Monday, May 21, 2018

வைகாசி விசாக திருவிழா பழநியில் நாளை துவக்கம்

Added : மே 21, 2018 01:06


பழநி : பழநியில், வைகாசி விசாகத் திருவிழா, நாளை துவங்கி, பத்து நாட்கள் நடக்கிறது.

வசந்த உற்சவ விழா என அழைக்கப்படும், வைகாசி விசாகத் திருவிழா, பழநி, பெரியநாயகியம்மன் கோவிலில், நாளை காலையில், கொடியேற்றத்துடன் துவங்கி, மே31வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, ஆறாம் நாள், மே, 27 இரவு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

ஏழாம் நாள், மே, 28ல் வைகாசி விசாகத்தன்று, மலைக்கோவில் சன்னதி, அதிகாலை 4:௦௦ மணிக்கு திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோவில் நான்குரத வீதிகளில், மாலை, 4.30 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...