Thursday, August 24, 2017

‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி சென்னை மருத்துவக்கல்லூரி முன்பு, பயிற்சி டாக்டர்கள் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
ஆகஸ்ட் 24, 2017, 04:00 AM

சென்னை,

மனித சங்கிலி போராட்டத்தில் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

இதுகுறித்து பயிற்சி டாக்டர்கள் அருள், கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறுகையில், “கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற கனவு ‘நீட்’ தேர்வினால் தகர்ந்து போகும் நிலை நிச்சயம் உருவாகும். எனவே ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும். ‘நீட்’ தேர்வு குறித்த தமிழக அரசின் அவசர சட்டத்தை மத்திய அரசு புறக்கணித்தது, பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் தவறவிட்டாலும், அடுத்த வருடத்தில் இருந்தாவது ‘நீட்’ தேர்வில் நிரந்தர விலக்கு வேண்டும்”, என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.07.2026