Monday, November 16, 2015

திருப்பதி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் பக்தர்கள் கடும் அவதி

பதிவு செய்த நாள்:
ஞாயிறு, நவம்பர் 15,2015, 8:59 PM IST

திருமலை,

திருமலையில் பலத்த மழை பெய்து வருவதால் திருப்பதி மலைப்பாதையில் பாறைகளும், மரங்களும் சரிந்து சாலையில் விழுகின்றன. திருப்பதி 2–வது மலைப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதால் அடிவாரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மோகாலிமிட்டா இடத்தில் திருமலையை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் சுமார் 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இணைப்புச்சாலை வழியாக திருமலைக்கு திருப்பி விடப்படுகின்றன. இதனால் குறித்த நேரத்தில் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

ஒரே மலைப்பாதையில் அனைத்து வாகனங்களும் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மலைப்பாதையை சீரமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மோகாலிமிட்டாவில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் நீண்டதூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...