70 கிலோ, 'முக்குறுணி' கொழுக்கட்டை : மதுரையில் 36 மணி நேர பக்தி படையல்
பதிவு செய்த நாள்25ஆக
2017
01:07
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு, 70 கிலோ, 'முக்குறுணி கொழுக்கட்டை' தயாரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை ரயில்வே காலனி, சித்தி விநாயக செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலின், சடகோப ராமானுஜ அய்யப்ப பக்த சபை குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து, கோவில் குருநாதர் பாலாஜி கூறியதாவது:
மதுரை மீனாட்சி கோவில், பிள்ளையார்பட்டி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அடுத்தபடி இங்குதான், 'மெகா முக்குறுணி கொழுக்கட்டை' தயாரிக்கிறோம்.
இது எங்களுக்கு, 11வது ஆண்டு. 18 படி அரிசி, வெல்லம், தேங்காய், நெய், ஏலக்காய் கலந்து தயாராகும் இந்த கொழுக்கட்டையின் எடை, 70 கிலோ.
அரிசியின் அளவை, 'குறுணி' என்ற அளவையில் அளப்பதால் இதற்கு, 'முக்குறுணி கொழுக்கட்டை' என, பெயர் வந்தது. ஒரு குறுணி, 6 படி.
'மெகா' உருண்டையாக உருட்டிய மாவை, பனை துணிப்பைக்குள் வைத்து, பனை ஓலை சுற்றி, நீர் நிரப்பிய பெரிய பாத்திரத்தில் வைத்து விறகு அடுப்பில் வேக வைக்கிறோம்.
கொழுக்கட்டை நேற்று காலை, 6:00 மணி முதல், இன்று மாலை, 6:00 மணி வரை வேகும்.
இதை, 10 பேர் அடங்கிய பக்தர்கள் குழு, 36 மணி நேரமும் கண்காணித்து, பக்குவமாக கொழுக்கட்டையை வெளியே எடுப்பர். வெந்த ழுக்கட்டையை கம்பில் கட்டி சுமந்து வந்து விநாயகருக்கு படையல் வைத்து, பக்தர்களுக்கு வழங்குவோம்.
இதைத் தொடர்ந்து, ஆக., 27 காலை, 10:30 மணிக்கு சித்திதேவிக்கும், விநாயகருக்கும் திருக்கல்யாண விழாவுடன் சதுர்த்தி விழா நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பதிவு செய்த நாள்25ஆக
2017
01:07
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு, 70 கிலோ, 'முக்குறுணி கொழுக்கட்டை' தயாரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை ரயில்வே காலனி, சித்தி விநாயக செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலின், சடகோப ராமானுஜ அய்யப்ப பக்த சபை குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து, கோவில் குருநாதர் பாலாஜி கூறியதாவது:
மதுரை மீனாட்சி கோவில், பிள்ளையார்பட்டி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அடுத்தபடி இங்குதான், 'மெகா முக்குறுணி கொழுக்கட்டை' தயாரிக்கிறோம்.
இது எங்களுக்கு, 11வது ஆண்டு. 18 படி அரிசி, வெல்லம், தேங்காய், நெய், ஏலக்காய் கலந்து தயாராகும் இந்த கொழுக்கட்டையின் எடை, 70 கிலோ.
அரிசியின் அளவை, 'குறுணி' என்ற அளவையில் அளப்பதால் இதற்கு, 'முக்குறுணி கொழுக்கட்டை' என, பெயர் வந்தது. ஒரு குறுணி, 6 படி.
'மெகா' உருண்டையாக உருட்டிய மாவை, பனை துணிப்பைக்குள் வைத்து, பனை ஓலை சுற்றி, நீர் நிரப்பிய பெரிய பாத்திரத்தில் வைத்து விறகு அடுப்பில் வேக வைக்கிறோம்.
கொழுக்கட்டை நேற்று காலை, 6:00 மணி முதல், இன்று மாலை, 6:00 மணி வரை வேகும்.
இதை, 10 பேர் அடங்கிய பக்தர்கள் குழு, 36 மணி நேரமும் கண்காணித்து, பக்குவமாக கொழுக்கட்டையை வெளியே எடுப்பர். வெந்த ழுக்கட்டையை கம்பில் கட்டி சுமந்து வந்து விநாயகருக்கு படையல் வைத்து, பக்தர்களுக்கு வழங்குவோம்.
இதைத் தொடர்ந்து, ஆக., 27 காலை, 10:30 மணிக்கு சித்திதேவிக்கும், விநாயகருக்கும் திருக்கல்யாண விழாவுடன் சதுர்த்தி விழா நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment