Monday, November 30, 2015

அடுத்த ஆண்டு ஜனவரி 26–ந்தேதி முதல் கார், பஸ், மோட்டார் சைக்கிள்கள் எத்தனாலில் ஓடும் மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவிப்பு

பதிவு செய்த நாள்:
திங்கள் , நவம்பர் 30,2015, 2:51 AM IST

முசாபர்நகர்,


அடுத்த ஆண்டு ஜனவரி 26–ந்தேதி முதல் கார், பஸ், மோட்டார் சைக்கிள்கள் மாற்று எரிபொருளான எத்தனாலில் ஓடும் என மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார்.

எத்தனால்

உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகரில், மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பிரேசில் நாட்டைப்போல கார்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் என மோட்டார் வாகனங்கள் அனைத்தும், அடுத்த ஆண்டு ஜனவரி 26–ந்தேதி முதல் எத்தனாலில் ஓடும்.

ஹோண்டா, யமஹா மோட்டார் வாகன நிறுவனங்கள், இத்தகைய மோட்டார் சைக்கிள்களை தயாரித்து உள்ளன. எத்தனால் கொண்டு ஓடும் மோட்டார் சைக்கிள்கள் மூலம் வரும் லாபத்தினை கரும்பு விவசாயிகள் நேரடியாக அனுபவிப்பார்கள்.

எத்தனால் பம்புகள்

பெட்ரோல் பம்புகளைப் போன்று எத்தனால் பம்புகள் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26–ந்தேதி) செயல்பட தொடங்கும். இதற்கான உரிமங்கள் வழங்குவது தொடங்கி உள்ளது.

நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலையை மேம்படுத்துவதற்கு அரசு உறுதி கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரேசில், அமெரிக்காவுடன் இந்தியா

தற்போது நமது நாட்டில் மோட்டார் வாகனங்கள் பெரும்பாலும் பெட்ரோல், டீசலில்தான் ஓடுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இவற்றை இறக்குமதி செய்வதால் நாட்டுக்கும் பெருமளவு அன்னியச்செலாவணி இழப்பு ஏற்படுகிறது.

எத்தனால் கரும்புச்சாறைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், கரும்பு விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம் ஏற்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும். அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மாற்று எரிபொருளாக எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் நமது நாடும் சேரப்போகிறது.

No comments:

Post a Comment

The Vijay phenomenon enters research circles as hot topic

The Vijay phenomenon enters research circles as hot topic  Kamini.Mathai@timesofindia.com  10.06.2026  Chennai : “Good morning, Professor. C...