Monday, September 11, 2017

Paramedical courses at SRU

Sri Ramachandra University is starting four new undergraduate paramedical courses, a press release said.
The courses are in bio-informatics, health informatics, data sciences and environmental health sciences. The prospectus and application form can be downloaded fromwww.sriramachandra.edu.inThe last date for applications is September 20 and the interview for selection is on September 23.
CMC begins MBBS classes with one student

TNN | Updated: Sep 10, 2017, 23:44 IST

Vellore: It is Siddhant Nair's dream to pursue medicine at the prestigious Christian Medical College in Vellore. But, there's a catch. Siddhant is the lone first year student in the MBBS programme in the college where regular classes are to begin on Monday.

Being the only student in the UG course, Siddhant, son of a martyr, said the seniors and the faculty members were warm and friendly to him, but he was keenly looking forward to his classmates joining him soon. Siddhant's father Rajesh was attached to BN 4 Rashtriya Rifles Regiment. He was killed in a militant attack on November 15 in 2001 at Doda in Kashmir.

The CMC normally admits 100 students for MBBS course, 192 students for postgraduate (PG) and 62 super specialty courses in an academic year. But, the institution admitted only one candidate in UG this academic year under the defence ministry quota as it suspended admission for the remaining seats, citing common counselling.

The institution had filed a writ petition in the Supreme Court against common counselling under NEET, pleading for exemption, saying it curtailed its right to select suitable candidates for upholding its motto. The case would come for hearing in October.

Meanwhile, Siddhant underwent a week long orientation course on ethics, background of the health need of the people of the country, mission and vision of the institution and activities such as gardening and staying with doctors for a day or two in hospital.

Regular classes, including lectures on anatomy, physiology and biochemistry and practical, would start from 8 am and go until 5 pm on Monday. "The student (Siddhant) has joined the senior batch to take part in extra-curricular activities. He will also be taken care of by the staff in the hostel," Principal of the institution Dr Anna Pulimood told TOI.

LATEST COMMENTGood, Let CMC admit One Student Each year nd conduct the course for 5.5 yeas for the student. But what about 99 students who were alloted seats
through common counselling. Are they not going t... Read MoreGopalarathnam Krishna Prasad

Siddhant's mother Supriya Nair said her son was thrilled to pursue his dream in CMC. "We went through the history of the institution for three months and he decided to join it," said Supriya hoping that her son would soon get classmates.
சமூக வலைதளங்கள் கண்காணிப்பு: கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கை
By DIN | Published on : 11th September 2017 03:59 AM |




தனிநபர்களின் வருமான விவரங்கள் குறித்து முழுமையாக அறிவதற்காக அவர்களது சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணிக்கும் பணிகளை வருமான வரித் துறை மேற்கொள்ள உள்ளது.

இதையடுத்து புதிதாக வாங்கிய சொகுசு கார்கள், ஆடம்பரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள், இனி வருமான வரித்தாக்கலின்போது அவற்றை மூடி மறைத்து தப்பிக்க முடியாது.
வரி ஏய்ப்பையும், கருப்புப் பணப் பதுக்கலையும் தடுக்கவே இத்தகைய தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மத்திய அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் முதல் அது நடைமுறைக்கு வரலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
வருமானத்தை மறைத்து தவறான விவரங்களைத் தெரிவிப்பவர்களுக்கு இந்நடவடிக்கை ஒரு கடிவாளமாக அமையும் என்று கூறப்படுகிறது.
கருப்புப் பணப் பதுக்கலைத் தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது அவற்றில் பிரதானமானது. இந்த அதிரடி அறிவிப்பானது உலக நாடுகள் அனைத்தையும் இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதன் தொடர்ச்சியாக, சந்தேகத்துக்குரிய பலரது வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. அதில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வரி ஏய்ப்பு விவகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதுமட்டுமன்றி வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கருப்புப் பணத்தை மீட்டெடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டது.
உள்நாட்டிலும் சரி; வெளிநாடுகளிலும் சரி, கருப்புப் பணப் பதுக்கலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வரும் மத்திய அரசு, அதன் ஒருபகுதியாக "பிராஜெக்ட் இன்சைட்' (வருமான விவரங்கள் தொடர்பான ஆழ்ந்த கண்காணிப்பு நடவடிக்கைகள்) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமாகியுள்ளது.

அதன்படி, தனிநபர்களின் வருமான விவரங்களானது தகவல் - தொழில்நுட்பத்தின் உதவியுடன் சேகரிக்கப்பட உள்ளது. பின்னர், வருமான வரித் தாக்கலின்போது தனிநபர்கள் தெரிவிக்கும் தகவல்களும், சேகரிக்கப்பட்ட விவரங்களும் ஒப்பீடு செய்யப்படும்.
அதில் முரண்பாடுகள் இருக்கும்பட்சத்தில் அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரவும், நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவன நிருபரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

வருமான வரித் தாக்கலின்போது, பெரும்பாலானோர் தங்களது வருவாய் தொடர்பான உண்மையான விவரங்களை அளிப்பதில்லை. அதேவேளையில், முகநூல், சுட்டுரை (டுவிட்டர்), இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் புதிதாக வாங்கிய விலை உயர்ந்த பொருள்களை புகைப்படம் எடுத்து பதிவிடுகின்றனர்.

அந்தத் தகவல்களைக் கண்காணித்து அதுதொடர்பான விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி எழுப்பும் நோக்கிலேயே "பிராஜெக்ட் இன்சைட்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக "எல் அண்டு டி இன்ஃபோடெக்' நிறுவனத்துடன் வருமான வரித் துறை கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி,சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணித்து அதுதொடர்பான தகவல்களைத் திரட்டும் பணிகளை "எல் அண்டு டி நிறுவனம்' ஒருங்கிணைந்து மேற்கொள்ளும்.

அதிக மதிப்புடைய பணப் பரிவர்த்தனைகளை இதன் மூலம் கண்காணிக்க இயலும். இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்துக்குள் சமூக வலைதளக் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்றார் அவர்.
பள்ளி மாணவியர் போராட்டம்:காற்றில் பறந்த கோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்11செப்
2017
02:16

திருப்பூர் ;சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் "நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டம் நடந்தது. இதுகுறித்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கல்வித்துறை அதிகாரிகள், மவுனமாகி விட்டனர்.திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் "நீட்' தேர்வுக்கு எதிராக, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி சீருடையில், வளாகத்தில் மாணவியர் போராட்டம் நடத்தினர்.
ஏழாயிரம் மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில், பள்ளி நுழைவாயிலில், வாட்ச்மேன் இருந்தும், அத்துமீறி இந்திய மாணவர் சங்கத்தினர் நுழைந்தது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. வகுப்பறைகளில் ஆசிரியர் இருந்தும், மாணவியரை வெளியே அழைத்து வந்துள்ளனர்.மாநகராட்சி பள்ளி வளாகத்துக்குள், சுப்ரீம் கோர்ட் உத்தரவு மீறி ஒரு மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தியதும், அதற்கு பள்ளி மாணவியரை பகடை காய்களாக பயன்படுத்தியதை அறிந்தும், இன்னும் கல்வித்துறை அதிகாரிகளோ, பள்ளி நிர்வாகமோ அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காமல், மவுனம் சாதிக்கிறது.

நான்கு பிரிவில் வழக்கு

பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதியிடம் கேட்ட போது, "பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். வாட்ச்மேன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும்; போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது,' என்றார்.தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த விமல் என்பவர் மீது மிரட்டல், அத்துமீறி பள்ளிக்குள் நுழைதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹேண்ட் பேக்' சோதனை கோவை ஏர்போர்ட்டில் ரத்து
பதிவு செய்த நாள்11செப்
2017
00:04

கோவை உள்ளிட்ட மேலும், நான்கு விமான நிலையங்களில், பயணியரின், 'ஹேண்ட் பேக்'குகளை சோதனையிடும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியரின் பொருட்கள், விமான நிலையங்களில் சோதனையிடப்படும். பயணியர், கையில் எடுத்துச் செல்லும், 'ஹேண்ட் பேக்' உள்ளிட்டவற்றை, போலீசார் சோதனையிடுவர். பின், பயணியர் விபரங்களுடன் கூடிய, 'டேக்'குகளை கட்டி, முத்திரையிடுவர்.இதனால் சிரமம் ஏற்படுவதாக, பயணியர் புகார் தெரிவித்தனர். பாதுகாப்பு சோதனைக்கு, 'ஸ்கேனர்' மற்றும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, 'ஹேண்ட் பேக்' சோதனையிடும் நடைமுறையை, உள்நாட்டு பயணியருக்கு தளர்த்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்தது.முதற்கட்டமாக, ஏப்ரலில், டில்லி, மும்பை, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத்திலும், இரண்டாம் கட்டமாக, ஜூனில், ஜெய்ப்பூர், கவுகாத்தி, லக்னோ, திருவனந்தபுரம், பாட்னா மற்றும் சென்னை விமான நிலையங்களில், இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.மூன்றாம் கட்டமாக, கோயம்புத்துார், கோல்கட்டா, இந்துார் மற்றும் வதோதரா விமான நிலையங் களில், இந்த நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. ஆனால், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியரிடம், இந்த பாதுகாப்பு நடைமுறை தொடரும், என, பி.சி.ஏ.எஸ்., எனப்படும், விமான போக்குவரத்து பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. - நமது நிருபர் -
கோவில் விழாக்களை முன்பே அறிய இணையதளத்தில், 'திருவிழா' பிரிவு
பதிவு செய்த நாள்10செப்
2017
23:59

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களின் முக்கிய திருவிழாக்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள, அறநிலையத்துறை இணைய தளத்தில், 'திருவிழா' என்ற பிரிவு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அறநிலையத்துறை இணைய தளத்தில், தமிழக கோவில்களின் வரலாறு, துறையின் செயல்பாடுகள், திட்டங்கள், ஒப்பந்தம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

சில மாதங்களுக்கு முன், 'விர்சுவல் டூர்' எனும் தலைப்பிலான புதிய பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது.இதன்படி, தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களை, 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி, கோவில் வரலாறு, திருவிழா உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பக்தர்கள் அறிய முடியும். இந்நிலையில், 'திருவிழா' எனும் பிரிவு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அறிநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இதற்கு முன், கோவில் திருவிழா அழைப்பிதழ்களை பதிவேற்றம் செய்து வந்தோம். அது பக்தர்களுக்கு வசதியாக இல்லை என்பதால், 'திருவிழா' என்ற பிரிவு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

இதில், கோவில்களின் திருவிழாக்கள் நடக்கும் மாதம், தேதி, அழைப்பிதழ் உள்ளிட்ட விபரங்கள், இடம் பெற்று உள்ளன.தற்போது, 110 கோவில்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விரைவில், அனைத்து பிரதான கோவில்களின் விபரங்களும் இணைக்கப் படும். இதன்படி, பக்தர்கள் பயணத்திற்கு திட்டமிடுவது வசதியாகும். அடுத்ததாக, பக்தர்கள் வசதிக்காக, கோவில் திருவிழாக்களின் ஒலி, ஒளி தொகுப்பு, 'யூ டியூப்'பில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்

2017-09-11@ 00:07:31




நெல்லை: போஸ்ட் பேசிக் நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது. தமிழக அரசின் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை, ‘நீட்’ அடிப்படையில் நிறைவு பெற்று, முதலாமாண்டு வகுப்புகள் கடந்த வாரம் தொடங்கின. இதற்கிடையே சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவமுறை படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் கடந்த வாரம் நிறைவு பெற்றது. பிஎஸ்சி நர்சிங் விண்ணப்ப விநியோகமும் முடிந்த நிலையில் இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு முறையில் விரைவில் நடக்க உள்ளது.

இந்நிலையில் போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், லேட்டரல் என்ட்ரி மற்றும் டிப்ளமோ இன் பார்மசி ஆகிய படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பெற முடியும்.
மருத்துவக் கல்வித்துறை இணையதளங்களான www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விபரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு மருத்துவக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

NEWS TODAY 15.07.2026