Monday, June 12, 2017

10 லட்சம் போலி 'பான்' கார்டுகளா?ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி

புதுடில்லி:'நாடு முழுவதும், தனிநபர் பெயரில் உள்ள, 10.52 லட்சம் போலி, 'பான்' கார்டுகளை, குறைந்த எண்ணிக்கையாக எடுத்துக் கொள்ள முடியாது; அது, நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்க கூடும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.





வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வாங்குவதற்கும், ஆதாரை கட்டாய மாக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

'ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில், வருமான வரிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் செல்லும்' என, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண் அமர்வு, தீர்ப்பு அளித்தது.

அப்போது, நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் கூறிய தாவது:நாடு முழுவதும் உள்ள, 11.35 லட்சம் போலி பான் கார்டுகளில், 10.52 லட்சம் போலி கார்டுகள் தனிநபர் பெயரில் வாங்கப்பட்டுள்ளன. தனிநபர்கள் தான், நிறுவனங்களை துவக்குகின்றனர்.

கறுப்புப் பணத்தை மாற்றுவதற்காக போலி நிறு வனங்களை உருவாக்க, இதுபோன்ற போலி பான் கார்டுகளை தனிநபர்கள் பயன்படுத்துவதாக, மத்திய அரசு சார்பில் கூறப்பட்டதை ஏற்கிறோம். தனிநபர் பெயரில் உள்ள, 10.52 லட்சம் போலி பான் கார்டுகள் என்பது, மொத்த கார்டுகளில் 0.04 சதவீதம் தான்.

அதனால், அதை கருத்தில் எடுத்து கொள்ள கூடாது என்ற வாதத்தை ஏற்க முடியாது. இந்த போலி பான் கார்டுகள், நாட்டின் பொருளாதாரத் துக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் தேவை. அதில் ஒன்றாகவே இதை பார்க்கிறோம். இவ்வாறுதீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ராஜிவை மேற்கோள் காட்டிய நீதிபதிகள்பான் கார்டு டன் ஆதாரை இணைப்பது தொடர்பான வழக்கில், 157 பக்கத் தீர்ப்பில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளதாவது:

'ஏழைகளுக்காக அரசு செலவிடும் ஒரு ரூபாயில்,15 காசுகள் தான், ஏழைகளுக்கு சென்றடை கிறது' என, முன்னாள் பிரதமர் ராஜிவ், 1985ல், ஒரு கருத்தை கூறியிருந்தார். மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை நாடு அடைந்த போதும், ஏழை, எளிய மக்களுக்கு அதன் பலன் கள் முழுமையாக போய் சேர வில்லை. ஆதார் திட்டத்தின் மூலம், இந்தக் குறையை களைய முடியும் என, முழுமையாக நம்புகிறோம்.

திட்டப் பலன்கள், உரியவர்களுக்கு முழுமை யாக சென்றடைவதற்கு ஆதார் உதவுகிறது. போலிகளுக்கும், தகுதியில்லாதவர்களுக்கும் அரசு திட்டப் பலன்கள் சென்றடைவதை தடுக்க முடியும்.இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தகுதியில்லாத 44 பல்கலை., மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவு

பதிவு செய்த நாள்12ஜூன்2017 01:48




புதுடில்லி: நிகர்நிலை பல்கலையாக செயல்பட தகுதியற்றவை என கூறப்பட்ட, 44 பல்கலைக்கழகங்களில், மீண்டும் ஆய்வு நடத்த, பல்கலை மானிய கமிஷனுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும், நிகர்நிலை அந்தஸ்து வழங்கப்பட்ட, 126 பல்கலைகள், அதற்கான தகுதியுடன் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய, டாண்டன் கமிட்டியை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், 2009ல் அமைத்தது. இந்த கமிட்டி, 126 பல்கலைகளில் ஆய்வு செய்து, 44 பல்கலைகள், நிகர்நிலை பல்கலையாகச் செயல்பட தகுதியற்றவை என, தெரிவித்தது. மேலும், 44 பல்கலைகளில் பல குறைபாடுகள் உள்ளதாக தெரிவித்தது.

தகுதியற்றவை என கூறப்பட்ட, 44 பல்கலைகளுக்கு வழங்கப்பட்ட, நிகர்நிலை அந்தஸ்தை ரத்து செய்யும்படி, டாண்டன் கமிட்டி பரிந்துரைத்தது. இதை எதிர்த்து சில பல்கலைகள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இப்போது, இந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.

இந்நிலையில், டாண்டன் கமிட்டி, தகுதியற்றவை என அறிவித்த, 44 பல்கலைகளிலும் மீண்டும் ஆய்வு நடத்த, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழுவுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.



Sunday, June 11, 2017

தவறாக அனுப்பிய மெஸேஜை திரும்பப்பெறலாம் - அசத்தலான வாட்ஸ்அப்-ன் புதிய வசதிகள்!

கருப்பு

வாட்ஸ்அப் பார்க்காமல் ஒரு நாளைக்கூட இன்றைய தலைமுறையினரால் கடத்திவிட முடியாது. அலுவலகப்பணி காரணமாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடவும் வாட்ஸ்அப் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 120 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.



வாட்ஸ்அப் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன், டெஸ்ட்டர்களுக்கான பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தி சோதிப்பது வழக்கம். அதன்பின் தான் புதிய வசதிகள் அனைத்தும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும். சமீபத்தில் வெளியான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Beta Version - 2.17.210), அசத்தலான சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படலாம்.

மெஸேஜை திரும்பப்பெறலாம் :

வாட்ஸ்அப்பில் தவறுதலாக ஒரு மெஸேஜை அனுப்பிவிட்டு, அதை நீக்கவோ அல்லது திரும்பப்பெறவோ முடியாமல் சிரமப்பட்டிருப்போம். மெஸேஜை டெலீட் செய்தால் அனுப்பியவரின் சாட்டில் மட்டுமே அது நீக்கப்படும். ஆனால், ரிசீவர் மொபைலில் அந்த மெஸேஜ் அப்படியே இருக்கும். பீட்டா வெர்ஷனில் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது வாட்ஸ்அப். மெஸேஜை திரும்பப்பெற்றுக்கொள்ள 'Unsend' என்ற ஆப்ஷன் பீட்டா வெர்ஷனில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரும்பப்பெற நினைக்கும் மெஸேஜை செலக்ட் செய்ததும், திரையின் மேலே மெனு ஒன்று தோன்றும். அதில் 'Unsend' ஆப்ஷனை கிளிக் செய்தால், உடனடியாக மெஸேஜ் திரும்பப்பெறப்படும். ஆனால், மெஸேஜ் அனுப்பி ஐந்து நிமிடங்களுக்குள் மட்டுமே அதைத் திரும்பப்பெற முடியும். அதற்கு மேல் நேரமாகியிருந்தால் மெஸேஜை திரும்பப்பெற முடியாது. ரிசீவர் மொபைலில் இருந்தும் அந்த மெஸேஜ் உடனடியாக நீக்கப்பட்டு, அன்சென்ட் செய்யப்பட்ட விவரம் மட்டும் தெரிவிக்கப்படும்.

லைவ் லொக்கேசன் :

வாட்ஸ்அப்பில் ஓர் இருப்பிடத்தின் மேப்பை எளிதாகப் பகிர்ந்துகொள்ளக்கூடிய லொக்கேசன் ஆப்ஷன் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த மேப்பில் குறிப்பிட்ட இடம் எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இதேபோல, நடமாடும் ஒரு நபரின் அப்போதைய இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வகையில் 'லைவ் லொக்கேசன்' ஆப்ஷனையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நபர் தனது லைவ் லொக்கேசனை மற்றொரு நபருக்கு அனுப்பினால், அதன் மூலம் அந்நபர் பயணிக்கும் இருப்பிடங்களின் லொக்கேசனை அறிந்துகொள்ள முடியும். பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் லைவ் லொக்கேசனைப் பகிர்ந்துகொள்ள முடியும்.


டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் :

வாழ்வின் அத்தனை இனிமையான தருணங்களையும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது தான் தற்போதைய ட்ரெண்ட். புகைப்படம், வீடியோ, Gif போன்ற எந்த ஃபார்மட்டிலும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும். 24 மணிநேரம் இந்த ஸ்டேட்டஸை மற்றவர்களால் பார்க்க முடியும். இந்த பீட்டா வெர்ஷனில் டெக்ஸ்ட் (Text) வடிவில் கலர் பேக்ரவுண்ட் உடன் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ளும் ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மெஸேஜில் Bold, Italic, Strike Through போன்ற எழுத்துருவின் வடிவங்களை மாற்றிக்கொள்வது போல, டெக்ஸ்ட் ஸ்டேட்டஸிலும் மாற்றிக்கொள்ளலாம்.

இவை அனைத்தும் தற்போது வாட்ஸ்அப் பீட்டா பயனாளிகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், Unsend வசதியானது ரூட் அக்சஸ் கொடுத்தபின், Xposed framework இன்ஸ்டால் செய்தால் மட்டுமே வேலை செய்யும். அனுப்புனரும், பெறுநரும் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தினால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். இந்த வசதிகள் சில மாற்றங்களோடு விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
4G டெக்னாலஜியில் இந்தியாவின் ரிப்போர்ட் கார்டு... காப்பாற்றியதா ஜியோ?
கருப்பு

4G நெட்வொர்க் சேவையின் வளர்ச்சியானது, இந்திய தொலைதொடர்புத் துறையில் மட்டுமில்லாமல், மொபைல் சந்தையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றத்தில், ஜியோ நிறுவனத்துக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. போட்டியைச் சமாளிப்பதற்காக மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், குறைந்த விலைக்கு அதிக அளவிலான டேட்டாவை வழங்க ஆரம்பித்ததால், 4G சேவை அசுரவேகத்தில் வளர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், தற்போது 4G சேவையின் தரம் உயர்ந்திருப்பதோடு, விலை குறைந்திருக்கிறது.



லண்டனைச் சேர்ந்த 'ஓபன்சிக்னல்' என்ற நிறுவனம், 4G நெட்வொர்க் பயன்பாட்டில் இருக்கும் 75 நாடுகளில் ஓர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் 2G, 3G போன்ற மற்ற சேவைகளைவிட, 4G சேவையை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 15-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில், மிக விரைவில் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றது இதற்கு ஒரு மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. மேலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால், இந்தியாவில் தான் மிகக்குறுகிய காலத்தில், 4G சேவை அதிவேகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது.

4G சேவையை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் தென்கொரியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு 96.38 சதவிகிதப் பேர் 4G சேவையைப் பயன்படுத்துகின்றனர். தொலைதொடர்புத் துறையில் தென்கொரியாவின் வளர்ச்சி அசாத்தியமானது. 5G நெட்வொர்க் கூட தென்கொரியாவில் தான் முதன்முதலாக அறிமுகமாகும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 71.6 சதவிகிதமாக இருந்த 4G பயனாளர்களின் எண்ணிக்கை, தற்போது 81.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் 4G நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில், சுமார் 60 சதவிகிதத்தை ஜியோ நிறுவனம் பிடித்திருக்கிறது.

4G சேவையை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் முன்னேறியிருந்தாலும், டேட்டா ஸ்பீடு அடிப்படையிலான பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தையே (74-வது இடம்) இந்தியா பிடித்திருக்கிறது. உலக அளவில் 4G நெட்வொர்க் டேட்டா ஸ்பீடு சராசரியாக 17.4 Mbps என்ற அளவில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் 4G நெட்வொர்க் டேட்டா ஸ்பீடு சராசரி வெறும் 5.2 Mbps தான். இது 3G சேவையின் உலக சராசரியான 4.4 Mbps ஸ்பீடைவிட சிறிது மட்டுமே அதிகம். இதனால்தான், டேட்டா ஸ்பீடு விஷயத்தில் இந்தியாவால் கடைசிக்கு முந்தைய இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்துள்ளது. 4G டேட்டா ஸ்பீடு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தையும், தென்கொரியா இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.



இந்தியாவில் தடையில்லாமல் 4G சேவை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ஆய்வில் 91.6 சதவிகிதம் அளவுக்கு ஜியோ நிறுவனத்தின் சிக்னல் தடையின்றிக் கிடைத்திருக்கிறது. ஆனால், டேட்டா ஸ்பீடைப் பொறுத்தவரை, ஏர்டெல் நிறுவனம்தான் இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி டேட்டா டவுன்லோடு ஸ்பீடு 11.53 Mbps. ஆனால் ஜியோ நிறுவனத்தின் சராசரி டேட்டா டவுன்லோடு ஸ்பீடு 3.92 Mbps மட்டுமே பதிவாகியுள்ளது.

அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று ஜியோ நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ந்துவந்தாலும், டேட்டா ஸ்பீடு விஷயத்தில் கவனம் செலுத்தியே ஆகவேண்டும் என்பதையே இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
கால் டாக்ஸி டிரைவர்களின் 'அன் டோல்ட் ஸ்டோரி'...!
நமது நிருபர்மீ.நிவேதன்

சென்னையில் சாலைகளை அதிகமாய் ஆக்கிரமித்திருப்பது கால் டாக்ஸிகள்தான். சென்னையில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட கால் டாக்ஸிகள் இயங்கி வருகின்றன. கால் டாக்ஸிகளை தவிர்த்து விட்டு, ஒரு நாள் கூட சென்னையை இயக்கிவிட முடியாது என்பதுதான் உண்மை. ஐ.டி நிறுவனங்கள் தொடங்கி, சாதாரண பயணிகள் வரை சென்னையில் பெரும்பான்மையோர் நம்பி இருப்பது, கால் டாக்ஸிகளைத்தான்.





இரவு பத்து மணிக்கு மேல், சென்னையின் பரபரப்பான சாலைகளில் ஆங்காங்கே கால் டாக்ஸிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருகின்றன. பத்தில் இரண்டு கார்களில் ஏ.சி தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றது. மற்ற கார்கள் சலனமேயின்றி இருக்கிறது. எல்லா கார்களிலும், டிரைவர் இருக்கையில் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். காசு, பணம், துட்டு, மணி என்பதையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு காருக்கு பின்னாலும், நினைத்து பார்க்க முடியாத ஒரு அன்டோல்ட் ஸ்டோரி இருக்கும்!

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகில், வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் தூங்கி கொண்டிருந்த ஒருவரிடம் கேட்ட போது "எனக்கு சொந்த ஊர் ராஜபாளையம். வீட்ல மொத்தம் ஆறு பேர். நான்தான் மூத்த ஆளு. பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன்; என் அப்பாவுக்கு நான் வக்கீல் ஆகணும்னு ஆசை. நல்லாதான் படிச்சேன். திடீர்னு மூணு வருசத்துக்கு முன்னாடி, அப்பா இறந்து போய்ட்டார்; குடும்பத்த காப்பாத்த, ஊர்ல ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன்.





வருமானம் பத்தல. அப்போதான் தெரிஞ்சவர் ஒருத்தர், சென்னைல கார் ஓட்ட ஆள் வேணும்னு இங்கே கூட்டிட்டு வந்தார். சென்னைக்கு வந்து அஞ்சு மாசம் ஆவுது. சென்னை எனக்குப் புதுசு. வழி சுத்தமா தெரியாது. கார்ல வரும் பத்தில், எட்டு பேர் நமக்கு வழி சொல்ல மாட்டாங்க; மேப் பாத்துதான் போகணும். மேப் பெரும்பாலும் நம்மள சுற்ற விட்ரும். அப்படி சுற்றும் போது, கார்ல இருக்கவங்க திட்ட ஆரம்பிச்சுடுவாங்க. நம்ம மேல தப்பே இல்லனாலும், அப்போ ஒரு வார்த்தை கூட நம்மளால திருப்பி பேச முடியாது சார்.

கட்டணம் அதிகமா இருந்தா, பயணிகள் எங்க கூடதான் சண்டை போடுவாங்க. பயண கட்டணத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தமே இல்லங்கற விஷயத்த படிச்சவங்க கூட ஏத்துக்க மாட்டாங்க. சிலர், 'என்னோட காச வாங்கி, நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டணு' சாபமெல்லாம் விட்டுடட்டு போவாங்க சார். எனக்கு இருக்க டார்கெட்ட முடிக்கணும்னா, காலைல 4 மணிக்கு காரை எடுக்கணும்; சில நாள் சாய்ந்திரம் ஆறு மணிக்கெல்லாம் டார்கெட் முடிச்சிருவேன். சில நாள் நைட் 12 மணிவரை ஓட்டினாலும் முடிக்க முடியாது. எப்படி பாத்தாலும் 3 மணி நேரத்துல இருந்து, 4 மணி நேரம் வரதான் தூக்கம் இருக்கும். அதுவும் கார்லதான்" என்ற போது, இவரின் தூக்கத்தை கெடுத்து விட்டமோ என்கின்ற குற்ற உணர்ச்சி, தானாகவே நம்மை ஒட்டிக் கொண்டது.



இரவு 3 மணிக்கு கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா பகுதியில், காரை நிறுத்தி முகம் கழுவிக் கொண்டிருந்த ஒரு ஓட்டுநரிடம் தயங்கித் தயங்கி பேசிய போது, "கார் ஓட்ட ஆள் வேணும்னு சொல்லி, ராமநாதபுரத்துல இருந்த ஒருத்தர் என்ன சேர்த்து விட்டார். தினமும் 15 மணி நேரத்துக்கு மேல் கார் ஓட்டணும். உடம்பெல்லாம் பயங்கரமா வலிக்கும். எந்த வலியையும் பொருட்படுத்தாமதான் ஓட்டிட்டு இருக்கேன். ஒரு நாள் ரொம்ப களைப்புல காரை நிப்பாட்டி தூங்கிட்டேன். பத்து நிமிசத்துல கார் ஓனர் போன் பண்ணி, ''எதுக்கு கார் ஒரே இடத்துல நிக்கிதுன்னு?'' கேட்டாரு. எனக்கு தூக்கிவாரிப் போட்ருச்சி. ஒருத்தர் கண்காணிப்புல வேலை பாக்குறது, எவ்வளவு பெரிய கஷ்டம் தெரியுமா?" என்று அவர் சொன்ன போது, அவர் நரம்பிற்குள் இருந்த வலியை எனக்கும் கடத்தியிருந்தார்.

"வீட்ல இருக்கவங்க, நான் சென்னைல சந்தோசமா இருக்கேனு நம்பிட்டு இருக்காங்க. அந்த சந்தோசத்த கெடுத்துட கூடாதுனுதான் எல்லாத்தையும் சகிச்சுகிட்டு வண்டி ஓட்டிட்டு இருக்கேன். நேரத்துக்கு சாப்பாடு இல்லை. தூக்கம் இல்லை. நிம்மதி இல்ல. இப்படி இல்லை என்ற வார்த்தையில்தான் வாழ்க்கையே இருக்கு" என்கிறார் மற்றொரு ஓட்டுநர்.

''காரில் வருகிற பயணிகளிடம் பேசக் கூடாது; வருகிற எல்லா அழைப்புகளையும் ஏற்றாக வேண்டும். ஏற்கவில்லையென்றால் உடனடியாக ஃபைன் தொகை. காரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; குறித்த நேரத்தில் பிக்கப் எடுத்தாக வேண்டும்'' என்பதில் தொடங்கி, பல்வேறு பிரச்னைகளைக் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் எதிர்கொண்டாக வேண்டும்.

பணம் என்ற ஒன்றையே குறிக்கோளாய் வைத்து, கார் ஓட்டுகிற பத்தில் ஆறு ஓட்டுநர்களுக்கு முதுகுவலி, மலச்சிக்கல் போன்ற உடல் உபாதைகள் இருக்கிறது என்பது வேதனையான விஷயமாக இருக்கிறது. இரவு நேரங்களில் சென்னை சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டேக்ஸி கா(ர)ர்களின் பின்னால் இருக்கிற கதைகளையும் வலிகளையும் உணர முடியுமானால், "டிரைவர் தானே" என அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது என்பதுதான் உண்மை. மனதையும் கண்களையும் எவ்வளவு திடப்படுத்தி வைத்திருந்தாலும், எதிரில் இருக்கிற சில மனிதர்கள் அதை திரவமாக்கி விடுகிறார்கள்!

- ஜார்ஜ் ஆன்டனி

நவீன வசதிகளுடன் தயாராகும் புதிய பேருந்து நிலையம்

By எ.கோபி  |   Published on : 11th June 2017 04:40 AM  |   
urapakkam
தென் மாவட்டப் பயணிகளுக்கென நவீன வசதிகளுடன் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் அமையவிருக்கும் புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என சிஎம்டிஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாரிமுனையில் புறநகர்ப் பேருந்து நிலையத்தில் கடும் நெரிசல் காரணமாக, பல்வேறு வசதிகளுடன் கோயம்பேட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கும்..: ஆனால், நாள்கள் செல்ல செல்ல கோயம்பேடு பகுதிக்கு வருவதே பெரிய சிக்கலாக வருகிறது.
குறிப்பாக, தென்மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் தாம்பரம், கிண்டி, வடபழனி வழியாகவும், பெருங்களத்தூரிலிருந்து புற வழியாக சாலை வழியாக நெற்குன்றம் வந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை சென்றடைய வேண்டியுள்ளது.
இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்லும் போதும், வரும்போதும், தாம்பரம், பெருங்களத்தூரை கடந்து வருவதில் கடும் நெரிசலை சந்திக்கவேண்டியள்ளது. இதனால், தென் மாவட்ட பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
6 ஆண்டுகளாக..: நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு, கடந்த 2011 இல் தென்மாவட்ட பயணிகளுக்கென புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்பிறகு, நிலம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு, ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் 88.53 ஏக்கர் அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நந்திவரம் கோயில் நிலம், கிளாம்பாக்கம் முதுமக்கள் தாழி பகுதி ஆகியவற்றால் நடைமுறைச் சிக்கல் நிலவுகிறது. இருப்பினும், அதை தீர்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் செப்டம்பரில் அடிக்கல் நாட்டி, புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சிஎம்டிஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மேலும் சிஎம்டிஏ வட்டாரங்கள் கூறியதாவது:
தென் மாவட்ட பயணிகளுக்காக ஊரப்பாக்கம் அருகே நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்ட பணிகள் குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான பேருந்துகளுக்கு..: அவ்வகையில், தென் மாவட்ட பேருந்துகள் மட்டுமின்றி, இதர பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் 2.5 ஆயிரம் அரசு, ஆம்னி பேருந்துகளுக்கு மேல் கோயம்பேடு அரசு, ஆம்னி பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றன. இதில், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதியிலிருந்து பேருந்துகள் வந்து செல்வதுமாக உள்ளன.
இதனால், பெருங்குளத்தூர், தாம்பரம், ஜிஎஸ்டி சாலைப்பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், தென் மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல உள்ளது. அத்துடன், ஆம்னி பேருந்துகளும் அப்பகுதிக்கு இடம் மாற்றப்படவுள்ளன.
துரிதமாகும் பேருந்து நிலைய பணிகள்: அதன்படி, புதிய பேருந்து நிலையத்தில் தென் மாவட்ட பேருந்துகள் நிறுத்துவதற்கான பிரத்யேக நிறுத்தப்பகுதிகள், பணிமனை, பயணிகளுக்கென உணவுக்கூடம் உள்பட பல்வேறு வசதிகளுடன் கட்டமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அதுபோல், விரைவுப் பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகள் உள்பட அனைத்து தென் மாவட்ட வெளியூர் பேருந்துகள் சென்று, வருவதற்கு ஏதுவான நுழைவுப்பகுதி, வெளியேறும் பகுதிகள் அமைக்கப்படவுள்ளன.
நெரிசல் இல்லாத வகையில்..: அதுபோல், ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து ஓர் இணைப்புச் சாலையும் கேளம்பாக்கத்திலிருந்து வண்டலூர் வழியாக புதிய பேருந்து நிலையத்துக்கு ஓர் இணைப்புச் சாலையும் அமைக்கப்படவுள்ளது. மேலும், பெருங்களத்தூர்-செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் ஏற்படாதவாறு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்த அனைத்து பணிகளுக்கும் சிஎம்டிஏ, வீட்டுவசதித்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளன.

    வருமான வரிக் கணக்கு தாக்கல்: ஜூலை 1 முதல் ஆதார் எண் கட்டாயம்

    By DIN  |   Published on : 11th June 2017 04:57 AM 
    aadhaar
    வரும் ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கும், பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.
    பான் அட்டைகள் கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற வருமான வரிச் சட்டத்தின் ஷரத்து சட்டரீதியாக செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், ஆதார் இல்லாதவர்களும் வருமான வரி தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
    இந்நிலையில், இத்தீர்ப்பின் மூன்று அம்ச விளைவுகள் தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
    வரும் ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு நபரும் தங்களது வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கும், பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கும் ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது அல்லது ஆதார் திட்டத்தில் பதிவு செய்ததற்கான எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
    இந்த ஆண்டு (2017) ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி பான் எண் ஒதுக்கீட்டைப் பெற்றவர்கள் தங்களது ஆதார் எண்ணையோ அல்லது ஆதார் பதிவுக்கான எண்ணையோ வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்காக இதை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
    ஆதார் எண் இல்லாதவர்களுக்கும், ஆதார் அட்டை பெற விரும்பாதவர்களுக்கும் பான் அட்டை ரத்து செய்யப்படாது என்ற தாற்காலிக நிவாரணத்தை மட்டுமே உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. இது வருமான வரிச் சட்டத்தின்படி பான் எண்ணைக் குறிப்பிடத் தவறியதற்காக எந்த விளைவும் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்தச் சலுகையை நீதிமன்றம் அளித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் விளக்கம் அளிக்கையில், "பான் எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் ரத்து செய்யப்பட்டால் ஒரு நபரால் வழக்கமான வங்கி மற்றும் நிதிச் செயல்பாடுகளை மேற்கொள்ள இயலாமல் போய்விடும். எனவே மேற்கண்ட நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வரும் ஜூலை 1 முதல் வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கும், பான் அட்டை கோரி விண்ணப்பிக்கவும் ஆதார் கட்டாயமாகும்' என்றார்.
    இந்த விவகாரம் குறித்து உயரதிகாரிகள் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பை மத்திய சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம், மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரித்துறை ஆகியவற்றின் உயரதிகாரிகள் பரிசீலித்தனர். அதன் பிறகே மேற்கண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தனர்.

    Jipmer MBBS counselling from June 27

    Rank letters can be downloaded

    The results of Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (Jipmer) MBBS entrance examination were published on Friday.
    The first round of counselling will be held from June 27 to 30. The counselling dates for category-wise candidates are as follows: On the first day (June 27), the medical board will examine the PwD-OPH (Orthopedic Physically Handicapped) and P-OPH (Puducherry - Orthopedic Physically Handicapped) candidates to certify their disability. This will be held on IIIrd Floor, Academic Section, JIPMER Academic Centre and the reporting time is 9 a.m.
    For candidates falling under general (UR) category /OPH and P-OPH, counselling will be on June 28 and for OBC, SC and ST candidates on June 29.
    The final day (June 20) of counselling will be for Puducherry – UR, OBC, SC and NRI, OCI students. The reporting time for counselling on all the three days is 8 a.m. at Jipmer Auditorium (Temple Gate No.7) in Jipmer.
    Selected candidates are requested to refer to the prospectus page number 27 for the list of certificates to be brought on the day of counselling.
    All applicants who have appeared for the entrance examination can be download their individual rank letter detailing their marks from official website of Jipmer (www.jipmer.edu.in) from June 15, 2017 (Wednesday) from 10 a.m.
    No individual communication will be sent to any of the candidates. The candidates are requested to check the Jipmer website for relevant and updated instructions on counselling periodically.
    Change of certificate verification or counselling date will not be allowed to any candidate under any circumstances.
    The second round of counselling is tentatively fixed for July 19. The courses will commence on July 5.
    Of the 200 seats, 54 seats will be reserved for Puducherry students.
    For the first time, nearly 22 students from Achariya Bala Siksha Mandir and Achariya Siksha Mandir of Achariya World Class Educational Institutions have cleared Jipmer entrance examination and shortlisted for counselling.
    ×

    Aadhaar enrolment at post offices from July

    Details can also be updated; 12 head post offices and 2,515 sub post offices to provide facility

    City residents may visit post offices to enrol themselves for the Aadhaar cards from July.
    The postal department is in the process of identifying designated post offices across the State to function as centres for Aadhaar enrolment and updating.
    The department has planned to implement the project at head post offices in 12 places — Chennai, Puducherry, Kanniyakumari, Madurai, Tiruchi, Coimbatore, Erode, Salem, Tiruppur, Dindigul, Vellore and Tirunelveli. These select post offices would enable residents to enrol themselves for Aadhaar cards and update details such as mobile numbers and address.
    Officials of the postal department said while residents may be able to enrol for Aadhaar cards only in select head post offices, they may approach any branch post office with a computerised network for updating details in the Aadhaar card.
    Postmaster General in charge (Chennai city region) J.T.Venkateswarulu said besides 12 head post offices, 2,515 sub post offices have been identified to provide the facility across the State.
    Reaching rural areas
    This would be beneficial particularly for residents in rural pockets as post offices have a better reach.
    Two staff members would be involved in providing the service in each post office. “We have trained 100 postal personnel who will in turn train other employees across the State. We are procuring equipment for registering biometric identification of residents,” he said.
    The project would be implemented at a cost of Rs. 80 lakh. In Chennai, Anna Road head post office is likely to chosen as designated post office for Aadhaar enrolment, officials said.

    MCI team to visit KAPV medical college soon




    College awaits MCI nod for starting MS (Orthopaedics) course

    A team from the Medical Council of India (MCI) team is likely to visit KAP Viswanatham Government Medical College in the city soon to assess the infrastructure available for granting permission to offer 10 post graduate seats in MS (Orthopaedics).
    Inaugurating a high-tech orthopaedics operation theatre complex and trauma super speciality block at the Mahatma Gandhi Memorial Government Hospital attached to the college, S. Marry Lilly, Dean, said that the State government and the Department of Medical Education had already approved the plan for offering 10 PG seats in MS (Orthopaedics).
    A proposal had been sent to the MCI seeking permission. The visit of MCI team was expected any time this month. It would study the infrastructure, facilities and other aspects. If the MCI gives its nod, the college would offer MS (Orthopaedics) course from 2017-18.
    She said that three elective operation theatres had been opened at the trauma care super speciality block. While a theatre was meant for doing spine and trauma surgeries, other theatres would be used for joint replacement and arthroscopy surgeries.
    P. Mathivanan, Head, Department of Orthopaedic Surgery, said that it had been planned to carry out surgeries six days a week.
    On an average, the department received 500 to 600 patients a day. The new facilities would be helpful for patients, who needed spine, trauma and joint replacement surgeries. The rate of surgeries could be increased by 25%.
    G. Anitha, Medical Superintendent, T. Karunakaran, Resident Medical Officer, K. Kalyanasundaram, A. Srinivasan, Associate Professors, Kumaresapathy, Senior Assistant Professor, KAP Viswanatham Government Medical College participated.
    கூட்டம் இல்லாததால் தம்பிதுரை காட்டம்
    பதிவு செய்த நாள்10ஜூன்2017 22:43




    கரூர், கரூர் அருகே நடந்த, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வராததால், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கோபம் அடைந்தார்.
    கரூர் அடுத்த, புலியூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில், நேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சிநடந்தது. லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். 

    சென்னையில் போக்குவரத்து துறை சம்பந்தமான ஆய்வுக்கூட்டம் இருந்ததால், மாவட்ட செயலரும், போக்குவரத்து துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் பங்கேற்கவில்லை.

    நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இருந்தும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இல்லாததால், ஆவேசமடைந்த தம்பிதுரை, புலியூர் பேரூர் கழக செயலரை அழைத்து, ''கட்சி நிர்வாகிகள்,
    தொண்டர்களை காணவில்லை; தகவல் சொல்லவில்லையா,'' என, கேட்டார். அதிர்ச்சியடைந்த அவர், அருகில் இருந்த மாவட்ட அவைத் தலைவரை பார்த்தார்.

    நிலைமையை புரிந்து கொண்ட தம்பிதுரை, ''இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு, கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்து, தொண்டர்களை அழைத்து வரவேண்டும்.
    அவர்கள் இல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் எப்படி நடத்துவது. உங்களால் முடியவில்லை என்றால் சொல்லி விடுங்கள்; நானே வீடு தேடி போய் அழைத்து வருகிறேன்,'' என்றார்.

    இதையடுத்து, மாவட்ட அவைத் தலைவரும், பேரூர் செயலரும், துண்டு சீட்டில் பெயர்களை எழுதி, அலைபேசி மூலம், நிர்வாகிகளை நிகழ்ச்சிக்கு அழைத்தபடி இருந்தனர். அதற்குள் தம்பிதுரை பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அங்கிருந்து சென்றார்.
    குறித்த நேரத்தில் இயக்காவிட்டால் மீண்டும் விமான சேவை முடங்கும்

    பதிவு செய்த நாள்10ஜூன்2017 19:13

    சூரமங்கலம், : சேலத்தில், குறித்த நேரத்தில் விமானம் இயக்காவிட்டால், மீண்டும் அதன் சேவை முடங்கும் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, இந்திய தொழில் வர்த்தக சபை, சேலம் மாவட்ட தலைவர் மாரியப்பன் கூறியதாவது:
    சேலம் விமான நிலைய சேவை ரத்தானதற்கு காரணம், மாலை, 4:20 மணிக்கு, விமானம் சென்னையில் இருந்து வந்து, 5:20 மணிக்கு சென்னை திரும்பியதே காரணம்.
    எனவே, காலை, 7:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, 8:00 மணிக்கு சேலம் வந்து சேர வேண்டும். 9:00 மணிக்கு, இங்கிருந்து புறப்பட்டு, 10:00 மணிக்கு சென்னை செல்லும்படி, விமானத்தை இயக்கினால், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் பயன்படுத்துவர்.
    அவர்கள், தங்கள் பணிகளை முடித்துவிட்டு, மீண்டும் மாலை, 5:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்படி, விமான சேவை வழங்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவெடுத்தால், சேவை தொடரும். இல்லையெனில், விமான சேவை கேள்விக்குறியாகிவிடும்.
    வெளிநாடுகளில் இருந்து, சென்னைக்கு அதிகாலை வரும் பயணிகள், காலை, 7:00 மணிக்கு, அங்கிருந்து புறப்படும் வகையில், விமானத்தை இயக்க வேண்டும்.
    சேலத்தில் தொழில்நுட்ப பூங்கா செயல்பட தொடங்கியுள்ளதால், தொழிற்சாலைகள் அமைய வாய்ப்புள்ளது. அதனால், குறித்த நேரத்தில் விமான சேவை இருக்க வேண்டும்.
    சேலம் விமான நிலையத்துக்கு, உரிய பாதுகாப்பு செலவை மாநில அரசு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    ஒட்டி உறவாடுவதா; ஒதுக்கி வைப்பதா?குழப்பத்தில் தவிக்கும் தமிழக மந்திரிகள்

    DINAMALAR
    சசிகலா குடும்பத்தை விரட்டவும் முடியாமல், ஒட்டி உறவாடவும் முடியாமல், அமைச்சர்கள் தடுமாறி வருகின்றனர்.





    ஜெ., இருந்த வரை, அமைச்சர்கள், அவர் சொல்லுக்கு மறு சொல் கூறாமல், அடக்கமாக இருந்தனர். அவர் மறைவுக்கு பின், சசிகலா சொல்லுக்கு கட்டுப்பட்டனர். அவர் சிறைக்கு சென்றதும், தினகரன் சொல்லுக்கு கட்டுப்பட்டனர். தினகரன் சிறைக்கு சென்றதும், சுதந்திரமாக செயல்படத் துவங்கினர்.

    கடும் அதிர்ச்சிஅதே நிலையை தற்போதும் தொடர விரும்புகின்றனர். எனவே, சசிகலா மற்றும் தினகரனை சந்திக்க, யாரும் செல்ல வில்லை. இது, சசிகலா குடும்பத்தின ருக்கு, கடும் அதிர்ச்சியை அளித்தது. ஜாமினில் வந்த தினகரன், இதே நிலை தொடர்ந்தால், கட்சியும், ஆட்சியும், தங்கள் கையை விட்டு போய்விடும் என்பதை உணர்ந்தார்.பெங்களூரு சிறைக்கு சென்று, சசிகலாவிடம் நிலைமையை தெரிவித்தார். 

    'கட்சி மற்றும்

    ஆட்சியை, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, முயற்சி செய்' என, அவரும் ஆலோசனை கூறினார். அதைத் தொடர்ந்து, தினகரன், தன் ஆதரவு எம்.எல் ஏ.,க்களை, சந்திக்க துவங்கினார். அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், தன்னிடம் வருவர் என, எதிர் பார்த்த நிலையில், 32 பேர் மட்டுமே, அவரை சந்தித்தனர்; மற்றவர்கள் வரவில்லை.இதனால், தினகரன் அதிர்ச்சி அடைந்தார்.

    முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூடி ஆலோசித்த னர். ஆலோசனைக் கூட்டத்தில், 'தினகரன், ஆட்சியை கலைத்தால், ஜெ., ஆட்சியை கலைத்து விட்டார் என்ற அவப்பெயர், சசிகலா குடும்பத்திற்கு ஏற்படும். அதை, அவர்கள் விரும்ப மாட்டார்கள்' என, மூத்த அமைச்சர் ஒருவர் கூறினார்.

    'துரோகம்'

    நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், சசிகலா குடும்பத்தினர் தலையீடு இன்றி, இன்னும் நான்கு ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய லாம்' என, முதல்வர் கூறியுள்ளார்; அதை, அமைச் சர்கள் அனைவரும் ஏற்றனர். இதை யடுத்தே, அமைச்சர்கள் யாரும், தினகரனை சந்திக்க செல்ல வில்லை. அவர்களை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு, மத்திய அரசுஆதரவுடன், ஆட்சியை தொடர முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க் கள், முதல்வர் மற்றும் அமைச்சர்களை, தினமும் சந்தித்து வருகின்றனர். அப்போது அவர்களிடம், 'உங்களுக்கு நன்றி இல்லையா; கூவத்துாரில் தங்க வைத்து, ஆட்சியை உங்க ளிடம் கொடுத்தது,

    சசிகலா மற்றும் தினகரன் தானே... அவர்களுக்கு துரோகம் செய்கிறீர்களா?' என, கேள்விகளால் துளைத்து எடுக்கின்றனர்.

    'அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால், ஆட்சியை கலைத்து விடுவோம்' என்றும், மிரட்டி வருகின்றனர். இதனால், அமைச்சர்கள், செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். சசிகலா குடும்பத்தினருடன், ஒட்டி உறவாடி னால், கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அதிருப்தியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    சுதந்திரமாக செயல்பட முடியாமல், அடிமை கள் போல், அவர்கள் சொல்வதை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.சசிகலா குடும் பத்தை ஒதுக்கி தள்ளினால், அவர்கள் மிரட் டலை சந்திக்க வேண்டி வரும்; ஆட்சி கவிழ வும் வாய்ப்புள்ளது. எனவே, என்ன செய்வது என, தெரியாமல், அமைச்சர்கள் தவித்து வருகின்றனர்.
    வேளாண் பல்கலை 'கட் ஆப்' மதிப்பெண் முதல் 6 இடங்களில் மாணவியர் அசத்தல்
    பதிவு செய்த நாள்10ஜூன்2017 22:29

    கோவை, கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளநிலை படிப்பு சேர்க்கைக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆறு இடங்களை மாணவியரும், ஏழாவது இடத்தை மாணவரும் பெற்று அசத்தியுள்ளனர். 

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின்கீழ், 14 உறுப்பு மற்றும், 21 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, இளநிலை தொழில்நுட்ப படிப்புகள் என, 13 இளநிலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளில், 2017 - 18ம் ஆண்டு சேர்க்கைக்கு, மே, 12 முதல் ஜூன் 4 வரை மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தனர்.
    முதல் 3 இடங்கள்தொடர்ந்து, 200 மதிப்பெண்களுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியலை பல்கலை துணைவேந்தர் ராமசாமி நேற்று வெளியிட்டார். அதில், நாமக்கல் மாணவி கிருத்திகா, 200 'கட் ஆப்' மதிப்பெண்களுடன் முதலிடமும், கோவை மாணவி கீர்த்தனா இரண்டாம் இடம், சேலம் சோபிலா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். அடுத்த மூன்று இடங்களையும் மாணவியரே பிடித்துள்ளனர். 

    கரூர் மாணவர் பாலாஜி, 199.75 மதிப்பெண் பெற்று ஏழாவது இடம் பிடித்துள்ளார். தவிர, புதுக்கோட்டையைச் சேர்ந்த திருநங்கை ராஜேஷ் என்பவரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 

    தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
    தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 2017 - 18ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு, 53 ஆயிரத்து, 47 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 21 ஆயிரத்து, 15 மாணவர்கள், 28 ஆயிரத்து, 14 மாணவியர் மற்றும் திருநங்கை ஒருவர் என, 49 ஆயிரத்து, 30 பேர் கட்டணம் செலுத்தி சமர்ப்பித்துள்ளனர்.
    பொதுப்பிரிவினரில், 45 ஆயிரத்து, 576 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொழில் பிரிவில், 1,780 பேர், முன்னாள் ராணுவத்தினர், 373, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள், 13, விளையாட்டில், 349, மாற்றுத்திறனாளிகள், 103 பேர் என ஒவ்வொரு பிரிவிலும், 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

    37.5 சதவீதம்
    இதில், 199 'கட் ஆப்' மதிப்பெண்களுக்கு மேல், 100 பேரும், 198.5க்கு மேல், 200 பேர், 198.25க்கு மேல், 300 பேர், 194க்கு மேல், 3,000 பேர், 186க்கு மேல், 10 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்தாண்டை விட, 37.5 சதவீதம் பேர் இவ்வாண்டு கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். 

    ஏற்கனவே அறிவித்ததுபோல், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும், 16ம் தேதியும், பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும், 19ம் தேதி முதல், 24ம் தேதி வரையும் நடக்கிறது. 

    இவ்வாண்டு, குடியாத்தம், திருவண்ணாமலையில், தலா, ஒன்று என, புதிதாக இரு வேளாண் கல்லுாரிகள் வரவுள்ளன. அதேபோல், தற்போது, அனுமதி பெற்று இயங்கும் நான்கு கல்லுாரிகளில் கட்டமைப்பு மேம்பாடு இல்லாததால், மாணவர் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளோம். இவ்வாறு துணைவேந்தர் ராமசாமி கூறினார்.




    வேளாண் படிப்பில் ஆர்வம்


    !
    புதுக்கோட்டையை சேர்ந்த திருநங்கை ராஜேஷ் கூறுகையில், ''வேளாண்மை படிப்பை தேர்வு செய்யவுள்ளேன். தொடர்ந்து, அரசுத் துறையில் நுழைந்து பொதுமக்களுக்கு சேவை செய்வேன். விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை வீட்டில் பெற்றோரும், பள்ளியில் ஆசிரியர்களும் தன்னம்பிக்கை அளித்து படிக்க வைத்தனர்,'' என்றார்.
    மதுரைக்கு 'எய்ம்ஸ்' நழுவியது ஏன்? அலையடிக்கும் அரசியல் தலையீடு

    பதிவு செய்த நாள்10ஜூன்2017 18:48





    மதுரை, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் வாய்ப்பு, மதுரைக்கு பறிபோய், தஞ்சையில் அமைக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
    எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுதியான இடம் குறித்து, 10 கேள்விகளுடன் மத்திய அரசு, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆட்சியாளர்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ளும் குழப்பத்தில் இருந்ததால், மத்திய அரசின் கேள்விக்கு தாமதமாக பதில் அனுப்பினர். அதில், 'தஞ்சை தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுதியான இடம்' என தெரிவிக்கப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் அமைந்தால், 10 தென்
    மாவட்டங்கள் பயன்பெற்றிருக்கும். மத்திய அரசின் பெரிய நிறுவனங்கள் ஏதும் இல்லாத மதுரையில், எய்ம்ஸ் அமையும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த எண்ணம் ஈடேறவில்லை. மதுரை யின் இரண்டு அமைச்சர்கள், எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் உரிய முயற்சி எடுத்திருந்தால் இது நடந்திருக்கும். 

    தடை ஆணை பெறுவோம் இது தொடர்பாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் கூறியதாவது: 

    மதுரையில் எய்ம்ஸ் அமைக்க தகுதி இல்லாதது போல், தவறான தகவல்களை தமிழக சுகாதார துறை அமைச்சர் மற்றும் செயலர் கூறி
    உள்ளனர். ஏற்கனவே, தஞ்சையை சுற்றியுள்ள பகுதி களில் பெரிய மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், மதுரையில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை; இங்கு எய்ம்ஸ் வந்தால், மருத்துவ தொழிற்சாலையாக திகழும் சிறு, குறு தொழில்கள் வளரும். தென்மாவட்ட மக்கள் பயன் பெறுவர்.
    தமிழக அரசு அனுப்பிய கடிதத்தில் முழுக்க, முழுக்க அரசியல் தலையீடு இருக்கிறது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு கூறினார். தியாகம் செய்ய தயார் இது குறித்து, திருமங்கலம் தொகுதியை சேர்ந்த அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: 

    எய்ம்ஸ் அமைக்க, தோப்பூர் கோ.புதுப்பட்டியில், 200 ஏக்கர் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு, அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. அதன் பின், மத்திய அரசின் இணை செயலர் தாத்திரி பாண்டா குழு, இடத்தை பார்வையிட்டது. அவர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில், மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்து, 21 அலுவலர்கள் விளக்கினர். இது குறித்து எல்லா துறையினரிடமும் கருத்துரு பெற்றும் அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்த நிலங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலங்கள் வழியாக, உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லவில்லை. அருகில் காசநோய் மருத்துவமனையை தவிர வேறு கட்டடங்கள் இல்லை. எனவே இந்த இடத்தில் எய்ம்ஸ் அமைப்பதை தவிர, வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற இயலாது. 

    சர்வதேச விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன், நான்கு வழிச்சாலை என, எல்லா கட்ட மைப்புகளும் உள்ளன. இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்வரிடம் நேரில் வலியுறுத்திஉள்ளேன். இவ்வாறு கூறினார். 

    முதல்வரிடம் பேசுவேன் 'மதுரைக்கு வர இருந்த எய்ம்ஸ், தஞ்சாவூர் போனது தெரியுமா?' என அமைச்சர் ராஜுவிடம் கேட்டபோது, அவர்
    கூறியது: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நினைத்தால், மதுரையில் அமைக்க முடியும். மதுரையில் அமைக்க உறுதியாக உள்ளோம். மருத்துவமனை அமையும் இடத்தில் எரிவாயு குழாய் செல்வதால் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஆனது. 

    வெளிநாட்டு, வெளிமாநில டாக்டர்கள் வந்து குடும்பத்துடன் தங்கி செல்லும் வகையில், 20 ஏக்கரில், 'தீம்' பார்க் உள்ளிட்ட வசதிகளுடன் திட்டம் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப் பட்டது. 

    மதுரையில் அமைவது தான் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார். 'தஞ்சையில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என பிரதமர் மோடியிடம், முதல்வர் பழனிச்சாமி மனு அளித்தாரே' என அமைச்சரிடம் கேட்ட போது, ''அதற்கு வாய்ப்பு இல்லை; அப்படி கொடுத்தாரா என தெரியவில்லை. மதுரையில் தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என முதல்வரிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன்,'' என்றார்.
    - நமது நிருபர் -
    நடவடிக்கை..!வரி தாக்கலில் கூடுதல்வருமானம் காட்டப்பட்டிருந்தால்...

    புதுடில்லி, 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வருமான வரி தாக்கலில், கூடுதல் வருமானம் காட்டப்பட்டிருந்தால், அது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவர்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    @Image1@பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, நவ., 8ல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார். கறுப்பு பணத்தை ஒழிப்பதற் காக இந்த நடவடிக்கை என, பிரதமர் அறிவித் தார். மேலும், செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளவும், டிசம்பர், 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

    இந்த கால கட்டத்தில், வங்கியில் யாருடைய கணக்கில், அதிகளவில் செல்லாத ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டது என்பதை வரு மான வரித்துறை ஆய்வு செய்தது. மேலும், 'பினாமி' கணக்குகளில், பணம் செலுத்தியவர் கள் பற்றியும் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்நிலையில், 2016 - 17ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல், கடந்த மார்ச், 31ம் தேதியுடன் முடிந்தது. நாடு முழுவதும் பல லட்சம் பேர், வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த கணக்குகளை, வருமான வரித்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து வருகின்றனர்.இது பற்றி, வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், அதிக தொகை

    டிபாசிட் செய்யப்பட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஜன்தன் கணக்குகள் பற்றிய விபரங் களை, வங்கிகளிடம் இருந்து வருமான வரித்துறை பெற்றுள்ளது.

    இந்த கணக்குகளை ஆய்வு செய்து வருகிறோம். அத் துடன், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வருமானம் அதிகரித்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம். அப்படி வருமானம் அதிகரித் துள்ளது தெரிந்தால், சம்பந்தப்பட்ட நபர், நிறுவனத் திடம், இ - மெயில் மூலம் விபரங்கள் கேட்கப்படும். இதற்கு சரியாக பதில் அளிக்காதவர் களிடம், அடுத்த கட்டமாக சோதனை நடத்தப்படும்
    இவ்வாறு அவர் கூறினார்.

    7 பேர் குழு அமைப்பு

    கறுப்பு பணம் குறித்து தானாக முன்வந்து அறிவிக் கும் திட்டம், இப்போது அமலில் இல்லை. இதனால், வரி வசூல் மூலம் கிடைக்கும் வருவாயை தான், மத்திய அரசு பெரிதும் நம்பியுள்ளது.குறிப்பாக, 2016 - 17ம் நிதியாண்டில், வரி பாக்கித் தொகை, 8.24 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, இப்போது, 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது. அதனால், வரி ஏய்ப்பாளர்கள் மீது, கடும் நடவடி க்கை எடுத்து, வரி வசூலை அதிகப்படுத்த, வருமான வரித் துறையைஅரசு கேட்டு கொண்டுள்ளது.

    இதற்காக, வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடன் வழங்கும் ஏஜன்சிகள் ஆகியவற்றிடம், கோடிக் கணக்கில் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாதவர்கள் பற்றிய விபரங்களை, வருமான வரித்துறை கேட்டுள்ளது. இவர்களது பெயர்கள், நிறுவனங் களை, பகிரங்கமாக விளம்பரப்படுத்தி அவமானப் படுத்தவும் முடிவு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நடவடிக்கையை, வருமான வரித்துறை எடுத்து வருகிறது.

    இதுவரை, கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்து தலைமறைவாகிவிட்ட, 96 நிறுவனங் களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டு உள்ளது. மேலும், வரி பாக்கியை வசூலிக்க, எடுக்க

    வேண்டிய நடவடிக்கை குறித்து பரிந்துரைக்க, வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் ஆதித்ய விக்ரம் தலைமையில் ஏழு பேர் கொண்ட கமிட்டியை, மத்திய நேரடி வரிகள் வாரியம் அமைத்துள்ளது. இந்த கமிட்டி, தன் அறிக்கையை, ஜூலை, 15க்குள் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சரியான தகவல் தராவிட்டாலும் சிக்கல்

    மத்திய நிதியமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், கறுப்பு பணம் அதிகளவில் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், கறுப்பு பணத்தை மீட்க பல்வேறு நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டது. கறுப்பு பணத்தை தானாக முன் வந்து தெரிவித்து, வரி விதிப்பை குறைக்கவும், சலுகை வழங்கப்பட்டது.ஆனால், இந்த நடவடிக்கைகளால், எதிர்பார்த்த அளவுக்கு, கறுப்பு பணத்தை மீட்க முடிய வில்லை. 5,000 கோடி ரூபாய் அளவில் தான், கறுப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது.

    அதனால் தான், வருமான வரி கணக்கு தாக்கலை தீவிரமாக ஆய்வு செய்ய வருமான வரித் துறையிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் வருமானம் குறித்து சரியான தகவல் அளிக்காதவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
    நேர்மையாக பணியாற்றியதால் 24 ஆண்டுகளில் 24 முறை மாற்றம் : சகாயம்
    பதிவு செய்த நாள்
    ஜூன் 10,2017 20:40


    24 ஆண்டுகளில் 24 முறை மாற்றம்: சகாயம்

    சென்னை: நேர்மையாக பணியாற்றியதால் 24 முறை இடமாற்றம் செய்யப்பட்டதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கூறினார்.
    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: நேர்மையை எனது பெற்றோரிடம் இருந்து கற்று கொண்டேன். நேர்மையாக பணியாற்றியதால் கடந்த 24 ஆண்டுகளில் 24 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன் . நான் நேர்மையாக இருந்ததால் தான் மக்கள் என்னை நினைவில் வைத்துள்ளனர் என கூறினார்



    ரூ.18 லட்சம் லஞ்சமாக கொடுத்தது எப்படி? பெண்ணிடம் வருமான வரித்துறையினர் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு


    மகனை மருத்துவக்கல்லூரியில் சேர்க்க ரூ.18 லட்சம் லஞ்சமாக கொடுத்தது எப்படி? என்பது குறித்து பெண்ணிடம் வருமான வரித்துறையினர் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ஜூன் 11, 2017, 03:26 AM
    சென்னை,

    சென்னை மாதவரம் பால்பண்ணை வேணுகோபால்நகரைச் சேர்ந்தவர் செல்வி. இவரது மகனுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி சென்னை கோவர்த்தனகிரி லட்சுமிநகரைச் சேர்ந்த அனுபாக்யா(வயது 31) உள்பட 3 பேர் செல்வியிடம் ரூ.18 லட்சம் பெற்றுள்ளனர்.


    ஆனால், மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று அனுபாக்யா, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

    மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:–

    மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேவேளையில் புகார்தாரரான செல்விக்கு 18 லட்சம் ரூபாய் பணம் வந்தது எப்படி என்பதையும் விசாரிக்க வேண்டியது உள்ளது. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகும்.

    லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் தண்டிக்கப்படக்கூடாது. லஞ்சம் கொடுப்பவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இதன்மூலம் லஞ்சம் கொடுப்பதை தடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே, புகார்தாரரான செல்விக்கு 18 லட்சம் ரூபாய் பணம் எப்படி வந்தது என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்.

    விசாரித்து நடவடிக்கை

    அதேவேளையில் வருமான வரித்துறை ஆணையரும் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்காக இந்த உத்தரவு நகலை வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு பதிவாளர் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    Saturday, June 10, 2017

    NEET: Madras high court, poses 12 questions to CBSEA Subramani| TNN | Jun 10, 2017



    CHENNAI: How could CBSE conduct NEET for students from various boards, including its own students, and how could a single test assess the intellectual capability of students aspiring to do medical education? These are some of the questions raised by Madras high court, which said only a minuscule percentage of students in urban areas would benefit by NEET model.

    Justice N Kirubakaran then directed the CBSE, MCI and other authorities to furnish their replies to the 12 questions raised by the court when the matter is taken up further hearing on June 27. Brushing aside MCI's submissions, the judge said, "Though the nationwide single common entrance ex amination for admission into medical colleges is appropriate, there are many difficulties faced by students who are undergoing the studies under various systems (state board, central board, Anglo-Indian syllabus and ICSE)."

    Saying that there is no uniformity of syllabus, the judge said only only 4,675 science group students were from 268 CBSE schools. As many as 4.20 lakh science group students were from 6,877 state board schools in Tamil Nadu in 2016-17, he said.

    The judge then laid down the following queries in a bid to ensure level playing field for all students.

    1. Is it possible to determine the calibre of the students by a single NEET examination conducted by CBSE?

    2. When the questions are set up by CBSE, will it not be easy for the CBSE students and difficult for the non CBSE students?

    3. Would it not enable the CBSE students who constitute only about 5-10% of total candidates to grab the maximum number of seats in the medical admission, as question papers are set up based on CBSE syllabus?

    4. Is it not necessary to provide level playing field to all the students while conducting NEET examination by CBSE?

    5. Whether the exclusion of academic performance in Class XI and Class XII examination would not make the students non-serious about their school studies and concentrate only NEET?

    6. Will it not be appropriate to combine the Class XII marks and NEET marks in equal percentile to determine the calibre of the students more accurately?

    7. Would it be possible for authorities to conduct the NEET examination continuously along with Class XII examination?

    8. Would not the considering of NEET examination marks alone for medical admission make room for mushrooming of coaching centres?

    9. Why not the authorities prescribe uniform syllabus for physics, chemistry , biology and maths throughout India? 10. Is it not essential to train teachers in the new syllabus for physics, chemistry, biology and maths?

    11. Whether or not the TN government responsible for dilution of standards in education, as it had not taken any steps to revise the syllabus?

    12. Why not the state government appoint well trained teachers in all the schools to prepare students for NEET?
    ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு: தேவஸ்தானம் முடிவு

    2017-06-10@ 18:23:57




    திருப்பதி: ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வழங்கப்படும் என்று தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. லட்டு, தரிசன டிக்கெட் உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதாரை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனத்துக்காக மென்பொருள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    தொழில் ரகசியம்: இமேஜை பற்றி கவலைப்படுங்கள்

    சதீஷ் கிருஷ்ணமூர்த்தி



    பிராண்டை பற்றி வாடிக்கையாளர்கள் மனதில் தோன்றும் பிம்பம்தான் இமேஜ். அந்த இமேஜ் உண்மையாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. பிராண்ட் பற்றி அவர்கள் மனதில் தோன்றும் கலவையான எண்ணங்களே இமேஜ். இந்த கலவையைப் பற்றி விவரமாய் பேச வேண்டியிருக்கிறது. அதற்கு பிறகு வருவோம்.

    பிராண்ட் இமேஜ் ஒரு நாள் கூத்து அல்ல; ஒரு நாளில் உருவாக்கும் கூத்தும் அல்ல. தட்டி தட்டி சிற்பம் வடிப்பது போன்ற கலை இது. பலவற்றின் தேர்ந்த கலவை இது. பிராண்ட் பொசிஷனிங் முதல் பேக்கேஜிங் வரை, விலை முதல் விளம்பரம் வரை பிராண்டின் ஒவ்வொரு அங்குலமும் ஒவ்வொரு அங்கமும் சரியாக செதுக்கப்படவேண்டிய சிற்பம்.

    பிராண்ட் இமேஜ் என்றால் `பிரீமியம்’, `அந்தஸ்து’, `விளம்பரம்’ என்றே பலர் நினைக்கின்றனர். இமேஜை வளர்க்க உதவும் பல விஷயங்களில் விளம்பரம் ஒன்று. அவ்வளவே. அது மட்டுமே பிராண்ட் இமேஜ் அல்ல.

    `க்ளோஸ் அப்’ என்றால் புத்துணர்ச்சி என்பீர்கள். அதைப் பற்றி பேசுகையில் அதன் `சிவப்பு’ நிறம் நினைவிற்கு வருகிறது. `மவுத்வாஷ் அடங்கியது’ என்பது மனதில் வந்து போகும்.

    ‘காஃபி டே’ என்றால் இளம் ஜோடிகள் அமர்ந்து கடலை போடும் இடம் என்று தோன்றும். அங்கு சத்தம் அதிகம் இருக்கும் என்று மனம் நினைக்கும். அங்கு சென்றால் அந்த கூட்டத்தில் நாம் வயதானவராய் தெரிவோம் என்றும் தோன்றும்.

    இந்த பிராண்டுகளை நீங்கள் பயன்படுத்தியிருக்கலாம். படுத்தாமலும் இருக்கலாம். ஆனால் இந்த பிராண்டுகளை பற்றி பேசும் போது பல பிம்பங்கள் உங்கள் மனதில் வந்து போகிறதல்லவா. எங்கிருந்து வந்தது இவை?

    விளம்பரத்தினால் மட்டும் வந்தவை அல்ல இந்த பிம்பங்கள். காஃபி டே பெரியதாக விளம்பரப்படுத் தவே இல்லையே!

    பொசிஷனிங், பெயர், பேக்கேஜிங், அடுத்தவர் கூறியது, மற்றவர் பயன் படுத்துவதை நீங்கள் பார்த்தது, நீங்களாகப் பார்த்து, படித்துத் தெரிந்து கொண்டது இவை அனைத்தும் சேர்ந்து உங்கள் மனதில் பிராண் டின் இமேஜாய் உருவானது. உங்கள் மனதில் இந்த பிராண்டுகள் தங்கள் இமேஜை சிற்பமாய் செதுக்கியிருக் கிறார்கள் என்றே கூறலாம்.

    இந்த பிராண்டுகள் மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த கம்பெனிகள் தங்கள் பிராண்டின் ஒவ்வொரு அம்சத்தையும் கவனமாய் செதுக்கு கிறார்கள். வெறும் விளம்பரத்தை மட்டும் நம்பி மார்க்கெட்டில் இறங்கு வதில்லை. பிராண்ட் இமேஜ் என்ற கலவைக்கு பல பரிமாணங்கள் இருந் தாலும் முக்கியமான ஐந்து அம்சங்களை மட்டும் பார்ப்போம்.

    பொருள் இமேஜரி

    பொருள் என்ன செய்யவேண்டுமோ அதை செவ்வனே செய்வதை குறிப்பது பொருள் இமேஜரி. பொருளின் ஆதார தன்மைகளை குறிப்பது இது. `ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ்’ என்றால் பொடுகை போக்கும் என்கிற அதன் தன்மை அதன் புராடக்ட் இமேஜரி. பிராண்டை வாங்க ஆதாரமான காரணம். புத்துணர்ச்சியான சுவாசம் தருகிறேன் என்று கூறும் க்ளோஸ் அப் போல.

    முத்திரை இமேஜரி

    பிராண்டை அடையாளம் காண வகை செய்து பிராண்டை குறிக்கும் வகையில் அமையும் பிராண்ட் எளிமெண்ட்ஸ் ஆன அதன் பெயர், கலர், லோகோ, விளம்பரத்தில் பயன்படும் விசேஷ இசை, சத்தம், பேக்கேஜிங் போன்றவை முத்திரை இமேஜரி. `ரின்’ என்றால் துணிகளை விரைவாக வெண்மையாக்கும் என்பது பிராண்ட் தரும் பயன். அதை குறிக்கும் வகையில் ரின் தனக்கு அமைத்துக்கொண்ட முத்திரை தான் `மின்னல்’. மின்னலைப் போல் வேகமாய், வெண்மையை தருகிறோம் என்று குறிக்கும் வகையில் மின்னலை தன் முத்திரையாக்கி அதை தன் பேக்கேஜிங் முதல் விளம்பரம் வரை பயன்படுத்துகிறது. இதனாலேயே விளம்பரத்தில் மின்னலை பார்த்தால் ரின் நினைவிற்கு வருகிறது. இத்தனை ஏன், வானில் மின்னலை பார்த்தாலே ரின் ஞாபகம் வருகிறது. ‘டிங் டிங் டி டிங்’ என்று விளம்பரத்தின் முடிவில் இசை கேட்டால் ஒரு பிஸ்கெட் பிராண்ட் நினைவிற்கு வருமே!

    துணை இமேஜரி

    வாடிக்கையாளருக்கு பிடித்த ஒன்றை, ஒருவரை பிராண்டுடன் இணைத்து `இதோ பாருங்கள், உங்களுக்கு பிடித்த மேட்டரோடு இணைந்திருக்கும் எங்கள் பிராண்ட்’ என்று கூறுவது இவ்வகை. ‘மஹேந்திர சிங் தோனி’யை பலருக்கும் பிடிக்கும். அவர் ஒரு பெரிய பைக் பிரியர் என்பதும் பலருக்கு தெரியும். ‘டிவிஎஸ்’ கம்பெனி தோனியை கொண்டு ‘ஸ்டார்’ பைக்குகளை விளம்பரம் செய்யும் போது பார்ப்பவர்களுக்கு ‘ஆஹா தோனிக்கே இந்த பைக் பிடிக்குமென்றால் இந்த பைக் நல்ல பைக்காகத்தான் இருக்கும்’ என்று நினைப்பது இந்த இமேஜரியின் கைங்கரியமே.

    மக்களுக்கு பிடிக்கும் என்பதற்காக கண்டபடி இந்த இமேஜரியை வளர்க்கக்கூடாது. அதே போல் போட்டியாளர் செய்கிறார் என்று வீம்புக்கு துணை இமேஜரியை துணைக்கு அழைப்பதும் தவறு. `தமன்னா’வை வைத்து ஒரு பிராண்ட் விளம்பரம் செய்கிறது என்பதற்காக அதன் போட்டியாளர் `தம்பி ராமையா’வை வைத்து விளம்பரம் செய்வது தப்பில்லையா?

    பயன்படுத்துபவர் இமேஜரி

    எத்தகையவர்கள் பிராண்டை பயன்படுத்துகிறார்கள் என்பதை குறிப்பது பயன்படுத்துபவர் இமேஜரி. அழகிகளை கொண்டு அழகு சாதன பிராண்டுகள் விளம்பரம் செய்வது இதனாலேயே. இவ்வகை இமேஜரியை உருவாக்க சிறந்த வழி விளம்பரத்தைப் பார்க்கும் வாடிக்கையாளரை ‘இவர் என்னை போலவே இருக்கிறார். இவருக்கு இந்த பிராண்ட் பயன்படுகிறது என்றால் எனக்கும் கண்டிப்பாக பயன்படும்’ என்று உணர வைப்பது.

    ‘அஸ்வினி’ ஹேர் ஆயில் விளம்பரங்களில் அதிக அழகில்லாத, சாதாரண அடுத்த வீட்டு பெண் போல் இருப்பவர்கள் தோன்றுவதை பார்க்கலாம். இதைப் பார்க்கும் பெண்கள் ‘இந்த பெண் நம்மை போலவே இருக்கிறாள். இவளுக்கு இந்த எண்ணெய் பயனளிக்கிறது என்றால் நமக்கும் பயனளிக்கும்’ என்று நம்ப வைத்து வாங்க வைப்பதை கவனித்திருக்கலாம்.

    பயன்பாட்டு இமேஜரி

    பொருள் பயன்படும் இடம், நேரம், காலம், பயன்படுத்தப்படும் விதம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் விளம்பரப்படுத்துவது பயன்பாட்டு இமேஜரி. ‘ராசியான கல்யாண பட்டு’ என்று பட்டு புடவை பிராண்டுகள் கூறுவது, விளையாடும் போது சோர்வை போக்கும் என்று கூறும் ‘காட்டரேட்’ போன்ற பானங்கள் சொல்வது, ‘இல்லற வாழ்வில் இயலாமையா’ என்று காயகல்ப மாத்திரைகள் கேட்பது இவ்வகை இமேஜரியை வளர்க்கவே.

    பிராண்ட் எளிமெண்ட்ஸின் சரியான, முறையான, பதமான கலவைதான் பிராண்ட் இமேஜ். உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பிராண்ட் பற்றிய இமேஜை வாடிக்கையாளர்கள் தங்கள் மனதில் தாங்களாகவே வளர்த்துக்கொள்வார்கள். நீங்களே சரியாய் அதை வடித்து அவர்கள் மனதில் உருவாக்கினால் அது பிராண்ட் இமேஜ். அவர்களாகவே தங்கள் இஷ்டத்திற்கு வளர்த்தால் பிராண்ட் டேமேஜ்!

    எப்படி வசதி?

    தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com
    முகங்கள்: சுண்டல் கடை சுரபா

    பாரதி வி



    பலாப் பழத்தில் மொய்க்கும் ஈக்களைப் போல அந்தக் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்படி, அப்படித் திரும்ப நேரமில்லாமல் சுண்டலையும் சமோசாவையும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் சுரபா. சென்னை செங்குன்றத்தில் இவரின் கடையைத் தெரியாதவர்களே இல்லையென்றால், உணவின் ருசியைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

    சிவகங்கையைச் சேர்ந்த சுரபா, திருமணத்துக்குப் பிறகு செங்குன்றம் வந்தார். இங்கு அரிசி வியாபாரிகள் அதிகமாக இருந்ததால், கணவருடன் சேர்ந்து ஒரு சிற்றுண்டிக் கடையை நடத்தினார். ஆனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. வறுமை வாட்டியது.

    “எங்களுக்கு மகளும் மகனும் பிறந்தாங்க. அவங்களை நல்ல பள்ளிக்கூடத்துல படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டோம். ஆனால் டிபன் கடையில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. டிபன் கடையை சுண்டல், சமோசா கடையாக மாத்தினோம். நாங்க எதிர்பார்த்ததை விட வியாபாரம் நல்லா நடந்தது. காலை எழுந்ததிலிருந்து இரவு வரை வேலை இருந்துட்டே இருக்கும். சில குடிகாரர்கள் ரகளை செய்வாங்க. எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, வியாபாரம் செஞ்சோம். திடீர்னு என் கணவர் இறந்துட்டார். இந்தக் கடை இருக்கறதால என் குழந்தைகளைக் காப்பாத்த முடியுது” என்கிறார் சுரபா.

    இப்போது இவரது மகன் நாசீரும் கடையில் வேலை செய்கிறார். ஒரு சிலரை வேலைக்கும் அமர்த்தியிருக்கிறார். ஆனால் சமோசா மாவு பிசைவதற்கு மட்டும் ஆட்கள் கிடைக்கவில்லை. மாவு பிசையும் இயந்திரம் 2 லட்சம் ரூபாய் என்பதால் வாங்க முடியாமல், கைகளிலேயே பிசைந்துகொண்டிருக்கிறார் சுரபா.

    “இருபது வருஷமா மாவு பிசைந்ததில் எலும்பு தேய்ஞ்சிருச்சு. மகள் பானு கல்லூரியில் படிச்சாலும் வீட்டு வேலைகள் முழுவதையும் கவனிச்சுக்குவா. பாவம், அவளுக்கும் ஓய்வே இருக்காது. படிப்பதை விட, அதிகமாக வேலை செய்யறாளேன்னு கஷ்டமா இருக்கு” என்று சொல்லும்போதே சுரபாவுக்குக் கண்ணீர் பெருகிவிட்டது.

    Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

    Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...