Friday, August 25, 2017

'எய்ம்ஸ் கிளை அமைவிடத்தை மத்திய அரசு முடிவு செய்யும்'

பதிவு செய்த நாள்25ஆக
2017
00:15

சென்னை: ''தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் இடத்தை, மத்திய அரசு முடிவு செய்யும்,'' என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.

'தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்' என, அறிவித்த மத்திய அரசு, அதற்கான இடங்களை பரிந்துரைக்கும்படி, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இதன்படி, மதுரை மாவட்டம், தோப்பூர்; தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி; புதுக்கோட்டை; ஈரோடு மாவட்டம், பெருந்துறை; காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு என, ஐந்து இடங்களை, தமிழக அரசு பரிந்துரைத்தது. இதில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியை தேர்வு செய்யும்படி, தமிழக அரசு பரிந்துரைத்ததாக கூறப்பட்டது. மேலும், 'ஐந்து இடங்களில் உள்ள, அடிப்படை வசதிகள் குறித்து, தமிழக அரசு அளித்த தகவல்கள் போதவில்லை' என, கூடுதல் தகவல்களை, மத்திய அரசு கேட்டது. இதற்கு, இரு மாதங்களுக்கு பின், தமிழக அரசு பதிலளித்தது. தமிழக அரசு தகவல் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால், எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை, மத்திய அரசு முடிவு செய்யவில்லை. 

இதனால், 2017 இறுதிக்குள், எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான பூர்வாங்க பணிகள் துவங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, சென்னை யில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''தமிழக அரசு பரிந்துரைத்த, ஐந்து இடங்களில் உள்ள வசதிகள் குறித்த அறிக்கை, மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ''எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை, மத்திய அரசு தான் முடிவு செய்யும்,'' என்றார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...