Friday, March 13, 2015

"அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றும் திட்டம் இல்லை'

"மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை தற்போதுள்ள 60 வயதில் இருந்து அதிகரிக்கவோ, குறைக்கவோ அரசுக்கு திட்டம் இல்லை' என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடர்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், மேற்கண்டவாறு பதிலளித்தார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதைக் குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக இரு முறை வெளியான தகவல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மறுப்பு தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வதந்திகள் பரப்பப்படுகின்றன என்றும் வாக்காளர்களிடம் அவர் கூறியிருந்தார்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இறுதிக் காலத்தில், மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை அரசு அதிகரிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.

கடவுச்சீட்டு பெற விரும்பும் மாணவர்கள் அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டியதில்லை

கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற விரும்பும் மாணவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மண்டல கடவுச்சீட்டு அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார். இதற்குப் பதிலாக மாற்று ஆவணங்களாகச் சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் எவை என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலமுருகன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கடவுச்சீட்டு பெற தங்களது பிறப்புச் சான்றிதழ், 10-ஆம் வகுப்புச் சான்று உள்பட இதர கல்வி தொடர்பான சான்றுகளை அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால், இந்தச் சான்றிதழ்களை கல்வி நிறுவனங்களில் அளித்துள்ளதால் கடவுச்சீட்டுக்காக அவற்றை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் இருந்து, ஒரு சான்றிதழை அளிக்க வேண்டும். அதாவது, மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில்தான் பயில்கிறார்கள் எனவும், அவர்களது அசல் சான்றுகள் கல்வி நிறுவனத்தின் வசம் உள்ளது என்றும் குறிப்பிட்டு சான்று பெறப்பட வேண்டும். அசல் சான்றிதழ்களின் நகல்களை, தொடர்புடைய கல்வி நிறுவன அதிகாரியின் சான்றொப்பத்தைப் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட உரிய அடையாள அட்டையின் நகலையும் கொடுக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்களையும் பூர்த்தி செய்தால், அசல் சான்றிதழ்களை மாணவர்கள் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

வங்கிக் கணக்குப் புத்தகம்: கடவுச்சீட்டுக்கான ஆவணங்களில் ஒன்றாக வங்கிக் கணக்குப் புத்தகமும் உள்ளது. அந்த வங்கிகளின் வரிசையில் இப்போது "ஷெட்யூல்' பொதுத் துறை வங்கிகள், ஷெட்யூல் தனியார் வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

கடவுச்சீட்டு சேவை தொடர்பாக ஏதேனும் விவரங்கள் பெற வேண்டுமெனில் 17 மொழிகளில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லாத தொலைபேசி சேவையை (1800-258-1800) பயன்படுத்தலாம்.

மேலும், டுவிட்டர் (RpoChennai) கணக்கிலும், முகநூலிலும் (Regional Passport Office Chennai) தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: கோடைக் காலத்தை சமாளிப்பது எப்படி?

கோப்பு படம்
சென்னையில் கோடைக் காலம் தொடங்கும் முன்பே சில பகுதி களில் குடிநீர் தட்டுப்பாடு ஆரம் பித்து விட்டது. மடிப்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை பகுதிகளில் சில இடங்களில் குழாய்களில் குடிநீர் வராததால் லாரிகள் மூலம் கொண்டு வரப் படும் நீரை மக்கள் நம்பியி ருக்க வேண்டிய நிலை உருவாகி யுள்ளது.

சென்னைக்கு நீர் வழங்கும் ஆதாரங்களான பூண்டி, சோழ வரம், செங்குன்றம் ஆகிய ஏரிகளில் நீரின் அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்திருப்பது கவலைக்குரிய விஷயமாகும். 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் மார்ச் 12-ம் தேதி நிலவரப்படி 165 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஆனால் இதே நாளில் கடந்த ஆண்டு 396 மில்லியன் கன அடி நீர் இருந்தது. அதே போன்று சோழவரம் ஏரியில் தற்போது 70 கன அடி நீர் உள்ளது, ஆனால் கடந்த ஆண்டு 76 கன அடி நீர் இருந்தது. செங்குன்றம் ஏரியில் கடந்த ஆண்டு 2,287 கன அடி நீர் இருந்த நிலையில்,இந்த ஆண்டு 1,782 கன அடி நீர்தான் உள்ளது.

ராயப்பேட்டை பார்டர் தோட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குழாய்களில் குடிநீர் வரவில்லை என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். அங்கு வசிக்கும் முகமது அப்ரோஸ் பாஷா கூறும் போது, “ கிட்டத்தட்ட ஒரு மாதமாக எங்கள் குடியிருப்புக்கு குடிநீர் வருவதில்லை. இதுகுறித்து விசாரித்தபோது அழுத்தம் இல்லாததால் தண்ணீர் இந்தப் பகுதிக்கு வருவதில்லை என்று கூறுகிறார்கள். இப்போதே இந்த நிலை என்றால் மே, ஜூன் மாதங்களில் எப்படி போதிய அழுத்தம் இருக்கும்?” என்றார்.

மடிப்பாக்கத்தில் வசிக்கும் சுப்ர மணியன் கூறும்போது, “எங்கள் பகுதிக்கு அருகில் குடிநீர் தொட்டி உள்ளது. எனினும் எங்க ளுக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விடப் படுகிறது. இப்போது சில வீடுகளில் குழாய்களில் தண்ணீர் வராததால் பொது குழாயில் எடுத்து கொள்கின்றனர்” என்றார்.

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் வசிக்கும் லட்சுமி கூறும்போது, “கடந்த சில நாட்களாக குடிநீர் வராததால் புகார் அளித்திருக் கிறோம். குழாய்களில் ஏதோ கோளாறு என்று கூறப்படுகிறது” என்றார்.

இது குறித்து சென்னை குடிநீர் வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, “கோடை காலத்தில் மக்களின் நீர் தேவை அதிகரிக்கும். அவர்கள் பொதுவாக பயன் படுத்தும் நீரை விட அதிக நீர் பயன்படுத்துவார்கள். எனவே, குழாய்களின் ஆரம்ப பகுதி களில் இருப்பவர்களுக்கு அதிக மாகவும், கடைசி பகுதிகளில் இருப் பவர்களுக்கு குறைவாகவும் நீர் கிடைக்கலாம். இதனை சீர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இருப்பதால் தினமும் 200 மில்லியன் கன அடி நீர் கிடைப்பது உறுதிப்படுத்தப்படுகிறது” என்றார்.

Thursday, March 12, 2015

ஏடிஎம்மில் கள்ள நோட்டு: வாடிக்கையாளரை குற்றவாளி ஆக்குவதா?- ரிசர்வ் வங்கி, போலீஸ் அதிகாரி விளக்கம்



வங்கி நடவடிக்கைகள் பொது மக்களுக்கு எந்த அளவுக்கு எளிதாக்கப்பட்டுள்ளதோ அதே அளவுக்கு சில நேரங்களில் பெரும் தலைவலியையும் ஏற்படுத்தி விடுகிறது. அண்மைக்காலமாக வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போது ஒரு சில கள்ள நோட்டுகளும் சேர்ந்து வருகின்றன. அவற்றை மாற்ற சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பொதுமக்கள் சென்றால் அவர் களையே குற்றவாளிகள் போல் வங்கிகள் நடத்துவதாக புகார்கள் வந்துள்ளன.

உள்ளகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அப் பகுதி யில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கியின் ஏடிஎம் ஒன்றில் கடந்த வாரம் பணம் எடுத்திருக்கிறார். மறுநாள் அதே வங்கியின் ஆதம்பாக்கம் கிளையில் வேறு ஒருவரின் கணக்கில் பணம் செலுத்தச் சென்றிருக்கிறார். அவர் தந்த பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு ஒன்று இருப்பதாக வங்கி ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். பின்னர் அவரை மேலாளரின் அறைக்கு அழைத்துச் சென்றனர். கள்ளநோட்டு என்று சொல்லப்பட்ட 500 ரூபாயை வாங்கிய மேலாளர், உடனே அதை கிழித்துப் போட் டிருக்கிறார். தொழிலதிபருக்கு பேச வாய்ப்பே தரப்படவில்லை. வங்கியை விட்டு வெளியில் வந்து யோசித்துப் பார்த்த பிறகுதான், அந்தப் பணம் அதே வங்கியின் உள்ளகரம் பகுதி ஏடிஎம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது என்பது ஞாபகம் வந்திருக்கிறது. வங்கி மேலாளரை போனில் தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவிக்க முயன்றிருக்கிறார்; முடியவில்லை.

இதேபோல பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்-ல் பணம் எடுத்த வேறு ஒருவர், தனது ஊழியர்களுக்கு அந்த பணத்தை சம்பளமாக கொடுத்திருக்கிறார். அதில் ஒரு ஊழியர் வங்கிக்குச் சென்றபோது 500 ரூபாய் நோட்டு கள் மூன்றை வாங்கி, கள்ளநோட்டு என்று சொல்லி கிழித்துப் போட்டி ருக்கிறார்கள். அந்த ஊழியருக்கு 1500 ரூபாய் நஷ்டம். போலீஸ் பிரச்சினை வரும் என்று சொல்லி பயமுறுத்தி வங்கியில் இருந்து அவரை அனுப்பிவிட்டார்கள்.

ஆனால், வங்கியின் ஏடிஎம் களில் கள்ள நோட்டுகளும் சேர்ந்து வருகின்றன என்ற புகாரை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன. ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது? யாரை அணுக வேண்டும்? இந்த கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? என்பது குறித்து சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டோம். அவர்கள் அளித்த விவரம்:

ஏடிஎம் வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. காரணம், ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் முன் அவை ஏடிஎம் ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இதன்படி, கள்ள நோட்டுகள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுவிடும். இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக் கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.

எந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரத் துக்குள் பணம் நிரப்பப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்படுகிறது. இந்த பணியை செய்யும் சில ஏஜென்சிகள் வங்கி யிலிருந்து மொத்தமாகப் பணத் தைப் பெற்று, அதை அந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களுக்குள் நிரப்புகின்றன. இந்த ஏஜென்சிகளின் நம்பகத்தன்மையையும், உண்மைத் தன்மையையும் வங்கிகள் சோதனை செய்த பின்னரே இந்த வேலையைத் தருகின்றன.

வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப்படுத்துவதற்கு முன்னர், ஏடிஎம் மையத்தில் இருக்கும் ரகசிய கேமராவில் சந்தேகத்துக்குரிய ரூபாய்களில் உள்ள எண்களைக் காட்டுவது அவசியம். ஏனெனில், ஏடிஎம் இயந்திரத்துக்குள் போடப்படும் ரூபாய்களில் இருக்கும் எண்கள் பதிவு ஆகாது.

அதனால் சந்தேகத்துக்குரிய தாள்களை கேமராவில் காண் பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும் போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும். பின்னர் அந்த ஏடிஎம் எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.

ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் சந்தேகத்துக்குரிய ரூபாய் நோட்டுகளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ள நோட்டுதானா என்று பரிசோதிப்பார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு, அந்த ரூபாய் நோட்டுகளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள். உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏடிஎம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு அந்த கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய் நோட்டுகளை தருவார்கள். இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தேகம் வந்தால் அவர் மீது வங்கியானது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்.

ஏடிஎம்களில் கள்ள நோட்டுகள் வந்தால் அதை வங்கி மேலாளர்கள் உடனே கிழித்து எறியக் கூடாது. முறைப்படி விசாரித்து அது கள்ள நோட்டு என்று உறுதி செய்த பிறகே கிழித்து எறிய வேண்டும். இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். அதையும் மீறி பொதுமக்கள் அளிக்கும் கள்ள நோட்டை கிழித்தால் அது குறித்து பொதுமக்கள் வங்கி குறை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கலாம்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு, www.rbi.org.in, www.paisabolthahai.rbi.org.in என்கிற ரிசர்வ் வங்கி இணையதளங்களை பார்க்கலாம்.

இவ்வாறு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்கிக்கு எதிராக நடவடிக்கை

மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது கள்ள நோட்டு சிக்கினால் சம்பந்தப்பட்ட வங்கியின் கிளைக்குச் சென்று புகார் தெரிவிக்கலாம். அப்போது, வங்கி நிர்வாகம் அவர்கள் மீது பழி சுமத்தினால் தகுந்த ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி வங்கிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் இவ்விஷயத்தில் பயப்படத் தேவையில்லை’’ என்றார்.

NRI students may not get MBBS seats in K’taka

Bengaluru: NRI students aspiring to join medical courses in Karnataka this year may have to return home empty-handed as the state government is yet to frame rules for conducting special entrance tests for them.

The Medical Council of India (MCI) had in January this year directed all states and deemed universities to conduct separate entrance tests for NRI students for admission to MBBS and MD.

While COMED-K and the Karnataka Examination Authority (KEA) have announced the dates for entrance tests for professional courses, the state government is yet to frame rules that will govern the admissions process for NRI students. Neither COMED-K nor KEA, which conducts the CET, allots seats for NRI students.

What is shocking is that the state's medical education minister Sharan Prakash Patil seems unaware of the MCI directive. "I am not aware of this direction given by the Medical Council of India. I will check and initiate action," the minister told TOI on Wednesday in response to a query on the issue.

This has left deemed universities and private medical colleges in confusion.

Private colleges reserve around 15% of medical seats for NRIs, which are transferred to the management quota if they are not filled. Around 500 MBBS seats are available for NRI students in colleges across the state.

Pointing out challenges in conducting special entrance tests, Manipal University (MU) registrar GK Prabhu said, "The main issue is how do we set the test for foreign students. Is it online or offline because they cannot personally come down to write entrance tests?"

MU plans to petitition the MCI about these challenges, Prabhu said. MU receives around 350 applications from NRIs every year and admits 75 of them to MBBS.

Till now, deemed universities have been admitting NRI students to MBBS based on the marks obtained in their class 12 or other qualifying exams. Dr Basavana Gowdappa H, principal of JSS Medical College, Mysuru, said, "We are stranded and there is no clarity in MCI's directive. When deemed universities and private colleges have been providing MBBS seats to NRI students on merit basis all along, why do we need an entrance test for them now?"

JSS University is writing to both MCI and the state government seeking clarity on the process for admitting NRI students to MBBS.

There are 15 deemed universities and 46 medical colleges in the state.

உலகிலேயே செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர்

logo
பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. அதுபோல், இந்த ஆண்டு 93 நாடுகளில், 140 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உலகிலேயே செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர் என தெரிய வந்துள்ளது. பாரீஸ், ஓஸ்லோ, ஜூரிச், சிட்னி ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த முறை நடத்தப்பட்ட ஆய்விலும், இதே நகரங்கள் இதே இடங்களைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது, மிகவும் அபூர்வமானதாக கருதப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள பலசரக்கு சாமான்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளதை விட 11 சதவீதம் அதிகமாகும். துணிமணிகள், 50 சதவீதம் அதிகமாகும். மேலும், சிங்கப்பூரில் கார் வைத்திருப்பதற்கு சான்றிதழ் பெறும் முறை உள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து செலவு, நியூயார்க்கை விட மூன்று மடங்கு அதிகமாக போய்விட்டது. இந்த காரணங்களால், சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றுள்ளது.

ACCEPTANCE OF REGISTERED RENT AGREEMENT AS A VALID PROOF OF ADDRESS IN RESPECTS OF TENANTS FOR GRANT OF PASSPORT FACILITIES


Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...