Tuesday, October 31, 2017

ஆதாரை எதிர்த்த வழக்கில் மம்தாவுக்கு கோர்ட் கண்டனம்

புதுடில்லி, : 'சமூகநலத் திட்டங்களின் பயனை அளிக்க, ஆதாரை கட்டாயமாக்கும், பார்லி., நடவடிக்கையை, மாநில அரசு எவ்வாறு எதிர்க்க முடியும்?' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான, மம்தா பானர்ஜிக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.



மத்திய அரசு வழங்கும், சமூகநலத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு, 'ஆதார்' எண்ணை அவசியமாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு, திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது தொடர்பாக, அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர், கபில் சிபல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

தனிநபராகஇந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த
போது, கபில் சிபல் கூறுகையில், ''ஆதாரை கட்டாயமாக்கும், மத்தியஅரசின் திட்டத்தை எதிர்த்து, மேற்கு வங்க மாநில தொழிலாளர் துறை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.

அப்போது, வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு, 'கூட்டாட்சி அமைப்பில், பார்லிமென்டில் எடுக்கப்படும் நடவடிக்கையை, மாநில அரசு எவ்வாறு எதிர்க்க முடியும்?
'இந்த விஷயத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி, தனிநபராக, புதிதாக வழக்கு தொடரலாம்; அவரை, தனிநபராக கருதி, அவர் அளிக்கும் மனுவை, நீதிமன்றம் விசாரிக்கும்' என்றனர்.

இதற்கிடையே, தனிநபர்ஒருவர், மொபைல் போன் எண்களை, ஆதாருடன் இணைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், அது பற்றி பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு,

'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர்.

அரசியல் சாசன அமர்வு

இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, அரசியல் சாசன அமர்வை அமைக்கப் போவதாக, உச்ச நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு, நேற்று கூறியதாவது:ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின், அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அமர்வு கூறியது.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...