Monday, December 11, 2017

மனித உரிமைகள் அறியாத 86 சதவீத மூத்த குடிமக்கள்

Added : டிச 11, 2017 05:10 



 புதுடில்லி: நாட்டில் 86 சதவீத மூத்த குடிமக்கள் தங்களின் மனித உரிமைகள் குறித்து அறியாதவர்களாக உள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இது குறித்து ஏஜ்வெல் பவுண்டேசன் அமைப்பின் சேர்மன் ஹிமன்ஷூ ராத் கூறியதாவது: 60-70 வயதிற்குள்ளவர்கள் மனித உரிமைகளைபாதுகாப்பதில் மிகவும் தீவிரமானவர்கள். ஆனால் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி , தலைமுறை இடை வெளி ஆகியவற்றால் இதனை அறியாமல் உள்ளனர்.

துஷ்பிரயோகம் அதிகரிப்பு

மூத்த குடிமக்களில் 86 சதவீதத்தினர் மனித உரிமைகள் பற்றி தெரியாமல் இருக்கின்றனர். 68.8 சதவீதம் பேர் மட்டுமே தேவையான மருந்துகள், சுகாதார பராமரிப்பு பற்றி தெரிந்து வைத்துள்ளனர். 23 சதவீதத்தினர் மனிதாபிமானமற்ற முறையில்வாழந்து கொண்டிருக்கின்றனர். 13 சதவீதம் பேர் தங்கள் வயதில் சரியான உணவை பெறாமல் உள்ளனர். மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் முதியவர்களின் மீதான துஷ்பிரயோகம், தவறான சிகிச்சை அதிகரித்து வருகிறது.

பள்ளிகளில் பாடமுறை

இதனை தவிர்க்க வயதான ஒரு நபரின் உரிமை, குடும்ப உறுப்பினர்களின் தார்மீக பொறுப்பு மற்றும் அடிப்படை மனிதஉரிமையாக கருதப்பட வேண்டும். பள்ளிகளில் முதியோர் உரிமையை கற்று தருவதன் மூலம் பொறுப்புணர்வை உருவாக்க வேண்டும் என கூறினார்.

No comments:

Post a Comment

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...