Wednesday, August 26, 2015

பிளிப்கார்ட், இணையத்தில் ஷாப்பிங் செய்யும் போது, நண்பர்களுடன் சாட்டிங் மூலம் கலந்துரையாடி பொருட்களை வாங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது

மின்வணிக நிறுவனமான பிளிப்கார்ட்,  இணையத்தில் ஷாப்பிங் செய்யும் போது, நண்பர்களுடன் சாட்டிங் மூலம் கலந்துரையாடி பொருட்களை வாங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பிளிப்கார்ட் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி மூலம், வாங்க இருக்கும் பொருட்கள் தொடர்பான ஆலோசனையையும் பெறலாம்.

ஸ்மார்ட்போன் மூலம் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வரும் நிலையில்,  முன்னணி மின்வணிக நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் தனது செயலி வடிவில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பிளிப்கார்ட் தனது செயலியில், பிங் எனும் பெயரில் புதிய சாட்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மேசிஜிங் சேவை போன்ற இந்த வசதி மூலம், வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் செயலியில் ஷாப்பிங் செய்யும்போது, நண்பர்களை தொடர்பு கொண்டு சாட் செய்யலாம்.
பிளிப்கார்ட் செயலியின் ஓரத்தில் இந்த பிங் சாட் ஐகான் வசதியை காணலாம். அதை இயக்கினால் போன் தொடர்பில் உள்ள நண்பர்களுடன் சாட் செய்ய முடியும். வாங்க நினைக்கும் பொருட்களின் புகைப்படம் அல்லது பட்டியலை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். ஷாப்பிங் பக்கத்தையும் அப்படியே அனுப்பு வைத்து ஆலோசனை கேட்கலாம். இருவரும் இணைந்தும் கூட ஷாப்பிங் செய்யலாம். இமோஜிகளையும் அனுப்பி வைக்கலாம்.
இணைய அல்லது மொபைல் ஷாப்பிங் வசதியானதாகவும், பிரபலமானதாகவும் இருந்தாலும், இது தனிமையான அனுபவமாகவே அமைகிறது. நேரில் ஷாப்பிங் செய்வது போல நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் குழுவாக சென்று ஷாப்பிங் செய்வது போன்ற அனுபவத்தை மின் வணிகத்தில் பெற முடிவதில்லை.

இதை ஈடு செய்யும் வகையில், செயலி மூலம் நண்பர்களுடன் கலந்துரையாடியபடி ஷாப்பிங் செய்யக்கூடிய வ்சதியை பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாட் வசதி, அழைப்பின் பேரில் கிடைக்கிறது. அதாவது யாரிடமிருந்தாவது இந்த சேவையை பயன்படுத்த அழைப்பு வந்த பிறகுதான் இதை பயன்படுத்த முடியும். விரும்பினால் பிளிப்கார்ட் செயலியில் இதற்கான அழைப்பை கோரும் வசதியும் இருக்கிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் இந்த வசதி செயல்படுகிறது. 

- சைபர் சிம்மன்

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...