Monday, February 5, 2018

இனி அரக்கோணம் வரை சென்னைதான்... பெருநகர விரிவாக்க அரசாணை வெளியீடு!

ர.பரத் ராஜ்

சென்னைப் பெருநகரத் திட்ட விரிவாக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையின்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் வரை சென்னைப் பெருநகரக் குழுமத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.



கடந்த ஆண்டு, ஜூலை மாதம், தமிழக சட்டமன்றத்தில் பெருநகரச் சென்னை மாநகராட்சியின் எல்லைகளை விரிவாக்கம் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருக்கும் சில கிராமங்கள் சென்னை மாநகராட்சியின் கீழ் கொண்டுவரப்படும் என்று சொல்லப்பட்டது. மேலும், அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாவில் இருக்கும் சில இடங்களும் சென்னை மாநகராட்சிக்குக் கீழ் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து, சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட இடங்கள் குறித்து நன்கு ஆராயப்பட்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குள் சேர்ப்பது குறித்து முன்மொழியப்பட்டது. இதையடுத்து, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் வரை பெருநகரச் சென்னைக் குழுமத்தின் எல்லையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...