Monday, September 11, 2017

ஹேண்ட் பேக்' சோதனை கோவை ஏர்போர்ட்டில் ரத்து
பதிவு செய்த நாள்11செப்
2017
00:04

கோவை உள்ளிட்ட மேலும், நான்கு விமான நிலையங்களில், பயணியரின், 'ஹேண்ட் பேக்'குகளை சோதனையிடும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியரின் பொருட்கள், விமான நிலையங்களில் சோதனையிடப்படும். பயணியர், கையில் எடுத்துச் செல்லும், 'ஹேண்ட் பேக்' உள்ளிட்டவற்றை, போலீசார் சோதனையிடுவர். பின், பயணியர் விபரங்களுடன் கூடிய, 'டேக்'குகளை கட்டி, முத்திரையிடுவர்.இதனால் சிரமம் ஏற்படுவதாக, பயணியர் புகார் தெரிவித்தனர். பாதுகாப்பு சோதனைக்கு, 'ஸ்கேனர்' மற்றும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, 'ஹேண்ட் பேக்' சோதனையிடும் நடைமுறையை, உள்நாட்டு பயணியருக்கு தளர்த்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்தது.முதற்கட்டமாக, ஏப்ரலில், டில்லி, மும்பை, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத்திலும், இரண்டாம் கட்டமாக, ஜூனில், ஜெய்ப்பூர், கவுகாத்தி, லக்னோ, திருவனந்தபுரம், பாட்னா மற்றும் சென்னை விமான நிலையங்களில், இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.மூன்றாம் கட்டமாக, கோயம்புத்துார், கோல்கட்டா, இந்துார் மற்றும் வதோதரா விமான நிலையங் களில், இந்த நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. ஆனால், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியரிடம், இந்த பாதுகாப்பு நடைமுறை தொடரும், என, பி.சி.ஏ.எஸ்., எனப்படும், விமான போக்குவரத்து பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. - நமது நிருபர் -

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...