Thursday, September 21, 2017

KLE varsity ‘cleanest in South India’

The inspection was conducted by HRD Ministry

The Union government has selected the KLE University campus here as the fourth cleanest in the country, and the cleanest in South India.
This includes the university’s campus and those of Jawaharlal Nehru Medical College and other constituent colleges in Belagavi. The contest was organised by the Union Ministry of Human Resource Development.
HRD Minister Prakash Javadekar presented the award to KLE University in New Delhi recently, said KLE Society chairman and university Chancellor Prabhakar Kore. The first three slots went to institutions in Rajasthan, Haryana and Himachal Pradesh.
Of the over 3,000 university and college campuses in the country, KLE University was listed among the best 174. A high-level committee inspected the 174 campuses.
The campuses were inspected on yardsticks such as repeated cleaning, extent of green cover, cleanliness in the kitchen, functioning drainage and sewage systems, solid waste management, availability, optimal utilisation, and recycling of water, both on campus and in hostels on the premises.
Inspired by this, KLE University is set to organise a competition among its 300-odd institutions in and around Belagavi for maintaining cleanliness.

Private medical colleges searched

Search team seized documents relating to admission

Sleuths from the Central Bureau of Investigation (CBI) conducted searches in deemed universities and private medical colleges regarding certain alleged irregularities in admission of students.
The team searched the premises of the institutes and seized certain documents relating to admission and collected details of students who were admitted.
However, it is not clear whether the CBI search is related to alleged irregularities in the admission process for this year or the previous year.
The Medical Council of India (MCI) had directed the territorial administration to discharge around 770 MBBS students who were not admitted through the Centralised Admission Committee (Centac) in deemed universities and in the self-financing private medical colleges for the academic year 2016-17.
The Madras High Court stayed the directive of the MCI on writ petitions filed by a batch of 91 affected students.

கடைசியில் எனது 33 வருட கனவு நிறைவேறியது: குஷ்பூ!


By சரோஜினி  |   Published on : 20th September 2017 03:16 PM  |
khushbu_sundharmmm

 

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலுமாகக் கூட குஷ்பூ சுந்தரைத் தெரியாதவர்கள் யாருமிருக்க முடியாது. அந்த அளவுக்கு குஷ்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, இந்தி, மராத்தி என அத்தனை மொழிப்படங்களிலும் நடித்திருப்பதோடு தற்போது அரசியல்ரீதியாகவும் அகில இந்திய காங்கிரஸின் பிரபலமான அடையாளங்களில் ஒருவராக இருப்பதால் குஷ்பூவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகம். அது மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு ரசிகர்கள் கோயில் கட்டினார்கள் என்றால் அது குஷ்பூவுக்காகத் தான். இப்படி தன்னைச் சுற்றியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களைக் கொண்டவரான குஷ்பு யாருடைய பரம ரசிகர் தெரியுமா? அதை, தான் நடிக்க வந்தது முதல் இன்று வரை தனது பல நேர்காணல்களிலும் குஷ்பூவே பெருமை பொங்கப் பலமுறை கூறியிருக்கிறார். 
அப்படி குஷ்பூவின் மனதை மொத்தமாகக் குத்தகை எடுத்துக் கொண்ட நபர், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தான். குஷ்புவின் பள்ளிக் காலத்தில் அவரது மனம் கவர்ந்த ஹீரோ என்றால் அது ரவி சாஸ்திரி மட்டுமே. சாஸ்த்ரியின் மேல் அப்படியொரு தீராக் காதலில் இருந்தார் குஷ்பு. பிடித்த கிரிக்கெட்டர் என்பதற்காக, குஷ்பு ஒன்றும் உடனடியாக அவரைச் சந்தித்து விடவில்லை. அதற்கு சூழலை முன்னிட்டுப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் கடந்த வாரம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள ரவி சாஸ்திரி வந்தது தெரிந்ததும், குஷ்பூ ஒரேயடியாகக் குளிர்ந்து போனார். அதோடு மட்டுமல்லாமல் உடனடியாகக் கிளம்பிச் சென்று போட்டியை ரசித்து விட்டு, தனக்குப் பிரியமான ஹீரோவான ரவி சாஸ்த்திரியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய கையோடு புகைப்படமும் எடுத்து, அதை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
அதனால குஷ்பூ இப்போ ரொம்ப, ரொம்ப ஹேப்பி!

கமல் அரசியல்: எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுப்பும் சில கேள்விகள்!


By எழில்  |   Published on : 20th September 2017 03:55 PM  |
kamal21
Ads by Kiosked

கடந்த சில வாரங்களாக தனது அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார் கமல். இந்நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, கமல் அரசியல் - சில கேள்விகள் என்கிற தலைப்பில் தனது இணையத்தளத்தில் சில பதிவுகளை எழுதியுள்ளார். அவற்றின் தொகுப்பு:
கமல் அரசியல் – சில கேள்விகள்
இப்போதுதான் கொஞ்ச நேரம் முன்பு நீங்கள் ஏன் கமலுக்கு இத்தனை எதிர்ப்பாக இருக்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர். தயவுசெய்து நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பாருங்கள். கமல் பிக் பாஸ் வீட்டுக்குள் போனதும் அங்கிருந்த ஒரே ஒரு பெண்ணைத் தவிர மற்ற அனைவரும் அவர் காலில் விழுகிறார்கள். அதிலும் சிநேகன் விட்டால் அப்படியே தரையிலேயே படுத்துக் கிடப்பார் போல் இருக்கிறது. அந்தக் காலத்தில் ராஜாக்கள் ஆட்சியில் அடிமைகள் எப்படி உடலை வளைப்பார்களோ, மந்திரிகள் மந்திரி சபையில் எப்படி உடம்பை வளைப்பார்களோ அப்படி வளைக்கிறார் சிநேகம். பார்க்கவே அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இருக்கிறது. இது ஏன் கமலுக்கு அசிங்கமாக இல்லை. ஜெயலலிதாவின் முன்னால் அம்பது மந்திரிகளும் கூழைக் கும்பிடு போட்டார்களே, அதேபோல் அத்தனை பேரும் அவர் காலில் விழுந்து கூழைக் கும்பிடு போடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை நாலு கோடி பேர் – இப்போது ஓவியா போன பிறகு ஒன்றரை கோடி பேர் – பார்க்கிறார்கள் என்பது கமலுக்குத் தெரியாதா? இத்தனை படித்தவருக்கு இது ஒரு அசிங்கம் ஆபாசம் என்று தெரியவில்லையா? ஜெயலலிதாவுக்குக் கூழைக் கும்பிடு போட்டால் அசிங்கம். தனக்குப் போட்டால் ஜாலியா? என்னய்யா நியாயம் இது? இத்தனைக்கும் இவர் பகுத்தறிவுப் பகலவர் வேறு? பகுத்தறிவுக்காரர்கள்தானே தன்மானம் சுயமரியாதை எல்லாம் பேசினவர்கள்? இத்தனை பேர் கமலுக்கு முன்னால் சுயமரியாதையே இல்லாமல் காலில் விழுகிறார்கள். இதை கமல் எப்படி அனுமதிக்கிறார்? காலில் விழுந்தால் அந்த நிமிடமே தகுதி நீக்கம் செய்யப்படும் என்று பிக்பாஸை விட்டு அறிவிப்புக் கொடுத்தால் யாராவது இப்படிக் காலில் விழுவார்களா?
பொதுவாகவே சினிமாக்காரர்கள் தங்களைக் கடவுளாக நினைத்திருக்கிறார்கள். அவர்களை அப்படி நினைக்க வைப்பது பொதுஜனம். நடிகர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித் தங்களைக் கடவுள்களாக சூப்பர் மேன்களாக நினைக்கும் சினிமாக்காரர்களுக்கு அந்தக் காரணத்தினாலேயே அரசியலுக்கு வரும் தகுதி இல்லாமல் போகிறது. அதில் முதலில் வருபவர் கமல்.
என்றைக்காவது, கமல் அவர் வாழ்நாளில் மற்றவர் பேசுவதை ஐந்தே ஐந்து நிமிடம் காது கொடுத்துக் கேட்டிருக்கிறாரா? இதை நான் கமலின் மனசாட்சியிடம் கேட்கிறேன். அஞ்சு வயதில் அம்மா பேசுவதைக் கேட்டேன் என்று சொல்லக் கூடாது. கடந்த இருபது ஆண்டுகளில் அவர் என்றைக்காவது ஒரு நாளாவது ஒரு தருணத்திலாவது அஞ்சே அஞ்சு நிமிடம் மற்றவர் பேசுவதைக் கேட்டிருக்கிறாரா? மனசாட்சியைத் தொட்டு அவர் இதற்கு மட்டும் பதில் சொல்லட்டும். நான் கேள்விப்பட்டவரை அவர் ஆறு மணி நேரம் கூடப் பேசுவார். மற்றவர் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட குணநலன் கொண்ட ஒருவர் அரசியலுக்கு எப்படி வர முடியும்?
மேலும், மோடி பற்றிய அவரது அரசியல் பார்வை என்ன? பண நோட்டுக்களைக் காணாமல் ஆக்கி கோடானுகோடி மக்களை நடுத்தெருவில் நிற்கவைத்தாரே மோடி, அது பற்றி கமல் கருத்து என்ன?
மாட்டை இழுத்துக் கொண்டு போனவரெல்லாம் கொலை செய்யப்பட்டார்களே, அது பற்றி கமல் கருத்து என்ன? மோடியின் மாடு பாலிடிக்ஸ் பற்றி கமல் என்ன கருதுகிறார்?
சினிமாவில் ஆரம்பத்தில் தேசிய கீதம் போடுவது பற்றி கமல் கருத்து என்ன?
அடுத்த ஆட்சி, திமுக. அந்த வாக்குகளைப் பிரித்து, திரும்பவும் அதிமுகவின் பொம்மை ஆட்சி வருவதற்காக, மற்றும் பாஜகவை தமிழகத்தில் பலப்படுத்துவதற்காக மோடி போட்ட திட்டமே கமலின் அரசியல் எண்ட்ரி என்று பலர் நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன். இது பற்றி கமல் கருத்து என்ன? நான் சொல்வது தவறாக இருந்தால் உங்கள் வாதத்தைச் சொல்லுங்கள். நான் ஏற்க முயல்கிறேன்.
கமல் ரஜினியை அழைக்கும் காரணம், ரஜினி மோடியின் காவி ஏஜெண்ட். கமல் மோடியின் கருப்புச் சட்டை ஏஜெண்ட். இதுவும் தவறு என்றால் என் கருத்தை மாற்றுங்கள். உங்களை ஒப்புக் கொள்ள முயல்கிறேன்.
*
அன்புள்ள நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு,
வணக்கம்.  
மேலே கண்ட குறிப்பு கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும். ஆனால் சில விஷயங்களை இப்போதாவது வெளிப்படையாகப் பேசியாக வேண்டியுள்ளது. பொதுவாக என் கட்டுரைகளையும் முகநூல் குறிப்புகளையும் பற்றி உடனுக்குடன் கருத்து தெரிவிக்கும் நண்பர் மேற்கண்ட குறிப்பு பற்றி வாயே திறக்கவில்லை. என்ன விஷயம் என்று கேட்ட போது, இதில் ஒன்றும் பெரிதாக இல்லை என்றார். ஆனால் நான் சொன்னேன், பெரிதான விஷயம் என்று.  புகழின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் கமல் போன்ற ஒருவரை விமர்சிப்பதன் மூலம் கமலையும், சினிமாவில் கமலைச் சார்ந்திருக்கும் அத்தனை பேரையும் நான் பகைத்துக் கொள்பவன் ஆகிறேன். இது ரிஸ்க் இல்லையா, இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் அவலமான அரசியல் நிலை பற்றி எழுதுவதற்கு இந்த ரிஸ்கைப் பற்றியெல்லாம் யோசிக்க முடியுமா என்று நண்பரிடம் கேட்டேன். இனிமேல் பொது இடங்களில் தங்களிடம் கை குலுக்கித் தங்களுக்கு தர்மசங்கடத்தை உண்டு பண்ண மாட்டேன். கவலை வேண்டாம். தனிப்பட்ட விருப்பு வெறுப்பை விட சமூக நலன் இப்போது எனக்கு மேலானதாகப் படுகிறது.
தமிழ்நாட்டு அரசியலை வாங்கு வாங்கு என்று வாங்கும் நீங்கள் இந்திய அரசியல் நிலவரம் பற்றி ஏன் வாயே திறக்க மாட்டேன் என்கிறீர்கள்? உலகம் பூராவிலும் உள்ள அத்தனை புத்திஜீவிகளும் கவலைப்படுகிறார்கள். எழுதுகிறார்கள்.  நியூயார்க் டைம்ஸிலிருந்து நம் கடலூரில் வரும் லோக்கல் தமிழ் தினசரி வரை இந்தியா இப்போது போய்க் கொண்டிருக்கும் சர்வாதிகார அரசியல் பற்றித் தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
காரைக்குடி ரெயில் நிலையம் முன்பு மழைநீர் குளம்போல் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் பயணிகள் கோரிக்கை


காரைக்குடி ரெயில் நிலையம் முன்பு மழைக்காலங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செப்டம்பர் 20, 2017, 04:45 AM

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலா தலமாக விளங்குவது காரைக்குடி. இங்குள்ள ரெயில் நிலையம் ஜங்‌ஷன் அந்தஸ்து பெற்ற ரெயில் நிலையமாக இருந்து வருகிறது. காரைக்குடி ரெயில் வழித்தடத்தில் 10–க்கும் மேற்பட்ட ரெயில்களும், வாராந்திர மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் சென்று வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது காரைக்குடி–பட்டுக்கோட்டை இடையே அகல ரெயில் பாதை பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் மீண்டும் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து நடைபெற உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காரைக்குடி ரெயில் நிலையம் கடந்த 2007–ம் ஆண்டு நவீன மையமாக்கப்பட்டு தற்போது புதிதாக காட்சியளிக்கிறது. மேலும் ரெயில் நிலையம் முன்பு அழகிய வேலைப்பாடுகள், டிஜிட்டல் அறிவிப்பு போர்டுகள் உள்ளிட்ட வசதிகளும், ரெயில் நிலையத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் சமீப காலமாக மழை பெய்யும்போது காரைக்குடி ரெயில் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பது வழக்கமாகி வருகிறது. போதிய வடிகால் அமைக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ரெயில் நிலையம் முன்பு மழைநீர் குளம்போல் தேங்குவதால், அங்கு பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் தேங்கிய மழைநீர் நாளடைவில் சாக்கடை நீராக மாறி, நோய் பரப்பி வருகிறது. மேலும் தண்ணீர் தேங்குவதால், அங்கு பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்கள் சேதமடையும் நிலையும் உள்ளது.

இதுபோக காரைக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதை உள்பகுதியிலும் இந்த மழைநீர் அப்படியே குளம்போல் தேங்கி நிற்பதால், அவ்வழியாக வாகன போக்குவரத்து செய்யமுடியாமல் போகிறது. எனவே ரெயில் நிலையம் முன்பு தேங்கும் மழைநீர் வெளியேறும் வகையில் குழாய் பதித்து தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியும் என்று சமூக ஆர்வலர்கள், ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட செய்திகள்

புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 449 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது


உலகத்தில் உள்ள முஸ்லிம்கள், தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள்.

செப்டம்பர் 21, 2017, 04:30 AM


ஆலந்தூர்,


இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 4 குழந்தைகள் உள்பட 3,444 பேர் சென்றனர். புனித ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் சென்னையில் இருந்து கடந்த மாதம் 12–ந் தேதி சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டு சென்றது.

இந்தநிலையில் புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியாவில் இருந்து முதல் விமானம் 222 பெண்கள் உள்பட 449 பேருடன் நேற்று சென்னை திரும்பி வந்தது.

புனித ஹஜ் பயணம் முடிந்து சென்னை திரும்பிய ஹாஜிகளை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், ஹஜ் கமிட்டி செயல் அலுவலர் முகமது நசிமுத்தீன், தமிழக அரசு சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர்.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் கூறுகையில், ‘‘ஹஜ் பயணிகள், எந்தவித சிரமமும் இன்றி தங்கள் கடமையை நிறைவேற்ற தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. இதற்காக ஹஜ் பயணிகள் மத்திய–மாநில அரசுகளுக்கும், ஹஜ் கமிட்டிக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இந்த பயணத்தின் போது தமிழகத்தில் இருந்து சென்ற 11 பேர் வயது முதிர்வு காரணமாக இறந்து உள்ளனர்’’ என்றார்.
உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்; பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 248 பேர் பலி



மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 248 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செப்டம்பர் 21, 2017, 05:30 AM

மெக்சிகோ சிட்டி,

வட அமெரிக்க கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது மெக்சிகோ நாடு. இதன் மத்திய பகுதிகளில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் மெக்சிகோ சிட்டி, பெபுலா, மோர்லோஸ், மெக்சிகோ மாநிலம், குவரெரோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.

ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழுவினருடன், ராணுவமும் இணைந்து மீட்பு பணிகளில் இறங்கினர். அவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றக்கூடிய ராட்சத எந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் காயமடைந்தவர் களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றனர். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது.

மெக்சிகோ சிட்டியின் புறநகர் பகுதி ஒன்றில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்று இந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன. 3 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் ஏராளமான குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 21 குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து 11 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சுமார் 40 பேர் வரை அங்கு சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 20 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 1985-ம் ஆண்டுக்குப்பின் நிகழ்ந்த மிகப்பெரிய இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 248 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போர் இன்னும் முழுமையாக மீட்கப்படாததால், உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சமயபுரத்தில் 5 ஆண்டுக்கு பிறகு அங்கபிரதட்சணம் செய்ய அனுமதி
பதிவு செய்த நாள்20செப்
2017
23:44

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஐந்து ஆண்டுக்கு பிறகு இன்று முதல் அங்கபிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள பிரசித்த பெற்ற மாரியம்மன் கோவிலில், 2010ல் குடமுழுக்கு செய்வதற்கான பணிகள் துவங்கியபோது, கோவிலின் பிரகாரங்களும் சீரமைக்கப்பட்டது. இதனால், ஐந்துஆண்டுகளுக்கு மேலாக, பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்த, பிப்ரவரி, 6ம் தேதி குடமுழுக்கு நடந்து, தற்போது கோவில் பிரகாரங்கள் விரிவாக்கப் பணிகளும் முடிந்துள்ளது. இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அங்கபிரதட்சணத்துக்கு, இன்று முதல், அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

அங்கபிரதட்சணம் தினமும் காலை, 5:30 மணி முதல் காலை 9:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கபிரதட்சணம் செய்யும் பக்தருடன், ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்.

'கோவிலின் கிழக்கு ராஜகோபுர வாசலில் உள்ள கொடிமரம் முன் துவங்கி, தெற்கு, மேற்கு, வடக்கு பிரகாரம் வழியாக வந்து, கிழக்கு பிரகாரம் கொடிமரம் முன் அங்கபிரதட்சணத்தை முடித்துக் கொள்ள வேண்டும்' என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அங்கபிரதட்சணம் செய்ய வருபவர்கள் கோவில் கண்காணிப்பாளரிடம் அனுமதி சீட்டு பெற்று வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PIL In SC Seeks Painless End for Death Convicts; Suggests Shooting, Injection Or Electrocution Instead Of Hanging [Read Petition] | Live Law

PIL In SC Seeks Painless End for Death Convicts; Suggests Shooting, Injection Or Electrocution Instead Of Hanging [Read Petition] | Live Law: Holding that “dying with dignity is part of right of life”, a first-of-its-kind PIL has been filed in Supreme Court for abolishing the present practice of executing a death row convict by hanging which involves “prolonged pain and suffering” and to replace it with intravenous lethal injection, shooting, electrocution or gas chamber in which death …
Sitting, retired HC judges under scanner for MBBS admission scam

Dhananjay Mahapatra| TNN | Sep 21, 2017, 01:30 IST

HIGHLIGHTS

Investigating agencies have also lodged an FIR against two IAS officers serving in Puducherry
They headed the committee looking after admissions to medical colleges
The apex court is examining two judges of the Allahabad high court



Representative photograph

NEW DELHI: The rot in medical education has been laid bare, with the Supreme Court and probe agencies looking into the role of sitting and retired judges of HCs in enabling private medical colleges admit students to MBBS courses despite the apex court's order to the contrary.

Investigating agencies have also lodged an FIR against two IAS officers serving in Puducherry, former health secretary B R Babu and Narendra Kumar, who headed the committee looking after admissions to medical colleges, for allegedly denying admissions to deserving students and selling seats to others at "exorbitant" rates.

The apex court is examining two judges of the Allahabad high court, Justices S N Shukla and Virendra Kumar, for permitting a private medical college to admit students despite the apex court's categorical order that no HC would allow any college to fill MBBS students for academic year 2017-18.

Chief Justice Dipak Misra is learnt to have ordered the scrutiny after learning about an escalating probe by agencies into what could have led Justices Shukla and Kumar of the Lucknow bench of Allahabad HC to pass the unusual order. The CJI is understood to be contemplating "structured stringent action" against erring judges if the "unbelievable charges" were found prima facie true.

The malaise in medical education was also brought out starkly on Wednesday when CBI registered a corruption case against a retired Orissa HC judge, Ishrat Masroor Quddusi, and five others for allegedly conspiring to settle a Medical Council of India order debarring a private medical college from MBBS admissions.

TOP COMMENT   In China they shoot corrupt judges; in USA they will go to jail;Most of the civilized world at least they loose their job and pension. In India it is a qualification to the next level'' amazing super power  TPaul

Quddusi has been accused by the CBI of offering legal guidance to the promoters of the private medical college on how to get around the admission ban and even promising a favourable order from the apex court. Sources said CBI was also examining the possibility of promoters of private medical colleges enlisting him and another retired HC judge to get around the order restraining them from admitting students to the MBBS course.
4 city librarians awarded for their great service

TNN | Sep 20, 2017, 23:47 IST

Chennai: Four city librarians were awarded for great service, as part of the 125th birth anniversary function of SR Ranganathan, who is also known as 'Father of Library Science in India', on Wednesday. Organised by MOP Vaishnav College for Women in collaboration with the Tamilnadu Library Association, the event was addressed by K Malaiswamy former home secretary and state election commissioner, who urged the students to cultivate the reading habit and focus on prioritising and time management, ahead of their exams.

Lalitha Balakrishnan, principal, MOP Vaishnav College for Women, said, "It's upsetting to see that the reading habit is diminishing among students, which we want them to develop and expand. When I was in school, my librarian would ask me to read one page of the Britannica Encyclopedia every day. It was quite useful. However much you read from a Kindle or collect information from Google, the touch and feel of the book is important. We also have outside library visits organised for the students."

G Krishnamoorthy, library director, Anna University, received the award for the best university librarian; K Rajkumar, librarian at Dr Ambedkar Government Arts College, received the award for the best college librarian; C Haripriya, librarian at MOP Vaishnav College for Women was awarded the best women's college librarian and S Elango, librarian, LLA Branch Library, Thiruvanmiyur, was awarded the best LLA public librarian.
உயர் சிறப்பு மருத்துவ காலியிடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
2017-09-21@ 00:55:25




புதுடெல்லி : தமிழகத்தில் காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களை நிரப்ப, 3வது கட்டமாக கலந்தாய்வு நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு (டிஎம்எச்) 1,215 இடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 192 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த இடங்களில் தற்போது மற்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் சேரலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. மருத்துவ சேவை தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) தான் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தும்’என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில், கடந்த ஆகஸ்டில் இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வை தமிழக அரசு இரு கட்டங்களாக நடத்தியது.

இந்நிலையில், உயர் சிறப்பு மருத்துவ படிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று புதிய மனு தாக்கல் செய்தது. அதில், ‘தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதில், மொத்தமுள்ள 192 இடங்களில் 99 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப 3ம் கட்டமாக கலந்தாய்வு நடத்த அவகாசம் அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, நாளை அவசர வழக்காக விசாரிக்க உள்ளது. இதே வழக்கில் நேற்று முன்தினம் 75 மருத்துவர்கள் கலந்தாய்வு நடத்த அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி மருத்துவ மேற்படிப்பு முறைகேடு : 13 பேர் மீது வழக்கு பதிவு

2017-09-20@ 19:24:31

புதுவை : புதுச்சேரியில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேடு தொடர்பாக 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நரேந்திரகுமார், பாபு, சுகாதார துறை இயக்குனர் ராமன், சென்டாக் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மாணவர்களின் புகாரை அடுத்து விசாரணை நடத்திய சிபிஐ 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூக்கில் தொங்க விடுவதை நிறுத்த கோரி மனு தாக்கல்
பதிவு செய்த நாள்20செப்
2017
23:02

புதுடில்லி: துாக்கில் தொங்கவிட்டு, மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், ரிஷி மல்ஹோத்ரா என்பவர், நேற்று தாக்கல் செய்த மனு: 'துாக்கில் தொங்க விடுவது, ஒருவர் கவுரவமாக இறக்கும் உரிமையை பறிக்கும் செயல்; அதிகபட்ச தண்டனை, குறைந்த பட்ச பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்' என, ஐ.நா., சமூக, பொருளாதார கவுன்சில் தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது. இதை மீறும் வகையில், துாக்கில் போடும்போது, கடுமையான வலியும், காயங்களும் ஏற்படுகின்றன. மரண தண்டனையை நிறைவேற்றும் முறை, எளிமையாகவும், விரைவானதாகவும் இருக்க வேண்டும்; குற்றவாளிகளின் பயத்தை அதிகரிப்பதாக இருக்க கூடாது. உடனடியாக, தன்னிலை மறந்து, மரணத்தை விரைவாக அடைய வேண்டும்; உடலை சிதைக்கக் கூடாது.

'வளர்ந்த, வளரும் நாடுகளில், துாக்கில் தொங்க விடுவதற்கு பதிலாக, விஷ ஊசி போடுவது அல்லது துப்பாக்கியால் சுடுவது ஆகியவற்றின் மூலம், மரண தண்டனையை நிறைவேற்றுவதை பின்பற்றுகின்றனர்' என, இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

எனவே, குற்றவாளிகள் அமைதியாகவும், விரைவாகவும் மரணம் அடைவதை உறுதி செய்யும் வகையில், துாக்கில் தொங்க விடுவதற்கு பதிலாக, வேறு முறையில், மரண தண்டனையை நிறைவேற்றும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மருத்துவ கல்வி இயக்குனர் நியமனம் ரத்து: ஐகோர்ட்
பதிவு செய்த நாள்20செப்
2017
22:58


மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனராக, எட்வின் ஜோவை நியமித்த, தமிழக அரசின் அரசாணையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

மதுரை, ரேவதி தாக்கல் செய்த மனு: எம்.பி.பி.எஸ்., முடித்து, தமிழ்நாடு மருத்துவ சேவை துறையில், 1987ல், பணியில் சேர்ந்தேன். மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக பணிபுரிந்தேன். தற்போது, கரூர் மருத்துவக் கல்லுாரி டீனாக உள்ளேன். 2018 பிப்., 28ல், ஓய்வு பெறுவேன். பணி மூப்பு அடிப்படையில், என்னை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க, அனைத்து தகுதிகளும் உள்ளன. கோவை மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த, எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்து, 2017 ஏப்., 25ல், தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டது. அவருக்கு போதிய தகுதிகள் இல்லை. நியமனத்தில் விதிமீறல் உள்ளது. அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க உத்தர விட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி, ஆர்.மகாதேவன் விசாரித்தார். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'தகுதியானவர்கள் பட்டியலை பரிசீலித்து, வெளிப்படை தன்மைஉடன், எட்வின் ஜோ நியமனம் நடந்தது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.

நீதிபதி: மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனத்தில் பணி மூப்பு, தகுதி, திறமையை சமமாக கருத்தில் வைத்து, பரிசீலிக்க வேண்டும். மனுதாரர், எட்வின் ஜோவை விட பணியில் மூத்தவர். மனுதாரருக்குகூடுதல் தகுதிகள் உள்ளன.

எட்வின் ஜோ நியமனத்திற்கு, அரசு தரப்பில் கூறப்படும் காரணங்கள்போதுமானதாக இல்லை. எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த, அரசாணையை ரத்து செய்கிறேன். ரேவதிக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு

பதிவு செய்த நாள்20செப்
2017
22:45

புதுடில்லி: ஊழல் வழக்கில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

ஒடிசாவில், பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த, நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும், பிரபல தனியார் மருத்துவ கல்லுாரியில், போதிய வசதிகள் இல்லாததால், அந்த கல்லுாரியில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை எதிர்த்து, கல்லுாரி நிர்வாகத்தின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கில், கல்லுாரி நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வர உதவி செய்வதாகக் கூறி, அம்மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, இஸ்ரத் மஸ்ரூர், ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று, இஸ்ரத் மஸ்ரூர் மற்றும் கல்லுாரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரின் வீடுகளில் சோதனை நடத்தினர். 

இந்த சோனையின் போது, ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, இஸ்ரத் மஸ்ரூர் உட்பட, ஐந்து பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
ஐ.ஆர்.சி.டி.சி., ஊழல் : ரப்ரி தேவிக்கு, 'சம்மன்'
பதிவு செய்த நாள்20செப்
2017
20:41

புதுடில்லி: ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான, ரப்ரி தேவிக்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பி உள்ளது. பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஐ.ஆர்.சி.டி.சி.,யில் நடந்த ஊழல் தொடர்பாக, அவரிடமும், அவர் மகன் தேஜஸ்வி யாதவிடமும் விசாரணை நடத்த, சி.பி.ஐ., நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

. இந்த ஊழல் விவகாரம் குறித்து, ரப்ரி தேவியிடம் விசாரணை நடத்த, அமலாக்கத்துறை, நேற்று, 'சம்மன்' அனுப்பி உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., முன்னாள் உயரதிகாரி உட்பட மேலும் இருவருக்கும், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது; இவர்களிடம், அடுத்த வாரம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக, அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐ.ஆர்.சி.டி.சி.,யில், ஓட்டல் நடத்துதல், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்க, பீஹார் தலைநகர் பாட்னாவில், மூன்று ஏக்கர் நிலம், லஞ்ச மாக வழங்கப்பட்டதாகவும், அந்த இடம், தேஜஸ்வி, ரப்ரி தேவி பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
6 வங்கி காசோலைகளை பயன்படுத்த எஸ்.பி.ஐ., தடை
பதிவு செய்த நாள்21செப்
2017
00:35


புதுடில்லி : எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா வங்கி, தன்­னு­டன் இணைந்த, ஆறு துணை வங்­கி­களின் காசோலை புத்­த­கங்­களை, வாடிக்­கை­யா­ளர்­கள் பயன்­ப­டுத்த வேண்­டாம் என, கேட்­டுக் கொண்­டுள்­ளது.

எஸ்.பி.ஐ., உடன், ஸ்டேட் பேங்க் ஆப் பிகா­னிர் அண்டு ஜெய்ப்­பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் திரு­வாங்­கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்­டி­யாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஐத­ரா­பாத், பார­திய மகிளா வங்கி ஆகிய ஆறு துணை வங்­கி­கள், ஏப்., 1ல் இணைந்­தன. இதை­ய­டுத்து, இந்த ஆறு வங்­கி­களின் வாடிக்­கை­யா­ளர்­கள், அதே வங்­கிக் கணக்கு எண்­க­ளு­டன், எஸ்.பி.ஐ., வாடிக்­கை­யா­ளர்­க­ளாக மாறி­னர்.

இந்­நி­லை­யில், எஸ்.பி.ஐ., வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், ‘எஸ்.பி.ஐ., உடன் இணைந்த, ஆறு துணை வங்­கி­களின் காசோலை புத்­த­கங்­களை, வாடிக்­கை­யா­ளர்­கள், செப்., 30 முதல் பயன்­ப­டுத்த வேண்­டாம்’ என, கூறப்­பட்­டுள்­ளது. ஏப்­ர­லில், வங்கி கணக்­கில் மாத சரா­சரி இருப்பு தொகையை பரா­ம­ரிக்­காத வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, எஸ்.பி.ஐ., அப­ரா­தம் விதித்­தது.

இது பற்றி, எஸ்.பி.ஐ., தேசிய வங்கி குழு­வின் நிர்­வாக இயக்­கு­னர் ரஜ்­னிஷ் குமார் கூறு­கை­யில், ‘‘வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் இருந்து, அப­ரா­தம் குறித்து நிறைய புகார்­கள் வரு­கின்றன. இதை, பரி­சீ­லித்து வரு­கி­றோம்,’’ என்­றார்
அமெரிக்காவில் இந்திய அறுசுவை உணவு
பதிவு செய்த நாள்
செப் 19,2017 18:26

அமெரிக்கா, மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள இந்திய பாரம்பரிய உணவு விடுதியான தர்பார், பல்வேறு வகையான இந்திய சைவ உணவு வகைகள், சிற்றுண்டிகள், தந்தூரி ரகங்கள், அசைவ உணவு வகைகள், பல்வேறு சாத வகைகள், சூப், ஐஸ்கிரீம், ஊறுகாய், அப்பளம் போன்றவை கிடைக்கும்.

முகவரி: 152 ஈ 46வது தெரு, மிட் டவுன், மன்ஹாட்டன், நியூயார்க்
போன்: (212) 681- 4500

திறந்திருக்கும் நேரம்: பகல் 11:30 முதல் இரவு 11:30
இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!
பதிவு செய்த நாள்21செப்
2017
00:18




எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு, அருகிலுள்ள கடையில் மட்டும் தான், இந்த பொருட்களை வாங்க முடியும்.

ரூ.5,400 கோடி

வீடு மாறி செல்வோர், அந்த விபரத்தை, உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் தெரிவித்து, முகவரி மாற்றம் செய்ய வேண்டும். அங்கு தரும் சான்றை, புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கி, பொருட்களை வாங்க முடியும்.

இந்நிலையில், எந்த ரேஷன் கடையிலும், உணவுப் பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உணவு மானியத்திற்காக, தமிழக அரசு, 5,400 கோடி ரூபாய் செலவிடுகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் செய்யும் முறைகேடுகளால், ரேஷன் பொருட்கள், முழுமையாக மக்களை சென்றடையவில்லை. இதற்கு, காகித ரேஷன் கார்டு, பதிவேட்டில் விற்பனை விபரம் பதிவு உள்ளிட்டவை, முக்கிய காரணம்.தற்போது, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புதல், விற்பனை விபரம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு என, ரேஷன் தொடர்பான அனைத்து பணிகளும், கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.

முறைகேடுகளுக்கு முடிவு

இதனால், கன்னியாகுமரியில் உள்ள, ஒரு ரேஷன் கடையில் இருக்கும் பொருட்களின் விபரத்தை, சென்னையில் இருந்து கண்காணிக்க முடிகிறது.இன்னும், 20 லட்சம் பேருக்கு மட்டும் தான், ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டி உள்ளது. அந்த பணி முடிந்ததும், யார் வேண்டுமானாலும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டம் துவக்கப்படும். 

ஒரே மாதத்தில், இரு இடங்களில் பொருட்களை வாங்குவது உள்ளிட்ட முறைகேடுகள், இனி செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
வங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'

பதிவு செய்த நாள்20செப்
2017
23:54

சென்னை: வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.

ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனி யார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட் கள் விடுமுறை கிடைத்துள்ளது. செப்., 29 முதல் அக்.,2 வரை வங்கிகள் இயங்காது. அதனால் வாடிக்கையாளர்கள் 28ம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடித்து கொள்வது சிறந்தது. ஏற்கனவே, ஆக., 12 முதல், 15 வரை, நான்கு நாட்கள் வங்கிகளுக்கு, தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
அறுவை சிகிச்சை நிபுணர்கள் அரசு பணியில் சேர வாய்ப்பு

பதிவு செய்த நாள்20செப்
2017
20:38


சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 744 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணியிடங்களுக்கு, அக்., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசு மருத்துவமனைகளில், மயக்கவியல், உயிரி வேதியியல், தோல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட, 19 துறைகளில், 744 உதவி மருத்துவ நிபுணர்கள் இடங்கள், காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, எம்.ஆர்.பி., எனப்படும், மருத்துவ பணியாளர் தேர்வாணையம், ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கு, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம். எழுத்து, வாய்மொழி தேர்வு கிடையாது. தகுதியின் அடிப்படையில், நேர்காணல் மூலம் இடங்கள் ரப்பப்படும்.விண்ணப்பங்களை, அக்., 10க்குள் அனுப்ப வேண்டும். தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என, எம்.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
திவ்ய தரிசன 'டோக்கன்' ரத்து

பதிவு செய்த நாள்20செப்
2017
22:58

திருப்பதி: திருமலைக்கு, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு பாத யாத்திரை மார்க்கத்தில் வரும் பக்தர்களுக்கு, தினசரி, 20 ஆயிரம் திவ்ய தரிசன, 'டோக்கன்'கள் வழங்கப்படுகின்றன.

புரட்டாசி சனிக்கிழமைகளில், பாத யாத்திரையாக அதிக பக்தர்கள் வருவர்.
அதனால், புரட்டாசி முதல் சனிக்கிழமையான, செப்., 23, இரண்டாவது சனிக்கிழமையான, செப்., 30 ஆகிய நாட்களிலும், கருடசேவை நாளான, செப்., 27ம் தேதியும், பாத யாத்திரை பக்தர்களுக்கான, திவ்ய தரிசன டோக்கன் வழங்குவதை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு 'போனஸ்' அறிவிப்பு

பதிவு செய்த நாள்20செப்
2017
22:56


புதுடில்லி: ரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாள் ஊதியத்தை, போனசாக வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ரயில்வே ஊழியர்களுக்கு, மத்திய அரசு போனஸ் வழங்கி வருகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான போனஸ் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிஉள்ளது. 'கெசடட்' அந்தஸ்து பெறாத, ரயில்வே ஊழியர்களுக்கு, உற்பத்தி அடிப்படையில், 78 நாள் ஊதியத்தை, போனசாக வழங்க, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

'போனஸ் தொகை, தசரா விடுமுறைக்கு முன் வழங்கப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 12.30 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன் அடைவர். ஆர்.பி.எப்., மற்றும் ஆர்.பி.எஸ்.எப்., போலீசாருக்கு, இந்த உத்தரவு பொருந்தாது.

'ரயில்வே ஊழியர்களுக்கு, போனஸ் வழங்கப்படுவதன் மூலம், மத்திய அரசுக்கு, 2,245 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய வழித்தடங்களில் விரைவில்... மகளிருக்காக மகளிர் மட்டும்! போக்குவரத்துக் கழகம் உறுதி
பதிவு செய்த நாள்21செப்
2017
00:46




கோவை : கோவையில், 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், 'மகளிர் மட்டும் சிறப்பு பஸ்கள்' இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அப்போது இயங்கிய மகளிர் மட்டும் பஸ்களின் வழித்தட வரைபடம் மற்றும் அப்போது அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளை துாசுதட்டி வருகின்றனர், போக்குவரத்துக்கழக அதிகாரிகள்.கோவை நகரில், 217 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் பகுதியில், 127 பஸ்களும்;நகர் பகுதியில், 90 பஸ்களும் இயக்கப்படுகின்றன. புதியதாக வந்த, 49 பஸ்களில், 29 பஸ்கள் புறநகர் பகுதிக்கும், 20 பஸ்கள் கோவை நகரிலும் இயக்கப்படுகின்றன.நகர் மற்றும் புறநகர் பகுதியில் இயங்கும் அனைத்து பஸ்களையும் பராமரிக்க, கோவை நகர் மற்றும் நகரை ஒட்டிய பகுதிகளில், 15 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இவற்றில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.கடந்த, 1995 முதல் 1997ம் ஆண்டு வரை, கோவை நகரிலுள்ள ஐந்து முக்கிய வழித்தடங்களில், 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில், கண்டக்டர் மற்றும் டிரைவர் மட்டுமே ஆண்களாக இருந்தனர். பயணிகள் அனைவரும் மகளிர்.பெரிநாயக்கன்பாளையத்திலிருந்து, பீளமேடு வரையும், சிட்ராவிலிருந்து பேரூர் வரையும், ஒண்டிப்புதுாரிலிருந்து வடவள்ளிவரையும், சரவணம்பட்டியிலிருந்து காந்திபுரம் வரையும், மருதமலையிலிருந்து ஆவாரம்பாளையம் வரையும் மகளிர் மட்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த பஸ்களின் முன்னும் பின்னும் உள்ள பெயர் பலகையில், மகளிர் மட்டும் என்று எழுதப்பட்டு, வழித்தட எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.இந்த பஸ்கள் அறிமுகமான போது, குறைந்த எண்ணிக்கையிலான மகளிர் மட்டுமே பயணித்தனர். நாளடைவில் இந்த பஸ்களில் பயணிக்க இடம் கிடைப்பது அரிதானது.கோவை நகரில் நடைபெற்ற கலவரம்; குண்டுவெடிப்பு; அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்பட்ட மாற்றம்; அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் நடத்திய காலவரையற்ற போராட்டம் உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்துக் கழகம் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது.அப்போது மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கையால், மகளிர் மட்டும் சிறப்பு பஸ்கள் அனைத்தும், சாதாரண பஸ்களாக மாற்றப்பட்டன. ஒரே ஒரு வழித்தடத்தில் மட்டும் இன்றும் மகளிர் ஸ்பெஷல் பஸ்சாக இயக்கப்படுகிறது. அதுவும் காலை, மாலை இரண்டு வேளைகளில், தலா ஒரு நடை மட்டும் மகளிர் ஸ்பெஷல் பஸ்சாக இயக்கப்படுகிறது

.இந்நிலையில் தற்போது, 'ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி, கோவை நகரில் மகளிருக்காக, 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்' என, மகளிர் அமைப்புகள், மகளிர் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர் கலெக்டரிடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.இவர்களது கோரிக்கையை ஏற்று, கோவையிலுள்ள, பொள்ளாச்சி, பாலக்காடு, மருதமலை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், அவிநாசி, திருச்சி ஆகிய சாலைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவியர் பயனடையும் வகையிலும், அலுவலகம் செல்லும் மகளிர் வசதிக்காகவும், காலை மற்றும் மாலை நேரங்களில் மகளிர் மட்டும் சிறப்பு பஸ்களை விரைவில் இயக்க உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மகளிர் அமைப்பினரும், மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பணிகள் வேகமெடுக்கும்!அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பாண்டி கூறியதாவது:கடந்த, 20 ஆண்டுளுக்கு முன்பு இருந்த, 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்களின் இயக்கம் குறித்தும், அந்த பஸ்களின் வழித்தட வரைபடம் மற்றும் அப்போதைய அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகள் குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளை கொண்டு, 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான வழித்தடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வுக்குப்பின், கோவை நகரில் 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதற்கான பணிகள் வேகமாக துவங்கும்.இவ்வாறு பாண்டி கூறினார்.
'ஸ்டிரைக்' ஆசிரியருக்கு சம்பளம் 'கட்'
பதிவு செய்த நாள்21செப்
2017
02:21




வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது, அரசு பணியாளர் நடத்தை விதிகளில் நடவடிக்கை எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். செப்., 7 - 15 வரை, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர். அதனால், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கின.

இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, பணிக்கு வராத நாட்களுக் கான சம்பள பிடித்தம் செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.மேலும், பணிக்கு வராதவர்கள் மீது, தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 25ம் தேதிக்குள், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பவும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- நமது நிருபர் -

Wednesday, September 20, 2017

வாகனச் சோதனையில் போலீஸை கதிகலங்க வைத்த வாலிபர்!

எஸ்.தேவராஜன் க.பூபாலன்




வாகன சோதனையின்போது, வாகன ஓட்டி ஒருவர் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் போலீஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் என்.டி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போக்குவரத்து போலீஸார் நேற்று நள்ளிரவு செம்மண்டலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வில்லியனூரைச் சேர்ந்த இளையராஜா என்பவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பைக் ஓட்டிவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருடைய பைக்கை போலீஸார் பறிமுதல் செய்தனர். அப்போது இளையராஜா, தன்னுடைய பைக்கைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு போலீஸார், "நீ குடித்துவிட்டு இருக்கிற. இப்போது பைக்கை கொடுக்க முடியாது. வழக்கும் போட்டாச்சு. காலையில் கோர்ட்டில் ஃபைன் கட்டிவிட்டு பைக்கை எடுத்துகிட்டு போ" என்று கூறியிருக்கிறார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா, "உங்களை என்னச் செய்கிறேன் பார்" என்று மிரட்டும் தொணியில் தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடால் திடீரென்று கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடனடியாக அவரைக் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் போலீஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் முதல் குறையும் செல்போன் கட்டணம்!

தினேஷ் ராமையா

செல்போன் இணைப்புக் கட்டணத்தை 57 சதவிகிதம் அளவுக்கு மத்திய தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) குறைத்துள்ளது.




செல்போனில், ஒரு நிறுவனத்துக்குச் சொந்தமான சிம் கார்டிலிருந்து, மற்றொரு நிறுவனத்துக்குச் சொந்தமான சிம் கார்டுக்கு அழைக்கும்போது, அந்த அழைப்பை இணைப்பதற்கு நிமிட அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு இணைப்புக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இணைப்புக் கட்டணம், நிமிடத்துக்கு 14 பைசா என்ற அளவில் இதுவரை வசூலிக்கப்பட்டுவந்தது. இந்த இணைப்புக் கட்டணத்தை 6 பைசா என்ற அளவுக்கு டிராய் குறைத்துள்ளது. இணைப்புக் கட்டணக் குறைப்பு, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், உள்நாட்டில் இணைப்புக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று டிராய் அறிவித்துள்ளது. அதேபோல, செல்போனிலிருந்து லேண்ட் லைன் அழைப்புகளுக்கான இணைப்புக்கு, முன்பிருந்ததுபோலவே கட்டணம் ஏதுமின்றித் தொடரும் என்றும் டிராய் அறிவித்துள்ளது. செல்போன் இணைப்புக் கட்டணம் குறைந்துள்ளதால், செல்போன் கட்டணமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Orders scrapping medical admission of 778 students in Pondy med colleges stayed


By Siva Sekaran  |  Express News Service  |   Published: 20th September 2017 02:24 AM  |  

CHENNAI: The operation of the proceedings dated September 7 of the Medical Council of India (MCI) and the subsequent orders of the Puducherry government invalidating the admission of 778 students in first year MBBS course for 2016-17 have been stayed by the Madras High Court.
Passing interim orders on the writ petitions from 108 aggrieved students, Justice K Ravichandrabaabu said that both the proceedings showed that they were issued without giving an opportunity of hearing to the petitioners or to the respective institutions, where they were undergoing the course for the past one year. Discharging them from their courses at this stage would be a major penal action, having drastic consequences on their academic career.
Such drastic action cannot be taken without following the principles of natural justice. Having allowed them to continue in the course for one year, if the impugned orders are given immediate effect, pending final decision on the petitions, it would certainly cause great prejudice and affect their interest, in the event of their succeeding in their cases later, the judge said.
On the other hand, if these students are permitted to continue the course by granting an interim order of stay and later if they fail to succeed in these writ petitions, certainly they have to leave the college without seeking any equity.
“This court finds that the petitioners have made out a prima facie case for the grant of interim order,” the judge said and made it clear that the same would be subject to the result of the petitions.
He then directed MCI and Puducherry government to file their counter on or before October 9 and posted the matter for final disposal on October 23.
Based on the report of Justice Chitra Venkataraman, a retired judge of Madras High court, that all 778 students were admitted without following the norms, MCI had cancelled all the admissions. According to MCI, a combined merit list was not prepared before admitting these students.
Of the total 778 students, 108 approached the High Court and sought to quash the proceedings of MCI and Puducherry government. They submitted that they were admitted in various medical colleges and deemed to be universities in Puducherry during 2016-17, i.e. well before the cut-off date of September 30, 2016. Their admissions, made strictly according to merits in the NEET, cannot be found fault with. The students combined merit list procedure was not in vogue during 2016-17.
It was introduced only in the present academic year 2017-18 and that too, pursuant to the Supreme Court order. The very basis for this action by MCI and Puducherry government was on the basis of a complaint from the parents of All Centac Students-Parents Association and if any action is to be taken on this, the students and the institutions in which they are continuing, ought to have given an opportunity of hearing, they argued.

Anna Univ V-C search panel headless as Lodha opts out


By Express News Service  |   Published: 20th September 2017 02:27 AM  |  

CHENNAI: Former Chief Justice of India RM Lodha, who hitherto headed the search committee for selection of a Vice-Chancellor for Anna University, has decided to quit, as inclusion of another member in the committee has been challenged in the Madras High Court. Advocate-General Vijay Narayan informed the first bench of Chief Justice Indira Banerjee and Justice M Sundar about this when the matter came up on Tuesday.
Justice Lodha confirmed to Express that he had indeed put in his papers. “I heard that someone has challenged the composition of the panel in court. If there is litigation going on in a court I would prefer not to be part of the panel. I have sent my resignation to the Governor. The matter is sub judice now,” he said. Asked if there was any other reason that forced him to resign, he replied in the negative. “Everything was going on fine,” he said.
Originally, the bench had reserved its orders on a PIL from P Uchimakali, State secretary of SFI, challenging the inclusion of Anantha Padmanabhan, a former Director of IIT, Kanpur, as a member of the search committee, on September 13.
The petitioner alleged that Padmanabhan has been nominated as a member of the committee, despite being a professor of eminence in Anna University, which is against the by-laws of the university. The by-law prohibits persons related to the university in any manner from being nominated as a member of the search committee.
The government submitted that Padmanabhan had resigned from the post of professor of eminence much before being nominated to the search committee. When the A-G made a mention on Tuesday about the decision of Justice Lodha, the bench pointed out a letter dated August 18, written by Padmanabhan to the university stating that he is resigning from the post of professor of eminence only in consequence to his nomination as a member of the search committee.
Based on the communication, which bore the official seal of the university, the bench raised doubts about the authenticity of the copy of the resignation letter filed in the court, claiming that Padmanabhan had resigned in April, two months before his nomination. As the A-G submitted that he will produce the original documents, the bench adjourned the matter by a day.

Now pay for every drop of water in Chennai


By C Shivakumar & Sv Krishna Chaitanya  |  Express News Service  |   Published: 19th September 2017 11:43 PM  |  

CHENNAI: Residents in T Nagar will soon have to pay for the amount of water they use rather than the usual flat rate being charged by the Chennai Metro Water. Under the pilot project being introduced in
T Nagar, residents will now have to pay as per the readings of net meters which will soon be installed in the households dotting T Nagar.
“We are also planning to replicate it across the city,” sources said. Besides, the technology that is being used by the State will be much more advanced compared to the ones tried by Delhi and Mumbai. This will be completely hassle-free with zero human intervention.
“Our net meters will be different from the ones introduced in Delhi and Mumbai. Though the concept is same, Chennai Metro Water will be using Automatic Meter Reading (AMR) metering that feeds data directly into gateways, then to cloud and to the system. While, Delhi and Mumbai uses AMR which required manual intervention, where a person using a handheld device with a radio frequency gathers the information and feed into the system.
We preferred to go for AMR without human intervention to show that the State is more advanced in the country when compared  with other States,” an official said. Meanwhile, Chennai Metro Water is awaiting funds from the Centre to implement the scheme.
This will be carried out under Area Based Development (ABD) as part of smart city initiative. T Nagar will be provided with 24x7 water supply. The water metering will be an automated one offering accurate metering and leakage prevention (detection and control). Usually, water consumption is never measured and residents are charged a fixed flat rate. This makes people insensitive towards water conservation, say experts.
Interestingly, eight years ago, the Chennai Metro Water had made a failed attempt to introduce water metering system in the city.
Fact File
Automatic Meter Reading (AMR) will be introduced in T Nagar as a pilot project for the first time in the the State.
AMR will be free from human intervention unlike the ones being used in Delhi and Mumbai.

மும்பையில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு!


By DIN  |   Published on : 19th September 2017 06:02 PM  | 
Mumbai_rains-


சென்னை: மும்பையில் இன்று மதியம் முதல் நாளை மதியம்  வரை பல பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, இன்று மதியம் முதல் நாளை வரை மும்பையில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பையில் கடைசியாக பெய்த கன மழையை விடவும் தற்போது மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.

மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகபட்சமாக 500 மி.மீ. மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
மும்பைவாசிகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகம், கல்லூரி சென்றவர்கள் வீட்டுக்கு விரைவாக சென்று விடலாம். நாளை இரவு முதல் மழை படிப்படியாகக் குறைந்துவிடும். எனவே, நாளை மற்றும் நாளை மறுநாள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது நல்லது என்றும் கூறியுள்ளார்.

    NEWS TODAY 30.12.2025