாவிடில், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். கலெக்டர் அலுவலகங்களில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, ஒரு மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டிய நிலைஏற்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

பின், சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

போராட்டத்திற்கான அறிவிப்பு, ஜாக்டோ- ஜியோ மூலம் வெளியானது. காலவரையற்ற வேலை நிறுத்தம் மூலம் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், போராட்டத்தை தொடர்கின்றனர்.

அரசு அலுவலகங்களை தனி நபர் சொத்து போல் பாவித்துள்ளனர். அரசு அலுவலகங்களில் காலை, இரவு தங்கி, போராட்டத்தை தொடர எவ்வித உரிமையும் இல்லை. அரசு அலுவலகங்கள் ஒன்றும் ஓய்வறை அல்ல; அது மக்களுக்கான இடம்.

அரசு ஊழியர்கள், மக்களுக்கான அதிபதி போல செயல்படக் கூடாது. கலெக்டர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான இடம். தற்போது, மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் நிவாரணம் கோரி, அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். இந்நிலையில், அரசு அலுவலகங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் ஊழியர்கள் கொண்டு வந்துள்ளதால், மக்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

ஊழியர் சங்கங்கங்கள், 'கோரிக்கைகளை ஏற்கும் பட்சத்தில், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும்' என்கின்றன. வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுவது குறித்து, பொதுக்குழு கூடி முடிவெடுப்பதாக சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

நாங்கள் ஏற்கனவே வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்துள்ளோம். இந்நிலையில், பொதுக்குழுவை கூட்டி, வாபஸ் பெற வேண்டும் என்ற கேள்வியே கிடையாது. முதலில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்.சங்கங்கள் சார்பில், 'வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்.

இதில், நிரந்தரத் தீர்வு தேவை. அதற்காக நீதிமன்றத்தை முழுமையாக நம்புகிறோம்' என்கின்றனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'நிரந்தரத் தீர்வு காண, அரசு தேவையான முயற்சிகளைச் செய்தது. ஊழியர்களின் போராட்டத்தால் தீர்வு எட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது' என்கிறார்.

இவ்விவகாரத்தில், அரசின் முடிவை தெளிவுபடுத்தும் வகையில், தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும், 21ல், இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். 

இக்கால கட்டத்தில், ஏழாவது சம்பளக் குழுவின் பரிந்துரை மற்றும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு முயற்சி எடுத்திருக்க வேண்டும். வேலை நிறுத்தத்தை கைவிட்டு, இன்று மதியம், 2:00 மணிக்கு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Friday, September 15, 2017

விவாதம்: மாதவிடாயை ஏன் மறைக்க வேண்டும்?

Published : 03 Sep 2017 11:40 IST





சில துளி ரத்தம் தன் மகளின் உயிரையே பறித்துவிடும் என்று அந்தப் பெற்றோருக்குத் தெரியாது. தனது சுடுசொல், ஒரு பிஞ்சு மாணவியின் உயிரைக் குடித்துவிடும் என்று அந்த ஆசிரியர் நினைத்திருக்க மாட்டார். இப்படிச் சிலரின் அறியாமையும் அலட்சியமும் பல குழந்தைகளைப் பலிவாங்கியபடி இருக்கின்றன. அதற்குச் சமீபத்திய சான்று, பாளையங்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி.

ஏழாம் வகுப்பு படித்த அந்த மாணவிக்கு அன்று மாதவிடாய். எத்தனை கவனமாக இருந்தும் ஆடை நனைந்து அது நாற்காலியையும் நனைத்துவிட்டது. அதைப் பார்த்த ஆசிரியர் கோபத்தில் சத்தம்போட, மனம் உடைந்துபோனார் அந்த மாணவி. வீட்டுக்கு வந்தவர் மறுநாள் அதிகாலை யாருக்கும் தெரியாமல் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்டார். ‘நான் செத்தே ஆக வேண்டும்’ என்று அந்த மாணவி தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதிவைத்திருக்கிறார். ஏன் சாக வேண்டும் அந்தச் சிறுமி? மாதவிடாயும் உதிரப் போக்கும் உயிரைப் பறிக்கும் காரணிகளா?

அம்மாவின் வலி தெரியுமா?

இதெல்லாம் பொருட்படுத்தக்கூடிய சம்பவமே இல்லை என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால், இந்தச் சிறுமியைப் போல் பல பெண் குழந்தைகளும் பெண்களும் ஒவ்வொரு மாதமும் செத்துச் செத்துப் பிழைக்கிறார்கள்.

“அந்தக் காலத்தில் என் அம்மாவும் பாட்டியும் எப்படிக் கட்டுக்கோப்புடன் வாழ்ந்தார்கள் தெரியுமா?” என்ற ஒப்பீட்டுடன் எழுப்பப்படும் கேள்வியைவிடக் கேவலம் வேறில்லை. அவர்களை அன்போடு அணுகிக் கேட்டிருந்தால், அவர்களும் இப்படிப் பல்லாயிரம் வேதனைக் கதைகளை பகிர்ந்திருப்பார்கள். மாதவிடாய் காலத்துத் துணியை மறைத்துவைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் கூரையில் செருகிவைத்த கிராமத்துப் பெண்கள் ஏராளம். காலையில் வயலுக்குக் கிளம்புகிற அவசரத்தில் அவற்றை உதறிப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பிலாமல் கூரையில் இருந்து அப்படியே எடுத்துப் பயன்படுத்தி, அவற்றில் பதுங்கியிருந்த விஷப் பூச்சிகள் கடித்து மாண்டுபோன பெண்களும் உண்டு.

கழனிக் காட்டில் நாள் முழுக்க வேலை செய்யும்போது, மாதவிடாய்த் துணியை மாற்ற வழியிருக்காது. காலையில் பயன்படுத்திய அந்தத் துணியையே அலசிப் பிழிந்து பயன்படுத்தும் பெண்களைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. மாதவிடாய்த் துணி உரசுவதால் இரண்டு தொடைகளிலும் ரத்தம் கசிய, ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாமல் கால்களை அகட்டி நடக்கிற பெண்களின் வேதனை உணர்ந்த யாரும், ‘பெண்கள் மாதவிடாய் குறித்துப் பேசலாமா?’ என்று கேட்க மாட்டார்கள்.

மாதவிடாய் நாட்களில் ‘தீட்டு’, ‘வீட்டு விலக்கு’, ‘தூரம்’ என்று சொல்லப்பட்டு வீட்டுக்கு ஒதுக்குப்புறத்திலோ ஊருக்கு ஒதுக்குப்புறத்திலோ பாதுகாப்பற்ற பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு, பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளான பெண்களும் நம் நாட்டில் நிறைய உண்டு. இப்படி ஒதுக்கிவைப்பது இன்று நவீனத்துவம் அடைந்திருக்கிறதே தவிர, முற்றிலும் ஒழிந்துவிடவில்லை.

மாறிவிட்ட வாழ்க்கை முறை

அன்றைய வாழ்க்கை முறை பல பெண்களுக்கு உடல் வலுவைக் கொடுத்திருந்தது. அதனால் மாதவிடாய் நேரத்து வலியை, அவர்களால் ஓரளவுக்குச் சமாளித்திருக்க முடியும். ஆனால், ஒப்பிடவே முடியாத அளவுக்கு இன்றைய நிலை மோசமாக இருக்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், ரசாயன வீரிய உரங்களாலும் பூச்சிக்கொல்லிகளாலும் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு, நெருக்கடியான வாழ்க்கை முறை போன்றவற்றால் இன்றைக்கு பத்து அல்லது அதற்குக் குறைவான வயதில் பல சிறுமிகள் பருவமடைகின்றனர். பல பெண்களுக்குச் சீரற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு, கருப்பையில் நீர்க்கட்டிகள் உள்ளிட்ட சிக்கல்கள் இளம் வயதிலேயே ஏற்படுகின்றன. முப்பது வயதைக் கடந்த பெரும்பாலான பெண்கள் ஒவ்வொரு மாதமும் கருப்பையோடு போராடியபடியேதான் வாழ்கிறார்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டும் சமாளித்தபடியும்தான் பெண்கள் வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது மனிதத்தன்மையற்ற செயல்.

மாணவிகளின் துயரம்

மாதவிடாய் நாட்களில் பள்ளி மாணவிகள் படும்பாட்டை வார்த்தைகளில் எளிதாக அடக்கிவிட முடியாது. பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை இருந்தாலும் அவற்றில் பெயரளவுக்குக்கூடத் தண்ணீர் வருவதில்லை. பயன்படுத்திய நாப்கின்களை அகற்ற மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டிகள் இருப்பதில்லை. இப்படிப் பல இல்லைகளுக்கு நடுவேதான் லட்சக்கணக்கான மாணவிகள் மாதவிடாயைக் கடந்துவர வேண்டியிருக்கிறது.

எனக்குத் தெரிந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தினமும் வீட்டில் இருந்து நான்கு பெரிய பாட்டில்களில் தண்ணீர் எடுத்துச் செல்வார். காரணம் கேட்டபோது பள்ளியில் தண்ணீர் வசதி இல்லை என்றார். அப்போது அங்கே படிக்கும் மாணவிகளின் நிலை? “என்ன செய்யறது? கிராமமா இருக்கறதால பக்கத்துல இருக்கற பசங்களோட வீட்டுக்குப் போயிட்டு வருவாங்க” என்றார். இந்த நிலையில்தான் இன்று பெரும்பாலான பள்ளிகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட பின்னணியில்தான் மாதவிடாயை நாம் அணுக வேண்டியுள்ளது.

எது அந்தரங்கம்?

ஏற்றுமதி நிறுவனங்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இப்படிப் பெண்கள் பணிபுரியும் பல இடங்களில் பெண்களுக்கான கழிப்பறைகள் குறைந்தபட்ச சுகாதாரத்துடன்கூட இருப்பதில்லை. அலுவலகங்களில் பணியாற்றுகிற பெண்களின் நிலையே இப்படியென்றால் கட்டிட வேலை செய்யும் பெண்கள், காய்கறி விற்பவர், வீடு வீடாகச் சென்று பொருட்கள் விற்பவர் போன்றோரின் நிலைமை நம் கற்பனைக்கு எட்டாதது.

பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்துக்கு உதவும் எந்த அடிப்படை ஏற்பாடுகளும் இல்லாத சமூகத்தில், “பெண்கள் மாதவிடாய் குறித்துப் பேசக் கூடாது. மாதவிடாய் மிகவும் அந்தரங்கமானது” என்பது போன்ற பிற்போக்கு கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். வளர்ச்சியின் ஒரு அங்கம்தான் மாதவிடாய். ஒருவர் வளர வளர உயரம் அதிகரிப்பது, மீசை வளர்வது போன்றவை எல்லாம் எத்தனை இயல்பானவையோ அத்தனை இயல்பான நிகழ்வுதான் மாதவிடாயும். அவற்றையெல்லாம் பெருமையாக நினைக்கிற நம்மில் பலரும், மாதவிடாய், உதிரப்போக்கு என்ற வார்த்தைகளைக் கேட்டாலே அருவருக்கிறோம்.

ஆண்களின் பங்கு அவசியம்

மாதவிடாய், மாதவிடாய் சுகாதாரம் குறித்துப் பெரும்பாலான பெற்றோருக்கே விழிப்புணர்வு இல்லாதபோது அவர்கள் எப்படித் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வார்கள்? இருபாலரும் படிக்கும் பல பள்ளிகளிலும் மாதவிடாய் சுழற்சி, இனப்பெருக்க அமைப்பு போன்ற பாடங்களும் நடத்தப்படுவதில்லை.

“மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் மாதவிடாய் குறித்த சரியான வழிகாட்டுதல் அவசியம். பாலின சமத்துவம், உடற்கூறு, பாலியல் கல்வி போன்றவை பள்ளியிலேயே கற்றுத்தரப்பட வேண்டும். குழந்தைகளுக்கு உணர்வுகளைக் கையாளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். பள்ளியில் பருவமடைகிற அல்லது மாதவிடாய் ஏற்படுகிற குழந்தைகள் மீது அந்தக் காலத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் இருந்த கரிசனம் தற்போது இருப்பதில்லை.

அதிக உதிரப்போக்கு இருந்தால் ஆடை நனையத்தான் செய்யும். அதற்கு அந்தக் குழந்தைகள் என்ன செய்வார்கள்?” என்று கேட்கிறார் சென்னையைச் சேர்ந்த மேம்பாட்டு ஆலோசகரும் ஆய்வாளருமான கீதா நாராயணன்.

மாதவிடாயும் உதிரப் போக்கும் பெண்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் நிகழ்வுதான். அதைப் பொத்திப் பொத்தி மறைத்துவைக்கத் தேவையில்லை, அருவருக்கவும் தேவையில்லை. அடுத்தவருக்குத் தெரிந்தால் அவமானமாகிவிடுமே என்ற நினைப்பு தேவையற்றது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மாதவிடாய் குறித்தும் அந்த நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஏற்பாடுகள் குறித்தும் கட்டாயம் சொல்லித்தர வேண்டும். எந்தச் சூழலையும் எதிர்கொள்கிற மனப்பக்குவத்துடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

அப்பா, அண்ணன், கணவன், பள்ளியில் உடன் பயிலும் நண்பன், அலுவலக நண்பன் என்று அனைவரிடமும் பெண்கள் தயக்கமின்றி மாதவிடாய் குறித்துப் பேச ஆரம்பிக்க வேண்டும். அப்படிப் பேசுவது தவறு என்ற மூடநம்பிக்கையை தொடர்வதன் மூலம், பெண்ணாகப் பிறப்பதே தவறு என்று சொல்வதாகத்தான் அர்த்தம் கொள்ள முடிகிறது. மாதவிடாய் குறித்தும் அந்த நாட்களில் பெண்கள் படும் வேதனை குறித்தும் உணர்ந்த ஆண்கள் அதைக் கேலிக்குரியதாகவோ கிளர்ச்சிக்குரியதாகவோ அணுக மாட்டார்கள். ஏனென்றால், மாதவிடாய் வலிகளை சமாளிக்கவும் கடந்துவரவும் ஆண்களின் துணையும் புரிதலும் பெண்களுக்கு அவசியம்.

நீங்க என்ன சொல்றீங்க?

தோழிகளே, மாதவிடாய் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் கற்பிதங்களை எப்படிக் களைவது? குடும்பத்திலும் சமூகத்திலும் எத்தகைய மாற்றம் தேவை? இதில் உங்கள் அனுபவம் என்ன? கருத்து என்ன? எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.
விவாதக் களம்: மறைக்கத் தேவையில்லை மாதவிடாயை!

Published : 10 Sep 2017 09:45 IST





பாளையங்கோட்டை பள்ளி மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, ‘மாதவிடாயை ஏன் மறைக்க வேண்டும்?’ என்று கடந்த செப்டம்பர் 3-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். வீடுகளில் இருந்துதான் மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்று பலரும் எழுதியிருந்தார்கள். ஆண்கள், பெண்களைப் போகப் பொருளாக மட்டும் நினைக்காமல் அவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்றும் சிலர் எழுதியிருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் உங்கள் பார்வைக்கு...

சமீபத்தில் ஒரு மருந்துகடைக்குச் சென்றபோது நீண்ட நேரமாக ஒரு பெண்பிள்ளை தயங்கியபடியே நின்றுகொண்டிருந்தாள். அங்கிருந்த ஆண்கள் சென்றதும் நாப்கினை ஒரு வித கூச்சத்தோடு கேட்டு வாங்கினாள். “இதற்கு ஏன் இவ்வளவு தயங்கி நிற்கிறாய்” எனக் கேட்டேன். “அப்படிக் கேட்டால் வெட்கமே இல்லாமல் கேட்கிறது என சொல்லிவிடுவார்களோ என்ற பயம்” என்று சொன்னாள். அந்தப் பெண்னை நினைத்து வருத்தப்படுவதா அல்லது இந்தச் சமுதாயத்தைப் பார்த்து வேதனைப்படுவதா எனத் தெரியவில்லை.

இந்தச் சமூகத்தில் புகைப்பிடிக்க எந்த ஆணும் வெட்கப்படுவதில்லை. அடித்துப் பிடித்து மதுவை வாங்கிக் குடித்துவிட்டு விழுந்து கிடக்க வெட்கப்படுவதில்லை. பொது இடம் என நினைத்துச் சிறுநீர் கழிக்க வெட்கப்படுவதில்லை. பெண்களை கேலி செய்யவும், பெண்களை இழிப்படுத்தும் பாடல்களைப் பாடவும், படமாக எடுக்கவும், காசு பண்ணவும் எந்த ஆணும் வெட்கப்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் மற்றவர்கள் முன்னிலையில் நாப்கினை வாங்கினால் வெட்கம் கெட்டவள் அப்படித்தானே? இன்னும் எத்தனை காலம் போராட வேண்டும் நாங்கள்?

கழிவறையே இல்லாத பள்ளியில் சிறுநீர் கழிக்காமல், மாதவிலக்கு நேரங்களில் துணிமாற்றக்கூட முடியாத நிலையில் தொடர்ந்து பத்து மணி நேரம் பளிளியில் என்னைப்போல லட்சகணக்கான பெண்கள் இன்னமும் அவதிப்பட்டுக்கொண்டும், வேதனை அனுபவித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இதை நினைத்து நம் சமுதாயத்தில் இதற்குக் காரணமான துறை அதிகாரிகளும், பள்ளி, கல்லூரி ஆகியவற்றை நடத்தும் நிர்வாகிகளும்தான் வெட்கப்பட வேண்டும். வாழ்வில் தானும் முன்னேற வேண்டும் என நினைக்கும் பெண்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கும் மனிதர்கள் வெட்கப்பட வேண்டும்.

- எஸ். ஆனந்தி, உறையூர்.

பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டும். பெண்ணை மதித்துப் பழக ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 60 வயதிலும் பெண்களுக்குப் புத்திமதி சொல்வதில் ஆர்வம் காட்டும் ஆண் சமூகம் திருந்த வேண்டும். வீட்டுக்கு ஒதுக்குப் புறத்தில் பெண்களை ஒதுக்கி வைப்பவரும் ஒரு பெண் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமே.

- வசந்தி, மதுரை.

மாதவிடாய் குறித்து வளரிளம் பருவப் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பல சந்தேகங்கள் உள்ளன. இது ஒரு சாதாரணமான இயற்கை நிகழ்வு என்பதை இருபாலருக்குமே புரியவைத்து விட்டால் ஆண் குழந்தைகள் இவற்றைத் தவறான வழியில் சென்று அறிந்துகொள்வது தடுக்கப்படும். அதோடு பெண்களின் பிரச்சினைகளையும் அவர்கள் கொஞ்சம் அனுசரனையோடு அணுகுவார்கள்.

- ஜே .லூர்து,மதுரை.

பள்ளிகளில் கழிப்பறைகளும் தண்ணீர் வசதியும் உண்டா என்பதைக்கூடப் பார்க்காமல் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதில் ஆரம்பிக்கிறது நமது அலட்சியம்.

மாதவிடாய் காலத்தை எப்படிக் கடக்க வேண்டும் என்பதுகூடத் தெரியாத ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள் படும் வேதனைதான் மிகவும் கொடுமையானது. அதுவும் அரசுப்பள்ளிகள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய முறையான கழிப்பிடங்கள் உள்ளனவா என்பதனை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும்.

- ஆர்.ஏ. தீபனா, களியனூர்.

இன்றைய நவீன காலகட்டத்திலும் பெண்கள் தங்களது மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள் என்பதே உண்மை. அது மாதாமாதம் இயற்கையாக பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு நிகழ்வு என்பதைப் படித்தவர்கள்கூட ஏற்க மறுக்கிறார்கள் என்பதும் உண்மைதான். பதின்ம வயதுப் பிள்ளைகளிடம் இது குறித்த முறையான புரிதல் இல்லை. அத்தகைய புரிதலை அவர்களிடம் ஏற்படுத்தும் தெளிவு நம்மிடம் இன்னும் ஏற்படவில்லை.

பல பெண்களால் இன்றும் கடைகளில் கூச்சப்படாமல் வெளிப்படையாக நாப்கின் வாங்க முடிவதில்லை. ஏதேனும் விசேஷங்களுக்கு ‘இந்தக் காரணத்தால்’ வரக் கூடாது என்று சொல்லும்போது அந்தப் பெண்ணின் உணர்வைப் பெண்களே புரிந்துகொள்வதில்லை. முதலில் பெண்கள் இந்த விஷயத்தை இயல்பாகக் கடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களது ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே மாதவிடாய் நேர சிரமங்களை எடுத்துச் சொல்லி வளர்க்க வேண்டும். அந்த நாட்களில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அவர்களை எப்படிப் புரிந்து கொண்டு உதவ வேண்டும் என்பதையும் அம்மாதான் சொல்லித் தரவேண்டும்.

பள்ளிகளில் வளரிளம் பருவ பெண்களுக்கு மாதவிடாய், நாப்கின் உபயோகிப்பது, அந்த நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் போன்றவற்றைக் கற்றுத்தர வேண்டும். உபயோகித்த நாப்கின்களை எவ்வாறு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் அகற்றுவது என்பதையும் அவசியம் கற்றுத்தர வேண்டும்.

ஆடைகளில் கறைபடுவது பெரிய குற்றம் இல்லை. இதை இனியாவது அனைவரும் உணர வேண்டும். ஆனால் இந்தப் பாடத்தை எல்லோரும் கற்றுக்கொள்ள ஒரு இளந்தளிர் அநியாயமாக உதிர்ந்து விட்டதுதான் வேதனை.

- தேஜஸ்,கோவை.
உனக்கு மட்டும்: ஒருநாள் கூத்து!

Published : 10 Sep 2017 09:42 IST




மூன்று முறை பஜ்ஜி, சொஜ்ஜி பரிமாறியது எதிர்பார்த்த முடிவைத் தரவில்லை. ஆனால், நான்காவதாக வந்தவர்களைப் பிடித்துப்போகவே ஒருவழியாக என் திருமணம் உறுதியானது. அதுவரை சும்மா சும்மா திட்டிக்கொண்டிருந்த அம்மா, ஒளித்துவைத்திருந்த அன்பையெல்லாம் என் மீது காட்டினார். டாமும் ஜெர்ரியுமாக இருந்த நானும் தங்கையும் உற்ற தோழிகள் ஆனோம். அப்பாவோ பட்ஜெட் பார்க்காமல் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார். தோழிகளுடன் ஷாப்பிங், வருங்காலக் கணவருடன் போனில் அரட்டை என்று நாட்கள் இனிமையாகக் கடந்தன.

ஊர்ப் பெருமைக்காகத் தன் சக்திக்கு மீறிச் செலவு செய்வதால், அப்பாவுக்குப் பணக் கஷ்டம் இருந்திருக்கும்போல. அடிக்கடி அம்மாவும் அப்பாவும் என்னைத் தவிர்த்துத் தனியாகப் பேச ஆரம்பித்தது கொஞ்சம் புதிதாக இருந்தது. தங்கள் கஷ்டங்களை என்னிடம் மறைக்க முயல்வது புரிந்தது. திடீரென்று என் வீட்டிலேயே நான் அந்நியப்பட்டதுபோல் தோன்றியது.பினேன்.

தங்கை என்னை இறுக அணைத்தவாறு தூங்கினாள். திருமண நாள் நெருங்க நெருங்க அவளது இறுக்கத்தின் அளவு கூடியது. அம்மா எப்போதும் இல்லாத வகையில் தன் இல்லற வாழ்வைப் பற்றி என்னிடம் அதிகம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். அந்தரங்க விஷயங்களும் அதில் உண்டு.

திருமணத்துக்கு முந்தைய நாளே உறவினர்கள் வர ஆரம்பித்தனர். வீடு களைகட்ட ஆரம்பித்தது. ஆனால், அப்பா முகம் மட்டும் கொஞ்சம் வாடியே இருந்தது. ஏதோவொன்று என் மனதை அழுத்தியது. முந்தைய நாள் இரவு முழுவதும் அறிவுரைகள் அள்ளி வீசப்பட்டன. தூக்கம் கண்ணை அழுத்தும் நேரத்தில், ‘மணப்பெண்ணைச் சீக்கிரம் ரெடியாகச் சொல்லுங்க’ என்ற குரல் கேட்டது.

அதிகாலை நான்கு மணிக்குக் குளிக்கச் சொன்னார்கள். குளித்துவிட்டு வந்த பிறகு, பியூட்டி பார்லரிலிருந்து வந்த பெண்கள், ஒப்பனை என்ற பெயரில் இரண்டு மணிநேரம் பாடாய்ப்படுத்தினார்கள். ஒரு வழியாக ஒப்பனை முடிந்ததும் கண்ணாடியைப் பார்த்து அதிர்ந்துபோனேன். அடையாளம் தெரியாத அளவு உருமாறி இருந்தேன்!

அழுகை அழுகையாக வந்தது. கண்ணில் நீர்கோத்ததைப் பார்த்த அம்மா, “அழக் கூடாது கண்ணு. நாங்கள் அடிக்கடி வந்து உன்னைப் பார்ப்போம், தைரியமா இருக்கணும்” என்று அடுக்கிக்கொண்டே போனார். அம்மாவைப் பார்த்துக் கோபத்தில் கத்த வாய் திறக்கும் நேரத்தில், “மேடம் ஸ்மைல் ப்ளீஸ்” என்று போட்டோகிராபர் சொன்னார்.

அவருக்கு மனதில் பி.சி.ஸ்ரீராம் கனவு இருக்கும்போல. தலைகீழான நிலையைத் தவிர அனைத்து நிலைகளிலும் என்னைப் படம் எடுத்துத் தள்ளினார். சாம்பார் மணம் மூக்கைத் துளைத்தது. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. தாலி கட்டி முடிக்கும்வரை எதுவும் சாப்பிடக் கூடாது என்று பசியில் மண்ணள்ளிப் போட்டாள் பாட்டி. மணமேடைக்குச் செல்லும்போது தெரியாமல் மிதிப்பதுபோல், பாட்டியின் காலை மிதித்துவிட்டுச் சென்றேன்.

மேடைக்கு அருகில் செல்லச் செல்ல கூச்சம் அதிகரித்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், விஜய் சேதுபதியைப்போல், மாப்பிள்ளை என்னைப் பார்த்து “ப்ப்பா… யாருடா இந்தப் பொண்ணு” என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்கொள்வாரோ என்ற பயம் வேறு இருந்தது. ஆனால் நான் ‘ப்ப்ப்பா’ என்று சொல்லும் அளவுக்கு (லிப்ஸ்டிக் மட்டும்தான் பாக்கி) அவர் மணமேடையில் இருந்ததைப் பார்த்ததும், சரி நாமே பரவாயில்லை என்கிற நிலைக்குத் திரும்பினேன்.


மேடையில் நான் அருகில் அமர்ந்ததும், மாப்பிள்ளை வெட்கத்தில் சற்று நெளிந்தார். அதைக் கவனித்த என் தங்கை, என்னைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். மேடையில் பெரிய புகை மண்டலம் உருவாகியிருந்தது. கண் மை முகத்தில் பரவிவிடும் என்பதால் கண்ணைக் கசக்கவும் முடியவில்லை. கழுத்தில் தொங்கிய மாலை வேறு மிகவும் பாரமாக இருந்தது. தலை நிமிரக்கூட முடியாமல் குனிந்தே இருந்தேன். ஒருவழியாக என் கணவர், எனக்குத் தாலிகட்டி முடித்துவிட்டார். அப்பாடா இனி சாப்பிடப் போகலாம் என்று நினைத்தால், வாழ்த்துச் சொல்வதற்காக நின்ற நீண்ட வரிசையைப் பார்த்ததும் தலைசுற்றியது.

பசியும் தூக்கமும் வாட்ட, அப்போது பார்த்து முதுகு அரித்தது. இங்கிதம் கருதி சொரிந்துகொள்ள முடியாமல் தவித்தேன். இந்தக் கடுப்பில் பி.சி.ஸ்ரீராம் கனவுக்காரர் வேறு, வாழ்த்த வந்தவர்களைப் போகவிடாமல், “இப்படிப் பாருங்க, கொஞ்சம் திரும்பி நில்லுங்க, முகத்தைத் திருப்புங்க” என்று என் டென்ஷனைக் கூட்டினார். சிறிது நேரத்தில் நான் ரோபோட் மாதிரி, அவர் சொல்லாமலேயே வாழ்த்த வந்தவர் கையைப் பிடித்து, அவரைப் பார்த்துத் திரும்பி, முகத்தைச் சற்றுத் தாழ்த்தி, கேமரா பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தேன்.

வாழ்த்துப் படலம் முடிந்தபின், சாப்பிட அழைத்துச் சென்றார்கள். சாப்பிடும்போது அப்பா, அம்மாவைத் தேடினேன். அவர்கள் அங்கு இல்லை. தங்கையிடம் அவள் சாப்பிட்டுவிட்டாளா என்று கேட்டேன். அந்தப் பொழுதில்தான் நான் முதன்முறையாகப் பெரிய மனுஷி (ஆன்ட்டி!) போல உணர்ந்தேன். “நீ சாப்பிடுக்கா, நான் அம்மாவுடன் சாப்பிடுகிறேன்” என்றவளை, அதட்டி என்னுடன் அமர்ந்து சாப்பிடவைத்தேன். தங்கையைத் தவிர என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம், எனக்குப் புதியவர்களாக இருந்தனர்.

இனிமையாகப் பேசினாலும், நன்றாகவே கவனித்தாலும், இன்று காலைவரை எனக்கென்று இருந்த அந்த பந்தம், கண்முன்னே விலகிச் செல்வது தெரிந்தது. தங்கை கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டேன். கண்ணில் நீர் மல்க, என்னைப் பார்த்தவண்ணம், அவளும் என் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் வகையில், ஏதோ முக்கிய வேலை இருப்பதுபோல் அப்பா அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தார். அம்மா அழுகையை அடக்கியவாறு ‘பொறுமை’ பற்றிய கடைசி நிமிட அறிவுரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். ‘நேரமாச்சு போலாமா’ என்று அத்தை வந்து அழைக்க, விடைபெறும் முன் அம்மாவைக் கட்டிப்பிடித்தேன். அம்மாவின் விசும்பல் கேட்டதும், நானும் அழ ஆரம்பித்தேன். என் தங்கை ஓடிவந்து எங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். என் காதில், “அழாதே, கண் மை கலைந்துவிடும்” என்று அழுதபடியே சொன்னாள். அப்பா கண்ணைத் துடைத்தவாறு தள்ளி நின்றுகொண்டிருந்தார். அவரை இப்படிப் பார்ப்பது எனக்கு இதுதான் முதல் முறை.

எல்லோரிடமும் விடைபெற்று, காரில் ஏறும்பொழுது, வேரோடு பிடுங்கப்பட்ட மரத்தின் மனநிலைதான் இருந்தது. “காரின் ஏசியை அணைத்து ஜன்னலைத் திறக்கலாமா? எனக்கு மூச்சுமுட்டுகிறது” என்று கேட்டேன். சரி என்று சொல்லி ஜன்னலைத் திறந்துவிட்டார். முகத்தை வருடிய குளிர்ந்த காற்று, சற்று இதமாக இருந்தது. என் கணவர் ஆறுதலாக என் கையை மென்மையாகப் பற்றினார். அப்பாவுடனான என் முதல் பயணம் நினைவுக்குவர, கண்ணை மூடியவண்ணம் கணவரின் தோளில் சாய்ந்தேன்.

- திவ்யா, சென்னை.


நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்

தோழிகளே, நெருங்கிய நண்பர்களிடம்கூடப் பகிர்ந்துகொள்ள முடியாமல் இப்படி எத்தனையோ விஷயங்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்து இருக்கலாம். அவற்றையெல்லாம் இறக்கிவைக்கத் தோள் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். அவற்றை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உற்ற தோழியிடம் மனச் சுமையை இறக்கிவைத்த நிம்மதி உங்களுக்கும், உங்கள் அனுபவத்தில் இருந்து பாடம் கற்கும் வாய்ப்பு அடுத்தவர்களுக்கும் வாய்க்கலாம் அல்லவா? தயங்காமல் எழுதுங்கள், அனைத்தையும் பேசுவோம்.

முகவரி

பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002.

மின்னஞ்சல்: penindru@thehindutamil.co.in
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முயற்சி: முதல்வர் உறுதி அளித்ததாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தகவல்

Published : 15 Sep 2017 08:03 IST

சென்னை



அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதாக தங்களிடம் முதல்வர் உறுதியளித்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருபிரிவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒரு பிரிவினர், தற்போதைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் உள்ளனர். முதல்வர் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். இந்நிலையில் அப்பிரிவைச் சார்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன் (தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர்), பெ.இளங்கோவன் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர்), தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் கே.மணிவாசகன் உள்ளிட்டோர் நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்துப் பேசினர்.


இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் இல்லாமல் இருப்பின் அக்டோபர் மாதத்தில் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இல்லையென்றால் 20 சதவீத இடைக்கால நிவாரணம் அளிக்கப்படும் என்று முன்பு முதல்வர் அளித்திருந்த அதே உறுதிமொழியை இப்போது மீண்டும் அளித்துள்ளார். அதேபோல், சிபிஎஸ் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு எந்த சூழ்நிலையிலும் காலநீட்டிப்பு செய்யப்படாது. முடிந்தவரை புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.

எனவே, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்கள் போராட்டத்தை அக்டோபர் வரை தள்ளிவைத்துவிட்டு பொறுமை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கணேசன் கூறும்போது, “கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, புதிய ஊதிய விகிதம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை செப்டம்பர் 30-ம் தேதி கிடைத்ததும் நடவடிக்கை எடுப்பதாகவும், சிபிஎஸ் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை நவம்பர் 30-ம் தேதி கிடைக்கப் பெற்றதும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் உறுதி அளித்தார். அதை ஏற்றுத்தான் எங்களின் போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளோம்” என்றார்.

இரா.சண்முகராஜன் கூறும்போது, “கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜாக்டோ-ஜியோவின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரக் கூடியவர் முதல்வர்தான். அவர் கொஞ்சம் அவகாசம் கேட்டுள்ளார். அந்த வகையில்தான், ஜனநாயகத்தின் அடிப்படையில் அவருக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

வேலூர் சி.எம்.சி பற்றி தெரியாத 6 விஷயங்கள்!

வேலூர் சி.எம்.சி
'மருத்துவர் ஆவதற்கு நீட் மட்டும் தகுதி அல்ல; சேவை மனப்பான்மையும் வேண்டும்' எனக் கூறி மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்த, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் செயல்பாட்டை சமூக ஆர்வலர்கள் வரவேற்கின்றனர். " இன்று நேற்றல்ல, 100 ஆண்டுகாலமாக மருத்துவப் படிப்பில் தனக்கான சுய அடையாளத்தோடு செயல்படுகிறது வேலூர் சி.எம்.சி" என்கின்றனர் மருத்துவர்கள். 
ஐடா ஸோபியா ஸ்கடர் என்ற அமெரிக்கப் பெண்மணியால் 1900-ம் ஆண்டில் நர்சிங் பள்ளியாகத் தொடங்கப்பட்டது வேலூர் கிறிஸ்துவக் கல்லூரி. 'தன்னைப் போலவே நிறைய பெண்களை மருத்துவப் பணிக்குக் கொண்டு வரவேண்டும்' என்ற நோக்கில் அவர் உருவாக்கியதுதான் இந்தப் பள்ளி. 1918-ம் ஆண்டில் இங்கு எல்.எம்.பி (லைசன்ஸ்டு மெடிக்கல் பிராக்டிஷனர்) என்ற மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டது. 1942-ல் எம்.பி.பி.எஸ் படிப்பை அளித்து வந்தனர். தற்போது எம்.பி.பி.எஸ், நர்சிங் உள்பட 179 வகையான படிப்புகள் இங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்காக மாணவ சமூகமே கொந்தளித்துக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தது வேலூர் சி.எம்.சி மட்டும்தான். 
வேலூர் சி.எம்.சி
இந்தியாவின் டாப் ரேங்கிங் கல்வி நிறுவனங்களில் ஒன்றான, வேலூர் சி.எம்.சி பற்றி வெளியில் தெரியாத சில விஷயங்களைப் பார்ப்போம். 
ஐடா1. பெண்களுக்காக செயல்பட்ட முதல் மருத்துவக் கல்வி நிறுவனம் என்னும் பெருமையை தன்னகத்தே கொண்டது வேலூர் சி.எம்.சி. தொடக்க காலங்களில் 100 சதவிகித மருத்துவக் கல்வி இடத்தையும் பெண்களுக்கே வழங்கியது சி.எம்.சி. இதற்குக் காரணம், அந்தக் காலகட்டங்களில் ஆண்கள் பிரசவம் பார்ப்பதை சமூகம் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பிரசவ மரணங்கள் நிகழ்வதைக் கண்டு வெதும்பி, வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலூர் திரும்பினார் ஐடா. பிரசவ மரணங்களைத் தடுக்க, அதிகளவிலான பெண்கள் மருத்துவர்கள் ஆக வேண்டு ம் என்ற நோக்கத்திலேயே 100 சதவிகித இடங்கள் அவர்களுக்கே ஒதுக்கப்பட்டது. 
2.  100 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட இக்கல்வி நிறுவனத்தில் 1918-47 வரை பெண்களை மட்டுமே மருத்துவ மாணவர்களாக சேர்த்துக்கொண்டிருந்துள்ளனர். 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்பன போன்ற மூட நம்பிக்கைகள் உலவிய காலத்தில், ஏராளமான பெண் மருத்துவர்களை உருவாக்கிக் காட்டியது வேலூர் சி.எம்.சி. 
3. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னரே இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்ட போதும், பெண்களுக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்கியது இக்கல்லூரி. இன்றளவும் மாணவிகளே இங்கு அதிகம் படிக்கின்றனர்.  
4. ’நீட்’ நுழைவுத்தேர்வு முறையை பலவித ஏற்றத்தாழ்வுகளுடன் இன்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும் இந்தியாவிலேயே முதன்முறையாக 1970-ம் ஆண்டிலேயே அனைவருக்கும் பொதுவான நுழைவுத்தேர்வு முறையையும் நேர்முகத் தேர்வு முறையையும் அறிமுகப்படுத்தியது வேலூர் சி.எம்.சி. இதன் நுழைவுத்தேர்வு வழிமுறைகளைத்தான் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் கடைபிடித்துவருகின்றன.  
5. மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது, இரண்டரை நாள்கள் சில அடிப்படைத் தேர்வுகளை நடத்துகிறது வேலூர் சி.எம்.சி. மாணவர்களின் தனித்தன்மையை பரிசோதிக்கும் வகையிலும் மருத்துவ சேவைக்கு அவர்கள் தகுதியானவர்கள்தானா என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தத் தேர்வு முறை அமைந்திருக்கிறது. இதில் மாணவர்களின் பதிவு எண்ணுக்குப் பதிலாக டம்மி எண்கள் கொடுக்கப்படுகின்றன. எந்த மாணவர் எவ்வளவு மதிப்பெண் எடுத்தார் என்பது யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியம் காக்கப்படுகிறது. உலகின் சிறந்த தேர்வு முறையாக வேலூர் சி.எம்.சி-யின் அணுமுகுறையைச் சொல்கின்றனர். முதன்முதலில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்த வேலூர் சி.எம்.சிக்கு கடந்த ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களும் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்ட நிலையில், வேலூர் கிறிஸ்தவக் கல்லூரி மட்டும் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரையில் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் துணிச்சலான முடிவை அறிவித்துள்ளது. 
6. இந்தியாவில் 20 மருத்துவமனைகளை நிர்மானித்து, அந்த மருத்துவமனைகளுக்கான சிறந்த மருத்துவர்களை உருவாக்கி அனுப்பி வைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆண்டுக்கு வெறும் 3,000 ரூபாய் கல்விக் கட்டணம் கொண்ட இந்நிறுவனத்தில் படிக்கத் தேர்வு செய்யப்படும் ஒருவர், 3 ஆண்டுகள் கிராமப்புற சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகின்றனர். இதுபோன்ற ஒப்பந்த முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமை வேலூர் சி.எம்.சியையே சாரும். 
“அடித்தட்டு மக்களுக்கான மருத்துவர்களை உருவாக்குவதே ஒரே பணி” என்ற கொள்கையுடன் இதுவரையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 100 ஆண்டுகள் பாரம்பர்யம் நிறைந்த இக்கல்வி நிறுவனத்தின் 100-ம் ஆண்டு விழா வருகிற 2018-ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மாணவர்கள் நிரம்பி வழிவார்களா என்ற கேள்விக்குறியோடு சி.எம்.சி மருத்துவக் கல்லூரி வளாகத்தை வலம் வருகின்றனர் மாணவர்கள்.
 

போராட்டங்களும், நீதிமன்றங்களும்... ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் என்ன சொல்கிறார்?

இரா.தமிழ்க்கனல்




பணமுடக்கம், ஜிஎஸ்டிக்கு அடுத்து நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவருகின்றன. ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் இணைந்த போராட்டமும் இதில் அடக்கம். இந்தப் போராட்டங்களுக்கு எதிராக நீதிமன்றம்வரை சிலர் போக, சில நீதிபதிகளின் அதிரடித் தீர்ப்புகளும்வெளியாகின.

அரசமைப்புச் சட்டத்தின்படி நீதிமன்றங்கள் வழங்கும் உத்தரவுகள், தீர்ப்புகளைத் தவிர, நீதிபதிகள் சிலர் வாய்மொழியாகத் தெரிவிக்கும் கருத்துகள் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன. நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தடைவிதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பாதிக்காதபடி நடத்தலாம் என்று கூறியது. அதையடுத்து, அரசு ஊழியர் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அதிக ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்கள் போராடக்கூடாது என்றெல்லாம் குறிப்பிட, அது சர்ச்சையாகி உள்ளது.

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான போராடும் உரிமையை கூடாது என நீதிபதி கூறுவதற்கு சட்ட முகாந்திரம் உள்ளதா என்பது எழுத்தாளர்கள், கலைஞர்கள், உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இது குறித்து உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கேட்டோம். சட்டரீதியான விசயங்களை நம்மிடம் அவர் விவரித்தார்.

“ஜி.எஸ்.மணி என்ற வழக்குரைஞர், நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்தக்கூடாது என்று ஒரு பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் போட்டார். இந்தப் போராட்டங்கள் சில அரசியல் கட்சிகளின் ஆதாயங்களுக்காக நடத்தப்படுவதாகக் கூறினார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், கடந்த 8ஆம் தேதி ஓர் உத்தரவு பிறப்பித்தது.

முதலில், நீட் தேர்வை எதிர்த்த போராட்டம் வேண்டாம் என்று கூறும் திரு. ஜி.எஸ். மணியின் கோரிக்கையில், அரசியல் ஆதாயம் இல்லையா? மத்திய அரசும் மாநில அரசும் கோருவது அதைத் தானே?

உச்ச நீதிமன்றம், மேற்சொன்ன இடைக்கால உத்தரவில், அமைதியான முறையில் போராடும் உரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டம் வழங்கி இருப்பதால், வன்முறையின்றி போராடலாம் என்று கூறியது. ஆனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாதபடி நீட் தேர்வை எதிர்த்த போராட்டங்கள் நடத்தலாம் என்றும் சட்டம் ஒழுங்கு பாதிக்கையில் அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19, இந்திய மக்களுக்கு சில அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. குறிப்பாக, பிரிவு 19(1) (ஏ), கருத்துசுதந்திரத்தை வழங்குகிறது. 19(1)(பி), ஆயுதமின்றி அமைதியாகக் கூடுவதற்கான உரிமையை வழங்குகிறது. அதாவது, பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்கள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று மக்கள் கூடி கருத்துகளை அமைதியான வழியில் தெரிவிக்கும் உரிமையை, அரசமைப்புச் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்குகிறது.

ஆனால், அரசமைப்புச் சட்டம் பிரிவு 19(2) கருத்துரிமைக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அத்தகைய கட்டுப்பாடுகளில், அரசமைப்புச் சட்டம் குறிப்பிடுவது என்னவென்றால், பொது ஒழுங்கை (public order) குலைக்கும்வகையில், கருத்துச்சுதந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான்.

அரசமைப்புச் சட்டம், சட்டம் ஒழுங்கை (law and order) பாதிக்கும்நிலை இருந்தால், கருத்துரிமையைப் பயன்படுத்தக்கூடாது என்று ஏதும் கூறவில்லை. அதற்கு மாறாக பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்காமல் கருத்துச்சுதந்திரம் இருக்கவேண்டும் என்கிறது.
சட்டம் ஒழுங்கு என்பது வேறு, பொது ஒழுங்கு என்பது வேறு. சட்ட ஒழுங்குப் பிரச்னை என்பது மிகச் சாதாரணமானது. அதைக் கூறி, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்க முடியாது. ஆனால் பொது ஒழுங்குக்கு பாதிப்பை உண்டாக்கும்வகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்த அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை.

பொது ஒழுங்குக்குக் குந்தகம் என்பதை விளங்கிக்கொள்ள, மூன்று உதாரணங்களைப் பார்க்கலாம்.

அரியானாவில் குர்மீத் ராம் ரகிம்சிங் சாமியார் வழக்கில் தீர்ப்பு சொல்வதற்கு நீதிபதி தனி ஹெலிகாப்டரில் செல்லும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாக இருந்தது. பொதுச்சொத்துக்கு மிகுந்த சேதம் ஏற்படுத்தப்பட்டது. 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. அதாவது பொது ஒழுங்கு (public order) பாதிக்கப்பட்டது. இம்மாதிரி பொது ஒழுங்கு பாதிக்கப்படும்போது, ஒருவர், அரசமைப்புச்சட்டம் கருத்துரிமையை அடிப்படை உரிமையாக வழங்குகிறது என்றும் மேற்சொன்னபடியான பொது ஒழுங்கை பாதிக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்றும் கூறமுடியாது. பொது ஒழுங்கை பாதிக்கும் அந்த மாதிரியான கூட்டங்களை, போராட்டங்களைத் தடுக்க அரியானா அரசும் முன்வரவில்லை. எவரும் உயர் நீதிமன்றத்தையோ உச்ச நீதிமன்றத்தையோ அணுகி, இப்படிப்பட்ட பொது ஒழுங்கை பாதிக்கும் கூட்டத்தைத் தடுக்கவேண்டும் என்று கோரவும் இல்லை.

இரண்டாவதாக, முன்னர் கன்னையாகுமார் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் விசாரிக்கச் சென்ற மூத்த வழக்கறிஞர்களையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களையும் பேராசிரியர்களையும் உச்ச நீதிமன்றத்திலிருந்து 500 அடி தொலைவே உள்ள பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் இந்துத்துவாவாதிகள் தாக்கியபோது, உச்ச நீதிமன்றமோ டெல்லி உயர் நீதிமன்றமோ ஏதும் செய்யவில்லை. நீதிமன்றத்திலேயே தாக்குதல் நடத்துவது பொது ஒழுங்குக்குக் குந்தகம் இல்லையா?

மூன்றாவதாக, 2002-ல் குஜராத்தில் அப்பாவி இந்துக்கள் கோத்ரா ரயிலில் தீவைத்து எரிக்கப்பட்ட பின், அவர்களின் சடலங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்றதை அடுத்து, சுமார் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். பொதுச்சொத்துக்களுக்கு இழப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டது. இது, பொது ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு. எனவே, கருத்துரிமை எனும் பெயரால் அப்படி ஒரு பிண ஊர்வலத்தை நடத்தமுடியாது.

ஆனால் அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கைப் பற்றி கீழ்வரும் உச்ச நீதிமன்ற வழக்கு தெளிவாக்கும்.

இந்து பத்திரிகைக் குழுமமானது, ‘ஒரே ஒரு கிராமத்திலே’ எனும் தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தது. அத்திரைப்படம், அரசமைப்புச் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுகிறது; இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்று காரணம் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் இத்திரைப்படத்தைத் திரையிடுவதற்கான அனுமதிச் சான்றை ரத்துசெய்து தீர்ப்பளித்தது. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இம்மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அதில், அரசமைப்புச் சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும் கருத்துச்சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது என்றும் அந்த அடிப்படை உரிமையை எந்த அரசும் சட்டம் ஒழுங்கு எனக் காரணம்கூறி பறிக்கமுடியாது என்றும் அப்படிப் பறிக்கமுயன்றால் உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் அரசின் அச்செயலை ரத்துசெய்வதுடன் அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையைத் தூக்கிப்பிடிக்கவேண்டும் என்றும் கூறியது.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக, நீட் எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக, வன்முறையின்றி, அறவழியில், காந்திய வழியில் நடைபெறுகிறது. மேற்சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், தமிழக அரசு அமைதிவழியில் போராடுபவர்களை வழக்குப்போட்டு கைதுசெய்யப் பயன்படுத்திக்கொள்கிறது. தமிழக அரசின் செயல், உச்ச நீதிமன்றம் ‘ஒரே ஒரு கிராமத்திலே’ வழக்கில் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்கு விரோதமானது.

ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 01-01-2016 முதல் ஊதியத்தைத் திருத்தி கூடுதல் ஊதியம் அளித்த்தைப் போல, பறிக்கப்பட்ட ஓய்வூதிய உரிமையைத் திருப்பி அளிக்கவேண்டும் என்றும் அமைதியான வழியில் வன்முறையின்றிப் போராடுகின்றனர்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1) (சி), சங்கம் வைக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக வழங்குகிறது. சங்கம் வைக்க அடிப்படை உரிமையை அளித்துவிட்டு, அமைதியாகக்கூடப் போராடக்கூடாது என்றால் அது பெரிய மோசடித்தனம், அல்லவா?

போராட்டம் தொடர்பாக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வேறு. ஒழுங்கு நடவடிக்கை எடுத்து என்ன தண்டனை வேண்டுமானாலும் அளிக்கலாம். தண்டனையை எதிர்த்து ஊழியர்கள் உயர் நீதிமன்றத்துக்குத்தான் வரவேண்டும். எனவே போராட்டத்தைப் பற்றி உயர் நீதிமன்றம் நடுநிலைமை வகிக்கவேண்டும்; போராட்டம் பற்றி கருத்து ஏதும் சொல்வது சரியாகாது.

போராட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் கருத்துக் கூறினால், ஊழியர்களுக்கு நீதிமன்றத்தின் மீது எப்படி நம்பிக்கை உண்டாகும்? ஆனால் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். போராட்டத்தில் வன்முறை ஏதும் இருக்கக்கூடாது.

ஒரு முறை, பாரத் பெட்ரோலியம் நிறுவன வேலைநிறுத்தம் நடந்தபோது, நீதிபதி சந்துருவிடம், போராட்டம் சட்டவிரோதம் என அறிவிக்குமாறு வழக்கு வந்தது. அதற்கு உனக்குத் துணையாக வராது என அவர் தீர்ப்பு கூறிவிட்டார். என்னிடம் நெய்வேலி என்.எல்.சி. போராட்டத்தின்போது இப்படியொரு மனு வந்தபோது, போராடும் தொழிற்சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் கேட்டு உத்தரவிட்டு, இரண்டு வாரத்துக்கு விசாரணையைத் தள்ளிவைத்தேன். ஆனால் அதிகாரிகள் தரப்பில், பெஞ்சுக்குச் சென்று போராட்டத்துக்குத் தடை வாங்கிவிட்டார்கள். அந்த உத்தரவை 10 ஆயிரம் தொழிலாளர்களும் எதிர்த்தார்கள். அவர்கள் அத்தனை பேரையும் அழைத்து அவமதிப்பு வழக்கா போடமுடியும்? எனவே, அரசமைப்புச் சட்டத்தின்படி பொது ஒழுங்கு கெடாதபடி நீதிமன்றங்கள் அக்கறை செலுத்துவது பொருத்தம்” என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொன்னார், நீதிபதி ஹரிபரந்தாமன்.

அவருடைய வார்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தின் மீதான அக்கறையையும் மரியாதையும் வெளிப்படுத்துகின்றன.

பொங்கலுக்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு இன்று தொடக்கம்


By DIN  |   Published on : 15th September 2017 02:55 AM 
trains

வரும் ஆண்டு (2018) பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குச் செல்வதற்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (செப். 15) காலை முதல் தொடங்கப்படவுள்ளது.
வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வெள்ளிக்கிழமை முதல் ரயில் பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்யலாம். பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஏராளமானோர் ஜனவரி 12 ஆம் தேதியே சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் ஜனவரி 12 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் வெள்ளிக்கிழமை (செப். 15) முதல் முன்பதிவு மேற்கொள்ளளலாம். அதேபோல ஜனவரி 13 ஆம் தேதி ஊருக்குச் செல்ல முன்பதிவு செய்பவர்கள் செப். 16(சனிக்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம்.
பயணிகளின் வசதிக்காக 4 மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை, வரும் ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் 16 வரை கொண்டாடப்படுகிறது. இதேபோல், பொங்கல் முடிந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது.


நாட்டின் தூய்மையான கல்வி நிறுவனங்கள்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில் தமிழகம் முன்னிலை


By DIN  |   Published on : 15th September 2017 01:52 AM  |  
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட நாட்டிலுள்ள தூய்மையான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் 12 இடங்களைப் பிடித்துள்ளன.
இதுகுறித்து அந்தத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தூய்மையான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற நாடு முழுவதிலும் இருந்து 3,500 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.
அவற்றில் 174 கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வின் முடிவில் முதல் 25 இடங்களைப் பிடித்த கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
முதல் 50 இடங்களில் அரசு கல்வி நிறுவனங்கள் ஒன்றுகூட இடம்பெறவில்லை. எனவே, அதற்கென்று தனி ஒரு பிரிவை உருவாக்கியிருக்கிறோம் என்றார் ஜாவடேகர்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் என 4 பிரிவுகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன.
தூய்மையான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் பின்வருமாறு:
ஹரியாணா மாநிலம், சோனிபட் நகரில் உள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகப் பிரிவில் முன்னிலை பெற்றுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 12 கல்வி நிறுவனங்கள்:
கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (ஈரோடு), அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் (கோவை), எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி (கோவை), கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (கோவை), ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி (சென்னை), ஆர்எம்டி பொறியியல் கல்லூரி (சென்னை), ஆர்எம்கே பொறியியல் கல்லூரி (சென்னை), விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (திருச்செங்கோடு), விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி (திருச்செங்கோடு), ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சென்னை), காமராஜ் பல்கலைக்கழகம் (மதுரை), அழகப்பா பல்கலைக்கழகம் (காரைக்குடி) ஆகிய நிறுவனங்கள் அந்தப் பட்டியலில் இடம்
பெற்றுள்ளன.
    ஆண்டாள் கோயிலில் நைவேத்தியம் : படி அளக்கும் அன்னை பட்டினி நிறுத்தம்
    பதிவு செய்த நாள்15செப்
    2017
    06:12


    ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில், முக்கிய நைவேத்தியங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. படி அளக்கும் அன்னை பட்டினி கிடப்பதாக பக்தர்கள் குமுறுகின்றனர்.

    ஆண்டாள் அவதரித்து பெருமாளுக்கு பாமாலையும் பூமாலையும் சூடிக்கொடுத்த பெருமையுடைய தலம் ஸ்ரீவில்லிபுத்துார்.குளிர்விக்கும் நைவேத்தியங்கள்ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம். காலை 8:30 மணி காலசந்தி. மதியம் 12:00 மணி உச்சிக்காலம். மாலை 6:00 மணி சாயரட்சை. இரவு 8:00 மணி அத்தாளம். இரவு 9:00 மணி அரவணை என தினமும் ஆறு கால பூஜைகள். வடபத்ர சயனர் சன்னதியில் காலை 7:00 மணி விஸ்வ ரூபம். காலை 9:00 மணி காலசந்தி.மதியம் 12:00 மணி
    உச்சிக்காலம். மாலை 6:00 மணி சாயரட்சை. இரவு 8:00 மணி அத்தாளம். இரவு 8:30 மணி அரவணை என தினமும் ஆறு கால பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் வேளாண்மை செழித்து ஓங்கும் என்பது ஐதீகம்.அரசியலும் ஆண்டாள் கோயிலும்கோயில் நிலங்களை அரசியல் கட்சியினர் அபகரிக்கத்துக்கொண்டு வருவாயை வழங்குவது இல்லை. இதனால் பூஜைக்கான செலவுகளை ஈடுகட்ட தனியார் பங்களிப்பை நிர்வாகம் நாடியது. 

    சிறப்பு தரிசனம், கட்டண தரிசனம் என நிர்ணயித்து கிடைக்கும் வருவாயில் நைவேத்தியம், பராமரிப்பு செலவுகளை சரி செய்தனர். கோயில் நிலங்களை மீட்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கவும் அறநிலையத்துறை எள் முனையளவு கூட முயற்சிக்கவில்லை.

    பல கோடி ஊழல் : அறநிலையத்துறை கோயில்களின் வருவாயை கணக்கிட்டு மூன்று பிரிவுகளாக்கினர். ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ள கோயில்கள் தரம் ஒன்று. 2 லட்சம் ரூபாய்க்கு மேல் 10 லட்சம் ரூபாய்க்குள் தரம் இரண்டு. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் தரம் மூன்று என பிரிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் தரக் கோயில்களுக்கு அறநிலையத்துறை நிதி வழங்காது. அனைத்து செலவுகளும் கோயில் வருவாய் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில்கள் வந்த பின் கோயில்களின் நில வருவாய், முடங்கியது. நன்கொடைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது.

    படி அளக்கும் ஆண்டாள் பட்டினி : கோயிலில் தினசரி நடக்க வேண்டிய அத்தாளம் இரவு 8:00 மணி பூஜை நடக்கவில்லை. தினமும் ஆறுகால பூஜைக்கு, நித்ய ஆராதனை கட்டணமாக பக்தர்கள் ரூ.5000 வீதம் செலுத்துகின்றனர்.இதில் ஆறு வேளை பூஜைக்கு 36 படி (54கி) அரிசி பிரசாதம் அம்மனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். ஒரு வேளைக்கு 9 கி., அரிசி பிரசாதம் படையல் செய்ய வேண்டும். அத்தாளம் பூஜை 1990 முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், இத்தனை ஆண்டுகளாக அத்தொகை எங்கே போயிற்று எனத்தெரியவில்லை. மீதி உள்ள ஐந்து வேளையும் ஒரே பிரசாதம் தான் படையல் செய்வதாக புகாரும் உள்ளது. உச்சிகால பூஜையில் முன்பு வழங்கும் சாப்பாடு தற்போது நிறுத்தப்பட்டது. இப்படி படி அளக்கும் அன்னை பசித்திருக்கிறாள். நித்திய ஆராதனை கட்டணம் ஒரு கோடி ரூபாய், வங்கியில் உள்ளது. நைவேத்தியங்கள் தடையின்றி நடக்க தேவையான வருவாய் ஆதாரங்கள் இருக்கிறது. அதை வைத்து முறையாக பூஜை, நைவேத்தியம் நடக்காதது பக்தர்களுக்கு வருத்தம் தருகிறது. நன்கொடை மூலம் நடக்கும் அன்னதானம் 100 பக்தர்க்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கோயில் நிதியில் இருந்து அதிக பக்தர்களுக்கு வழங்கலாம்.செயல் அலுவலர் சா.ராமராஜா கூறியதாவது: 1975ல் பஞ்சம் ஏற்பட்டது. நைவேத்தியத்திற்கு அரிசி கூட விலைக்கு வாங்கும் நிலை. இதனால் நைவேத்தியம் முழுமையாக நடக்கவில்லை. தற்போது உப கோயில்களான வடபத்ர சயனர், பெரியாழ்வார், கிருஷ்ணன், திருவண்ணாமலை ஸ்ரீநிவாசன், ஸ்ரீரெங்கர், ஸ்ரீகாட்டழகர் கோயில்களில் தினமும் 30 படி அரிசி மூலம் நைவேத்தியம் செய்வித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. உச்சிக்கால பூஜைக்கு பின் அன்னதானம், நித்திய ஆராதனை கட்டணம் மூலம் கிடைக்கும் வட்டி தொகையில் பூஜைகள், பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. அத்தாள பூஜை ஏற்பாடுகள் நடக்கின்றன, என்றார்.
    பாரதியார் பல்கலை., 'செனட்' தேர்தலில் தொடரும் முறைகேடு! : ஒட்டு மொத்தமாக வாங்கி ஓட்டு போட்டதாக புகார்
    பதிவு செய்த நாள்15செப்
    2017
    01:01


    கோவை பாரதியார் பல்கலை, 'செனட்' தேர்தலில், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்திருப்பதாக புகார் இருந்த நிலையில், தற்போது ஓட்டுப்பதிவிலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை பாரதியார் பல்கலை ஆட்சி மன்றக் குழு - செனட், உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல், 27ம் தேதி நடக்கவுள்ளது.
    பல்கலை எல்லைக்குட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், பட்டதாரிகள் தொகுதியின் சார்பில், 'செனட்' உறுப்பினர்கள் தலா இருவர் தேர்வு செய்யப்படுவர். இதில் தேர்வாகும் உறுப்பினர்களே, சிண்டிகேட் தேர்தலில் ஓட்டளிக்கவும், போட்டியிடவும் முடியும்.

    மொத்தமா போட்டாச்சு : சிண்டிகேட் உறுப்பினர் பதவியைத் தக்க வைக்கவும், மீண்டும் போட்டியிடவும் பலரும் எப்படியாவது, 'செனட்' தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என, தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். திட்டமிட்டே, சிலரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகள் இருந்ததாக, முதலில் புகார் எழுந்தது. பட்டியலை சரி செய்த பின், தேர்தலை நடத்த வேண்டுமென்றும், தேர்தலை தள்ளி வைக்குமாறும், அனைத்து பல்கலை ஆசிரியர் சங்கம் கோரியது.
    அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால், தேர்தலில் அடுத்தடுத்து முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன. கோவை மாவட்ட பட்டதாரி தொகுதியில், தற்போதுள்ள சிண்டிகேட் உறுப்பினர்கள் சரவணகுமார், வீரமணி ஆகியோரும், இவர்களை எதிர்த்து சண்முகசுந்தரம், செங்குட்டுவன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்களில், சரவணகுமாரை எப்படியாவது வெற்றி பெற வைக்க, பல்கலை நிர்வாகமே முயற்சி எடுப்பதாக புகார் எழுந்தது. பட்டதாரிகளுக்கு தபாலில் அனுப்பிய ஓட்டுச் சீட்டுகளை மொத்தமாகக் கைப்பற்றி, இவர்கள் இருவருக்கும் ஓட்டு போட்டுள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது.

    புகார் : தேர்தலுக்கான ஓட்டுச் சீட்டுகள், 7ம் தேதியில் இருந்து வினியோகிக்கப்படுகின்றன. வால்பாறையில் உள்ள பாரதியார் பல்கலை உறுப்புக் கல்லுாரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள், 86 பேருக்கு, ஓட்டுச்சீட்டு படிவங்கள், கடிதத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, வால்பாறை கல்லுாரி முதல்வர் ரமேஷ், அலுவலக உதவி யாளர்கள் வித்யா, அருண் விஜய் ஆனந்த் ஆகியோரே வாங்கி, சரவணகுமார், வீரமணிக்கு ஓட்டுப் போட்டு திருப்பி அனுப்பி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பட்டதாரி தொகுதி வாக்காளர் கருணாகரன் என்பவர், துணைவேந்தருக்கு புகார் அனுப்பியுள்ளார். 

    வேட்பாளர்களான சண்முகசுந்தரம், செங்குட்டுவன் ஆகியோரும், இந்த முறைகேட்டைக் குறிப்பிட்டு, தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துஉள்ளனர்.

    உயர் கல்வித் துறை செயலர் பங்கேற்ற சிண்டிகேட் கூட்டம் நடந்த நிலையில், இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    இதேபோன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு முடிந்த பின்னும், ஏராளமான வாக்காளர் பெயர்கள், கோவை மாவட்ட வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் மற்றொரு புகார் உள்ளது.
    நீலகிரியில், கூடலுார் உறுப்புக் கல்லுாரியில் மட்டுமே, பல ஆயிரம் மாணவ - மாணவியர் படித்து வெளியேறியுள்ள நிலையில், வெறும், 370 வாக்காளர் பெயர்கள் மட்டும் பட்டதாரி தொகுதியில் பதிவு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக பலரும் சந்தேகம் எழுப்பிஉள்ளனர்.

    தம்பதி வெற்றி! : நீலகிரி தொகுதியில், தம்பதியான ஜெயபால் - பரமேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜெயபால், ஏற்கனவே கவர்னர் நியமனத்தில், சிண்டிகேட் உறுப்பினராகவுள்ளார். அவரது, 'செனட்' பதவிக்காலம் முடிய உள்ளதால், அவர் பட்டதாரி தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பட்டதாரிகளின் பெயர்களை பதிவு செய்ய விடாமல், இருட்டடிப்பு நடந்ததன் பின்னணி, இது தான் என்று குமுறுகின்றனர், நீலகிரி பட்டதாரிகள். இவ்வாறு, பலவிதமான முறைகேடுகளும், 'செனட்' தேர்தலில் அடுத்தடுத்து அரங்கேறி வருவதால், தேர்தலை ரத்து செய்து, மீண்டும் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், குறிப்பிட்ட சிலரது, 'சிண்டிகேட்' உறுப்பினர் பதவியைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக, பல்வேறு முறைகேடுகளுடன், 'செனட்' தேர்தல் நடந்து வருகிறது. இவற்றை, தமிழக உயர் கல்வி துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

    - நமது சிறப்பு நிருபர் -
    சிக்னலில் நீண்ட நேரம் நிற்பதா? : மறியலில் ஈடுபட்ட பயணியர்
    பதிவு செய்த நாள்15செப்
    2017
    00:50




    அரக்கோணம்: சிக்னலில் நீண்ட நேரமாக ரயில் நிற்பதை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட பயணியரை, ரயில்வே போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து, அரக்கோணம் வழியாக, சென்னைக்கு தினமும் காலை, 7:40 மணிக்கு, பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. அதே போல், காலை, 6:25 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பதிக்கு சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

    நடவடிக்கை இல்லை : இந்த, இரண்டு ரயில்களும், வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டையில் உள்ள சிக்னலில், தினமும், 40 நிமிடம் வரை நிறுத்தப்படுகிறது. 

    இதனால் வேலைக்கு செல்வோர், கல்லுாரி, பள்ளி மாணவ - மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பயணியர் பல முறை புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை, 7:40 மணிக்கு, மங்கம்மாபேட்டை சிக்னலில், வழக்கம் போல், இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டன. 

    இதனால் ஆத்திரம் அடைந்த பயணியர், காலை, 8:00 மணிக்கு, இரண்டு ரயில்களையும் மறித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர், ரயில் இன்ஜின் மீது ஏறி, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். அரக்கோணம் ரயில்வே போலீசார், மறியல் செய்த பயணியரிடம் பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சில், பயணியர் ஏற்க மறுத்து, ரயில் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    3 மணி நேர தாமதம் : இதனால் ரயில்வே போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின், இரண்டு ரயில்களும், மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. 

    இதனால் திருத்தணி - சென்னை மார்க்கத்தில் சென்ற மின்சார ரயில்கள் தாமதமாக சென்றன.
    ஆறு மருத்துவ கல்லூரிகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் அனுமதி
    பதிவு செய்த நாள்15செப்
    2017
    01:32

    சென்னை: மதுரை, அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி உட்பட, ஆறு இந்தியமுறை மருத்துவக் கல்லுாரிகளுக்கு, இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

     தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளை நடத்தும், ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள், 22 சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. 

    இதில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும், 15 சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளுக்கு, ஆயுஷ் அமைச்சகம் ஏற்கனவே அனுமதியளித்துள்ளது. அதேநேரத்தில், மதுரை, அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி உட்பட, எட்டு மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள கட்டமைப்பு மற்றும் பேராசிரியர் வசதிகள் அடிப்படையில், மதுரை அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரியில், 50 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கிடைத்து உள்ளது. மேலும், ஐந்து சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், 300 இளநிலை; 21 முதுநிலை படிப்புகளுக்கும், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.கோவையில் உள்ள, இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், இந்தாண்டில், மாணவர் சேர்க்கை நடத்த அரசு தடை விதித்து உள்ளது.
    சிலம்பு எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிப்பு

    பதிவு செய்த நாள்14செப்
    2017
    23:44

    சென்னை: சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், வழக்கமான நேரத்தை விட, 50 நிமிடங்கள் முன்னதாக, செங்கோட்டை சென்றடையும்.

    சென்னை எழும்பூரில் இருந்து, புதன் மற்றும் சனி தோறும், செங்கோட்டைக்கு, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நாளை முதல், இதன் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதனால், எழும்பூரில் இருந்து, இரவு, 8:20 மணிக்கு புறப்படும் ரயில், செங்கோட்டைக்கு, காலை, 10:10 மணிக்கு செல்வதற்கு பதிலாக, 50 நிமிடங்கள் முன்னதாக, காலை, 9:20 மணிக்கு சென்றடையும்.
    அதே நேரத்தில், செங்கோட்டையில் இருந்து, எழும்பூருக்கு இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் நேரத்தில் மாற்றமில்லை என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



    தூய்மையான கல்லூரிகள் தமிழகம் புதிய சாதனை

    பதிவு செய்த நாள்
    செப் 14,2017 22:43



    புதுடில்லி: தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட, துாய்மையான உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில், முதல், 25 இடங்களில், 12 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த கல்லுாரிகள் பெற்றுள்ளன.

    துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2017ம் ஆண்டுக்கான, துாய்மையான தனியார் பல்கலை, கல்லுாரி, தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை, மத்திய அரசின், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தேர்வு செய்துள்ளது. நாடு முழுவதும் இருந்து, 3,500 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்தன.
    இதில், துாய்மையான, முதல், 25 உயர் கல்வி நிறுவனங்கள் பெயர் பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர், டில்லியில் நேற்று வெளியிட்டார். இதில், 12 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த, உயர் கல்வி நிறுவனங்கள் பிடித்துள்ளன.

    துாய்மையான கல்லுாரிகள் பட்டியலில், ஈரோட்டிலுள்ள, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, முதலிடம் பிடித்தது. தொழில் நுட்ப கல்லுாரிகள் பட்டியலில், கோவை, அம்ரிதா விஷ்வா வித்யாபீடம், முதலிடம் பிடித்தது.
    வியட்நாமில் இன்று புயல் எச்சரிக்கை
    பதிவு செய்த நாள்15செப்
    2017
    06:35




    ஹனாய்: வியட்நாமில் 'டோக்சுரி' என்ற சக்தி வாய்ந்த புயல் இன்று(செப்.,15) கரையைக் கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு ஆசிய நாடு வியட்நாம். இங்குள்ள ஹா டிங் மாகாணத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில், 'டோக்சுரி என்ற புயல் மணிக்கு 155 கி.மீ., வேகத்தில் இன்று கரையைக் கடக்கும்' என அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் எச்சரித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புயலால் ஏற்படும் மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்து 47 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக 2,50,000 வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மே முதல் அக்டோபர் வரை ஆண்டுதோறும் வியட்நாம், புயலால் பாதிப்புக்குள்ளாகிறது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

    DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...