Saturday, August 26, 2017

தமிழகத்தில் ரூ.200 நோட்டுகள் புழக்கத்துக்கு வர தாமதமாகும் எனத் தகவல்!

ர.பரத் ராஜ்

நேற்று முதல் நாட்டின் முக்கிய நகரங்களில் இருநூறு ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. இந்நிலையில், தமிழகத்தில் இந்த இருநூறு ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வந்துள்ளது.




பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி 500, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இந்த 200 ரூபாய் நோட்டுகள் ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டின் முன்பக்கதில் காந்தி உருவமும் பின்புறத்தில் சாஞ்சி ஸ்தூபி படமும் இடம்பெற்றுள்ளது. ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு கோடுகள் நீல நிறத்தில் உள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நேற்றே புழக்கத்துக்கு வந்த நிலையில், இன்னும் தமிழகத்தில் புழக்கத்துக்கு வரவில்லை. மேலும், வரும் 28-ம் தேதி முதல் சென்னையின் வங்கிகளில் இந்த 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...