Sunday, January 28, 2018

திருட்டு கும்பல் உலா ஸ்டான்லியில் பீதி

Added : ஜன 28, 2018 02:00

சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் உலா வரும் திருட்டு கும்பலால், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் பீதியில் உள்ளனர்.
சென்னை, ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி  மருத்துவமனையில் தோல், இதயம், சிறுநீரகம், கை ஒட்டுறுப்பு உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.

இங்கு, உள்நோயாளிகளாக 2,000க்கும் மேற்பட்டோரும், புறநோயாளிகளாக 8,000க்கும் மேற்பட்டோரும், சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோருடன், உதவியாளர் ஒருவர் தங்குவது வழக்கம். இவர்கள் தங்குவதற்காக, மருத்துவமனை வளாகத்தில், விடுதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இங்கு நிலவும் இடப்பற்றாக்குறையால், ஆயிரக்கணக்கானோர், மருத்துவமனை வளாகத்தில் படுத்து உறங்குகின்றனர்.
இவர்களை குறிவைக்கும் திருட்டு கும்பல், துாங்குவோரின் மொபைல் போன், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் செல்கிறது.

சமீபத்தில், பெண்கள் மருத்துவ விடுதியில் புகுந்த மர்மநபர், இரண்டு மொபைல் போன்களை திருடிச் சென்றார். அதே போல், மாற்றுத்திறனாளி மருத்துவ மாணவியின் நகைகளை திருடிய மர்மநபர் ஒருவர், கூச்சலிட்டதால் தப்பிச் சென்றார்.

ஒரு வாரத்திற்கு முன், போதையில் இருந்த முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர், மருத்துவ  மனைக்கு வந்து, ஊழியர் மற்றும் நோயாளிகளிடம் தகராறில் ஈடுபட்டார். பின், மொபைல் போன்
திருடர்களை பிடிக்க, ரோந்து வந்ததாகக் கூறி தப்பித்தார்.
திருட்டு கும்பல் உலா வருவதால், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள், பீதியில் உள்ளனர்.

இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில், 24 மணி நேரமும் போலீசார் காண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, மருத்துவர்கள்
மற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...