Monday, December 11, 2017

மதுசூதனனுக்கு கவுண்டமணி; தினகரனுக்கு செந்தில் பிரசாரம்

Added : டிச 11, 2017 00:06 | கருத்துகள் (9)


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, காமெடி நடிகர் கவுண்டமணி, டிச., 14ல், பிரசாரம் மேற்கொள்கிறார். நடிகர் கவுண்டமணி, கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த அவர், இதுவரையில், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரம் செய்ததில்லை. முதன் முறையாக, கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த, பழனிசாமி முதல்வராகி உள்ளார். எனவே, அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக, டிச., 14ல், கவுண்டமணி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த, காமெடி நடிகர் செந்தில், அதே சமுதாயத்தை சேர்ந்த தினகரனுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்ய உள்ளார்.
கவுண்டமணியும், செந்திலும், திரையுலகில் ஒன்றாக இணைந்து, நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர்கள். தற்போது, அரசியல் உலகில் இருவரும், எதிரும் புதிருமாக, பிரசாரம் செய்வது, தேர்தல் களத்தை கலகலப்பாக்கும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...