Wednesday, January 31, 2018

சிங்கப்பூருக்கு இன்ப சுற்றுலா : ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சி

Added : ஜன 30, 2018 21:30

புதுடில்லி: ரயில்வேயில் பணியாற்றும், 'கேங்மேன், டிராக்மேன், உள்ளிட்ட, ஊழியர்களை, சிங்கப்பூர், மலேஷியாவுக்கு இன்ப சுற்றுலா அனுப்பி உள்ளது.

இதுகுறித்து, தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக, கீழ் நிலையில் பணியாற்றி வரும், கேங்மேன், டிராக் மேன் மற்றும் அரசிதழில் இடம்பெறாத ஊழியர்கள், 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவுக்கு, ஆறு நாட்களுக்கு இன்பச் சுற்றுலா அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்த பயணத்துக்கான, 25 சதவீத செலவை ஊழியர்கள் ஏற்பர். மீத செலவை, ரயில்வே ஏற்றுக் கொள்ளும். பணி ஓய்வு அடைய உள்ளோருக்கு, இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்! ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடிப் பிரச்னை பற்றி..

நடுப்பக்கக் கட்டுரைகள் அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்! ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடிப் பிரச்னை பற்றி.. எஸ். ஸ்ரீதுரை Updated on: 24...