Friday, March 27, 2020

வட மாநில பக்தர்கள் ராமேஸ்வரத்தில் தவிப்பு

Added : மார் 27, 2020 01:04

ராமேஸ்வரம் :ரயில் போக்குவரத்து இன்றி, ராமேஸ்வரத்தில் தவிக்கும் வட மாநில பக்தர்களுக்கு, சமூக ஆர்வலர்கள் உதவி செய்கின்றனர்.உ.பி., பீஹார், ராஜஸ்தானைச் சேர்ந்த, 110 பக்தர்கள், மார்ச், 19ல் ரயிலில் புறப்பட்டு, மார்ச், 21ல் ராமேஸ்வரம் வந்திறங்கினர். இவர்கள், கோவிலில் தரிசிக்க முடியாமலும், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல ரயில் வசதி இன்றியும், ராமேஸ்வரத்தில் தனியார் விடுதியில் முடங்கி உள்ளனர்.ஓட்டல்களும் மூடப்பட்டதால், உணவுக்கு வழியின்றி தவித்தனர். சன்னிதி தெருவில் உள்ள சீதாராம் தாஸ் பாபா மடத்தில், இவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.தாசில்தார் அப்துல்ஜபார், அரிசி, காய்கறி, பருப்பு வழங்கி, விடுதியில் சமைத்து சாப்பிடவும், வெளியில் நடமாட கூடாது எனவும், அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...