Saturday, May 5, 2018

ரூ.2,000, 500க்கு தட்டுப்பாடு : ஏ.டி.எம்.,களில் பணம் இல்லை

Added : மே 05, 2018 00:22 | 
 
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் 2,000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் பலவங்கிகளின்ஏ.டி.எம்.,களில் பணமும் இல்லை.பாரத ஸ்டேட் வங்கிக்கு மாவட்டத்தில் 31 கிளைகள்,65 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. ஒரு வாரமாக 2,000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பணம் எடுப்போருக்கு 10, 20, 50, 100ரூபாய் நோட்டுகளே வழங்கப்படுகின்றன.மேலும்பல ஏ.டி.எம்., களில் பணம் வைக்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர்.அரசு ஊழியர்,ஆசிரியர்கள் கூறுகையில், 'பாரதஸ்டேட் வங்கி மட்டுமின்றி மற்ற வங்கி ஏ.டி.எம்.,களிலும் நான்கு தினங்களாக பணம் இல்லை. இதனால்சம்பளம் எடுக்க முடியவில்லை'என்றனர்.
வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மைசூரூவில் இருந்துபாரதஸ்டேட் வங்கிக்கு பணம் வருகிறது. பிப்ரவரியில் இருந்தே 2,000, 500 ரூபாய் நோட்டுகள் குறைவாக அனுப்பப்படுகின்றன'என்றார்.

No comments:

Post a Comment

Choked highways, bus service disruptions give voters a tough time on day of polling

  Choked highways, bus service disruptions give voters a tough time on day of polling GST Road was one of the worst affected stretches as ve...