Tuesday, October 31, 2017


மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் பச்சமுத்து விடுவிப்பு


மருத்துவ, மாணவர் சேர்க்கை, மோசடி, வழக்கு, பச்சமுத்து, விடுவிப்பு
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம்.பல்கலை. வேந்தர் பச்ச முத்து விடுவிக்கப்பட்டார்.

எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் ரூ.85 கோடி மோசடி செய்ததாக பச்ச முத்து மீது புகார் கூறப்பட்டது. தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி பச்சமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். 
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ. 85 கோடியை திருப்பி தர உத்தரவாதம் அளித்த நிலையி்ல் நீதிமன்ற நடைமுறைகள் முடிவந்தன. இதையடுத்து நடந்த விசாரணையில் மனுவை விசாரித்த நீதிபதிகள், பச்சமுத்து மீதான வழக்கை ரத்து செய்து விடுவித்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை !  ]இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே....