Friday, June 9, 2017

விமான பயணத்திற்கு கட்டாயமாகிறது ஆதார்

பதிவு செய்த நாள்08ஜூன்2017 20:07




விமான பயணத்திற்கு கட்டாயமாகிறது ஆதார்

புதுடில்லி : விமான பயணம் செல்ல விரும்புபவர்கள், இனி டிக்கெட் புக் செய்யும்போது ஆதார் எண் அல்லது பான் எண் கொடுப்பது கட்டாயமாக இருப்பதாக மத்திய விமானத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, அடுத்த 3 முதல் 4 மாதங்களில் அறிக்கையை தயார் செய்ய உள்ளது. இந்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றவுடன், உடனடியாக அமலுக்கு வர உள்ளதாக சின்கா கூறினார்.
இன்று வரதராஜபெருமாள் கோவில் கருட சேவை விழா காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றம்



காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் கருட சேவை விழா இன்று நடைபெறுவதையொட்டி காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றம்.
ஜூன் 08, 2017, 03:45 AM

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் கருட சேவை விழா இன்று நடைபெறுவதையொட்டி காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தெரிவித்துள்ளார்.

கருட சேவை விழா

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இன்று(வியாழக்கிழமை) கருட சேவை விழா நடக்கிறது இதையொட்டி காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

* செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் இருந்து காஞ்சீபுரம் வரும் அனைத்து பஸ்களும், முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் வழியாக களியனூர், வையாவூர், பழைய ரெயில் நிலையம், ரெயில்வே ரோடு, சி.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ரோடு வழியாக காஞ்சீபுரம் நகர பஸ் நிலையத்தை வந்தடைய வேண்டும். அதே வழியில் திரும்ப செல்ல வேண்டும்.

* வேலூர் மற்றும் அரக்கோணம் பகுதிகளில் இருந்து காஞ்சீபுரம் வரும் அனைத்து பஸ்களும் ஒலிமுகமது பேட்டை தற்காலிக பஸ் நிலையம் வந்து பயணிகளை இறக்கிவிட்டு அதே வழியில் வேலூர் மற்றும் அரக்கோணம் செல்லவேண்டும்.

சென்னையில் இருந்து...

* சென்னை, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் இருந்து காஞ்சீபுரம் வரும் பஸ்கள், பொன்னேரிக்கரை, அப்பாராவ் தெரு சந்திப்பு, தாமல்வார் தெரு சர்ச், பூக்கடைசத்திரம், கிழக்கு ராஜவீதி வழியாக நகர பஸ் நிலையத்தை வந்தடைந்து பின்னர் பூக்கடை சத்திரம், கம்மாளத்தெரு, புதிய ரெயில் நிலையம் வழியாக செல்ல வேண்டும்.

* வந்தவாசி, செய்யார், உத்திரமேரூர் பகுதிகளில் இருந்து காஞ்சீபுரம் வரும் பஸ்கள் செவிலிமேடு சந்திப்பு வழியாக சென்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செவிலிமேடு வழியாக வந்தவாசி, செய்யார் மற்றும் உத்திரமேரூர் செல்லவேண்டும்.

* வந்தவாசி, செய்யார் பகுதியிகளில் இருந்து காஞ்சீபுரம் வழியாக சென்னை செல்லும் பஸ்கள் செவிலிமேடு சந்திப்பு வழியாக காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தற்காலிக பஸ் நிலையம் வந்து பின்னர் செவிலிமேடு, புறவழிச்சாலை, கீழம்பி வழியாக சென்னை செல்லவேண்டும்.

* சென்னையில் இருந்து காஞ்சீபுரம் வழியாக வந்தவாசி, செய்யார் செல்லும் பஸ்கள் பொன்னேரிக்கரை, வெள்ளைகேட், ஒலிமுகமதுபேட்டை தற்காலிக பஸ் நிலையம் வந்து பின்னர் கீழம்பி புறவழிச்சாலை வழியாக வந்தவாசி, செய்யார் செல்ல வேண்டும்.

தொழிற்சாலை வாகனங்கள்

* பல்வேறு தொழிற்சாலைகளின் வாகனங்கள் அனைத்தும் இன்று ஒருநாள் மட்டும் காஞ்சீபுரம் நகருக்குள் வருவதை தவிர்த்து நகருக்கு வெளியே நிறுத்தும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்
செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து



செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

ஜூன் 08, 2017, 04:00 AM
செங்கல்பட்டு,

காஞ்சீபுரத்தை அடுத்த திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி நேற்று மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் நேற்று மதியம் 12.20 மணியளவில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.

சிறிது தூரம் சென்றதும் அந்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு

தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தடம் புரண்ட ரெயில் அப்புறப்படுத்தப்பட்டு தண்டவாளம் சீரமைக்கப்பட்ட பின்னர் ரெயில்கள் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டன.

ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளதானதால் அந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க கல்குவாரி தண்ணீர் இன்று முதல் வினியோகம்




சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க கல்குவாரி தண்ணீர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
ஜூன் 09, 2017, 05:00 AM]

சென்னை,

மழை இல்லாததால் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் முற்றிலும் வறண்டு விட்டது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி உள்ள நீரை பயன்படுத்த சென்னை குடிநீர் வாரியம் ஆய்வு செய்தது.

இதனையடுத்து முதல்கட்டமாக காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே சிக்கராயபுரத்தில் உள்ள 22–க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பல அடி ஆழத்தில் உள்ள குவாரியில் இருந்து தண்ணீரை எடுப்பது குறித்து பல்வேறு ஆய்வுகள், சோதனைகள் செய்யப்பட்டன. தேங்கிய நீரின் தரத்தை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

கல்குவாரி தண்ணீர்

செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் கல்குவாரி நீர் சுத்திகரிக்கப்பட்டது. அப்போது அந்த நீர் குடிநீருக்கு உகந்தது என தெரியவந்தது. இதனையடுத்து குவாரிகளில் உள்ள நீரை குழாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்து சுத்திகரித்து குடிநீர் வினியோகத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ரூ.13.63 கோடி மதிப்பீட்டில் திட்டம் வடிவமைக்கப்பட்டு, தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

இவ்வாறு தினமும் 3 கோடி லிட்டர் வீதம் 300 கோடி லிட்டர் நீர் 100 நாட்களுக்கு பெற திட்டமிடப்பட்டது. இதற்காக 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள், நீரேற்றுதலுக்கான பம்புசெட்டுகள் மற்றும் ஜெனரேட்டர்கள் அமைக்கும் பணிகள் நடந்தன. இந்த பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்டன.

இன்று வினியோகம்

இதனைத்தொடர்ந்து கடந்த 2–ந்தேதி முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரம் திருப்திகரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை பெருநகரத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் குவாரி நீர் இன்று (வெள்ளிக் கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

இந்த பணியை குறைவான காலகட்டத்தில் வடிவமைத்து நிறைவேற்றிய தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்பொறியாளர் பரஞ்ஜோதி, உதவி செயற்பொறியாளர்கள் ஜெய்சங்கர், லெனின், சதீஷ், ஆகியோரை சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.அருண் ராய் பாராட்டினார்.

மேற்கண்ட தகவலை அதிகாரிகள் கூறினார்கள்.

தலையங்கம்
ஒரே நேரத்தில் பாராளுமன்றம், சட்டசபை தேர்தல்கள்



இந்திய அரசியல் சட்டப்படி, மத்திய அரசாங்கத்தை நிர்வகிக்க பாராளுமன்ற தேர்தலும், மாநில அரசாங்கங்களை நிர்வகிக்க சட்டசபை தேர்தல்களும் நடத்தப்படுகின்றன.

ஜூன் 09, 03:00 AM
இந்திய அரசியல் சட்டப்படி, மத்திய அரசாங்கத்தை நிர்வகிக்க பாராளுமன்ற தேர்தலும், மாநில அரசாங்கங்களை நிர்வகிக்க சட்டசபை தேர்தல்களும் நடத்தப்படுகின்றன. இதுதவிர, கிராம பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன்கள், மாவட்ட பஞ்சாயத்துக்கள், நகரசபைகள், மாநகராட்சிகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இவை எல்லாவற்றிற்குமே பதவிகாலம் 5 ஆண்டுகள்தான். கடந்த பல ஆண்டுகளாகவே பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமே என்ற எண்ணம் வலுத்து வருகிறது. மத்திய அரசாங்கம் இதை தீவிரமாக சிந்தித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இணையதளத்தில் பொதுமக்களிடம் இதற்கான கருத்துகளை கேட்டறிந்தது. பொதுமக்களின் ஆதரவு இதற்கு பெருமளவில் இருந்தது. ‘நிதி ஆயோக் குழு’ கூட்டத்திலும் பிரதமர் நரேந்திரமோடி இந்த கருத்தை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

ஒவ்வொருமுறையும் பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கு ரூ.4 ஆயிரம் கோடி வரை செலவாகிறது. இதுபோல, சட்டசபை தேர்தல்கள் நடத்த மாநில அரசாங்கங்களுக்கு ரூ.300 கோடி வரை செலவாகிறது. உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தவும் கணிசமான தொகை செலவாகிக் கொண்டிருக்கிறது. ஆக, தேர்தலுக்காக ஆகும் செலவு மட்டும் இவ்வளவு அதிகமாவதை தவிர்க்க வேண்டுமென்றால், 3 தேர்தல்களையும் ஒன்றாக வைத்தால் மொத்தமே ரூ.4 ஆயிரத்து 500 கோடிதான் செலவாகும். இதுமட்டுமல்லாமல், ஒவ்வொருமுறையும், தேர்தல் நடத்துவதற்கு அரசாங்க ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் போன்ற பல்வேறு பணிகளில் இருப்பவர்களை அனுப்ப வேண்டிய நிலை இருப்பதால், அவர்களின் அன்றாடபணிகளும் பாதிக்கப்படுகின்றன. அந்த நேரங்களில் பொதுமக்களுக்கு ஆற்றவேண்டிய சேவைகள் தடைபடுகின்றன. இதுமட்டுமல்லாமல், ஒவ்வொருமுறையும் தேர்தல் நடக்கும்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடுவதால், அரசாங்கத்தால் எந்த அறிவிப்புகளையோ அல்லது நலத்திட்டங்களையோ செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

இதற்கு எதிர்மறையான சில கருத்துகளும் கூறப்படுகின்றன. பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கவேண்டும் என்று முடிவெடுத்தால், ஒரு சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கும். ஒரு சில மாநிலங்களில் அதன் பதவி காலத்தை நீட்டிக்கவேண்டிய தேவையும் இருக்கும். ஆக, அரசியல் சட்டத்தை இதற்காக மாற்ற வேண்டியதிருக்கும் என்று சில கருத்து கூறப்படுகிறது. ஒருவேளை பாராளுமன்றத்திலோ, அல்லது ஒரு சில சட்டசபைகளிலோ எந்தக்கட்சிக்கும் முழுமையான மெஜாரிட்டி கிடைக்காமல் மறுதேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், இந்த ஒரே சமயத்தில் தேர்தல் என்ற தார்ப்பரியம் என்ன ஆகும்? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், இதெல்லாம் எப்போதாவது ஓரிரு தேர்தல்களில் மட்டும் நடைபெறும் என்பதால், அதை பெரிதாக பொருட் படுத்த வேண்டியதில்லை. இதேபோல், ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடந்தால், மக்களின் தேர்வு ஒரு சிலருக்கு சாதகமாக அமையவும் வாய்ப்பு இருக்கிறது. இது, சிறிய கட்சிகளை அழிப்பதற்கான முயற்சியாக போய்விடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அப்படியொரு நிலைமையும், வாய்ப்பும் இல்லை. மக்கள் தெளிவானவர்கள். 1951–ம் ஆண்டு முதல் 1967 வரை பாராளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தல்களும் ஒன்றாக நடந்திருக்கிறது. 1989–ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பின்பு உள்ள நிலைமையை எடுத்துக் கொண்டால், பல்வேறு மாநிலங்களில் 31 முறை ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், 1991, 1996–ம் ஆண்டுகளில் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தாலும், மத்திய அரசாங்கத்துக்கும், மாநில அரசாங்கங்களுக்கும் மக்கள் வேறு வேறு கட்சிகளுக்குத்தான் ஓட்டுப்போட்டிருக்கிறார்கள். ஆகவே, வாக்காளர்கள் குழம்பி விடுவார்கள் என்ற கருத்துக்கே இடமில்லை. எனவே, பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும், ஏன் உள்ளாட்சிகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதே சாலச் சிறந்ததாகும்.
மாநில செய்திகள்
ஓசூர், சேலம், நெய்வேலிக்கு விமான சேவை: தமிழக அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்து



குறைந்த கட்டணத்தில் மக்கள் விமான பயணம் செய்யும் திட்டத்தின்படி ஓசூர், சேலம், நெய்வேலிக்கு விமான சேவை தொடங்க தமிழக அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜூன் 09, 2017, 05:15 AM

சென்னை,மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே உள்ள விமான ஓடுதளங்கள் மற்றும் விமான நிலையங்களை மேம்படுத்தவும், நாட்டில் பயன்பாட்டில் இல்லாத மற்றும் குறைவான பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்கள் இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதற்காக, தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையை 21.10.2016 அன்று வெளியிட்டது.

மண்டலங்களுக்குள் விமான போக்குவரத்து இணைப்புத் திட்டத்தை (உதான்) தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு ஏதுவாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.ஓசூர், சேலம், நெய்வேலி

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மண்டலங்களுக்குள் விமான போக்குவரத்தை எளிமையாக்கி, குறைவான கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணம் மேற்கொள்ள ஏதுவாக விமான சேவை வழங்குவது ஆகும்.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஓசூர், சேலம் மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களில் இத்திட்டத்தின் கீழ் விமானச் சேவைகள் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் சிறிய நகரங்களில் விமானச் சேவைகள் தொடங்கப்பட்டு, அந்த நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி அடைந்து, தொழில் மற்றும் வர்த்தகம் பெருகி, வேலைவாய்ப்பு அதிகரிக்க வழிவகை ஏற்படும்.அமைச்சர், அதிகாரிகள்

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் ஆர்.என்.சவுபே, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார், நில நிர்வாக ஆணையர் மோகன் பியாரெ, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் குருபிரசாத் மொகபாத்ரா, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் உஷா பாதே மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thursday, June 8, 2017

Net must for Ph.D at category 3 varsities

NET must for PhD at Category 3 varsities

TNN | Jun 6, 2017, 06.06 AM IST

CHENNAI: There is a huge incentive for universities to be in Category 1 of the newly graded autonomy regulation, the draft of which was put up by the UGC last week. However, there is a major disincentive for research students who are planning to enrol in universities which are graded in Category 3. They will be allowed to pursue a PhD degree only if they clear the National Eligibility Test (NET), State Level Eligibility Test (SLET) or other State Eligibility Tests (SET).

Universities graded in Category 3 by the UGC have a National Institute Ranking Framework (NIRF) rank of 100+ and a National Assessment and Accreditation Council (NAAC) score of less than three. According to a member of the panel which came up with the new regulations, these are institutions which need to pull up their socks as far as quality of higher education is concerned.

Currently the only eligibility criteria for students to enrol for a PhD in Tamil Nadu are a undergraduate and Masters degree with 55% marks in aggregate. PhD is also a pre-requisite for getting teaching jobs in the state along with the eligibility tests. Many students in Tamil Nadu feel that the eligibility tests are difficult and try to get the PhD degree to be eligible for teaching posts.

The catch in the new UGC regulations is that even if a college has an NIRF ranking between 1-100 or has a NAAC accreditation score higher than three, it will still have to follow the new PhD regulations if the University it is affiliated to falls in Category 3.

Sources in the UGC panel which framed the new regulations said this was done with an eye to improve the quality of research and ensure that PhDs are awarded only after proper scrutiny and following best standards. "There have been concerns, especially in Tamil Nadu, over the way in which PhDs were being awarded by the dozen, raising questions about the quality of research," a source said.

In the new regulation, UGC has also mentioned that NET/SLET/SET shall not be required as eligibility criteria for PhDs in such programmes for which the exams are not conducted.

Tuesday, June 6, 2017

அரசுப் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்க விடுமுறை ஊதியத்தை செலவிடும் ஆசிரியர்

பொன்.தங்கராஜ்

கே.சுரேஷ்

கோடை விடுமுறைக் காலத்தில் பெறும் ஊதியம் முழுவதையும் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கச் செலவிட்டு வருகிறார் புதுக்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்.தங்கராஜ்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் பொன்.தங்கராஜ். இவர், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் கோடை விடுமுறைக் கால ஊதியத்தை, அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்காக செலவிட்டு ஊக்கம் அளித்து வருகிறார்
தனது கல்விப் பணி குறித்து ‘தி இந்து’விடம் கூறியதாவது:
‘‘எனக்கு 49-வது வயதில்தான் (2010) ஆசிரியர் பணி கிடைத்து, புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். சமூக அறிவியல் பாடம், போட்டித் தேர்வுகளுக்கு மிக முக்கியமானது. இதனால், இந்தப் பாடத்தைப் பற்றிய புரிதலை மாணவிகளிடையே ஏற்படுத்தவும், இப்பள்ளியை நாடிவரும் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையிலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கி வருகிறேன்.
இதுவரை 5 மாணவிகள் பரிசுத் தொகை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 3 மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, 99 மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ரூ.1000 வீதமும், இந்த பாடத்தை ஆங்கில வழியில் படித்து நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும், நூலகங்களுக்கும் புரவலர் நிதி வழங்கி வருகிறேன்.
மேலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற அரசுப் பணிகளுக்கு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்பதால், இந்த பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், சிறப்புக் கையேடும் வழங்கப்படுகிறது. கோடை விடுமுறையான மே மாதத்துக்குரிய எனது ஊதியம் முழுவதையும், இப்பணிகளுக் காகவே செலவிட்டு வருகிறேன். மாணவப் பருவத்தில் நான் சந்தித்த வறுமையின் தாக்கமே இதற்குக் காரணம்’’ என்கிறார் ஆசிரியர் பொன்.தங்கராஜ்.
UGC sets new regulations, loosens grip on universities and how they function

As a part of new regulations, the UGC is allowing universities to launch new course and departments without the commission’s approval, as well as appoint foreign faculty.EDUCATION Updated: Jun 03, 2017 14:13 IST

Neelam Pandey
Hindustan Times, New Delhi


The University Grants Commission (UGC)’s new regulations give universities more autonomy based on their ranking and accreditation. (Thinkstock)

Central varsities such as Delhi University will soon be able to launch new departments, programmes, schools and centres without the approval of the University Grants Commission (UGC), albeit in self-financing mode.

This facility will be extended to some state universities too.

The UGC has also proposed new rules for private deemed-to-be universities, such as BITS Pilani, allowing them to open as many off-campus centres as they want across the country.

In other proposals for central universities, the commission has allowed them to hire international talent ranging up to 20% of its total faculty strength and fill up to 20% of its student seats with aspirants from other countries. They will also be able to plan their own fee structure for self-financing courses.

The education body has approved a new set of regulations, termed as the UGC (Categorisation of Universities for Grant of Graded Autonomy) Regulations-2017. Under this, universities have been classified into three categories based on their National Assessment and Accreditation Council (NAAC) accreditation and National Institute Ranking Framework (NIRF) rankings. The first two categories will be accorded greater autonomy by the UGC.

To be in category I, a university must have NAAC accreditation with a score of 3.5 or above. Otherwise, it should figure in the NIRF’s list of top 50 institutions for two consecutive years. Institutions such as Delhi University, Jawaharlal Nehru University, Jamia Millia Islamia and Hyderabad University figure in the NIRF’s top 10 list.

The commission has sought public feedback for these new rules and guidelines till June 15. After that, a final guideline will be issued.

“Central universities and state universities in category I will be able to open research parks, incubation centres and university society linkage centres in self-financing mode either on its own, or in partnership with private partners, without the UGC’s approval,” the proposed rules state.

A senior UGC official said central universities face unnecessary hurdles while launching new courses and departments. “So, we want to free at least the top 100 universities from the inspection regime – giving them greater freedom. If Delhi University wants to start courses in management, they can go ahead. However, they will have to do it with their own resources because we can’t fund everything. The funding they currently receive will remain,” said a senior UGC official.

The deemed-to-be universities will also have to figure in the tier I category for gaining the eligibility to launch unlimited off-campus centres. At present, they can open only two in five years.

The parent universities will simply have to send a send a report regarding the off-campus centres to the UGC, and no inspection will be conducted. They can also collaborate with foreign universities, and start new courses and departments, without seeking the commission’s approval.

Top varsities may get more autonomy
Universities performing poorly likely to face funding cuts

Subscribe to our newsletter.
Prashant K. Nanda


Union HRD minister Prakash Javadekar. 

Ramesh Pathania/Mint

New Delhi: The human resource development ministry is introducing a carrot and stick approach under which the performing universities will get greater autonomy and poor performers will get their funding cut. To implement the initiative, the ministry will divide the universities into three categories based on their performance on several parameters including the teaching-learning environment, research and industry income. “We are looking to classify universities into three categories and this is not based on NAAC (National Assessment and Accreditation Council) grades,” HRD minister Prakash Javadekar said.

India has currently 759 universities including 47 central universities, 350 state-run universities, 239 private universities and 123 deemed-to-be universities. At least 37,000 colleges are affiliated to these institutions and it is believed that the performance of a university impacts the education outcome of a majority of the affiliated collages. Most of these universities are far from being well run and none of them make it to the top 200 universities list in global rankings. “What we are trying is to improve the quality and will do what is required to improve the education outcome,” Javadekar said.

Another HRD ministry official, who declined to be named, said that while the ministry is mulling “maximum autonomy” to top performers in the classification list, the category C universities will see a fund cut. Government-supported universities and colleges at the central and state level get funds from the University Grants Commission (UGC). “Many government colleges and universities are not up to the mark. The move will wake them up from the slumber,” the official said.

The official said the plan is on the table and a decision on this will be taken soon. According to the official, the top performers will get maximum autonomy—up to 90%, the B-category will get 50% autonomy and the C category will undergo maximum regulation and scrutiny.

Maximum autonomy may entail freedom in deciding course structure, course fees, research partnership and little interference in the regular academic and administrative functioning of these institutions. And the worst entails regular audits, more scrutiny by regulators such as UGC and All India Council of Technical Education, more disclosures, restricted permission to start new courses or expand existing ones.

The government understands that the need for quality higher education in India is high and it cannot do everything on its own.

“By giving quality institutions after due scrutiny more freedom will bring more quality players to the space and thus more investments. It will be good for government, private players and the students at large,” said Vineet Gupta, pro vice-chancellor of Ashoka University, a private liberal arts focused university established by a group of industry leaders through collective philanthropy.
அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும்..! செங்கோட்டையனின் அதிரடி பலிக்குமா?

வெ.நீலகண்டன்


பள்ளிக் கல்வித் துறையில், அண்மைக்காலமாக ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கிய பிறகு, தமிழக பள்ளிக் கல்வியின் தரம்குறித்த விவாதங்கள் உச்சம்பெற்றன. இந்தச் சூழலில் பள்ளிக் கல்வித் துறையின் செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும்வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.



ஏற்கெனவே, தனியார் பள்ளிகளின் முதலீடாக இருந்த ரேங்கிங் நடைமுறைக்கு முடிவுகட்டி, 10 மற்றும் +2 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முதல் இடம், இரண்டாம் இடம் என்ற பதற்றமின்றி, மாணவர்கள் முதன்முறையாகத் தேர்வு முடிவுகளை எதிர்கொண்டார்கள். ரேங்கிங்கை வைத்து மாணவர்களை ஈர்க்கும் 'பிராய்லர் கோழிப் பள்ளி'களுக்கு இது பெரும்பின்னடைவைத் தந்தது. கல்வித் துறையில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க மாற்றமாக இது கருதப்பட்டது. இத்துடன், மேலும் பல அறிவிப்புகளையும் வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை.

பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் வழிகாட்ட, தமிழகத்தின் முக்கியக் கல்வியாளர்கள், படைப்பாளிகள், பேராசிரியர்கள்கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வாரம்தோறும் கூடி விவாதித்து ஆலோசனைகளை வழங்குகிறது.

இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்காக நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதைப்போல, அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் தேசிய அளவில் நுழைவுத்தேர்வு கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 2020-2021 கல்வி ஆண்டு முதல் தேசிய அளவில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை ஒருங்கிணைத்து அதையும் அகில இந்திய தேர்வுக்குள் கொண்டுவரவும் முடிவுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் அந்தத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், மாநிலப் பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.



தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டங்களில் புதிய பகுதிகளைச் சேர்க்கவும் முடிவுசெய்திருக்கிறார்கள். இந்த ஆண்டு முதல் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் 'தகவல் தொழில்நுட்பவியல்' என்ற பாடம் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு இன்னோர் அதிர்ச்சி வைத்தியத்தையும் செய்திருக்கிறார் உதயச்சந்திரன். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, மதிப்பெண்தான் அடித்தளம். பொதுத்தேர்வுகளில், பழைய மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணைக் காட்டித்தான் ஒவ்வோர் ஆண்டும் புதிய மாணவர்களைச் சேர்க்கிறார்கள். மாணவர்களை அதிக மதிப்பெண் பெறச் செய்வதற்காக பல உத்திகளைக் கையாள்கிறார்கள். 99.9 சதவிகிதம் தனியார் பள்ளிகளில், 9 மற்றும் 11-ம் வகுப்புப் பாடங்களை நடத்துவதேயில்லை. 9-ம் வகுப்பில் ஒன்றிரண்டு மாதங்கள் மட்டும் அந்த வகுப்புக்கான பாடங்களை நடத்திவிட்டு, பிறகு 10-ம் வகுப்பு பாடங்களை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். +1-லும் அப்படித்தான் நடக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள், ஓராண்டு படித்து எழுதும் தேர்வை, தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்து எழுதி, அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். மதிப்பெண்ணே எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணியாக இருப்பதால், பெற்றோர் தனியார் பள்ளிகளின் வலையில் விழுகிறார்கள்.

தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தைக் குலைத்தது, தனியார் பள்ளிகளின் இந்தச் செயல்பாடுதான். +1, +2 இரண்டும் இரண்டு தனித்தனி வகுப்புகள் அல்ல. பட்டப்படிப்பைப்போல ஒரு கோர்ஸ். ஒரு தலைப்பில், தொடக்கநிலைப் பாடங்கள் +1-லும், அவற்றின் தொடர்ச்சி +2-விலும் இருக்கும். இரண்டையும் படித்துத் தேர்ந்தால்தான் அந்தத் தலைப்பின் உள்ளடக்கத்தை மாணவன் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர் படிப்புகளுமே +1, +2 பாடங்களை அடிப்படையாகக்கொண்டவைதான்.

+2-வில் மாநில அளவில் இடம்பெற்ற மாணவர்கள்கூட உயர் படிப்புகளில் அரியர் வைக்கக் காரணம், +1 படிக்காததுதான்.
மேலும், தேசிய அளவில் நடக்கும் உயர்கல்விக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் +1 பாடங்களிலிருந்து 50 சதவிகிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அண்மையில் நடந்த 'நீட்' தேர்வில் மாணவர்கள் அதை உணர்ந்தார்கள். +1 படிக்காததால்தான் இதுபோன்ற தேர்வுகளில் பின்தங்குகிறார்கள். ஆந்திராவில் +1, +2 படிப்புகளை 'ஜூனியர் காலேஜ்' என்ற பெயரில் நடத்துகிறார்கள். இரண்டுக்கும் சரிசமமான முக்கியத்துவம். ஐ.ஐ.டி., எய்ம்ஸ், ஐ.ஐ.எஸ்.சி உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆந்திர மாணவர்கள் நிறைந்திருக்கக் காரணம் இதுதான்.

தமிழகத்தில் நிலவும் இந்த அவலத்தை நெடுங்காலமாகக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியபோதும், கல்வித் துறை அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. தனியார் பள்ளிகளின் செயல்பாட்டைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தனியார் பள்ளிகளைப்போலவே அதிக மதிப்பெண்ணைப் பெறும்வகையில் மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் விரட்டினார்கள் அதிகாரிகள். பூனையைப் பார்த்து புலி தன் வாலைச் சுருட்டிக்கொண்ட கதையாக, அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் போன தவறான திசைக்குத் திருப்பிவிடப்பட்டன.

தமிழகத்தில் இப்போதுதான் அந்த அவலத்துக்கு முடிவுகட்டப்பட்டிருக்கிறது. `2017-18 கல்வி ஆண்டு முதல், +1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பெண்ணும் முக்கியத்துவம் பெறும். +2-வுக்கு இதுவரை 1,200 மதிப்பெண்ணுக்குத் தேர்வு நடத்தப்பட்டுவந்தது. இனி, அது 600 மதிப்பெண்ணுக்கான தேர்வாகக் குறைக்கப்படும். அதோடு +1-வுக்கான 600 மதிப்பெண்ணையும் சேர்த்து 1,200 மதிப்பெண்ணாகக் கணக்கிட்டு மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படும்.

சாப்பிட்டதைத் துளியளவும் கிரகிக்காமல், அப்படியே வாந்தி எடுப்பதைப்போல பாடத்தின் பின்பக்கம் உள்ள கேள்விகளுக்கான விடைகளை மட்டும் மனப்பாடம் செய்து, தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதுதான் இதுவரையிலான நடைமுறை. சுயமாகச் சிந்திக்கவிடாமல், கேள்விகள் கேட்கவிடாமல் வெறும் மனப்பாடப் பொம்மைகளாக மாணவர்கள் உருவாக்கப்பட்டார்கள். அது உயர்கல்வியில் தமிழகத்துக்குப் பெரும் அவமானத்தையும் பின்னடைவையும் உருவாக்கியது. ஒரு கேள்வி, பாடத்திட்டத்தைத் தாண்டி பொதுவாகக் கேட்கப்பட்டாலும் அதற்குக் 'கருணை மதிப்பெண் கொடுங்கள்' என்று மாணவர்களும் ஆசிரியர்களும் கெஞ்சும் நிலை இருந்தது. இப்போது அதையும் கவனத்தில்கொண்டிருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. முதல் கட்டமாக ஒவ்வொரு பாடத்திலும் 10 மதிப்பெண்ணுக்குச் சுயமாகச் சிந்தித்து விடையளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.

கல்வி உரிமைச் சட்டப்படி, ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கவேண்டிய 25 சதவிகித இடத்தை சரிவர வழங்காமல் போங்கு காட்டிக்கொண்டிருந்த தனியார் பள்ளிகளுக்கு, கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வி ஆண்டு முதலே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், இனிவரும் காலங்களில் அதில் வெளிப்படைத்தன்மை உருவாகும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.



ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அரசியல் காழ்ப்புணர்வால் கைவிடப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மேம்படுத்தும் பணிகள், பாடநூல் நிறுவனம் வெளியிட்டுக் கைவிடப்பட்ட அரிய பல நூல்களை மீண்டும் வெளியிடும் பணி, கிராமப்புற, மாவட்ட நூலகங்களை மேம்படுத்தும் பணி எனப் பள்ளிக் கல்வித் துறை ஆக்கபூர்வமான திசையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்தச் சூழலில் நாளை (6.6.2017) 'இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் சில அறிவிப்புகள் வெளியிடப்படும்' என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். இது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. சமீபத்திய கணக்குப்படி நான்கு லட்சம் ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பாதிப்பேர் கூட தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்கவில்லை. மற்ற துறையினரை விடுங்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..? தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 27 சதவிகித ஆசிரியர்கள் மட்டுமே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். 73 சதவிகித ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளைத்தான் நாடுகிறார்கள். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 87 சதவிகிதம் பேர் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில்தான் சேர்க்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், கல்விக்காக அரசு செலவிட்டுள்ள தொகை 86,000 கோடி ரூபாய். இதில் பெரும்பகுதி செலவிடப்பட்டது ஆசிரியர்களுக்கான சம்பளமாகத்தான். அரசுப் பள்ளிகளில் பணியாற்றிக்கொண்டு, தேசத்தின் பெரும்தொகையைச் சம்பளமாகப் பெரும் ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காததை எப்படிப் புரிந்துகொள்வது? இதைவிட அவமானகரமான செயல் வேறென்ன இருக்க முடியும்?

`அரசுப் பள்ளி தரமாக இல்லை' என ஆசிரியர்கள் காரணம் சொல்வார்களேயானால், அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டியது அந்த ஆசிரியர்கள்தான். தீப்பெட்டி முதல் மெழுகுவத்தி வரை எந்தப் பொருள் வாங்கினாலும் அதற்கான விலையோடு சேர்த்து கல்விக்கான வரியையும் கொட்டிக்கொடுக்கிறான் அப்பாவி இந்தியன். அந்த வரியில்தான் ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. அதைப் பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு, தனியார் பள்ளிக்கு அனுப்ப வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைக்கு ஆசிரியராக பணியாற்றுவது எந்த வகையில் நியாயம்?

நாளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்போகும், `இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைக்கும் அறிவிப்புகளில், `அரசு ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும்' என்ற அறிவிப்பும் இடம்பெறலாம்' என்கிறார்கள் கல்வியாளர்கள்.

`பள்ளிகளில் உடற்கல்வி என்பது சம்பிரதாயமான வகுப்பாகவே இருந்துவருகிறது. அதை வலுப்படுத்தி, விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் காலியாகவுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பும் வரக்கூடும். மாணவர்களுக்கு ரத்த வகை, ஆதார் எண்கள் அடங்கிய ஸ்மார்ட்கார்டு வழங்கும் அறிவிப்பும் வரலாம். குறிப்பாக, பள்ளிப் பாடத்திட்டங்களை உருவாக்கும் குழுவில் இதுவரை இல்லாதவகையில், விஞ்ஞானிகள், துணைவேந்தர்கள், ஐ.ஐ.டி பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கும் அறிவிப்பும் வரலாம். ஒவ்வொரு பள்ளிக்கும் துப்புரவுப் பணிக்காக 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் இருவர் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

தற்போதுள்ள அரசியல் சூழலில் மத்திய அரசைக் 'குளிர்விக்கும்' வகையில் பள்ளிகளில் தினந்தோறும் யோகாவைப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படலாம்' என்கிறார்கள். அந்தப் பயிற்சிகளை மனவளக்கலை மன்றத்தைச் சேர்ந்தவர்கள் அளிப்பார்கள்.
எல்லாம் சரி... பள்ளியின் சூழலையும் பாடத்திட்டங்களின் தன்மையையும் மாற்றலாம். ஆசிரியர்களை? `இந்தியப் பள்ளிகளில் பணியாற்றும் 23.6 சதவிகித ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதில்லை. அல்லது பள்ளியில் இருப்பதில்லை' என்கிறது உலக வங்கியின் அறிக்கை. ஆசிரியர்கள் மனதுவைத்தால் மட்டுமே மாற்றம் சாத்தியமாகும். இந்தக் காலமாற்றத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தகுதிப்படுத்த வேண்டும். தற்போதுவரை அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சம்பிரதாயமான புத்தாக்கப் பயிற்சிகளை அள்ளிக்கட்டி பரணில் போட்டுவிட்டு, தொழில்நுட்ப வல்லுநர்களையும், தகுதிவாய்ந்த கல்வியாளர்களையும் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக, கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். இருண்மையான, வழக்கமான கற்பித்தல் முறை மாற்றப்பட்டு மாணவர்களை மூலமாகக்கொண்டு வகுப்பறைகள் திட்டமிடப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கானதாக இருக்கும் வகுப்பறைகள், மாணவர்களுக்கானதாக மாற்றப்பட வேண்டும்.



அரசின் கடமை இத்துடன் முடிந்துவிடவில்லை. 'பொதுப்பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின் பொதுச்செயலாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு சுட்டிக்காட்டுவதைப்போல, நிதி ஒதுக்கீட்டில் திறந்த மனதோடு செயல்பட வேண்டும். ``திட்டங்களை நிறைவேற்ற நிறைய நிதி தேவை. `+1, +2 வகுப்புகளில் 10 மதிப்பெண் , அகமதிப்பெண்ணாக (இன்டர்னல் மார்க்) வழங்கப்படும்' என அறிவித்திருக்கிறார்கள். அதற்கு மாணவர்களுக்குச் செயல்பாடுகளைக் கற்றுத்தர வேண்டும். தவறு செய்தால் திருத்த வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே இருந்தால் மட்டுமே இது சாத்தியம். கற்றல், கற்பித்தல் தவிர, வேறு எந்தப் பணிகளும் ஆசிரியர்களுக்குத் தரக் கூடாது" என்கிற பிரின்ஸ் கஜேந்திரபாபுவின் கருத்து முக்கியமானது.

காமராஜர் ஆட்சியில் 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். பிறகு, ஆசிரியர் - மாணவர்விகிதம் 1:40 என அறிவிக்கப்பட்டது. இப்போது 1:24 ஆக குறைந்திருக்கிறது. இதில் பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றுமில்லை. ஏராளமான பள்ளிகள் 'இணைப்பு' என்ற பெயரில் மூடப்பட்டுள்ளன. ‘மூடுதல்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘இணைத்தல்’ என்ற வார்த்தையை அரசு பயன்படுத்தியிருக்கிறது. 2014-ம் ஆண்டு வரை இந்தியாவில் 80,647 பள்ளிகள் 'இணைக்கப்பட்டிருக்கின்றன'. தமிழகத்தில் இணைப்பால் தொலைந்துபோன பள்ளிகளின் எண்ணிக்கை 3,000.

தற்போது வரை நிறைய பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தவிர, ஏராளமான ஆய்வக உதவியாளர்கள், செய்முறையாளர்கள், க்ளர்க், பியூன், காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையெல்லாம் முறையாகவும் உடனடியாகவும் நிரப்ப வேண்டும். வலைதளத்தில் மாணவர்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்வது முதல், மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லாப் பொருள்களை எடுத்து வந்து வழங்குவது வரை கற்பித்தல் தாண்டி பெரும் பணிச்சுமைகளை ஆசிரியர்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள். தேர்தல், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பேரிடர் என நாட்டில் எது நடந்தாலும் முதலில் ஆசிரியர்களைத்தான் குறிவைக்கிறது அரசு. ஆசிரியர்களைப் பள்ளிக்கானவர்களாக மட்டுமே நடத்த வேண்டும்.

1,000-த்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், 11,698 புதிய கழிவறைகள் கட்டப்பட்டதாக அரசு சொல்கிறது. அவற்றில் பல பயன்படுத்தும் வகையில் இல்லை. பல பள்ளி மாணவர்களுக்குக் குடிநீர்கூட இல்லை. பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியையும் போர்க்கால வேகத்தில் செய்யவேண்டும்.

`அரசு ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும்' என்ற அறிவிப்பு, நாளை வெளியிடப்படுமேயானால், அதை அரசு ஊழியர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. எம்.பி-கள், எம்.எல்.ஏ-க்களும் அரசு ஊழியர்கள் என்ற அடிப்படையில் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க நேரிடும். பெரும்பாலான அரசியல்வாதிகள், 'கல்வித் தந்தை'களாகவும் இருப்பதால், இதை நடைமுறைப்படுத்தவிடுவார்களா எனத் தெரியவில்லை. ஒருவேளை, இந்த அறிவிப்பையே வரவிடாமல் தடுத்துக்கூடவிடுவார்கள்.

ஆனால், அரசு ஊழியர்கள் மனம் திறந்து சிந்திக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி என உயர்கல்விக்கு அரசு கல்வி நிறுவனங்களைத் தேடும் அவர்கள் அரசுப் பள்ளிகளை மட்டும் புறக்கணிப்பது நியாயமில்லை. அவர்கள் மனதுவைத்தால் அரசுப் பள்ளிகள் மேம்படும். அதிகாரிகளே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் மக்கள் நம்பிக்கையோடு அரசுப் பள்ளிக்கு வருவார்கள்.

நல்லதொரு சூழல் கனித்துவந்திருக்கிறது. நாளை என்ன நடக்கிறதென பார்க்கலாம்!
பள்ளியில் குழந்தையைச் சேர்க்க ஜாதி பெயர் அவசியமா..? கல்வித் துறை விளக்கம்!
வி.எஸ்.சரவணன்




'சாதிகள் இல்லையடி பாப்பா" என்று கற்றுத்தரும் பள்ளிகளே, புதிதாக சேரும் மாணவர்களிடம் என்ன ஜாதி எனக் கேட்கிறது' என்று சிலர் சொல்வதுண்டு. சாதி ரீதியாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களின் வாரிசுகளுக்கான உரிமைகளை அளிக்கவே அவ்வாறு கேட்கப்படுகிறது என்று அதற்கான மறுமொழி கூறுவர். இந்த விவாதத்தைக் கடந்து சாதி, மதம் அடையாளத்திலிருந்து வெளியேற நினைப்பவர்கள் தங்கள் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்கும்போது எதிர்கொள்ளும் சிக்கல் ஒன்று இருக்கிறது.

ஜூன் மாதம் பெற்றோர்களுக்கு பரப்பான மாதம். பிள்ளையைச் சேர்க்க சரியான பள்ளியைத் தேர்வு செய்வதில் தொடங்கி அட்மிஷன் கிடைத்து, பணம் கட்டி முடிப்பதற்குள் பெரும் போரை நிகழ்த்தியதைப் போல உணர்வார்கள். பள்ளியின் அட்மிஷன் படிவத்தில் பெயர், பெற்றோர் பெயர் உள்ளிட்டவையோடு சாதி, மதம் ஆகியவற்றைப் பற்றியும் கேட்கப்பட்டிருக்கும். இந்த இடத்தில்தான் சாதி, மத அடையாளத்திலிருந்து விலக முயல்வோருக்கு அந்தச் சிக்கல் வருகிறது.

பள்ளியில் பிள்ளையைச் சேர்க்க சென்றார் ஒருவர். அப்போது அட்மிஷன் படிவத்தில் சாதி, மதம் ஆகிய பகுதிகளில் சின்ன கோடு மட்டுமே போட்டிருந்தார். உடனே, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிவிட்டார். அந்த இடத்தில் பெரும் விவாதமாகி விட்டது. இதுபோல பல பள்ளிகளிலும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு. இதற்கு காரணம் என்ன? பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் பேசியபோது,

"பெரும்பாலான தலைமை ஆசிரியர்களுக்கு சாதி, மதம் ஆகியவற்றின் பெயரைக் குறிப்பிடாமல் அப்ளிகேஷனை ஏற்றுக்கொள்ளலாம் என்பதே தெரியவில்லை. அதற்கான அரசாணைக் குறித்தும் தெரிந்துகொள்வதில்லை. விவரம் தெரிந்த தலைமை ஆசிரியர்களும் பெற்றோரை சாதி, மதப் பெயர்களைக் குறிப்பிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். அவரின் பேச்சினைக் கேட்டு மனம் மாறும் பெற்றோர்களும் எவ்வளவு சொல்லியும் உறுதியாக இருக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்." என்றார்.



இதுபோன்ற நிலையில் அரசு என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். சமீபத்தில் கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில்,

"மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கும்போது சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவர் விருப்பப்பட்டால் அந்த மாணவரின் பள்ளிச் சான்றிதழ் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் சாதியில்லை, சமயமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ எவரும் விரும்பினால் சம்மந்தப்பட்டவரின் விருப்பக் கடித்தத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம்"  என்று தொடக்கக்கல்வி அலுவலர் சார்பாக அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சாதி, மதப் பெயர்கள் இல்லாமல் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

"இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி நிதி உதவி உள்ளிட்ட உரிமைகள் இதன் மூலம் பறிபோய்விடுமே?" என கும்பகோணத்தைச் சேர்ந்த மாரியப்பனிடம் கேட்டோம். இவரும் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி, மதம் எனக் கேட்கும் பகுதியில் 'இல்லை' எனப் பதிந்திருப்பவர்.

"நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், சாதி, மதப் பேதமற்ற ஒரு சமூகத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டிமெனில் யாரேனும் இதனை முன்னெடுக்க வேண்டும் அல்லவா. எங்கள் பிள்ளைகளிடம் விரிவாக இதுகுறித்து பேசிவிட்டே இந்த முடிவுக்கு வந்தேன். பொதுப்பட்டியலில்தான் நீங்கள் போட்டியிட வேண்டியிருக்கும் எனச் சொல்லியும் என் மகனும் மகளும் முழு மனத்தோடு சம்மதித்தனர். இப்போது என் மகன் பொறியியல் முடித்து நல்ல வேலையில் இருக்கிறார். மகள் கல்லூரியில் படித்துகொண்டிருக்கிறார். சில இழப்புகளைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் சமூகத்திற்கான ஒரு முன்னெடுப்பாக இதைச் செய்தாக வேண்டும் என நான் நினைத்தேன்" என்றார் மாரியப்பன்.

ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தினைப் படைக்க நினைக்கும் ஒவ்வொரு முயற்சியும் பாராட்டுக்குரியது.
கத்தார் விவகாரம் : என்ன ஆகும் ஏழு லட்சம் இந்தியர்களின் நிலை?
இரா. குருபிரசாத்

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட ஏழு நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த நான்கு நாடுகளுடனான அத்தனை உறவுகளிலிருந்தும் நீங்குமாறு கத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது.



இனிவரும் காலங்களில், கத்தார் நாட்டின் எந்தவொரு விமானமோ, கப்பலோ மேற்கூறிய நாடுகளுக்கு வர அனுமதி இல்லை. தீவிரவாதத்திலிருந்து தங்கள் நாடுகளைப் பாதுகாக்க, கத்தார் வழியான எல்லைகளையும் மூடிவிட்டதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் தலைமையில் ஒன்றிணைந்துள்ள அரேபிய நாடுகள், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கத்தார் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா போன்ற அமைப்புகளுக்கு உதவி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கத்தாரில் பணி புரியும் ஏழு லட்சம் இந்தியர்கள் இதனால் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அங்கு பணி புரியும் இந்தியர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து, அங்கு பணி புரியும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரத்தால் இந்தியர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக, நலமுடன் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
'தி.நகரில் மக்கள் நடமாட்டமே இல்லை...!'' -புலம்பும் சிறு வியாபாரிகள்

நமது நிருபர்




தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில், 'தி சென்னை சில்க்ஸ்' ஜவுளிக்கடையில் கடந்த புதன் கிழமை (31-5-2017) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதில், தீயின் கோர நாக்குகள் ஜவுளிக்கடையின் அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து தீயை அணைக்கப் போராடினர். கட்டுக்கடங்காமல் எரிந்துகொண்டிருந்த தீயினால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால், தீயணைப்பு பணிகளில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து 36 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத் தீ விபத்தினால், பாதிக்கப்பட்ட ஜவுளிக்கடையின் கட்டடம் வலுவிழந்து போனது. இதையடுத்து கட்டடத்தை இடிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2-ம் தேதியிலிருந்தே நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கட்டடத்தை இடிக்கும் பணி ஆரம்பமானது. அருகிலுள்ள மற்ற கட்டடங்களுக்கு எந்தவித சேதமும் இல்லாமல், இடிக்க வேண்டியிருப்பதால், கட்டடம் இடிக்கும் பணிகளில் மிகுந்த கவனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டட இடிபாடுகள் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதனால், வடக்கு உஸ்மான் சாலையின் பெரும் பகுதி காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜவுளிக்கடையின் அருகில் அமைந்துள்ள நடை பாதை கடைகள் மற்றும் மேம்பாலத்தின் கீழாக அமைந்துள்ள சிறுவியாபாரக் கடைகள் ஆகியவை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

ரம்ஜான் பண்டிகை நெருங்கிவரும் இச்சமயத்தில் வழக்கமாக, தி.நகரில் மக்கள் கூட்டம் கடல் அலையென ஆர்ப்பரிக்கும். ஆனால், நடந்துமுடிந்த பெரும் தீ விபத்தும், அதற்கடுத்த சில நாள்களில் அதே பகுதியிலுள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், சம்பவ இடங்களைச் சுற்றி பொதுமக்கள் நடமாட காவல்துறை தடை விதித்திருக்கும் காரணத்தாலும் தி.நகரில் மக்கள் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரக் கடைகளை நடத்திவரும் சிறு வியாபாரிகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. போலீஸ் கெடுபிடி இல்லாத இடங்களில் மட்டும் கடை திறந்து வைத்திருக்கும் சிறு வியாபாரிகளும், மக்கள் கூட்டம் குறைந்திருக்கும் காரணத்தால், வியாபாரமின்றி கலக்கமடைந்துள்ளனர்.

40 வருடங்களாக கைக்குட்டை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்கும் செண்பகம் என்பவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ''வேலை நாட்களில்கூட தி.நகர் கூட்டமாகத்தான் இருக்கும். ஆனால், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைகூட அவ்வளவாக கூட்டம் இல்லை. 8 மணிக்கு எல்லாம் கடை திறந்தாச்சு. இன்னும் ஒண்ணுகூட விக்கல. இப்படியே இந்த நிலை தொடர்ந்தால் உணவுக்குக்கூட கஷ்டப்பட வேண்டியதுதான்'' என்றார் வேதனையுடன்.

ஐஸ்க்ரிம் வகைகள், ஜூஸ் வகைகள் மற்றும் பெண்களுக்குத் தேவையான கவரிங் நகைகளை விற்றுவரும் கடையின் உரிமையாளர் செல்வம் தற்போதைய நிலைபற்றிக் கூறும்போது, சாதாரண நாள்களில் 2,000 முதல் 3,000 ரூபாய் வரை வியாபாரம் நடந்தால், அதில் சுமார் 500 ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால், இப்போது அந்த அளவு வியாபாரத்தையோ, அல்லது லாபத்தையோ எதிர்பார்ப்பது என்பது முட்டாள்தனம்'' என்று நொந்துகொண்டார்.

25 வருடங்களாக நடைபாதையில், துணிக்கடை வைத்து இருக்கும் அகமது,''வாங்கி வைத்திருக்கும் பொருள்களை எப்படி விற்பது? மொத்தக்கடையிலிருந்து வாங்கிய பொருளுக்கான பணத்தை எப்படி செலுத்துவது என்றும் தெரியவில்லை'' என்று தவிப்பதாகக் குறிப்பிட்டார். பெரும்பான்மையான சிறு வியாபாரிகள் அனைவரும், ''பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம், சீருடை எனச் செலவுகள் அதிகரித்துள்ள இந்தச் சமயத்தில், பெரும் சிரமத்துக்கு ஆளாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்'' என நொந்து கொண்டனர்.

தீ விபத்துக்குள்ளான கட்டடத்தை இடிக்கும் பணி இரண்டு, மூன்று நாள்களில் நிறைவு பெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது 'கட்டடம் இடிக்கும் பணி மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என்ற அறிவிப்பால், சிறு வியாபாரிகள் அனைவரும் பெரும் கலக்கமடைந்துள்ளனர். இயல்பு நிலை எப்போது திரும்பும் என்ற ஏக்கத்துடன் ஏங்கி நிற்கிறார்கள் தி.நகர் சிறு வியாபாரிகள்!

ம.நிவேதிதா
பல்ஸர் மற்றும் டொமினார் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!
ராகுல் சிவகுரு

இந்தியாவின் டாப்-5 பைக் தயாரிப்பாளர்களுள் ஒருவரான பஜாஜ் ஆட்டோ, தனது பல்ஸர் சீரிஸ் மற்றும் டொமினார் பைக்குகளின் விலைகளை, ஆயிரம் ரூபாய் உயர்த்தியுள்ளது. இதற்கு அதிகரிக்கும் உற்பத்திச் செலவுகள், உதிரிபாகங்களின் விலை ஆகியவை காரணமாகச் சொல்லப்படுகிறது. தனது ஏற்றுமதி, உள்நாட்டு விற்பனை ஆகியவை சரிந்து வரும் நேரத்தில், இந்த விலை உயர்வு வெளியிடப்பட்டுள்ளது, பஜாஜுக்கு மைனஸாகவே பார்க்கப்படுகிறது.





பஜாஜின் பவர்ஃபுல் பைக்கான டொமினார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்குப் போட்டியாக, கடந்தாண்டு இறுதியில் களமிறங்கியது. பைக் விற்பனைக்கு வந்து 7 மாதங்களே நிறைவடையாத நிலையில், இதன் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது. அப்படி இருந்தும், கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காகவே அது திகழ்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.


இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில், BS-IV இன்ஜின் - AHO ஹெட்லைட் - புதிய கலர் & கிராஃபிக்ஸ் ஆப்ஷன்களுடன் வெளியான 2017 பல்ஸர் சீரிஸ் பைக்குகளின் விலைகளை, ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, V - அவென்ஜர் - பிளாட்டினா - CT100 ஆகிய மற்ற பைக் மாடல்களின் விலையிலும், விரைவில் மாறுதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொமினார் மற்றும் பல்ஸர் சீரிஸ் பைக்குகளின், மாற்றியமைக்கப்பட்ட சென்னை எக்ஸ் ஷோரூம் விலைப்பட்டியல் பின்வருமாறு;








Dominar 400 : Rs 1,41,677 (STD), Rs 1,55,927 (ABS)

Pulsar RS 200 : Rs 1,25,272 (STD), Rs 1,37,486 (ABS)

Pulsar NS 200 : Rs 99,391

Pulsar 220F : Rs 94,045

Pulsar 180 : Rs 82,104

Pulsar 150 : Rs 77,412

Pulsar 135 LS – Rs 62,729

நம்மைக் காக்கும் மரங்கள்

By லோ. வேல்முருகன்  |   Published on : 06th June 2017 01:28 AM  
தற்போது நிலவும் அதிக அளவிலான வெப்பம், அனல்காற்று மழையின்மை, வறட்சி போன்றவை மரங்களின் முக்கியத்துவத்தை மனிதர்களிடையே உணர்த்தியுள்ளது. ஆனால் முக்கியத்துவத்தை உணர்ந்த அளவுக்கு மரக்கன்று நட வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானோர்களிடம் இல்லை.
அற்ப காரணங்களுக்காக மரங்களை வெட்டும் நிகழ்வு தமிழகத்தில் மட்டும் தான் நிகழ்கிறது. ஒரு சில மரங்கள் மின்கம்பிகள் மீது உரசுகிறது என்பதற்காக பல ஆண்டுகள் வளர்ந்து பலருக்கு நிழல் தந்து கொண்டிருந்த மரங்களை நாம் ஒரு சில நிமிடங்களில் நவீன கருவிகளைக் கொண்டு வெட்டிச் சாய்கிறோம். மரங்கள் மின்கம்பிகள் மீது உரசும் போது சம்பந்தப்பட்ட மரத்தின் ஒரு சில கிளைகளை மட்டும் வெட்டினால் போதும்.
அதனை விட்டு விட்டு கிளைகளை மட்டும் வெட்டினால் பிற்காலத்திலும் அந்த மரத்தில் கிளைகள் வளர்ந்து மின்கம்பிகள் மீது உரசும் என்ற காரணத்துக்காக அந்த மரத்தை முழுவதுமாக வெட்டுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
தமிழகத்தில் இந்த அளவுக்கு வெப்பம் அதிகரித்தற்கு நான்கு வழிச்சாலைக்காக பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதும் ஒரு காரணம் என்பது மறுப்பதற்கில்லை. நான்கு வழிச்சாலைக்காக வெட்டப்பட்ட மரங்கள் இருந்த இடத்தில் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை சம்பந்தப்பட்டவர்கள் பின்பற்றினார்களா என்பது கேள்விகுறியே. கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்று பாடம் என்றாலேயே அனைவரது நினைவிலும் வருபவர் மன்னர் அசோகர்.
வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் அசோகர் என்ன செய்தார் என்ற கேள்விகளை கேட்டால், அதற்கு மாணவர்கள் சாலையோரம் மரங்களை நட்டார் என வேடிக்கையாக பதில் சொல்வர். அப்போது நமக்கெல்லாம் வேடிக்கையாக தோன்றிய ஒரு விஷயம் இன்று இல்லாததால் நாம் படும் துயரம் எண்ணிலடங்காதது.
அன்று தொலைநோக்குப் பார்வையுடன் அசோகர் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டார். இதனால் மாதம் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் செழித்து மக்கள் வளமுடன் வாழ்ந்தனர். ஆனால் இன்று அவ்வாறு வைக்கப்பட்ட மரங்களை நாம் சாதாரணமாக அழித்ததன் பயனாக மழைவளம் குறைந்து நிலத்தடிநீர் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது.
அண்மையில் மறைந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தனது உயிலில் 'எனது இறப்புக்குப் பிறகு எனது நினைவாக நினைவு இல்லம், போட்டிகள், விருதுகள், சிலைகள் போன்றவற்றை அமைக்க வேண்டாம். எனது நினைவாக ஏதாவது செய்ய விரும்பினால் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரியுங்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சியளிக்கும். ஆறுகளையும், அணைகளையும் பாதுகாக்க போதுமான முயற்சி எடுங்கள்' என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அவர் மரங்களின் அருமையை எந்தளவு உணர்ந்துள்ளார் என்பது புரியும். இதுபோன்ற செய்திகளை படிக்கும் நாமும் நம்மால் முடிந்தளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். இது நமது ஒவ்வொருவரின் கடைமை.
இல்லையெனில் நமக்குப் பின்னால் வரும் சந்ததியினர் தற்போது வாகனங்களில் நிரப்பும் எரிபொருள் போல தண்ணீரை ஒரு லிட்டர், 2 லிட்டர் அதிக விலைக்கு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
தவிர்க்க முடியாத காரணங்களால் மரங்களை வெட்ட நேரிடும் போது மரங்களை வெட்டமால், அதனை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடலாம். இதற்கு தேவையான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கலாம்.
கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கிக் கொண்டு ஆக்சிஜனை மரங்கள் வெளியிடுகின்றன. இதனால் சுற்றுப்புறங்களில் அதிகஅளவில் மரங்கள் இருக்கும்பட்சத்தில் தற்போது வாகனங்களால் ஏற்பட்டு வரும் காற்று மாசும் குறையும். மனிதர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
காடுகளை அழிப்பதால் விலங்குகளுக்கு மட்டும் பாதிப்பில்லை. மனிதர்களுக்கும் தான். வளர்ந்து வரும் நாடுகளின் மிக முக்கியப் பிரச்னையாக இருப்பது காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பு. காற்று மாசு கார்பன் டை ஆக்ஸைடு வாயுவாலும் இன்ன பிற வாயுக்களாலும் ஏற்படுகிறது. இந்த காற்று மாசை அதிக அளவிலான மரங்கள் இருந்தால் மட்டுமே குறைக்க முடியும்.
ஏனென்றால் மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடு வாயு மற்றும் பிற வாயுக்களை உள்வாங்கிக் கொள்கிறது. ஓராண்டு முழுவதும் நன்கு வளர்ந்த ஒரு ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், ஒரு கார் 26,000 மைல்கள் தூரம் ஓடி வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கிக் கொள்கின்றன.
அதாவது சுமார் 6 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை எடுத்துக்கொண்டு 4 டன் ஆக்ஸிஜன் வெளியிடுகின்றன. இது 18 பேர் ஆண்டு முழுவதும் சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன். ஒரு தனி மரமானது தனது வாழ்நாளில் சுமார் 250 கிலோ கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது.
பள்ளி வளாகங்களில் அதிக அளவிலான மரங்கள் நட்டு வளர்ப்பதன் மூலம் புறஊதா கதிர்களின் தாக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் கேன்சரை 50 சதவீதம் வரை குறைக்க முடியும். ஒரு வீட்டைச் சுற்றி 3 மரங்கள் இருந்தால் கோடைகாலத்தில் வீட்டில் குளிரூட்டிகளின் பயன்பாடும் 50 சதவீதம் குறையும்.
வீட்டில் கொய்யா, மா, வாழை போன்ற பலன் தரும் மரங்களை வளர்த்தால் அது சிறிய அளவிலான வருமானத்துக்கு வழிவகுக்கும். வாழை மரத்தின் அனைத்துப் பாகங்களும் மக்களுக்கு பயன்படுகின்றன. பூ, இலை, காய், கனி, தண்டு, நார் பகுதி என எதுவுமே வீணாகாது.
இதுபோன்று பயன்களைத் தரக்கூடிய மரங்களை நாம் அழிக்காமல் பாதுகாத்து வளர்க்க வேண்டும்.

Jun 06 2017 : The Times of India (Chennai)
Flights to Qatar will operate, but may get longer, 
costlier
New Delhi:


Flying From Delhi Not Affected
Qatar may be cut off from rest of the Gulf countries but flights between India and Doha will operate as usual for now. The travel time, however, is likely increase with countries like Saudi Arabia and Bahrain closing their airspace for flights from Qatar.“The UAE has told Indian carriers that their aircraft overflying or crossing its airspace on India-Doha route must take its permission before doing so. If they allow, it is okay . Otherwise flights from places other than north India like Mumbai and the south will have to take a much longer route: fly north over the Arabian Sea, enter Iran and then fly straight over the Persian Gulf to Doha. The same route will have to be taken on return if the UAE denies permission,“ said the operations head of an Indian airline.
Three Indian carriers -Jet Airways, AI Express and IndiGo -and Qatar Airways (QA) fly between India and Doha. All QA flights between India and Doha will also be affected. Only flights from Delhi will not be affected as they will fly over Pakistan and then enter Iran. Indian carriers fly only between India and Doha and do not fly beyond from there.
For long haul passengers on QA, direct routing of flights between Doha and Europe and North America -the two most popular destinations for Indians choosing the airline -may have to be changed that may lead to an increase in flying time. With UAE banning Qatari-registered planes from its airspace, flights between the West and Doha may have to take a longer route via Iran.
Senior pilots estimate flying time could increase by anywhere up to two hours for those going west and up to an hour for flights to and from west and south India. “Flying more will mean fuelling more, which in turn will lead to fares going up,“ said an official. Qatar Airways did not comment on this issue till the time of this report going to press.
The other big worry for Indian carriers is that Bahrain is the alternate airport for their aircraft headed to Doha. Now if an Indian aircraft has to divert for any reason, it will not be able to fly direct to Qatar from Bahrain. “We are making plans to fly to some nearby place in Iran and then approach Doha from there. Flying a diverted aircraft all the way back to India is not a viable option,“ said an Indian flight route planner.
QA is one of the most popular airlines for Indians travelling abroad. Last year, it was at the sixth spot in terms of standalone airlines flying people in and out of India. Over 21 lakh people to and from India flew QA in 2016, with almost 80% of them transiting via Doha.
The Doha route changes will impact Indian travellers in a big way , especially in the ongoing peak summer travel season. Among Indian carriers, Jet Airways has five daily flights between Doha and Delhi, Mumbai, Cochin, Trivandrum and Calicut. Air India Express has a daily flight between Doha and Calicut; four times a week from Mumbai and thrice weekly from Mangalore.IndiGo has a daily flight from Delhi and Mumbai and plans to start from Kozhikode in July .QA lists 13 Indian cities as destinations, including all the metros.
“People travelling to Qatar on QA are mostly transit passengers to Europe and the US.Travellers on Indian carriers are mostly those working there,“ said a senior airline official.
Soon after Saudi Arabia, Bahrain, Egypt and the UAE broke off all ties with Qatar on Monday , at least six Gulf-based airlines said they will no longer fly to that country . These airlines include Emirates, Etihad, Air Arabia, Fly Dubai, Saudia and Gulf Air. Qatar Airways also will not be able to fly to places whose airspace has been shut for its flights. So Indians who had booked tickets for internal travel from Doha will also be impacted.
Jun 06 2017 : The Times of India (Chennai)
Kiran Bedi is not fit to be LG: Puducherry CM on 
Twitter
Puducherry:


Accuses Her Of Violating Oath Of Office
With the tussle between the Congress government led by chief minister V Narayanasamy and lt governor Kiran Bedi escalating with each passing day , Narayanasamy on Monday took to twitter to counter the charges levelled by Bedi. In a series of tweets, Narayanasamy declared that he had brought to the notice of the Prime Minister and Union home minister that Bedi was `not fit to be a lt governor'.“Now I am going to public to expose lt governor's illegal and unconstitutional activities,“ he said in a tweet accusing Bedi of using social media to reveal confidential information violating the oath of office and secrecy she undertook while assuming office as lt governor.
“She has taken oath but she is going beyond all limits. Under the Constitution and the Business Rules the elected government has got the power as soon as it assumes power.Branding bureaucrats, ministers and MLAs as corrupt is ve ry unbecoming of her. She is not helping the state in development. Every official act of the govern ment .is questioned by her. She is interfering in the day-to-day administration of the government. She is not allowing transfer of officers and is acting against the interest of the state. I talked to her several times. But she is not correcting herself,“ Narayanasamy said in a series of tweets.
He said Bedi has been abusing officers, ministers and MLAs. “Therefore her act is unbecoming of lt governor.She does not understand that Puducherry has separate identity where elected government has got all the powers,“ he said.
Narayanasamy said Bedi has been behaving in `an autocratic manner violating norms' and declared that she has become `a burden for the State government'. Stating that she approved proposal to hike the pension of the freedom fighters only after a `prolonged fight' he said she has not been allowing overall development of the state. He charged that Bedi did not allow port development and resuming of flight services in Puducherry . “She is returning all the files relating to welfare schemes,“ he said.
Jun 06 2017 : The Times of India (Chennai)
Scrap `illegal' recruitment in vet univ, ex-prof 
urges HC
Chennai:
TIMES NEWS NETWORK


A recently retired professor of Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS) has dragged the university to court, seeking to cancel the `fraudulent' recruitment of 49 assistant professors pursuant to a job notification dated November 26, 2016.The first bench comprising Chief Justice Indira Banerjee and Justice M Sundar, before which the PIL filed by Dr P I Ganesan, who was a retired director of Centre for Animal Health Studies at Madavaram campus of TANUVAS, came up for hearing on Monday , issued notice to chairman of selection committee, besides viceand registrar of TANUVAS, and animal husband secretary of the state government. The case has now been posted to June 9.
The petitioner has sought declaration of the entire selection process for recruit ment of 49 posts of assistant professors in various departments of university , as illegal, unconstitutional, null and void.
According to the impugned advertisement, there will be 20 marks for interview, while 30 marks will be allotted for assessment of domain knowledge and teaching skills of the applicant.Fifteen marks were earmarked for awards medals, professional activities (8), fellowship, experience (5), extra-curricular activities (2). The remaining 15 marks were earmarked for teaching skills -oral (10) and written communication skills (5).
Therefore, along with the interview marks of 20, a total of 35 marks were entrusted with the selection committee headed by the vice-chancellor. In his petition, Dr Ganesan said having 35 marks for interview would not ensure transparent recruitment, and instead would lead to nepotism. It is also violative of a Supreme Court judgment, he said, adding the apex court had many times ordered that maximum marks for interview should not exceed 15%.
Dr Ganesan said though he himself had been nominated as a member of the selection committee for the conduct of interview, he realised the entire selection process was bogus. He said the selection was completed in his absence the list of selected candidates finalised arbitrarily.
Jun 06 2017 : The Times of India (Chennai)
Nominee for Anna Univ VC search panel selected
Chennai:
TIMES NEWS NETWORK


The syndicate of Anna University on Monday nominated former IIT-Kanpur director K Anantha Padmanabhan as its nominee on a three-member search panel to shortlist candidates for the post of vice-chancellor of the university .Governor and chancellor C Vidyasagar Rao had earlier nominated former Chief Justice of India R M Lodha as his nominee on a new search panel for the university head.Lodha will also be convenor of the panel.
Padmanabhan, a professor who was associated with Anna University's mechanical engineering department.He has been a full-time professor at the university from November 2015 and has co-authored three books on superplastics.
Rao had on May 27 rejected three candidates the earlier panel had shortlisted for the post of Anna University VC, stating that he felt they were not qualified enough to head the country's largest university for technical education.
Jun 06 2017 : The Times of India (Chennai)
Top 50 univs to get full autonomy: UGC
Chennai:


In a path-breaking move, the University Grants Commission has decided to make the top 50 ranked varsities or those with an NAAC score of 3.5 completely autonomous, with freedom to start new courses departments without its approval. They can seek and get funding from central private agencies, appoint qualified foreign faculty up to 20% of their strength or admit foreign students up to 20%, fixing their own fee. As per the new UGC regulations, universities in the top 50 of the National Institute Ranking Framework (NIRF) list for two consecutive years or having an National Assessment and Accreditation Council score of 3.5 or above are in category 1, with complete autonomy.Those with a 3.01-3.49 NAAC score or a 51-100 NIRF ranking for two consecutive years will be in category 2 with limited autonomy . Those not in these two categories will have no autonomy . A varsity with a poor rating will be warned that if it doesn't buck up in five years it will be moved to category 3.The draft regulations will be on the UGC website, for feedback from stakeholders, till June 15.
“UGC wants to give greater autonomy to universities, especially in starting courses, hiring and admitting students, but only to the best institutes. Currently there is no grading mechanism to decide this,“ said an academic who was part of the panel that framed the regulations. Getting permission for foreign academic collaborations will be easier for category 1 institutions, he said.
As per NIRF 2017, Anna University , Tamil Nadu Agricultural University and Bharathiar University are the only state universities in category 1 along with deemed universities like Amrita, VIT and SASTRA. University of Madras, ranked 64, is in category 2.
Currently, universities struggle for ministry of external affairs clearing for hiring foreign faculty or even calling them for a seminar, he said.“There are foreign exchange regulations and UGC has to be kept in the loop. This will now be relaxed.“
Universities are always under the bureaucratic lens of UGC committees for the prestigious 12B status to get central grants or other external reviews. Now, category 1 varsities can just send a report in review format to UGC and category 2 universities can do it through an external peer review mechanism.
Grading is expected to bring about a healthy competition among universities for research funding from public as well as private agencies.
4 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை

பதிவு செய்த நாள்06ஜூன்2017 00:04

சென்னை: 'தமிழகத்தில், உள்கட்டமைப்பு வசதி இல்லாத நான்கு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது' என, மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் உள்ள, அன்னை மருத்துவக்
கல்லுாரி; சென்னை மாதா மருத்துவக் கல்லுாரி மற்றும் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் கல்லுாரிகளில், போதுமான வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என, புகார் எழுந்தது. கடந்த, 2016ல், இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
'ஓராண்டுக்குள் வசதிகளை செய்ய வேண்டும்' என்ற நிபந்தனையுடன், 2016 - 17ல், எம்.பி.பி.எஸ்., படிப்பில் தலா, 150 மாணவர்களைச் சேர்க்க, அனுமதி அளித்தனர். ஆனால், நிபந்தனை காலத்திற்குள் வசதிகளை மேம்படுத்தவில்லை. அதனால், எம்.சி.ஐ., பரிந்துரைப்படி, மூன்று மருத்துவக் கல்லுாரிகளுக்கும், 2017 - 18, 2018 - 19 என, இரு கல்வியாண்டுகளில் மாணவர் சேர்க்கை நடத்த, தடை விதிக்கப்பட்டு உள்ளது.அதேபோல, கோவை கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரிக்கு, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களில், மாணவர் சேர்க்கைக்கு, ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, அந்தந்த கல்லுாரிகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அனுப்பியுள்ள கடிதம்:

போதுமான கட்டுமான வசதிகள் இல்லாததால், எம்.பி.பி.எஸ்., இடங்களில், மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. தற்போது படித்து வரும் மாணவர்களுக்கு வைப்பு நிதியாக, 2 கோடி ரூபாயை, வங்கியில் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பதிவு செய்த நாள்05ஜூன்2017 23:23

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியில், லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.வைகாசி மாத பவுர்ணமி 8ம் தேதி மாலை 5:23 மணிக்கு துவங்குகிறது. மறுநாள் இரவு 7:31 மணி வரை உள்ளதால் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சக்தி பீடங்களை தரிசிக்க ஆன்மிக சிறப்பு ரயில்
பதிவு செய்த நாள்05ஜூன்2017 21:45

கோவை: சக்தி பீடங்களை தரிசிக்கும் விதமாக, 12ம் தேதி இயக்கப்பட உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்மிக சிறப்பு ரயிலுக்கு, முன்பதிவுகள் ரவேற்கப்படுகின்றன. இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனும், ஐ.ஆர்.சி.டி.சி., பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை, 2005ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இச்சிறப்பு ரயில்களில், பல்வேறு ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு, பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர். வரும், 12ம் தேதி, வடமாநில சக்தி பீடங்களை தரிசிக்க, ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை வழியாக அலகாபாத் சென்றடைகிறது. கோவையைச் சேர்ந்தவர்கள், ஈரோட்டில் இருந்து பயணிக்கலாம்.
அலகாபாத்தில் அலோப்பிதேவி, காசி விசாலாட்சி, கயா மங்களாகவுரி தேவி, அசாமில் உள்ள காமாக்யா தேவி, கோல்கட்டாவில் உள்ள காளிகாதேவி, புரியில் உள்ள விமலாதேவி கோவில்களை தரிசிக்கலாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நீராடுதல், காசியில் கங்கா ஸ்நானம், கயாவில் முன்னோருக்கு மரியாதை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர், அன்ன பூரணி, புரி ஜெகந்நாதர் மற்றும் கோனார்க் சூரியனாரை யும் தரிக்கலாம்.

மொத்தம், 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒரு நபருக்கு, 11 ஆயிரத்து, 775 ரூபாய் கட்டணம். இதில், ஸ்லீப்பர் ரயில் கட்டணம், சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகன வசதி அடங்கும். 

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு, கோவை ரயில்வே ஸ்டேஷனை, 90031 40655 என்ற மொபைல் எண்களிலும், www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

'ஸ்வீட்' எடுங்க... கொண்டாடுங்க : மகிழ்ச்சி மழையில் இந்தியா, மண்ணைக் கவ்வியது பாக்.,


dinamalar

பர்மிங்காம்: மழை அடிக்கடி குறுக்கிட்ட சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்திய வீரர்கள் சாதித்துக் காட்டினர். வான் மழையை மிஞ்சிய கேப்டன் கோஹ்லி, யுவராஜ் சிங் ரன் மழை பொழிந்தனர். இவர்களது அபார ஆட்டம் கைகொடுக்க, 'டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மீண்டும் 'நமத்து போன பட்டாசாக' சொதப்பிய பாகிஸ்தான் அணி 'சரண்டர்' ஆனது. இதனால் வழக்கமான பரபரப்பு இல்லாமல், போட்டி 'உப்புசப்பின்றி' முடிந்தது.இங்கிலாந்து மற்றும் வேல்சில் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. நேற்று பர்மிங்காமில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

அஷ்வின் இல்லை

ஆடுகளம் 'வேகத்துக்கு' ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணியில் நட்சத்திர 'ஸ்பின்னர்' அஷ்வின் நீக்கப்பட்டார். 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது, 'பவுலிங்' தேர்வு செய்தார்.

நல்ல அடித்தளம்

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவான் சேர்ந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இந்திய அணி 9.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் 50 நிமிடங்கள் தாமதமானது. பின் ஆட்டம் துவங்கியதும் இந்திய வீரர்கள் ரன் வேகத்தை அதிகரித்தனர். ஷதாப் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். தவானும் அரைசதம் கடக்க, போட்டியில் சூடு பிடித்தது. ஷதாப் 'சுழலில்' தவான்(68) அவுட்டானார்.

48 ஓவர் போட்டி

இந்திய அணி 33.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட, 48 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. ஷதாப் பந்தை தட்டி விட்ட கோஹ்லி வீணாக ஒரு ரன்னுக்கு ஓடினார். மறுபுறத்தில் இருந்து ஓடி வந்த ரோகித் சர்மா 'டைவ்' அடித்து 'கிரீசை' தொட்டார். இது தொடர்பாக 'டிவி' அம்பயரிடம் சந்தேகம் கேட்கப்பட்டது. 'ரீப்ளே'வில் பேட், 'கிரீசில்' இருந்து லேசாக விலகி இருப்பது தெரிய வர, சர்ச்சைக்குரிய முறையில் ரோகித் சர்மா(91) ரன் அவுட்டானார்.

யுவராஜ் அரைசதம்

கடைசி கட்டத்தில் யுவராஜ், கோஹ்லி சேர்ந்து பாகிஸ்தான் பவுலர்களை ஓட ஓட 'அடித்தனர்'. ஹசன் அலி ஓவரில் யுவராஜ் ஒரு பவுண்டரி, கோஹ்லி ஒரு சிக்சர் அடிக்க மொத்தம் 17 ரன்கள் எடுக்கப்பட்டன. யுவராஜ்(53) எல்.பி.டபிள்யு., ஆனார்.

கோஹ்லி 'ஸ்பெஷல்'

போகப் போக கோஹ்லி யின் 'ஸ்பெஷல்' ஆட்டத்தை காண முடிந்தது. ஹசன் அலி ஓவரில் நின்ற இடத்தில் இருந்தே அழகாக பவுண்டரி அடித்தார். பின் ஒரு அற்புத சிக்சர் விளாசினார். ஹர்திக் பாண்ட்யாவும் ரன் மழையில் நனைந்தார். இவர், இமாத் வாசிம் ஓவரில் வரிசையாக மூன்று சிக்சர்கள் விளாசினார். கடைசி பந்தில் கோஹ்லியும் ஒரு பவுண்டரி அடிக்க, இந்த ஓவரில் மட்டும் மொத்தம் 23 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி 4 ஓவரில் 72 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்திய அணி 48 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது. கோஹ்லி 81(68 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), பாண்ட்யா(20) அவுட்டாகாமல் இருந்தனர்.

விக்கெட் மடமட

பின் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு 'டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி 48 ஓவரில் 324 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிட, 41 ஓவரில் 289 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது. இந்திய 'வேகங்களிடம்' ஷேசாத்(12), பாபர்(8) சரணடைந்தனர். அரைசதம் எட்டிய நிலையில் அசார் அலி(50) நடையை கட்டினார். மற்ற பேட்ஸ்மேன்களும் தாக்குப்பிடிக்கவில்லை ஜடேஜாவின் துல்லிய 'த்ரோ'வில் சோயப் மாலிக்(15) ரன் அவுட்டானார். ஹபீஸ்(33) பெரிதாக சோபிக்கவில்லை.பாகிஸ்தான் அணி 33.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

'டாப்-ஆர்டர்' அசத்தல்

'டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்களான ரோகித் (91), தவான் (68), கோஹ்லி (81*), யுவராஜ் (53) அரைசதம் கடந்தனர். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், 3வது முறையாக இந்திய அணியின் முதல் 4 பேட்ஸ்மேன்கள் அரைசதம் கடந்த சம்பவம் அரங்கேறியது.


பவுலிங்கில் ஏமாற்றிய பாகிஸ்தானின் வகாப் ரியாஸ், 8.4 ஓவரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 87 ரன்கள் வழங்கினார். இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் வழங்கிய பவுலரானார். இதற்கு முன், ஜிம்பாப்வே அணியின் பன்யாங் கரா (86 ரன், எதிர்-இங்கிலாந்து, 2004) ரன் வள்ளலாக இருந்தார். இவர்களை அடுத்து, இலங்கையின் மலிங்கா (85 ரன், எதிர்-நியூசிலாந்து, 2009), தென் ஆப்ரிக்காவின் டிசாட்சொபே (83 ரன், எதிர்-இந்தியா, 2013) உள்ளனர்.


நேற்று, 91 ரன்கள் எடுத்த இந்தியாவின் ரோகித் சர்மா, ஒருநாள் போட்டி அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். இதற்கு முன், 2012ல் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் 68 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது. இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 12 ஒருநாள் போட்டியில் விளையாடிய ரோகித், 5 அரைசதம் உட்பட 537 ரன்கள் எடுத்துள்ளார்.

முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்சமாக 3வது முறையாக ஒரு இன்னிங்சில் 100 அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்தது. இதற்கு முன், தென் ஆப்ரிக்கா (127 ரன், முதல் விக்கெட், 2013), வெஸ்ட் இண்டீஸ் (101 ரன், முதல் விக்கெட், 2013) அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்தது.இவர்களை அடுத்து, வெஸ்ட் இண்டீசின் கெய்ல் - சந்தர்பால் மற்றும் தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் - ஸ்மித் ஜோடிகள் தலா 2 முறை இந்த இலக்கை எட்டின.

பேட்டிங்கில்அசத்திய இந்திய அணி 319 ரன்கள் குவித்தது. இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்தது. இதற்கு முன், 2009ல் செஞ்சுரியனில் நடந்த போட்டியில் 248 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது. * தவிர இது, சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் 2வது அதிகபட்ச ஸ்கோர். கடந்த 2013ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 331 ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி அரங்கில், ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் இந்தியாவின் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி 2வது இடம் பிடித்தது. இதுவரை 6 இன்னிங்சில் 518 ரன்கள் குவித்தது. முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல்-சந்தர்பால் ஜோடி (635 ரன், 9 இன்னிங்ஸ்) உள்ளது.
பாக்., பவுலர்கள் காயம்

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஆமிர், வகாப் ரியாஸ் காயம் காரணமாக பாதியில் 'பெவிலியன்' திரும்பினர்.

பீல்டிங் சொதப்பல்

பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங் சொதப்பலாக இருந்தது. ஷதாப் கான் வீசிய 38.4வது ஓவரில் யுவராஜ் சிங் துாக்கி அடித்த பந்தை ஹசன் அலி நழுவவிட்டார். அப்போது 8 ரன்கள் மட்டும் எடுத்திருந்த யுவராஜ், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அரைசதம் கடந்தார். இதேபோல வகாப் ரியாஸ் வீசிய 43.6வது ஓவரில் கோஹ்லி கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை பகார் ஜமான் கோட்டைவிட்டார்.
கோடை விடுமுறை முடிவு; பள்ளிகள் நாளை(ஜூன் 7) திறப்பு

பதிவு செய்த நாள்06ஜூன்2017 04:48




சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை(ஜூன் 7) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் நாளிலேயே, இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு தொடக்கப் பள்ளிகளில், ஏப்., 22; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன், 1ல் பள்ளிகள் திறப்பதாக

அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெயில் வாட்டியதால், விடுமுறை காலம், ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, இன்றுடன் கோடை விடுமுறை முடிவுக்கு வருகிறது; நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், மதிய உணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு, நாளையே இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
60 மதிப்பெண்ணை 'அபேஸ்' செய்த கல்வி துறை : ஆசிரியர்கள் தப்பு கணக்கால் மாணவன் கதறல்

பதிவு செய்த நாள்05ஜூன்
2017
21:49



தேர்வுத் துறையின் தப்புக் கணக்கால், பிளஸ் 2 தேர்வில், 60 மதிப்பெண்களை இழந்து, மாணவன் தவிக்கிறான். உயர்கல்விக்கு வேட்டு வைக்கும் வகையில் செயல்பட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது, யார் நடவடிக்கை எடுப்பது என, கேள்வி எழுந்துள்ளது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி மாணவன், சரத்குமார். கணக்கு பதிவியல் பாடத்தில், மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள் நகல் பெற்றார்.
அதை ஆய்வு செய்த போது, கூட்டல் பிழையால், 60 மதிப்பெண்கள் விடுபட்டிருப்பது தெரிய வந்தது. மாணவனின் விடைத் தாள், பாரதி என்ற ஆசிரியையால் திருத்தப்பட்டு உள்ளது. இவர், விடைத்தாளின் முன்பக்கத்தில், மதிப்பெண்ணை பக்க வாரியாகவும், வினா வாரியாகவும் குறிப்பிட்டு கூட்டியதில், 60 மதிப்பெண்களை தவற விட்டுள்ளார். கூட்டல் பிரச்னை வந்ததால் தான், வினா மற்றும் பக்க வாரியாக தனித்தனி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இரு பட்டியலிலும் கூட்டலில் வேறுபாடு இருந்தால், மறு ஆய்வு செய்து, மதிப்பெண் இறுதி செய்யப்படும். 

சரத்குமாரின் விடைத்தாளில், இரு வகை மதிப்பெண் கூட்டு தொகையும், 200 வருகிறது. ஆனால், 140 என, குறிப்பிடப்பட்டு உள்ளது. அதிலும், 30 பக்கங்களில் உள்ள மதிப்பெண்களை கூட்டாமல், 12 பக்கங்களில் உள்ளவற்றை மட்டுமே குறிப்பிட்டு, 140 என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்க மதிப்பெண்களை கூட்டினால், 200 மதிப்பெண் வருகிறது. கூட்டு தொகையை ஆய்வு செய்த துறை அதிகாரியும், தலைமை திருத்துனரும், மதிப்பெண் ஆய்வு அதிகாரியும், பிழையை கண்டு கொள்ளாமல், கையெழுத்து போட்டுள்ளனர். பொதுத் தேர்வில் ஒரு மதிப்பெண் குறைந்தாலே, எத்தனையோ உயர்கல்வி வாய்ப்புகள் பறிபோகும். 60 மதிப்பெண்களை, 'அபேஸ்' செய்த தேர்வுத் துறையையும், கல்வித் துறை அதிகாரிகளையும், ஆசிரியரையும் என்ன செய்வது என, மாணவர்களும், பெற்றோரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கல்லுாரி 'சீட்' கிடைக்குமா? : தற்போதைய நிலையில், 1,098 மதிப்பெண் எடுத்துள்ள மாணவன் சரத்குமார், முக்கிய கல்லுாரிகளில், பி.காம்., இடம் கிடைக்காமல் தவித்து வருகிறான். விடுபட்ட, ௬௦ மதிப்பெண்கள் கிடைத்தால், மிக எளிதாக இடம் கிடைக்கும். ஆனால், மறுகூட்டல் முடிந்து, திருத்திய மதிப்பெண் வரும் போது, மாணவன் விரும்பிய கல்லுாரியில் இடம் காலியாக இருக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.
குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரமற்று காணப்படும் மானாமதுரை ரெயில் நிலையம்



குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரமற்று காணப்படும் மானாமதுரை ரெயில் நிலையம் அடிப்படை வசதிகளும் இல்லை

ஜூன் 05, 2017, 04:00 AM

மானாமதுரை,

மானாமதுரை ரெயில் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரமற்றும், அடிப்படை வசதிகள் இன்றியும் உள்ளது. இதனால் ரெயில் நிலையம் வரும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.ரெயில் நிலையம்

மதுரை ரெயில்வே கோட்டத்தில் முக்கிய ரெயில் நிலையமாக மானாமதுரை ரெயில் நிலையம் இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரத்திற்கு ரெயில் மார்க்கமாக செல்ல வேண்டும் என்றால் மானாமதுரை ரெயில் நிலையம் வந்து, அதன்பிறகே ராமேசுவரம் செல்ல முடியும். இதனால் மானாமதுரை வழியாக தினசரி 10–க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. ஆனால் தற்போது மானாமதுரை ரெயில் நிலையத்தை எந்த ரெயில்வே அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் ஒரு பக்கம் குப்பைகள் குவிந்து சுகாதாரம் இன்றியும், மறுமக்கம் முதல் நடைமேடையில் உள்ள பயணிகள் கழிப்பறை மூடப்பட்டும், குடிநீர் குழாய்கள் தண்ணீர் இல்லாமல் காட்சி பொருளாகவும் உள்ளன. இதனால் மானாமதுரை ரெயில் நிலையம் வரும் பயணிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.குப்பைகள்

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ரெயில் நிலையத்தில் சுகாதார பணிகளை ரெயில்வே நிர்வாகம் நிறுத்திவிட்டன. மேலும் இங்கு பணியாற்றிய சுகாதார பணியாளர்களை கூண்டோடு மாற்றம் செய்து, மதுரை ரெயில்வே கோட்டத்திற்கு அனுப்பிவிட்டனர். இதனால் மானாமதுரை ரெயில் நிலையத்தில் குப்பைகள் அள்ளப்படாததால் நடைமேடை, தண்டவாளம் என எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனை எந்தவொரு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன்வராமல் அதனை கிடப்பில் போட்டு விட்டனர். தற்போது குப்பைகளால் ரெயில் நிலையம் வரும் பயணிகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.அடிப்படை வசதிகள் இல்லை

இதேபோல் மானாமதுரை ரெயில் நிலையத்தில் ஒரேயொரு பயணிகள் கழிப்பறை இருந்தது. அதனையும் தற்போது பூட்டுப்போட்டு மூடிவிட்டனர். இதனால் பெண்கள், முதியோர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக காலையில் இயக்க படும் விருதுநகர், திருச்சி டொமோ ரெயிலில் கழிப்பறை வசதிகள் கிடையாது என்பதால், அதில் பயணம் செய்யும் பயணிகள் ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால் மானாமதுரை ரெயில் நிலையத்தில் கழிப்பறை மூடப்பட்டதால் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

இதுதொடர்பாக ரெயில் நிர்வாக அதிகாரிகள் சிலர் கூறும்போது, சுத்தமாக வருமானம் இல்லாமல் இருப்பதால் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இதனாலேயே ரெயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாக கூறினார்.

எனவே மானாமதுரை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவு செய்ய வேண்டும், ரெயில் நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் விதமாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...