தஞ்சைக்கு 'எய்ம்ஸ்' வேண்டும் பிரதமருக்கு குவியும் மனுக்கள்
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:29
தஞ்சாவூர், 'தஞ்சாவூர் அருகே, செங்கிப்பட்டியில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வேண்டும்' என, தஞ்சை மக்கள் சார்பில், பிரதமருக்கு ஆயிரக்கணக்கில் மனுக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.தமிழகத்தில், 2,000 கோடி ரூபாய் செலவில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.அதற்கான இடங்களை தேர்வு செய்து அனுப்ப, தமிழக அரசை கேட்டுக் கொண்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தஞ்சாவூர் - செங்கிப்பட்டி, ஈரோடு - பெருந்துறை, செங்கல்பட்டு, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய, ஐந்து இடங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.தஞ்சை மக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பலரும், 'செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும்' என, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்னர்.எய்ம்ஸ் மருத்துவமனை போராட்டக்குழு தலைவர் முருகேசன் கூறியதாவது:
செங்கிப்பட்டியில், எய்ம்ஸ் அமையும் பட்சத்தில், கடைக்கோடி பகுதியான நாகை வரை உள்ள மக்கள் பயன்பெறுவர்.
இது குறித்து, பிரதமருக்கு தொடர்ந்து, கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறோம்.
எங்கள் கோரிக்கை மனுக்கள், பிரதமருக்கு குவியலாக சென்றுள்ளது. செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமையும் என, நம்புகிறோம்.செங்கிப்பட்டியில், 200க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலம், மாவட்ட, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், 24 மணி நேர தண்ணீர் வசதி, 30 கி.மீட்டரில் திருச்சி விமான நிலையம், பஸ் மற்றும் ரயில் வசதி உள்ளதால், இங்கேயே எய்ம்ஸ் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுக்களில் குறிப்பிட்டு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:29
தஞ்சாவூர், 'தஞ்சாவூர் அருகே, செங்கிப்பட்டியில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வேண்டும்' என, தஞ்சை மக்கள் சார்பில், பிரதமருக்கு ஆயிரக்கணக்கில் மனுக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.தமிழகத்தில், 2,000 கோடி ரூபாய் செலவில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.அதற்கான இடங்களை தேர்வு செய்து அனுப்ப, தமிழக அரசை கேட்டுக் கொண்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தஞ்சாவூர் - செங்கிப்பட்டி, ஈரோடு - பெருந்துறை, செங்கல்பட்டு, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய, ஐந்து இடங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.தஞ்சை மக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பலரும், 'செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும்' என, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்னர்.எய்ம்ஸ் மருத்துவமனை போராட்டக்குழு தலைவர் முருகேசன் கூறியதாவது:
செங்கிப்பட்டியில், எய்ம்ஸ் அமையும் பட்சத்தில், கடைக்கோடி பகுதியான நாகை வரை உள்ள மக்கள் பயன்பெறுவர்.
இது குறித்து, பிரதமருக்கு தொடர்ந்து, கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறோம்.
எங்கள் கோரிக்கை மனுக்கள், பிரதமருக்கு குவியலாக சென்றுள்ளது. செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமையும் என, நம்புகிறோம்.செங்கிப்பட்டியில், 200க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலம், மாவட்ட, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், 24 மணி நேர தண்ணீர் வசதி, 30 கி.மீட்டரில் திருச்சி விமான நிலையம், பஸ் மற்றும் ரயில் வசதி உள்ளதால், இங்கேயே எய்ம்ஸ் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுக்களில் குறிப்பிட்டு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment