'இரண்டு வருட காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி!' - நீட் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த முகேஷ் கண்ணா

பல்வேறு குளறுபடிகளைக் கடந்து வெளியிடப்பட்டுள்ள நீட் தேர்வு தர வரிசைப் பட்டியலில், தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார், கோவையைச் சேர்ந்த மாணவன் முகேஷ் கண்ணா.
மகிழ்ச்சியில் இருக்கும் முகேஷ் கண்ணாவிடம் பேசினோம், " கடந்த ஜூன் 12-ம் தேதி, நீட் ரிசல்ட் வெளியிடப்பட்டது. நான் 655 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். அப்போதே எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அதனால், ஆல் இண்டியா கோட்டாவில் அப்ளை செய்தேன். நினைத்தபடியே எனக்கு கோவை மெடிக்கல் காலேஜில் சீட் கிடைத்தது. நான் ஜூலை மாதமே மெடிக்கல் சேர்ந்துவிட்டேன். தமிழகத்தில் நீட் வேண்டும்...வேண்டாம் என்று பிரச்னை நடந்துகொண்டிருந்ததால், தமிழக தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தது. அதனால், என்னுடைய தர வரிசை என்னவென்று தெரியாமல் இருந்தது. இப்போது பிரச்னை தெளிவாகி, எனக்கு இரண்டாம் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
" நான், 2015-ம் வருஷமே ப்ளஸ் டூ ஸ்டேட்போர்டு பாடத்திட்டத்தில் முடித்தேன். சின்ன வயசுலேருந்தே எனக்கு டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை. ப்ளஸ் டூல 1,165 மார்க் எடுத்தேன். aipmt எக்ஸாம் எழுதினேன். ஆனால், என்னால் பாஸாக முடியவில்லை. அடுத்து இன்ஜினீயரிங் சேர்ந்துட்டேன். ஆனாலும் என்னோட டாக்டர் கனவு என்னைவிட்டுப் போகலை. இன்ஜினீயரிங் படிச்சுகிட்டே aipmt எக்ஸாமுக்கும் படிச்சேன். அதனால, அடுத்த முறையும் என்னால பாஸாக முடியலை. இந்தச் சூழல்லதான் இந்த வருஷம் நீட் அறிவிச்சாங்க. இன்ஜினீயரிங்கை டிஸ்கன்ட்டினியூ பண்ணிட்டு, டாக்ட்டராகியே தீரணும்னு தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். ஸ்பெஷல் கோச்சிங் போனேன். என்னோட விடா முயற்ச்சியால இன்னைக்கு நான் செலெக்ட் ஆனது மட்டுமில்லாம, ஸ்டேட் செகண்ட் வாங்கிருக்கேன். ஸ்பெஷல் கோச்சிங்ல ஸ்டேட் போர்டு சி.பி.எஸ்.சி இரண்டு பாடத் திட்டங்களையும் தரோவாகப் படிச்சேன். அதனாலதான் வெற்றிபெற முடிஞ்சது என்று தம்ஸ் அப் காட்டுகிறார்.
முகேஷ் கண்ணாவின் அம்மா கீதா, " தாமதமானாலும் என் மகனின் உழைப்புக்குத் தக்க பலன் கிடைத்திருக்கிறது. அவன் படிப்புல அவ்வளவு பர்ஃபெக்ட். நீட் தேர்வு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. நீட் தேர்வில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை மையப்படுத்தியே அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதனால், ஸ்டேட் போட்ர்டு பாடத்திட்டத்தையும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தையும் இணைத்து, ஒரு புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால்தான் தமிழக மாணவர்களால் நீட் தேர்வில் எளிதாகத் தேர்ச்சிபெற முடியும் என்றார்.
Dailyhunt

பல்வேறு குளறுபடிகளைக் கடந்து வெளியிடப்பட்டுள்ள நீட் தேர்வு தர வரிசைப் பட்டியலில், தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார், கோவையைச் சேர்ந்த மாணவன் முகேஷ் கண்ணா.
மகிழ்ச்சியில் இருக்கும் முகேஷ் கண்ணாவிடம் பேசினோம், " கடந்த ஜூன் 12-ம் தேதி, நீட் ரிசல்ட் வெளியிடப்பட்டது. நான் 655 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். அப்போதே எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அதனால், ஆல் இண்டியா கோட்டாவில் அப்ளை செய்தேன். நினைத்தபடியே எனக்கு கோவை மெடிக்கல் காலேஜில் சீட் கிடைத்தது. நான் ஜூலை மாதமே மெடிக்கல் சேர்ந்துவிட்டேன். தமிழகத்தில் நீட் வேண்டும்...வேண்டாம் என்று பிரச்னை நடந்துகொண்டிருந்ததால், தமிழக தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தது. அதனால், என்னுடைய தர வரிசை என்னவென்று தெரியாமல் இருந்தது. இப்போது பிரச்னை தெளிவாகி, எனக்கு இரண்டாம் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
" நான், 2015-ம் வருஷமே ப்ளஸ் டூ ஸ்டேட்போர்டு பாடத்திட்டத்தில் முடித்தேன். சின்ன வயசுலேருந்தே எனக்கு டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை. ப்ளஸ் டூல 1,165 மார்க் எடுத்தேன். aipmt எக்ஸாம் எழுதினேன். ஆனால், என்னால் பாஸாக முடியவில்லை. அடுத்து இன்ஜினீயரிங் சேர்ந்துட்டேன். ஆனாலும் என்னோட டாக்டர் கனவு என்னைவிட்டுப் போகலை. இன்ஜினீயரிங் படிச்சுகிட்டே aipmt எக்ஸாமுக்கும் படிச்சேன். அதனால, அடுத்த முறையும் என்னால பாஸாக முடியலை. இந்தச் சூழல்லதான் இந்த வருஷம் நீட் அறிவிச்சாங்க. இன்ஜினீயரிங்கை டிஸ்கன்ட்டினியூ பண்ணிட்டு, டாக்ட்டராகியே தீரணும்னு தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். ஸ்பெஷல் கோச்சிங் போனேன். என்னோட விடா முயற்ச்சியால இன்னைக்கு நான் செலெக்ட் ஆனது மட்டுமில்லாம, ஸ்டேட் செகண்ட் வாங்கிருக்கேன். ஸ்பெஷல் கோச்சிங்ல ஸ்டேட் போர்டு சி.பி.எஸ்.சி இரண்டு பாடத் திட்டங்களையும் தரோவாகப் படிச்சேன். அதனாலதான் வெற்றிபெற முடிஞ்சது என்று தம்ஸ் அப் காட்டுகிறார்.
முகேஷ் கண்ணாவின் அம்மா கீதா, " தாமதமானாலும் என் மகனின் உழைப்புக்குத் தக்க பலன் கிடைத்திருக்கிறது. அவன் படிப்புல அவ்வளவு பர்ஃபெக்ட். நீட் தேர்வு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. நீட் தேர்வில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை மையப்படுத்தியே அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதனால், ஸ்டேட் போட்ர்டு பாடத்திட்டத்தையும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தையும் இணைத்து, ஒரு புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால்தான் தமிழக மாணவர்களால் நீட் தேர்வில் எளிதாகத் தேர்ச்சிபெற முடியும் என்றார்.
Dailyhunt
No comments:
Post a Comment