Sunday, September 29, 2019

டீனுக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு மனு

Added : செப் 29, 2019 05:57


தேனி: 'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட பிரச்னையில் கொலைமிரட்டல் வருவதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்' என தேனி மருத்துவக்கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் மனு அளித்துள்ளார்.அதில், 'நீட் ஆள்மாறாட்ட புகார் விசாரணை, கைது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் எனக்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. கொலை மிரட்டல் வருகிறது. போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு கோருவதற்கான முகாந்திரம், எந்த வகையில் அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் வந்தது, அதற்கான ஆதாரங்கள் குறித்து போலீசார் விசாரித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 8.4.2025