Friday, March 27, 2020

ஊரடங்கு உத்தரவு மீறல் 8,136 பேர் கைது: போலீஸ் அதிரடி

Added : மார் 26, 2020 21:44

சென்னை : தமிழகம் முழுதும், ஊரடங்கு உத்தரவை மீறியது தொடர்பாக, 8,136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகன சோதனை மற்றும் ரோந்து பணியை, தீவிரப்படுத்தி உள்ளனர்.இந்நிலையில், தமிழகம் முழுவதும், ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்கள், கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டோர் என, 8,136 பேரை கைது செய்து, பின் விடுவித்துள்ளனர்.

அதேபோல, 144 என்ற தடையுத்தரவை மீறியதற்காக, 1,252 பேர் மீதும், கொரோனா வைரஸ் குறித்து, வதந்தி பரப்பியது தொடர்பாக, 16 பேர் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக, தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அரசுக்கு தெரிவிக்காமல் வெளியில் சென்றது தொடர்பாக, ஆறு பேர் மீது, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும், ஊரடங்கு உத்தரவை மீறுவோரை, தற்போது எச்சரித்து அனுப்பினாலும், அவர்களின் வாகன எண்களை, போலீசார் குறித்து வைத்துள்ளனர். எந்த நேரத்திலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...