Monday, October 9, 2017

'தாமதமாக மனு செய்ததால் இன்சூரன்ஸ் மறுக்க முடியாது

பதிவு செய்த நாள்09அக்
2017
01:30

புதுடில்லி:'காப்பீடு கேட்டு மனு செய்வதற்கு தாமதம் ஆனது என்ற காரணத்தால், அந்த மனுவை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

'தாமதமாக மனு செய்தால், அதை நிராகரிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அதிகாரம் உள்ளது' என, தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்திருந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.கே. அகர்வால், எஸ். அப்துல் நசீர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

ஒருவர் இன்சூரன்ஸ் கேட்டு மனு தாக்கல் செய்வதற்கு தாமதமானால், அதற்கான காரணம் ஏற்புடையதாக இருந்தால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அந்த மனுவை நிராகரிக்க முடியாது. இவ்வாறு செய்தால், மக்களின் நம்பிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழந்துவிடும். அதனால், ஹரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்த மனுதாரருக்கு, காணாமல் போன அவருடைய மோட்டார் சைக்கிளுக்கு, 8.35 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...