Tuesday, December 6, 2016

அரசு அலுவலகங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிப்பு

சென்னை,


உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு(திங்கள் கிழமை) 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு பின்னர் மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.


ஜெயலலிதா காலமான செய்தி வெளியானவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் இன்று அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக செய்தியகள் வெளியாகியுள்ளன.

Sunday, December 4, 2016

Medicos urged to serve the impoverished


Need for quality healthcare and environment-friendly practices highlighted at college event
Delivery of quality healthcare to the poorer and economically deprived sections of society was the need of the hour, said Jagdish Prasad, Director General of Health Services, Ministry of Health and Family Welfare, on Saturday.
Dr. Prasad was delivering the convocation address of the Tamil Nadu Dr. MGR Medical University.
“It is frequently observed that patients from the poorest segments of our society have to spend large sums of money while undergoing treatment in healthcare institutions in the private sector. In the process, they incur tremendous financial and property losses,” he said, urging students to not shy away from serving the impoverished sections of the population.
Dr. Prasad also highlighted the growing levels of environmental pollution and the necessity for inculcation of environment-friendly practices and interventions for a pollution-free environment.
He stressed the need for adherence to medical ethics, the judicious use of clinical resources and the necessity of talent to join research and development organisations in the country to further national healthcare goals.
“The erstwhile trend of migration to the west for wider opportunities has now decelerated significantly. More and more young medical graduates should be able to pursue quality goals in their career while staying back in India,” he said.
A total of 20,489 candidates were awarded degrees and diplomas under the faculties of medical, dental, AYUSH and allied health sciences. Of these, 73 per cent were women.
Vice-Chancellor S. Geethalakshmi spoke of the university’s achievements, including its focus on research and plans to set up an anti microbial lab by the department of experimental medicine. Speaking on the sidelines of the event, Dr. Prasad praised the State for its record in organ transplantation.
State Health Minister C. Vijaya Baskar and Health Secretary J. Radhakrishnan also participated.

Governor empowered to direct varsities: V-C

Governor-Chancellor Ch. Vidyasagar Rao’s circular on Thursday directing universities to go cashless has put the spotlight on the office’s powers in a university.
The Governor, as the Chancellor, presides over the university convocation and also appoints the Vice-Chancellor. But the official rarely participates in the senate or the syndicate meetings.
Since the Chancellor limits his association with the universities, it has given an impression that he is only a ceremonial head.
It is unusual for a Chancellor to offer suggestions or even direct a university on financial matters, says former Anna University V-C M. Anandakrishnan. However, in the appointment of a V-C the Governor has complete independence.
“There was a time when the Governors would not consult the Chief Minister. But in Karnataka there is a clear rule that the V-C appointment is in consultation with the CM,” he adds.
But M. Vanangamudi, the Vice-Chancellor of the Tamil Nadu Dr. Ambedkar Law University, said the Governor as Chancellor has absolute authority.
“The Governor chairs the Senate and the Syndicate meetings. In his absence the Vice-Chancellor officiates. As the visitor of the university he can inspect, order and command. The institution runs under his stewardship,” he said.
Going cashless
Irrespective of this debate, Mr. Vanangamudi said all transactions in the university were only through electronic transfer.
Students paid their fees through challans or sometimes through demand draft. The Registrar of the University of Madras, David P. Jawahar, said the university had only recently switched over from cash transactions.
“Normally in evaluation camps payment to teachers is in cash. From now on it will only be through ECS. We were also paying our temporary staff who earn less than Rs. 8,000, ” he said.

வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைகிறது: டாக்டர் ஜெகதீஷ் பிரசாத்

By DIN  |   Published on : 04th December 2016 02:41 AM  

tnmgr

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜெகதீஷ் பிரசாத் கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 28 -ஆவது பட்டமளிப்பு விழா, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர் ஜெகதீஷ் பிரசாத் பேசியது:
தரமான மருத்துவ சேவையை நிர்ணயம் செய்வதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நியாயமான செலவில் நவீன மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உலகில் பெரும்பாலான ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்களில் இந்தியர்களே பணியாற்றுகிறார்கள். மேலும் பல ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமைகளையும் பெற்றுள்ளனர். தற்போது இந்தியாவிலேயே உயர்தர ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால், வெளிநாடுகளுக்குச் சென்ற உயிரி மருத்துவ விஞ்ஞானிகள் இந்தியாவுக்கே திரும்பி வருகின்றனர். மேலும் மருத்துவம் படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் இளம் மருத்துவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது என்றார் அவர்.
விழாவில் மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகள் உள்ளிட்டப் பிரிவுகளில் 20,489 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது. அதில் 5,266 மாணவர்கள் நேரடியாக வந்து பட்டங்களைப் பெற்றனர்.
141 மாணவர்களுக்கு பதக்கங்கள்: படிப்பில் சிறந்து விளங்கிய 141 மாணவர்களுக்கு மொத்தம் 181 பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த கே.பாவனா எம்.பி.பி.எஸ்.படிப்பில் மொத்தம் 7 பதக்கங்களைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக, வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த கே.அதிதி முதுநிலை பொது மருத்துவப் படிப்பில் 5 பதக்கங்களையும், கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பி.மீனலோஷனி முதுநிலை பொது அறுவைச் சிகிச்சைப் படிப்பில் 5 பதக்கங்களையும் பெற்றார்.
2 நிபுணர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் முகமது ரேலா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
கௌரவ டாக்டர் பட்டம்: இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற டாக்டர் ஜெகதீஷ் பிரசாத், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் சந்திர பாரிஜா, முடநீக்கியல் நிபுணர் ஆர்.எச்.கோவர்தன் ஆகியோருக்கு கெüரவ டாக்டர் பட்டத்தை தமிழக ஆளுநர் (பொறுப்பு) சிஎச்.வித்யாசாகர் ராவ் வழங்கினார்.


டாக்டர் மோகன் காமேஸ்வரனுக்கு கௌரவம்

சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், இரண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வெவ்வேறு மருத்துவ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பெற்றுள்ளார்.
காது-மூக்கு-தொண்டை மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவதற்காக, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 28 -ஆவது பட்டமளிப்பு விழாவில் டாக்டர் மோகன் காமேஸ்வரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது சனிக்கிழமை (டிச.3) வழங்கப்பட்டது. இதேபோன்று வங்கதேசம் தலைநகர் டாக்காவில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு நாடுகளின் ("சார்க்') காது-மூக்கு-தொண்டை மருத்துவர்கள் மாநாட்டில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 28 -ஆவது பட்டமளிப்பு விழாவில் டாக்டர் மோகன் காமேஸ்வரனுக்கு (வலமிருந்து 2-ஆவது) வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குகிறார் மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜெகதீஷ் பிரசாத். உடன் (இடமிருந்து) சுகாதாரத் துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் சுபாஷ் சந்திர பாரிஜா.

இதெல்லாம் தேவையா?

By வாதூலன்  |   Published on : 03rd December 2016 02:35 AM 

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை சாஸ்தா கோயில் "அய்யப்பன் கோயில்' என பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் சில இடங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய அனுமதியைப் பெறாமல் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு எடுத்தது ஏன் என்று கேரள அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
சபரிமலை உள்ளபடிக்கே இந்து மதத்துக்கு ஒரு பொதுவான அடையாளம் என்று கூறலாம். தமிழ்நாட்டிலிருந்து பல பக்தர்கள் விரதம் இருந்து, உள்ளூர் கோயிலுக்குச் சென்று மாலை போட்டு அங்கு செல்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அனைவருமே "மலைக்கு போகிறேன்' என்று மட்டுமே கூறுவது வழக்கம். "மலை' என்றாலே சபரிமலை என்று குறிப்பிடுமளவுக்கு, அந்த இடம் புகழ் பெற்றது.
ஐயப்பனைப் பற்றி காஞ்சி முனிவர் இவ்விதம் சொல்கிறார்: "மோகினியாக வந்த நாராயணனின் காருண்ய லாவண்யமும், பரமேசுவரனின் சாந்த ஞானமும் ஒன்று சேர்ந்தவுடன் ஒரு பெரும் ஜோதி பிறந்தது. இந்தத் தேஜúஸ ஐயப்பனாக உருக் கொண்டது. ஹரிஹர புத்திரா என்றும், சாஸ்தா என்றும், ஐயனார் என்றும் சொல்வது இந்த ஐயப்பனைத்தான்...'
கேரள மக்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். இந்தப் பெயர் மாற்றத்தால் எந்தச் சின்னக் கலவரமும் அங்கு வெடிக்காததே இதற்குச் சான்று.
மாறாக, தமிழ்நாட்டில் எந்தப் பெயர் மாற்றமும் சர்ச்சையையும், போராட்டத்தையும் கிளப்பாமல் இருந்ததில்லை. அரசியல் தலைவர்களாகட்டும், சாதித் தலைவர்களாகட்டும்
எந்தப் பெயர் சூட்டினாலும், குறைந்தபட்சம் எதிர்ப்பு தெரிவித்து ஒரு ஊர்வலமாகவது நடைபெறும்.
தமிழ்நாடு என்ற பெயரையே எடுத்துக் கொள்வோமே. இந்தப் பெயர் மாற்றத்துக்காக, சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். விசித்திரம் என்னவென்றால், மாறி மாறி வருகிற ஆட்சிகளில், தமிழ்நாடு என்ற பெயர் தற்போது சென்னை என்று உருமாறி விட்டது.
சாலைகளும் அவ்வப்போது பெயர் மாற்றத்துக்கு உட்படுகின்றன. ஆனாலும் பொதுமக்கள் மனத்தில், பழைய புழக்கத்தில் இருந்த பெயர்களே, பதிந்து இருக்கின்றன.
ஒரு வருடம் முன்பு கிரிக்கெட், ஹாக்கி போன்ற பல ஆட்டங்களுக்கு ஊக்கம் தந்து புரவலராகவும் விளங்கிய ராமச்சந்திர ஆதித்தன் பெயரை அடையாறில் ஒரு தெருவுக்குச் சூட்டினார் முதல்வர். என்றாலும், காந்தி நகர் மெயின் ரோடு என்ற பெயரே பரவலாக புழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்தப் பெயர் மாற்ற தன்மை சில ஆண்டுகளாகப் பிற மாநிலங்களுக்கும் தொற்றிக் கொண்டு விட்டது. ஒடிஸô, பெங்களூரு, மைசூரு, கொல்கத்தா போன்ற பல பெயர்கள்.
ஒரு வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் கேட்பு வரைவோலை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்கையில், "பெங்களூரு' என ஆங்கிலத்தில் குறிப்பிட மிகவும் சிரமப்பட்டார். ஓர் ஊழியர் புன்னகையுடன், "பெங்களூர் என்றே எழுதுங்கள்' என்றார். அதே சமயம், இந்தப் புதிதான பெயர்கள் அரசாங்க கெஸட்டில் பதிவாகியுள்ளன என்பது வெளிப்படை.
சிலைகள் விஷயமும், பெயர்கள் போலத்தான், அதுவும் தமிழ்நாட்டில் சிலை இல்லாத இடமே இல்லை எனலாம். சிலையின் உருவ அமைப்பு சிலையின் கீழே பொறிக்கப்பட்ட வாசகங்கள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.
சென்னை கடற்கரைப் பகுதியில் உள்ள கண்ணகி சிலை போன்றவை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டபோது, பெரிய போராட்டம் நிகழ்ந்தது; உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு சொன்ன பின்னர்தான் ஆர்ப்பாட்டம் அடங்கியது.
அண்மையில் குஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேல் சிலையை நிறுவ பா.ஜ.க. முனைந்தபோது, எதிர்ப்பு எழுந்தது. காந்தி, நேரு போன்று வல்லபபாய் படேலை பெரும்பான்மையான மக்களால் தேசத் தலைவராகக் கருத முடியாத மனப்பான்மை முக்கிய காரணம்.
"பொதுவாக, சிலைகளுக்காகவும் நினைவிடங்களுக்காகவும் அரசு பணம் செலவாவதை விரும்பவில்லை என்று ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற வேறு ஓர் எழுத்தாளரோ ஒரு படி மேலே போய், "நினைவிடங்களுக்குப் பதில் தூய்மையான கழிப்பிடங்கள் கட்டலாம் என்று எள்ளலாகக் கருத்து தெரிவித்து இருந்தார்.
ஆனால் அண்மைச் செய்தி ஒன்று, நம்மைத் தூக்கி வாரிப் போடுகிறது. மகராஷ்டிர பாஜக அரசு 3,600 கோடி ரூபாய் செலவில் சத்ரபதி சிவாஜி சிலையை உருவாக்கி வருகிறதாம். சிவசேனாவைத் திருப்திப்படுத்தும் செயல்தான் இது.
இதுகுறித்து யாரும் எதுவும் கேட்க இயலாது. "மராத்தியர்கள்' "சிவாஜி' போன்ற சொற்களே அங்கு உணர்ச்சியைத் தூண்டி விடக் கூடியவை. ஏற்கெனவே காஷ்மீர விவகாரத்திலும், கருப்புப் பண விவகாரத்திலும் மைய அரசுடன் சிவசேனா கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறைக்கு ஞாபகமூட்ட சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்கள், மற்றும் பிரமுகர்களுக்குச் சிலை வைப்பது அவசியம்தான்! ஆனால் அது மட்டும் போதாது. அவர்களிடம் உள்ள பல நல்லியல்புகளை இன்றைய இளைஞர்கள் கற்றுப் பின்பற்ற வேண்டும்.
பெயர் வைப்பதில் பெரிதாகச் செலவில்லை. அரசாங்கச் செலவில் ஒரு கூட்டம் போதும். ஆனால் சிலை?
இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில், உற்பத்தி சாராத ஒரு செயலுக்கு பெருமளவு பணம் விரயமாவது நல்ல அறிகுறிதானா?



ஜன்தன் கருப்புப் பணம் ஏழைகளுக்கே!

By DIN  |   Published on : 04th December 2016 04:49 AM  |

modi

பெருமதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட கருப்புப் பணம் ஏழைகளுக்கு செல்வதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, "மாற்றத்திற்கான யாத்திரை' என்ற பெயரில் பாஜகவினர் கடந்த சில மாதங்களாக அந்த மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மொராதாபாத் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியான பிறகு, ஏழைகளுக்காக வங்கிகளில் தொடங்கப்பட்ட ஜன்தன் கணக்குகளில் சிலர் அதிக அளவிலான பணத்தைச் செலுத்தி உள்ளனர்.
அவ்வாறு செலுத்தப்பட்ட பணத்தை ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு திருப்பி அளிக்கக் கூடாது. அவ்வாறு நீங்கள் உறுதியுடன் இருந்தால்தான், உங்கள் கணக்குகளில் சட்டவிரோதமாக பணம் செலுத்தியவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அத்துடன், அந்தப் பணம் முழுவதும் ஏழைகளுக்குச் செல்வது உறுதிப்படுத்தப்படும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.
வறுமையிலிருந்து விடுபட வேண்டும்: தேசத்தில் வறுமை ஒழிக்கப்பட வேண்டுமானால், உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் போன்ற மிகப் பெரிய மாநிலங்களில் முதலில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மிகப் பெரிய மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்போது வறுமை நிலையில் சிக்கித் தவிக்கும் மக்களின் எண்ணிக்கை குறையும்.
கிராமங்களில் வசிப்பவர்கள் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், இன்னமும் பல கிராமங்களில் மின்சார வசதி கிடைக்காமல் உள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மூலம் மீட்கப்படும் கருப்புப் பணம், ஏழைகளின் நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
ரூபாய் நோட்டு விவகாரம் காரணமாக பயிர் விதைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆனால், இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும் பயிர் விதைப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்ட விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

"டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு இந்தியா தயார்'

ஊழலுக்கு வழிவகுக்கும் ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைப்பதற்காக நாட்டு மக்கள் அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைக்கு மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஏடிஎம் மையங்களில் நீங்கள் (மக்கள்) பணம் எடுக்கத் தேவையில்லை. இன்றைய காலத்தில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் வங்கிக் கணக்கை இயக்கி, நாம் வாங்கும் பொருள்களுக்கும், இதர சேவைகளைப் பெறவும் பணம் செலுத்த முடியும்.
நாட்டில் 40 கோடி பேர் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் டிஜிட்டல் வழியில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
கல்வி அறிவு இல்லாதவர்கள் எவ்வாறு செல்லிடப்பேசியில் தங்களது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி பணத்தை செலவு செய்ய முடியும் என்று சிலர் வாதம் செய்ய வாய்ப்பிருக்கிறது.
இந்தியர்கள் எப்போதும் மாற்றத்துக்குத் தயாராக இருப்பார்கள் என்று அவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.


பிச்சைக்காரரிடம் ஸ்வைப் மெஷின்

கட்சிசெவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) ஒரு விடியோ பரவி வருகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அந்த விடியோவில், "பண உதவி செய்ய விரும்புவதாகவும், அதேநேரம் தன்னிடம் சில்லறை இல்லை' என்றும் பிச்சைக்காரரிடம் ஒருவர் கூறுகிறார். அதற்கு "சில்லறை இல்லையென்பதால் கவலைப்படத் தேவையில்லை; நீங்கள் விரும்பினால் என்னிடம் உள்ள பணம் செலுத்தும் இயந்திரம் (ஸ்வைப் மெஷின்) மூலம் எனக்கு விரும்பும் தொகையை பற்று அட்டையைப் பயன்படுத்திக் கொடுக்கலாம்' என்று அந்த பிச்சைக்காரர் கூறுகிறார்.



வரிசையில் நிற்பது இதுவே கடைசி

புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதுடன் மக்கள் வரிசையில் நிற்கும் முறை முடிவுக்கு வந்துவிடும் என்று உறுதி அளிக்கிறேன்.
ஏனென்றால், கடந்த 70 ஆண்டுகளாக அத்தியாவசியத் தேவைகளுக்காக நீங்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தீர்கள்.
சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை என அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக நீங்கள் (காங்கிரஸ்) மக்களை வரிசையில் நிற்க வைத்தீர்கள்.
அதுபோன்று மக்கள் இனி வரிசையில் நிற்கத் தேவையில்லை. புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வரிசையில் நிற்பதே கடைசியாக நீங்கள் அத்தியாவசியத் தேவைக்காக வரிசையில் காத்திருந்ததாக இருக்கும்.
நேர்மையான முறையில் பணம் சம்பாதித்தவர்கள் மட்டுமே வரிசையில் நிற்கிறார்கள். சட்டவிரோதமாக பணம் வைத்திருந்தவர்கள் ஏழைகளின் வீட்டுக்கு முன்பு வரிசையில் காத்திருக்கின்றனர்.
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அறிவித்ததற்காக எதிர்க்கட்சியினர் என்னை குற்றவாளியாக சித்திரிக்கின்றனர்.
எது நடந்தாலும் ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும் எதிரான நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன்.
ஒரு விஷயத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணத்தைத் தெரிந்துகொண்டால், எந்தவொரு புதிய மாற்றத்தையும் ஏற்க இந்தியர்கள் நீண்டகாலம் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

Friday, December 2, 2016

குழந்தைகள் உலகம்

By இ. ரகுகுமார்  |   Published on : 02nd December 2016 02:26 AM

குதூகலம் நிறைந்தது குழந்தைப் பருவம். துள்ளலும் மகிழ்ச்சியும் ததும்பி சிறகடித்துப் பறக்கும் வாழ்வு. கவலைகள், ஏற்றத்தாழ்வுகள் அறியாத பரிசுத்த மனம். இதுபோன்ற குழந்தைகளுக்கான உலகத்தில்தான் இன்றைய குழந்தைகள் வளர்கிறார்களா?
பெற்றோர்- கல்விக்கூடம்- சமூகம் ஆகிய தளங்களில் வலம் வரும் குழந்தைகள் இன்றைக்கு எப்படி வடிவமைக்கப்படுகிறார்கள்? குழந்தைகளின் அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படுகின்றனவா?
குழந்தைகளின் உணர்வுகள், உரிமைகள் இன்றைக்கு எந்த அளவுக்கு மதிக்கப்படுகின்றன? இந்தக் கேள்விகளுக்கான தேடலில் புகுந்தால் அதிர்ச்சியும் கவலையுமே அதிகரிக்கின்றன.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியும் சுகாதாரமும் அளிப்பதாக நமது அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், நடைமுறையில் இவை இரண்டும் குழந்தைகள் விலை கொடுத்து வாங்கும் பொருட்களாகவே உள்ளன.
பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 65 நாடுகளில் கல்வி இலவசமாகக் கிடைக்கிறது. கல்வி-சுகாதாரத்துக்கு அங்கு பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால், சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளைக் கடந்த பின்னரே இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறி.
சுகாதாரத்தைக் கணக்கில் கொண்டால், நோய்களின் தாக்குதலால் உயிரிழக்கிற ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுவதை விட இந்தியாவில் அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
இவற்றைவிட, குழந்தைகள் அடையாளமற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர் என்பதுதான் இன்றைக்குள்ள பெரும் ஆபத்து. தாய்மொழி வழிக்கல்வி அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது.
புதிய நுகர்பொருள்களை வாங்கும் பயனாளிகளை உருவாக்குவதுதான் உலகமயத்தின் நோக்கம். இந்தச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கியே நமது குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்.
நியாயத்துக்காக, தர்மத்துக்காக உறவுகளைப் பேணிய நிலை மாறிவிட்டது. லாபத்துக்காக உறவுகளைப் பேணுபவர்களாக குழந்தைகள் மாற்றப்படுகின்றனர். இப்படியான வணிக கலாசாரத்தை நோக்கி குழந்தைகள் உருவாக்கப்படுவது மாபெரும் ஆபத்து.
வருங்கால வருமானத்துக்கான முதலீடாக பெற்றோரால் குழந்தைகள் கருதப்படுகிறார்கள். பாசமும் நேசமும் கலந்த குழந்தை வளர்ப்பு இன்றில்லை. அதிக ஊதியம் தரக்கூடிய துறைகளில் வேலைவாய்ப்பையும், வெளிநாட்டுப் பணிகளையும் இலக்காகக் கொண்டதாக குழந்தை வளர்ப்பு மாறிவிட்டது.
இதற்காக, காலையில் டியூஷன், மாலையிலும் டியூஷன் என, குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அவர்களை இயந்திரமாக்கி, அவர்கள் மீது மறைமுக வன்முறை அன்றாடம் நிகழ்த்தப்படுகிறது.
குழந்தைகளுக்கு குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்களைச் சொல்லிக் கொடுப்பது, வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவது என இயல்பாக இருந்த விஷயங்கள் தற்போது நாகரிகம் என்ற பெயரில் மறைந்து வருகின்றன.
கல்வியும் விளையாட்டும் கற்றுக் கொள்வதற்கே என்பதைத் தாண்டி, எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற வெறி ஊட்டப்படுகிறது. அதிலும், இரண்டாமிடம், மூன்றாமிடத்தைக்கூட ஏற்க முடியாத மனப்பக்குவம் பல பெற்றோரிடம் இருக்கிறது. அதுவே குழந்தைகளிடமும் புகுத்தப்படுகிறது.
கடந்த காலத்தில் நொண்டி, கண்ணாமூச்சி, பன்னாங்கல், தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளில் கூடிக் களித்த குழந்தைகளிடம் தற்போது தனித்து அடையாளப்படுத்தும் விளையாட்டுகள் திணிக்கப்படுகின்றன.
வாழ்வை நெறிப்படுத்தும் கதைகள் குறைந்துவிட்டன. அதைச் சொல்லக் கூடிய முதியோரைக் கொண்ட வீடுகள் அருகிவிட்டன. மொத்தத்தில் யதார்த்தம் இல்லாத உலகை நோக்கி குழந்தைகள் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.
தற்போதைய ஆசிரியர்களின் பணி, குழந்தைகளை மதிப்பெண் ஈட்டும் இயந்திரமாக மாற்றுவதாக உள்ளது. இந்தக் கல்வி முறையில் கற்றல் - கற்பித்தல் நடைபெறுவதற்குப் பதிலாக, பயிற்றுவித்தல் மட்டுமே நடைபெறுகிறது.
ஒருகாலத்தில் கோத்தாரி கல்வி முறை மூலமாகவும், நடுநிலை வகித்த நாளேடுகள் வழியாகவும், சமூகத்தை நேசித்த எழுத்தாளர்கள் வழியாகவும், திறம்படச் சிந்தித்த அறிஞர்கள் வழியாகவும் தலைசிறந்த சமூகப் பிரஜைகளாக குழந்தைகள் வளர்ந்தனர்.
இன்றைக்கோ, சமூகத் தாக்கத்தின் விளைவாக, மனிதநேயம், சமூக அக்கறை போன்ற பண்புகளை இழந்து, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் செல்லவும் தயங்காதவர்களாக குழந்தைகள் மாற்றப்படுவதால், குற்றங்களும் சமூகவிரோதச் செயல்களும் அதிகரித்திருக்கின்றன.
உண்மையிலேயே குழந்தைகளின் நியாயமான அபிலாஷைகளை நாம் நிறைவேற்றி இருக்கிறோமா? குழந்தைகளின் உண்மையான அபிலாஷையை நிறைவேற்றுதல் என்பது, விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குவதும், நண்பர்களைத் தேர்தெடுக்கும் உரிமை அளிப்பதும், விரும்புவதைப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதும்தான்.
ஆனால், இந்த மூன்றையும் நோக்கி குழந்தைகளைப் போக விடாமல் நமது சுயநலம் தடுக்கிறது.
இதற்கான தீர்வுகளில் முதன்மையானது கல்வி முறையில் மாற்றம். மாலை நேரங்களில் தங்களுக்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளை அனுமதிப்பது அவசியம். அவர்களோடு அமர்ந்து கதைகள் கூறுதல், விளையாட்டு என நமது பாரம்பரிய குடும்பக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பதும் முக்கியம்.
சக மனிதர்களை நேசிக்கும் பண்பைக் கற்றுக் கொடுப்பது, எல்லாக் குழந்தைகளுடனும் இணைந்து விளையாட அனுமதிப்பது, அவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர வாய்ப்பளிப்பது ஆகியவை இன்றியமையாதவை.
இவை அனைத்துக்கும் மேலாக குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த நூலகம் அழைத்துச் செல்வது பழக்கமாக வேண்டும்.

NEWS TODAY 31.01.2026