Sunday, March 1, 2020

இதே நாளில் அன்று

Updated : பிப் 29, 2020 21:50 | Added : பிப் 29, 2020 21:48

மார்ச் 1, 1910

எம்.கே.தியாகராஜ பாகவதர்: நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில், கிருஷ்ணமூர்த்தி --- மாணிக்கத்தம்மாள் தம்பதிக்கு, 1910, மார்ச் 1ல் பிறந்தார். கர்நாடக இசையை, முறையாக கற்றுத் தேர்ந்த இவர், 1926ல், திருச்சி, பொன்மலையில்,பவளக்கொடிஎன்ற நாடகத்தில், அர்ஜுனனாக நடித்தார். அது, 1934ல், திரைப்படமாக வெளியாகி, வெற்றி பெற்றது. அதில் இடம் பெற்றிருந்த, 55 பாடல்களில், 22 பாடல்களை, தியாகராஜ பாகவதர் பாடியிருந்தார்.இவர் நடித்த,நவீன சாரங்கதாரா, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக் குமார், சிவகவி, ஹரிதாஸ்ஆகியவை, வெற்றிப் படங்களாக அமைந்தன.ஹரிதாஸ்படத்தில் இடம் பெற்ற, 'மன்மத லீலையை...' என்ற பாடல் பிரபலமானது. லட்சுமிகாந்தன் என்பவர் கொலை வழக்கில், பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர். பின், வழக்கில் இருந்து, இருவரும் விடுவிக்கப்பட்டனர். சிறையிலிருந்து வெளி வந்ததும், இவர் நடித்த,ராஜமுக்தி, அமரகவிஉள்ளிட்ட படங்கள், சரிவர ஓடவில்லை. 1959, நவ., 1ல் காலமானார்.அவர் பிறந்த தினம் இன்று.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...