Thursday, August 24, 2017

மருத்துவ மருத்துவ கல்லூரி தலைவரின் ரூ.48 கோடி சொத்து முடக்கம்கல்லூரி தலைவரின் ரூ.48 கோடி சொத்து முடக்கம்

பதிவு செய்த நாள்23ஆக
2017
23:59

சென்னை: மருத்துவ கல்லுாரி தலைவர், டி.டி.நாயுடுவின், 48 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. சென்னை அருகே, திருவள்ளூரில், தீனதயாள் மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர், டி.டி.நாயுடு. அதே பகுதியில் மருத்துவ கல்லுாரி நடத்தி வந்தார். அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி செயல்பட்ட இக்கல்லுாரியில், அவர், மாணவர் சேர்க்கை நடத்தி, பெற்றோர் மற்றும் மாணவ மாணவியரிடம், 16 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளார். மேலும், போலி ஆவணங்கள் வாயிலாக, ஆந்திரா மற்றும் யூனியன் வங்கிகளில், 136 கோடி ரூபாய் கடன் வாங்கியது உட்பட, மொத்தம், 152 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து, 2015ல், டி.டி.நாயுடுவை கைது செய்தனர்; கல்லுாரி யும் மூடப்பட்டது. அவர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு உள்ளதால், அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து, டி.டி.நாயுடுவின், 104 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. இந்நிலையில், நேற்று, அவருக்கு சொந்தமான, திருத்தணி அருகே, மாமண்டூரில் உள்ள, 17.33 ஏக்கர்; பெரிய கடம்பூரில் உள்ள, 2.46 ஏக்கர் விவசாய நிலங்கள் முடக்கப்பட்டன.

ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வஞ்சுவாஞ்சேரியில் உள்ள, 48 ஆயிரம் சதுரடி நிலம், கூடுவாஞ்சேரி அருகே, வெள்ளரித்தாங்கலில் உள்ள, 35.17 ஏக்கர் நிலம் என, 48 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
மொத்தம், 152 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...