Friday, August 25, 2017

கோரக்பூரில் குழந்தைகள் பலியான விவகாரம்: மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் உள்பட 9 பேர் மீது வழக்கு


உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70–க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தன.

ஆகஸ்ட் 25, 2017, 04:45 AM

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70–க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் அறிக்கை அளித்தனர்.

இந்த நிலையில் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பூர்ணிமா சுக்லா, டாக்டர் கபீல் கான், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கும் புஸ்பா சேல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் உள்பட 9 பேர் மீது ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு கோரக்பூருக்கு மாற்றப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவர் மீதும் குற்றச்சதி, கொடூர கொலை உள்ளிட்ட இந்திய தண்டனைச்சட்ட பிரிவுகளின் கீழும், ஊழல் எதிர்ப்புச்சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மாநில கூடுதல் தலைமைச்செயலாளர் (மருத்துவக்கல்வி) அனிதா பட்நாகர் ஜெயின் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வருவாய்த்துறை முதன்மை செயலாளரான ரஜ்னீஸ் துபே புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...