பள்ளி மாணவியர் போராட்டம்:காற்றில் பறந்த கோர்ட் உத்தரவு
பதிவு செய்த நாள்11செப்
2017
02:16
திருப்பூர் ;சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் "நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டம் நடந்தது. இதுகுறித்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கல்வித்துறை அதிகாரிகள், மவுனமாகி விட்டனர்.திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் "நீட்' தேர்வுக்கு எதிராக, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி சீருடையில், வளாகத்தில் மாணவியர் போராட்டம் நடத்தினர்.
ஏழாயிரம் மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில், பள்ளி நுழைவாயிலில், வாட்ச்மேன் இருந்தும், அத்துமீறி இந்திய மாணவர் சங்கத்தினர் நுழைந்தது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. வகுப்பறைகளில் ஆசிரியர் இருந்தும், மாணவியரை வெளியே அழைத்து வந்துள்ளனர்.மாநகராட்சி பள்ளி வளாகத்துக்குள், சுப்ரீம் கோர்ட் உத்தரவு மீறி ஒரு மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தியதும், அதற்கு பள்ளி மாணவியரை பகடை காய்களாக பயன்படுத்தியதை அறிந்தும், இன்னும் கல்வித்துறை அதிகாரிகளோ, பள்ளி நிர்வாகமோ அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காமல், மவுனம் சாதிக்கிறது.
நான்கு பிரிவில் வழக்கு
பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதியிடம் கேட்ட போது, "பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். வாட்ச்மேன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும்; போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது,' என்றார்.தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த விமல் என்பவர் மீது மிரட்டல், அத்துமீறி பள்ளிக்குள் நுழைதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள்11செப்
2017
02:16
திருப்பூர் ;சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் "நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டம் நடந்தது. இதுகுறித்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கல்வித்துறை அதிகாரிகள், மவுனமாகி விட்டனர்.திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் "நீட்' தேர்வுக்கு எதிராக, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி சீருடையில், வளாகத்தில் மாணவியர் போராட்டம் நடத்தினர்.
ஏழாயிரம் மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில், பள்ளி நுழைவாயிலில், வாட்ச்மேன் இருந்தும், அத்துமீறி இந்திய மாணவர் சங்கத்தினர் நுழைந்தது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. வகுப்பறைகளில் ஆசிரியர் இருந்தும், மாணவியரை வெளியே அழைத்து வந்துள்ளனர்.மாநகராட்சி பள்ளி வளாகத்துக்குள், சுப்ரீம் கோர்ட் உத்தரவு மீறி ஒரு மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தியதும், அதற்கு பள்ளி மாணவியரை பகடை காய்களாக பயன்படுத்தியதை அறிந்தும், இன்னும் கல்வித்துறை அதிகாரிகளோ, பள்ளி நிர்வாகமோ அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காமல், மவுனம் சாதிக்கிறது.
நான்கு பிரிவில் வழக்கு
பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதியிடம் கேட்ட போது, "பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். வாட்ச்மேன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும்; போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது,' என்றார்.தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த விமல் என்பவர் மீது மிரட்டல், அத்துமீறி பள்ளிக்குள் நுழைதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment