Tuesday, August 22, 2017


Power supply will be suspended in the following areas on 23.08.2017 from 09.00 am to 04.00 pm for maintenance work. 

Supply will be resumed before 04.00 P.M if the works are completed. AGARAM & PERAMBUR EAST AREA : 

Kanthan pillai st, Rajavel st, Chettiyar flat M.H. road, Natal garden, Muniyappan nayakkar st, Thulasingam st, Scholl road, Rajabhathar st, Subramanium main st, Bharathi st, Anandhan st, Madurai Swamy 1 to 3st and East st, Jaibeem nagar, State Bank colony, Lakshmi nagar 1 to 3 st, Vasanth appt, Kenndy square Anbalazan nagar, Prakasam st, TVK nagar one part, Balram st, Thillaiyadi Valliammai st, Janakiram nagar, Mallipoo nagar, Mohammed st, Gurusamy st, TNP 1-5 st, Teeds Garden 1-7st, Watkin st, Andiyappan st, Sabapathy st, Sundhara vinayagam 1st st, Ragavasari st, Munniyappa chetti st, Neelam thottam 1st st & 2nd st, Thiruvallur st, P.M. road, Ballard st, China samy raja st, Jaganathan st, ESI hospital, Amirthammal colony, Mariyanagam 1, 2nd st, Malligapuram st, Mallipoo nagar, Somarama samy st 1,2nd , Thulukkathamman koil, Alakka reddy flat, Ganga foundations, Police qts., Sundhara vinayagar koil st, Perambur park st, Bundher garden main 1-3 st, Ragavan st, Market st, Perambur High road one part, Venugopal samy st, Sadayappa doss st, Siruvalur main road, foxen st, Murugesan st, Rangasayee st, Vanchinathan 1 to 5 st, Manikka vinayagar koil st, Best road, M.H. road, Sabapathy st, Chengal varyan st, Moorthy raja st, Thiru vengadam st, Munusamy st, 70 feet road, Periyar nagar, Javagar nagar, Cicular road 1 to 5 th st, Kanagar st, Baburaja st, Somaiah raja st, Palavayal Loco works road , 1st, 2nd st, Loco Scheem road, GKM colony 1 to 2 st, Narayan st.
தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு

பதிவு செய்த நாள்
ஆக 22,2017 02:25



சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில், நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக இருந்த தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு மற்றும் வட மேற்கு மாநிலங்களுக்கு நகர்ந்து உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் மழை குறைந்துள்ளது.

இந்நிலையில், 'வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியால், நாளை(ஆக.,23) முதல், மூன்று நாட்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, கோவை, சின்னக்கல்லாரில், 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வால்பாறை, நீலகிரி, 4; தர்மபுரி, மதுக்கூர், பேச்சிப்பாறை, செங்குன்றம், 3; ஏற்காடு, ஒகேனக்கல், தென்காசி, செங்கோட்டை, தம்மம்பட்டி, தொழுதுார், ராசிபுரம், சேத்தியாத்தோப்பு, தாமரைப்பாக்கம், கடலுாரில், 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

துணை முதல்வராக ஓ.பி.எஸ்.,பதவியேற்பு; பிரதமர் மோடி வாழ்த்து

பதிவு செய்த நாள்
ஆக 21,2017 17:03




துணை முதல்வராக ஓ.பி.எஸ். பதவியேற்றார்

சென்னை: அதிமுக இரு அணிகள் இணைந்ததை அடுத்து துணை முதல்வராக ஓ.பி.எஸ்., இன்று(ஆக.,21) பதவியேற்றார்.

கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் அவருக்கு கவர்னர் வித்யா சாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் கா.பாண்டியராஜன் அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்., நிதி மற்றும் வீட்டு வசதி துறையை கவனிப்பார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும்அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி வாழ்த்து ;

ஓ.பி.எஸ். துணை முதல்வராக பதவியேற்றதற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது : புதிதாக தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்துக்கள் ! தமிழகம் இன்னும் புதிய உயர்வை தொடும் என நம்புகிறேன்.
இது இணைப்பே இல்லை,வணிக ரீதியான உடன்படிக்கை: தினகரன் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள்21ஆக
2017
23:37




சென்னை: இன்று நடந்தது இணைப்பே இல்லை எனவும், இது வணிக ரீதியான உடன்படிக்கை என தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்து பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவியேற்ற நிலையில் இது குறித்து தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் :‛‛ இன்று நடந்தது இணைப்பே அல்ல. சில நபர்களின் சுயலாபத்திற்காகவும் பதவி ஆசைக்காகவும் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரீதியான உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம். 

1989ல் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, அம்மா அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள். இன்றோ, இவர்களாலேயே ஏற்று கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம் .
அம்மா அவர்களின் மறைவுக்கு பின் திரு பன்னீர்செல்வத்தையும் பின் திரு பழனிச்சாமியையும் முதல்வராக்கிய பொதுச்செயலாளருக்கு துரோகம் செய்த நபர்களை கழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள் இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோர்க்கும் அளவிற்கு சிலரது பதவி வெறி கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்று கொள்வார்கள்?.

இந்த துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்?, நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ? இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும். துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!!'' என கூறியுள்ளார்.

இன்ஜி., மாணவர் சேர்க்கை : அண்ணா பல்கலை கெடு
பதிவு செய்த நாள்
ஆக 22,2017 02:23



தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், வரும், 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும், அனைத்து இன்ஜி., கல்லுாரிகளிலும், ஜூலை, 31க்குள், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கையை முடித்திருக்க வேண்டும். ஆக., 1ல், அனைத்து கல்லுாரிகளிலும் வகுப்புகள் துவங்கப்பட்டிருக்க வேண்டும். 'நீட்' நுழைவுத்தேர்வு பிரச்னையால், தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை தள்ளிப் போனதால், இன்ஜி., மாணவர் சேர்க்கை, தாமதமாக துவங்கியது.

ஆக., 18ல் கவுன்சிலிங் முடிந்துள்ளது. தொடர்ந்து, அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கி உள்ளன. 'தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை, வரும், 31ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும்' என, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது. செப்., 1ல், வகுப்புகள் துவங்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
இன்று, 'நீட்' விசாரணை: மாணவர்கள், 'திக்... திக்...'

பதிவு செய்த நாள்22ஆக
2017
05:33




மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் முடிவை அறிய, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தமிழகத்தில், 'நீட்' தேர்வு குழப்பத்தால், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை தடைபட்டு உள்ளது. 'நீட்' தேர்வில் இருந்து, இந்தாண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும், தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு, மத்திய அமைச்சகங்கள் அனுமதி அளித்து விட்டன.

ஆனாலும், 'நீட்' தேர்வை ஆதரிக்கும் மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த இடைக்கால தடை விதித்து உள்ளது. இதனால், ஜனாதிபதி ஒப்புதல் கிடைப்பது சிக்கலாகி உள்ளது.

இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வருவது மாணவர்கள், பெற்றோரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது போல, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், 'நீட்' தகுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு, 2,653 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தி கொள்ள, எம்.சி.ஐ., என்ற, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இருப்பினும், எம்.சி.ஐ., கள ஆய்வு செய்து பரிந்துரைத்தால், தேவையான கட்டமைப்பு மற்றும் பேராசிரியர் வசதிகள் மேம்படுத்தப்பட்டு விடும் என்பதை, தமிழக அரசு தங்களது வாதத்தில் முன் வைக்கும். நல்ல முடிவு கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Monday, August 21, 2017

Live accident in mohanur

நாமக்கல் அருகே கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ காட்சி

By DIN  |   Published on : 20th August 2017 10:45 PM  |   அ+அ அ-   |  
namakkal-acci


நாமக்கல்: நாமக்கல் அருகே மோகனூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவரை வேகமாக வந்த கார் மோதி அந்தரத்தில் தூக்கி வீசும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவானது. அந்த வீடியோ காட்சி நெஞ்சை பதற வைக்கிறது.
நாமக்கலைச் சேர்ந்த பிரியா என்ற பெண் மோகனூர் - வேலூர் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடப்பதறகாக சீரான வேகத்தில் திரும்ப முயன்றார். அப்போது, வேகமாக வந்த கார் பிரியாவின் மீது இரு சக்கர வாகனத்தில் மோதியது.
கார் மோதிய வேகத்தில் பிரியா பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். இதில், அதிர்ஷ்டவசமாக பிரியா உயிர்பிழைத்துள்ளார் என்பதுதான் ஆச்சரியம். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் அந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...