Monday, November 16, 2015

சி.ஐ.எஸ்.எஃப். கட்டுப்பாட்டில் இன்று முதல் உயர்நீதிமன்ற வளாகம்! By சென்னை, First Published : 16 November 2015 12:47 AM IST

சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பணியை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சி.ஐ.எஸ்.எஃப்) திங்கள்கிழமை (நவ. 16) முதல் மேற்கொள்ள உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவம்பர் 16 முதல் மத்தியப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அக்டோபர் 30-இல் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, 650 வீரர்களை கொண்டு 6 மாதங்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தேவையான முன்வைப்புத் தொகை ரூ.16.60 கோடியை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நவம்பர் 5-இல் தமிழக அரசு வழங்கியது.
இதன்பின்னர், மத்தியப் படை பாதுகாப்பு வழங்குவதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தன.
மத்திய படையியினர் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கீழமை நீதிமன்றங்களையும், உயர் நீதிமன்றக் கட்டடங்களையும் தனித்தனியே பிரிக்க இரும்பு தகடுகளைக் கொண்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்புப் பணிக்காக சுமார் 450 வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்துக்கு மட்டும் மத்திய படை: 30-க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்றங்களைக் கொண்ட பகுதியில் மட்டுமே சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அதிலும், உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பணிகளை மாநில போலீஸாருடன் இணைந்துதான் மத்திய படையினர் மேற்கொள்ள உள்ளனர். குடும்ப நல நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் அனைத்தும் மாநில போலீஸாரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
"அடையாள அட்டை இல்லாமல் நுழைய முடியாது'
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் (தனியே பிரிக்கப்பட்ட பகுதி) திங்கள்கிழமை முதல் அடையாள அட்டை இல்லாமல் நுழைய முடியாது. 6 வாயில்களில் (சோதனை மையங்கள்) மத்திய படையினரின் முழுமையான சோதனைக்குப் பிறகே அனைவரும் அனுமதிக்கப்படுவர்.
வழக்குரைஞர்கள் பார் கவுன்சில் அடையாள அட்டை அல்லது வழக்குரைஞர் சங்க அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். வழக்கு தொடுத்தவர்கள் என்றால், அனுமதிச் சீட்டு பெற 2 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு நுழைவுச் சீட்டு பெற்ற பின்னர் சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றக் கட்டடத்துக்கு அருகில் உள்ள வாயில்களில் வழியாக உயர் நீதிமன்றத்துக்கு உள்ளே வர வேண்டும். இது தவிர வழக்குரைஞர்கள் கார், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முறைப்படி ஒப்படைப்பு
மாநில போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை உயர்நீதிமன்ற வளாகம் (தனியே பிரிக்கப்பட்ட பகுதி) சி.ஐ.எஸ்.எஃப். வசம் ஞாயிற்றுக்கிழமை முறையாக ஒப்படைக்கப்பட்டது.
காவல் துறையின் துணை ஆணையர் (பூக்கடை) செந்தில் குமார், சி.ஐ.எஸ்.எஃப். தலைமை காமாண்டன்ட் ஸ்ரீதரிடம் இந்தப் பணியை ஒப்படைத்தார்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற பாதுகாப்பு சி.ஐ.எஸ்.எஃப்.,கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் தலைமை நீதிபதியின் அறை, தலைமைப் பதிவாளர், பதிவாளர்கள் அறைகள், பிரதான வாயில்கள், உயர்நீதிமன்ற அறைகள் ஆகியவற்றின் முன்பு மத்திய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, உயர்நீதிமன்ற பகுதி முழுவதையும் மாநில போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் குழுவினரும் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்துக்கு இடமாக பொருள்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து, ஒப்படைக்கவே சோதனை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் பக்தர்கள் கடும் அவதி

பதிவு செய்த நாள்:
ஞாயிறு, நவம்பர் 15,2015, 8:59 PM IST

திருமலை,

திருமலையில் பலத்த மழை பெய்து வருவதால் திருப்பதி மலைப்பாதையில் பாறைகளும், மரங்களும் சரிந்து சாலையில் விழுகின்றன. திருப்பதி 2–வது மலைப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதால் அடிவாரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மோகாலிமிட்டா இடத்தில் திருமலையை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் சுமார் 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இணைப்புச்சாலை வழியாக திருமலைக்கு திருப்பி விடப்படுகின்றன. இதனால் குறித்த நேரத்தில் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

ஒரே மலைப்பாதையில் அனைத்து வாகனங்களும் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மலைப்பாதையை சீரமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மோகாலிமிட்டாவில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் நீண்டதூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் உயர் அதிகாரி தகவல்

பதிவு செய்த நாள்:
திங்கள் , நவம்பர் 16,2015, 3:00 AM IST
சென்னை,
அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் எல்லா விதமான மீட்பு பணிகளையும் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக உயர் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
தொடர் கனமழைதமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்வது? என்பது குறித்து மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தொடர் மழைக்கு எல்லா விதத்திலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) கே.எஸ்.கந்தசாமி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–
தொடர் மழை காரணமாக சென்னைக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. நீர்தேக்க பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 2 முதல் 50 குதிரைத்திறன் கொண்ட 170 பம்புசெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. மழைநீரை வடியவைக்க 57 ஜே.சி.பி. எந்திரங்கள், நீரை உறிஞ்சும் 75 ‘சூப்பர் சக்கர்’ எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 71 எந்திரங்கள் சென்னை குடிநீர் வாரியத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுகள்சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை சேர்ந்த 1,090 பொதுமக்கள் அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக்கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாநகர், ராயபுரம் மண்டலங்கள் உள்பட பாதிக்கப்பட்ட மண்டலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் இதுவரை 90 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உணவு பொட்டலங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 120 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது வரை இந்த முகாம்கள் மூலம் 19 ஆயிரத்து 200 பேர் பயனடைந்து உள்ளனர்.
சாய்ந்த மரங்கள் அகற்றம்சென்னை நகரில் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட 6 சுரங்கப்பாதைகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் மாநகராட்சிக்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்திருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட 4 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நகரின் 490 இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 186 இடங்களில் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (நேற்று) மட்டும் சென்னையில் மழைக்கு சாய்ந்த 7 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி தயார்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் 3 மிதவை படகுகளும், தீயணைப்பு துறை சார்பில் 6 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. 45 பேர் கொண்ட ஒரு குழுவும், 35 பேர் கொண்ட மற்றொரு குழுவும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. மிதவை பலூன்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. இந்த குழுக்கள் பேசின்பிரிட்ஜ் மற்றும் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். செயற்பொறியாளர் தலைமையில் 30 பேர் கொண்ட குழுக்களாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. ‘1913’, ‘9445190228’, 044–25387235 உள்ளிட்ட எண்களில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம். எனவே இந்த மழைக்காலத்தில் எல்லா விதமான மீட்பு பணிகளையும் மேற்கொள்ள அனைத்து விதத்திலும் சென்னை மாநகராட்சி தயார் நிலையிலேயே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

பாரீசில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் 2008–ம் ஆண்டு மும்பை தாக்குதலை நினைவூட்டுகிறது உறவினர்கள் கண்ணீர் பேட்டி

பதிவு செய்த நாள்:
திங்கள் , நவம்பர் 16,2015, 3:32 AM IST
மும்பை,
பாரீசில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் 2008–ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலை நினைவூட்டுவதாக அந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர்மல்க கூறினர்.
பாரீசில் தாக்குதல்பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் தனித்தனி குழுக்களாக புகுந்த 8 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் 129 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த சம்பவம் பல தீவிரவாத பேரழிவுகளை சந்தித்துள்ள மும்பை நகர மக்களை மேலும் ஆழமாக பாதித்துள்ளது என்றே கூறலாம்.
காரணம் இந்த தாக்குதல் கடந்த 2008–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் தீவிரவாத தாக்குதலை நினைவுபடுத்துவது போலவே உள்ளது தான்.
மும்பை தாக்குதல்மும்பையில் 2008–ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்தது இந்த சம்பவம், லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் 12 இடங்களில் ஈவு, இரக்கமின்றி மக்களை கொன்று குவித்தனர். நான்கு நாட்கள் இந்த தாக்குதல் நீடித்தது. மொத்தம் 164 பேர் உயிரிழந்தனர், 300–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நகல் எடுத்தது போலவே தற்போதைய பாரீஸ் நகர தாக்குதலும் உள்ளது.
இதுகுறித்து 2008–ம் ஆண்டு மும்பை தாக்குதலின் போது உயிரிழந்த போலீஸ் கூடுதல் கமிஷனர் அசோக் காம்தேவின் மனைவி வினிதா காம்தே கூறியதாவது:–
மேற்கத்திய நாடுகளில் சிறப்பு வாய்ந்த பாதுகாப்பை கொண்ட பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதை கண்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். தங்கள் மதத்தை வளர்ப்பதற்காக இவ்வாறு செய்ததாக அவர்கள் அறவித்துள்ளனர். மதத்தை பரப்புவதற்கு இது தவறான வழிமுறையாகும் மாறாக வன்முறையை விரும்பாதவர்களுக்கு அவர்களின் மதத்தின்மீது மேலும் கோபத்தையே இது ஏற்படுத்தும்.
கணவனை இழந்தேன்...இந்த சம்பவம் என் கணவரை இழந்த அந்த மோசமான நாளை மீண்டும் நினைவூட்டுவதாக உள்ளது. இதேபோன்ற தாக்குதலில் தான் நான் என் கணவரை இழந்தேன். அவருடன் வாழ்ந்த காலத்தின் பசுமையான நினைவுகளே எனக்கு இருக்கும் ஒரேயொரு ஆறுதலான விஷயம்.
இவ்வாறு வினிதா காம்தே கூறினார்.
இதேபோல் 2008–ம் ஆண்டு மும்பை தாக்குதலின் போது தன் குடும்பத்தினர் 6 பேரை இழந்தவர் சமீம் சாயிக்(வயது 39). இவர் கூறுகையில், ‘‘ பாரீஸ் தாக்குதல் சம்பவம் எனக்கு பழைய சில வலிமிகுந்த சம்பவங்களை நினைவூட்டுகிறது. 2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய தினம் இரவு நானும் எனது குடும்பத்தினரும் எங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு சென்றோம்.
6 பேரை இழந்தேன்...அது ஒரு வித்தியாசமான இரவு. ரெயில் நிலையத்தில் எங்கு நோக்கினும் துப்பாக்கி சத்தமும், மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடுவதையுமே காண முடிந்தது. எங்கும் ரத்தமாக காட்சியளித்தது. அங்கு என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்துகொள்வதற்கு முன்னதாகவே என் குடும்பத்தினர் 6 பேரை நான் அநியாயமாக இழந்துவிட்டேன்.
இதேபோன்ற சம்பவம் தற்போது பாரீஸ் நகரில் நடந்துள்ளதை கேள்விபட்டதும் என் இதயத்துடிப்பே சிறிதுநேரம் நின்றுவிட்டது. இதை கேள்விப்படும்போது, ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே உணவு கிடைத்தால் கூட நம் சொந்த கிராமத்திற்கு சென்று நிம்மதியாக வாழ்ந்துவிடலாம் என்று தோன்றுகிறது. பெரிய நகரங்களில் வாழ்வது பீதியை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

உடன்குடி மின்சாரத்திட்டத்தின் நத்தை வேகம்

பதிவு செய்த நாள்:
ஞாயிறு, நவம்பர் 15,2015, 5:57 PM IST
தமிழ்நாட்டில் பல மின்சாரத்திட்டங்கள் வேகமாக நிறைவேற்றப்பட்டு வந்தாலும், தென்கோடியில் உள்ள உடன்குடியில் 2007–ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்ட அனல் மின்சார நிலைய திட்டம், மின்சார வேகத்தில் இல்லாமல் நத்தை வேகத்தில்கூட நகராமல் இருக்கிறது. தொடர்ந்து பல முட்டுக்கட்டைகள். 2007–ம் ஆண்டு உடன்குடி அனல் மின்சார நிலையம் அறிவிக்கப்பட்டபோது, தலா 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இரு யூனிட்கள் அமைக்கப்படும் என்றும், ‘பெல்’ நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து கூட்டாக இதைத்தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டு நிறுவனத்துக்கு ‘உடன்குடி மின்சாரக்கழகம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த மின்சார நிலையம் உடன்குடியில் 760 ஏக்கர் நிலத்தில் அமைக்கவும், இதில் அரசு நிலம் 650 ஏக்கர் என்றும், மீதமுள்ள 110 ஏக்கர் தனியார் நிலம் என்றும் முடிவு செய்யப்பட்டு, தனியாரிடம் இருந்து நிலமும் கையகப்படுத்தப்பட்டது. 25 கோடி ரூபாய் செலவில் மண்நிரப்பும் பணியும், இதர ஆரம்பக்கட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில், சில தொழில்நுட்ப காரணங்களால் ‘பெல்’ நிறுவனம் இல்லாமல், தமிழ்நாடு மின்சார வாரியமே இந்த அனல் மின்சார நிலையத்தை தனியாகத்தொடங்கி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மின்சார நிலையம் தலா 660 மெகாவாட் கொண்ட இரு யூனிட்டுகளை, ஆக மொத்தம் 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தொடங்க 2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவெடுக்கப்பட்டது. ரூ.8 ஆயிரம் கோடி செலவிலான இந்த திட்டத்துக்காக டெண்டர்விடப்பட்டது. இந்த டெண்டரில் ‘பெல்’ நிறுவனமும், இந்தோ–சீனா கன்சார்ட்டியம் என்ற இரு நிறுவனங்கள் கொண்ட ஒரு நிறுவனமும் பங்கேற்றன. இந்த இரு நிறுவன டெண்டர்களிலுமே குறைபாடு இருப்பதாக இதற்காக நியமிக்கப்பட்ட கன்சல்டன்சி நிறுவனம் கருத்து தெரிவித்ததையடுத்து, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் இந்த டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டருக்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதை எதிர்த்து சீன நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் பழைய டெண்டரை ரத்து செய்ததை எதிர்த்தும், அந்த டெண்டரில் குறைவான தொகையை குறிப்பிட்டிருப்பதால் அதாவது, ‘பெல்’ நிறுவனத்தை விட 137 கோடி ரூபாய் குறைவாக குறிப்பிட்டுள்ளதால், தங்கள் நிறுவனத்துக்கே உடன்குடி அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கான ஆணையை வழங்கவேண்டும் என்றும் தொடர்ந்த மெயின் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், உடன்குடி திட்டத்துக்கு புதிய டெண்டர் விடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சத்தியநாராயணன் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து மின்சாரவாரியம் அப்பீல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், மதிவாணன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் புதிய டெண்டரை தமிழ்நாடு மின்பகிர்மானக்கழகம் பரிசீலிக்கலாம், ஆனால் இறுதி தீர்ப்பு வரும்வரை யாருக்கும் காண்டிராக்டு கொடுக்கக்கூடாது என்று கூறி மீண்டும் விசாரணையை இன்று 16–ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். இன்றுதான் புதிய டெண்டரை மின்பகிர்மானக்கழகம் திறந்து தொழில்நுட்பரீதியாக எந்த நிறுவனம் தகுதிபடைத்தது என்று பார்க்கிறது. ஆனால், நீதிபதி ராமசுப்பிரமணியம் மதுரை ஐகோர்ட்டு பெஞ்சுக்கு சென்றுவிட்டதால், இந்த வழக்கின் விசாரணையும் உடனடியாக முடிவுகாண முடியாத நிலையில் இருக்கிறது. மொத்தத்தில், உடன்குடி திட்டத்தின் சிக்கலெல்லாம் தீர்ந்து உடனடியாக மின்சார உற்பத்தி தொடங்கும் நன்னாளைத்தான் தமிழகம் குறிப்பாக, தென்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கன மழையால் தத்தளிக்கும் சென்னை மாநகரம்:திரும்பும் திசை எல்லாம் வெள்ளம்

பதிவு செய்த நாள்:
ஞாயிறு, நவம்பர் 15,2015, 8:43 PM IST
சென்னை,

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதகளில் கனமழை பெய்துவருகிறது.இதன்காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நகரின் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை நிலவுகிறது.

பலத்த மழை காரணமாக வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மழைநீர் புகுந்தது. இதனால் வாகனங்களுக்கு பெட்ரோல் போட முடியாத நிலை ஏற்பட்டது.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் தண்ணிர் மற்றும் மழைநீர் வீடுகளுக்குள் வர தொடங்கி உள்ளது.தொடர் மழை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

Sunday, November 15, 2015

அஜித்தும், விநாயகர் சென்ட்டிமென்ட்டும்!



அஜித்தும், விநாயகர் சென்ட்டிமென்ட்டும்!




14 நவ,2015 - 17:51 IST
எழுத்தின் அளவு:

நடிகர் அஜித் வெற்றியின் ரகசியத்துக்கு காரணம், விநாயகர் என்பது, கோலிவுட்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயமாகும். 1996ல், வான்மதி படத்தில், பிள்ளையார் பட்டி ஹீரோ... பாடலும், 1999ல், அமர்க்களம் படத்தில், காலம் கலி காலம், ஆகி போச்சுடா... பாடலும் இடம் பெற்றன. இந்த வரிசையில், வேதாளம் படத்தில், வீர விநாயகா... பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த படங்கள் அனைத்தும், அஜித்தின் சினிமாத் துறைக்கு முக்கிய பங்களிப்பை அளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மங்காத்தா படத்தில் அஜித் பெயர் விநாயக். வீரம் படத்திலும் அவரது கேரக்டருக்கு விநாயகம் என்றே பெயர் வைத்திருந்தனர். தற்போது, வேதாளம் படத்தில், அஜித் கேரக்டரின் பெயர் கணேஷ். இப்படி, ஒட்டு மொத்தமாக, அஜித்தின் வெற்றிக்கான காரணம் விநாயகர் என்பதை கண்டு பிடித்துள்ளது கோலிவுட். இதை மற்ற நடிகர்களும் பின்பற்ற நேரம் பார்த்து வருகின்றனர்.

NEWS TODAY 26.01.2026