Monday, August 28, 2017

Bus services dip, Pallavaram and Chromepet hit

TNN | Updated: Aug 28, 2017, 00:05 IST

Chennai: Residents of Chrompet, Pallavaram, Zamin Pallavaram and the city suburbs are worried as the frequency of bus services including the small bus services have taken a hit. Frequency on two routes S81 and S82 covering several interior stretches from Chrompet to Pozhichalur have fallen drastically.

"The buses were of great help as it connected us to several areas but now we are unable to commute as the service is not as frequent as earlier. The MTC should step in and ensure that residents and commuters are not put to hardship," said Ravikumar, a commuter.

Social activist and longtime Chromepet resident V Santhanam said, "Most of those employed in the IT industry have moved to the southern suburbs in the city and the bus services and frequency have fallen short of expectation."

Residents of Sembakkam and Chitlapakkam have also been affected due to low frequency of buses.

"If one has to reach Central from here we have to take a bus to Pallavaram or Tambaram and then another bus from there as the frequency of buses is very low. Even if there is one service and it is jam-packed, one has to wrestle their way to get a seat in the bus," said V Rajendran, a resident of Chitlapakkam.

Commuters also urged the MTC authorities to ensure that the buses plying on the Tambaram-Velachery main road stop at Rajakilpakkam bus stand. P Muthu, a regular commuter, said, "Authorities should ensure regular frequency of bus 51G plying from Tambaram East to Vengaivasal for the benefit of commuters. The small bus S3 from Chromepet to Madambakkam should also increase its frequency as the frequency now is too low. In addition, S10 bus plying from Chrompet to Jothi Nagar should also increase its frequency."
தலையங்கம்
அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தார்மீக பொறுப்பு



பொதுவாக அரசு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலோ, தோல்வி ஏற்பட்டாலோ அந்த துறைக்கான அமைச்சர்களும், அதிகாரிகளும், ஊழியர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஆகஸ்ட் 28 2017, 03:00 AM

பொதுவாக அரசு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலோ, தோல்வி ஏற்பட்டாலோ அந்த துறைக்கான அமைச்சர்களும், அதிகாரிகளும், ஊழியர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஒவ்வொரு துறை ரீதியான செயல்பாடுகளில் வெற்றி ஏற்பட்டாலும்சரி, தோல்வி ஏற்பட்டாலும்சரி நிச்சயமாக அவர்கள் அனைவருக்கும் ‘பொறுப்பு கடமை’ இருக்கிறது என்பது காலம் காலமாக சொல்லிவரும் கருத்தாகும். ஆனால் வெற்றி ஏற்படும்போது அதற்கு நாங்கள்தான் காரணம் என்று சொல்லும் அவர்கள், தோல்வி ஏற்படும்போது மட்டும் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வருவதில்லை. ஆனால் ரெயில்வே துறையில் மட்டும் எப்போதும் விபத்துகள் ஏற்படும்போதும் அதற்கான பொறுப்பை ரெயில்வே துறை மந்திரிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். 1956–ல் தமிழ்நாட்டில் உள்ள அரியலூரில் நடந்த ரெயில் விபத்தின்போது உடனடியாக அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இந்த விபத்தில் 150–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து ஏற்பட்ட உடன் ரெயில்வே மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார்.

1999–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அசாம் மாநிலத்தில் நடந்த ஒரு பெரிய ரெயில் விபத்து 290 உயிர்களை பலி வாங்கியவுடன் அப்போது ரெயில்வே மந்திரி நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். இதுபோல 2000–ம் ஆண்டில் மம்தா பானர்ஜி ரெயில்வே மந்திரியாக இருந்தபோது நடந்த 2 ரெயில் விபத்துகள் அவரை பெரிதும் பாதித்தன. இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றுகூறி அவர் ராஜினாமா செய்தார். ஆனால் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது கடந்த 19–ந் தேதி உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகர் அருகே நடந்த ஒரு ரெயில் விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 90 பேர் காயமடைந்தனர். மீண்டும் 23–ந் தேதி உத்தரபிரதேசம் அவுரையா மாவட்டத்தில் நடந்த மற்றொரு ரெயில் விபத்தில் 70 பேர்களுக்கு மேல் காயமடைந்தனர். இந்த ரெயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு ராஜினாமா கடிதம் கொடுத்தார். இந்த ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொள்ளவும் இல்லை, ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவும் இல்லை. காத்திருக்கும்படி கூறியிருக்கிறார். ஆனால் உடனடியாக ரெயில்வே வாரியத் தலைவர் ஏ.கே.மிட்டல் ராஜினாமா செய்துவிட்டார். வடக்கு ரெயில்வே பொது மேலாளர், டிவி‌ஷனல் மேனேஜர் போன்ற உயர் அதிகாரிகள் விடுமுறையில் செல்ல பணிக்கப்பட்டனர். சீனியர் டிவி‌ஷனல் என்ஜினீயர் உள்பட 4 உயர் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஒழுங்கு நடவடிக்கை மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக விபத்துகள் நடக்கும்போது கீழ்மட்ட ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் இந்தமுறை உயர் அதிகாரிகள் மீதே கடும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. உயர் அதிகாரிகள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதும், அவர்களை விடுமுறையில் போகச் சொல்வதும், இடைநீக்கம் செய்வதும் வரவேற்கத்தக்கதுதான். சாலைகளிலும் இதுபோன்ற பெரிய விபத்துகள் நடந்தால் அதில் வடிவமைப்பு கோளாறு இருந்தாலோ, கண்காணிப்பு இல்லையென்றாலோ தார்மீக பொறுப்பேற்க சொல்ல வேண்டும். ரெயில்வே துறையில் மட்டும் இவ்வாறு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர்களும், அதிகாரிகளும், ஊழியர்களும் நடவடிக்கைகளுக்கு உட்படுவதுபோல மத்திய, மாநில அரசுகளில் உள்ள அனைத்து துறைகளிலும், அனைத்து பணிகளிலும் அமைச்சர்களையும், அதிகாரிகளையும், ஊழியர்களையும் தார்மீக பொறுப்பேற்க சொன்னால் நிச்சயமாக அரசு நிர்வாகங்களில் தவறுக்கு இடம் இல்லாமல் தூய்மையும் இருக்கும், வேகமும் இருக்கும், மக்களுக்கு பெரிதும் பயனும் விளைவிக்கும்.
ரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகளில் ஏற்பாடு



தமிழக வங்கிகளில் இன்று முதல் புதிய ரூ.200 நோட்டுகள் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.

ஆகஸ்ட் 28, 2017, 04:30 AM
சென்னை,

தமிழக வங்கிகளில் இன்று முதல் புதிய ரூ.200 நோட்டுகள் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழு பரிந்துரையின் படி புதிய ரூ.200 நோட்டுகள் வெளியிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியிருந்தது. அந்தவகையில் ரூ.2,000 நோட்டை சிரமம் இன்றி பொதுமக்கள் மாற்றுவதற்காக புதிய ரூ.200 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு உள்ளது. இந்த நோட்டுகள் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டது.

சென்னை ரிசர்வ் வங்கிக்கு இந்த புதிய ரூ.200 நோட்டுகள் கண்டெய்னர்கள் மூலம் ஏற்கனவே கொண்டுவரப்பட்டு விட்டன. ஆனாலும் தொடர் விடுமுறை மற்றும் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த புதிய ரூ.200 நோட்டுகள் வங்கிகளுக்கு பிரித்து கொடுக்கப்படவில்லை. இதனால் சென்னை ரிசர்வ் வங்கியில் இந்த புதிய ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் இந்த புதிய ரூ.200 நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் முதற்கட்டமாக பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் தமிழக வங்கிகளில் இன்று முதல் ரூ.200 புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்பட உள்ளன.

தாங்கள் சார்ந்துள்ள வங்கி கிளைகளில் பணம் எடுக்க செல்லும்போது மட்டுமே இந்த புதிய ரூ.200 நோட்டுகள் வழங்கப்பட உள்ளது. அதுவும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து மட்டுமே பெற முடியும். தனியாக யாரும் சென்று வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதே விதிகள் தான் அடுத்து வினியோகிக்கப்பட உள்ள புதிய ரூ.50 நோட்டுக்கும் பொருந்தும்.

“புதிய ரூ.200 நோட்டுகள் குறிப்பிட்ட சில வங்கி கிளைகளுக்கு மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே ரிசர்வ் வங்கியில் இருந்து நாளை (இன்று) உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், ரூ.200 நோட்டு வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்படும். அனேகமாக நாளை (இன்று) காலை 11 மணி முதல் புதிய நோட்டுகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்”, என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில செய்திகள்

வட தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்


வட தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 28, 2017, 05:15 AM
சென்னை,

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையானது ஆந்திர கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதி வரை நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தெற்கு ஆந்திர கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதி வரை தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் வழியாக நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டில் 7 செ.மீ., பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பில் தலா 5 செ.மீ., கேளம்பாக்கம், வால்பாறையில் தலா 4 செ.மீ, பூந்தமல்லி, காட்டுக்குப்பத்தில் தலா 3 செ.மீ, சிதம்பரம், பொன்னேரி, மகாபலிபுரம், எண்ணூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருப்பத்தூரில் தலா 2 செ.மீ, வேலூர், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, தாமரைப்பாக்கம், வானூர், சேலம், சோழவரம், திருவள்ளூரில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
'பைத்தியங்கள்!' : வீரமணி கிண்டல்

பதிவு செய்த நாள்28ஆக
2017
00:08


வேலுார்: ''எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கு பைத்தியம் முற்றி விட்டதால், தினகரன் அணிக்கு செல்கின்றனர். இவர்களுக்கு எலுமிச்சம் பழத்தை தேய்த்தால் தான் குணமடைவர்,'' என, வணிகவரி துறை அமைச்சர் வீரமணி கூறினார்.

வேலுாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், இப்போது, பலரை கட்சியை விட்டு நீக்குவதாக, தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம், அவர் சர்க்கஸ் கோமாளியாகி விட்டார்.
தினகரனின் கோமாளித்தனமான பேச்சை கேட்டு, பல, எம்.எல்.ஏ.,க்களுக்கு பைத்தியம் முற்றி, தினகரன் அணிக்கு செல்கின்றனர். இவர்களுக்கு, எலுமிச்சம் பழங்களை தேய்த்தால் தான் குணமடைவர். இல்லாவிட்டால், அவர்களை குற்றாலத்திற்கு தான் அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.70,000 கோடியை வசூலிக்க பொதுத்துறை வங்கிகள் அதிரடி
பதிவு செய்த நாள்28ஆக
2017
00:22

புதுடில்லி: வாங்கிய கடனை, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத, 5,954 பேரிடம், 70 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் நடவடிக்கைகளை, பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்டுள்ளன.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2016 - 17 நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத நபர்கள், பாக்கி வைத்துள்ள தொகை, 92 ஆயிரத்து, 376 கோடி ரூபாய். முந்தைய, 2015 - 16 நிதியாண்டில், இந்த தொகை, 76 ஆயிரத்து, 685 கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த, 2017, மார்ச், 31 வரை, கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத, 5,954 பேரிடம், 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை, பாரத ஸ்டேட் வங்கி உட்பட, 21 வங்கிகள் மேற்கொண்டுள்ளன. இவற்றில், பாரத ஸ்டேட் வங்கி, 20 ஆயிரத்து, 943 கோடி ரூபாயை, 1,444 பேரிடம் வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த, 2016 - 17 நிதியாண்டில், பாரத ஸ்டேட் வங்கி உட்பட, 27 பொதுத்துறை வங்கிகள், 81 ஆயிரத்து, 683 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தன. பொதுத்துறை வங்கிகளின், வாராக்கடன், 2017, மார்ச் முடிவில், 6.41 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தபோது விமான கழிவறையில் பதுக்கி வைத்த ரூ.48 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்

2017-08-28@ 00:11:24




சென்னை:சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் சென்னை வந்த விமானத்தில் பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது, கடத்தல் தங்கத்துடன் யாரும் வரவில்லை என்பது தெரிந்தது. இதனால், அதிகாரிகள் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.

இதற்கிடையே, சிங்கப்பூரில் இருந்து சர்வதேச விமானமாக சென்னை வந்த விமானம் நேற்று அதிகாலை, உள்நாட்டு முனையத்தில் இருந்து சென்னை, மும்பை விமானமாக செல்ல விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த விமானத்தில், மும்பை செல்ல இருந்த 149 பயணிகள் ஏற தொடங்கினர். உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அந்த விமானத்துக்குள் ஏறி விமானத்தின் இருக்கைகள், அதன் அடிபாகங்களில் சோதனையிட்டனர். விமானத்தில் இருந்த 4 கழிவறைகளில் உயர் வகுப்பு பயணிகளுக்கான கழிவறைக்குள் தண்ணீர் தொட்டியில் பிரவுன் கலர் பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றப்பட்டு ஒரு பார்சல் இருந்தது.

இதையடுத்து அதிகாரிகள் பார்சலை பிரித்தபோது 100 கிராம் எடை கொண்ட 16 தங்க கட்டிகள் என மொத்தம் 1.6 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.48 லட்சம் ஆகும். இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் மும்பை செல்ல இருந்த 149 பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அதில் சந்தேகப்படும் விதமாக இருந்த ஒரு பயணியின் பயணத்தை ரத்து செய்து அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்கி விசாரணைக்கு, அவர்களது அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விமானத்தில் திடீர் சோதனை நடத்தியபோது, இதே விமானம் மும்பைக்கு செல்லும் என்ற தகவல் கடத்தல் ஆசாமிகளுக்கு எப்படி தெரியும்? இது மிகவும் ரகசியமாக, வைக்கப்பட்டிருக்கும். எனவே, சென்னை விமான நிலையத்தில் கடத்தல் ஆசாமிகளுக்கு தகவல் கொடுக்கும் கருப்பு ஆடுகள் யார்? என்றும், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள சதி திட்டம் திமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்தால் சட்டப்படி சந்திப்போம்: திருவாரூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு

2017-08-28@ 00:08:21




திருவாரூர்: ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக சதி திட்டம் தீட்டி திமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்தால் சட்டப்படி சந்திப்போம் என்று கொரடாச்சேரியில் நடந்த திருமண விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனின் சகோதரரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான மறைந்த பூண்டி கலைச்செல்வன் மகள் கயல்விழிக்கும், விஜய் ஆனந்துக்கும் திருமணம், கொரடாச்சேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

இங்கு ேபசியவர்கள் என்னை நாளைய முதல்வர் என்று தெரிவித்தனர். இன்னும் ஒரு மாதத்தில் நான் முதல்வர் ஆவேன் என்றும் இங்கு பேசினர். இதை பத்திரிகையாளர்கள் தவறாக புரிந்து கொண்டு தலைப்பு செய்தியாக போடுவார்கள். அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

சென்னையில் தமிழக ஆளுநரை திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உள்ளனர். ஆளுநரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஜனாதிபதியையும், நீதிமன்றத்தையும் நாங்கள் அணுகுவோம். கடந்த தேர்தலில் 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக வென்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த அரசு மக்கள் பணிகள் செய்வதற்கு பதில், அடித்த கொள்ளையை காப்பாற்றவும், தொடர்ந்து கொள்ளை அடிக்கவும், வருமான வரித்துறையிடமிருந்து தங்களை காத்து கொள்ளவும் மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கும் மானங்கெட்ட அரசாக உள்ளது. இதனால் மாநில உரிமைகள் பல பறிபோய் விட்டன. ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்று கனவுகூட காண முடியாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநரிடம் தினகரன் ஆதரவாளர்களான 19 எம்எல்ஏக்கள் தனித்தனியாக மனு கொடுத்திருக்கிறார்கள். மேலும் சில எம்எல்ஏக்கள் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே இந்த குதிரை பேர ஆட்சி, மெஜாரிட்டியை இழந்துள்ளது.

குட்கா என்பது ஒரு போதைப்பொருள். தடை செய்யப்பட்ட ெபாருள். புற்றுநோயை உண்டாக்க கூடிய பொருள். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல்துறை மானிய கோரிக்கையில் குட்கா விற்கப்படுவது பற்றி ஆதாரத்துடன் காட்டினேன். சில தி.மு.க. எம்எல்ஏக்களும் அதை காட்டினர். திருட்டுத்தனமாக இது விற்கப்படுவதால் பல இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். எனவே எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் குட்கா விற்பனையை தடுக்க முற்பட்டேன். இதில் தவறு இருக்கும்பட்சத்தில் 4, 5 நாட்களுக்குள் உரிமை மீறல் குழுவை கூட்டியிருந்தால் அதை நான் வரவேற்று இருப்பேன். கடந்த ஜூலை 19ம் தேதி நடந்த சம்பவத்துக்கு 40 நாள் கழித்து உரிமை மீறல் குழுவை கூட்டி பேசவுள்ளனர். அந்த குழுவில் நானும் ஒரு உறுப்பினர். முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், மதிவாணன் ஆகியோரும் உறுப்பினர்கள். அந்த 2 பேருக்கும், நாளை (இன்று) நடைபெறும் கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பி உள்ளனர்.

எனக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. தி.மு.க. எம்எல்ஏக்கள் 10 பேரை சஸ்பெண்ட் செய்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் சதி திட்டத்தில் உரிமை மீறல் குழுவை கூட்டி உள்ளனர். திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம். இவ்வாறு அவர் பேசினார்.இதைதொடர்ந்து காட்டூரில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு ெசன்று மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

மக்கள் குறைகேட்பு

திருவாரூரில் நேற்று காலை மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். காலை 6 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதிகளை 2 முறை (6 கி.மீ. தூரம்) சுற்றி வந்தார். பின்னர் வடக்குவீதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தார். இதைதொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மனைவிக்கு ரூ.4 லட்சம் வழங்க பணக்கார கணவனுக்கு உத்தரவு
பதிவு செய்த நாள்28ஆக
2017
00:21


புதுடில்லி : 'பிரிந்து வாழும் மனைவிக்கு பராமரிப்பு செலவாக, மாதத்துக்கு, நான்கு லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, பணக்கார கணவனுக்கு, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னை விட்டு பிரிந்து சென்று, குடும்பத் தொழிலை கவனித்து வரும் மிகப் பெரிய பணக்காரரான கணவன், தனக்கு மாத இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, ஒரு பெண், வழக்கு தொடர்ந்தார். கீழ் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். 'பணக்கார கணவனின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ப, மாத பராமரிப்பு தொகையை நிர்ணயிக்க வேண்டும்' என, மீண்டும் விசாரணை நீதிமன்றத்துக்கே, இந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. 

அதன்படி, இந்த வழக்கை விசாரித்த, டில்லி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

இந்த வழக்கில் தொடர்புடைய கணவனின் குடும்பம், மிகப் பெரிய பணக்கார குடும்பம்; அந்த குடும்பத்தினர், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது தொழில் மதிப்பு, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. அதனால், பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது பராமரிப்பில் உள்ள மைனர் மகளின் மாத பராமரிப்புக்கு, கணவர், ஒவ்வொரு மாதமும், நான்கு லட்சம் ரூபாயை பராமரிப்பு செலவாக அளிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆண்டும், 15 சதவீதம் உயர்வையும் அளிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
செம்மலை அதிருப்தி : முதல்வரை புறக்கணித்தார்
பதிவு செய்த நாள்28ஆக
2017
01:20

சேலம்: சென்னையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின், தன் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளதாக, முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.

அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்ட போது, பழனிசாமிக்கு எதிராகவும், பன்னீர் செல்வத்துக்கு ஆதர வாகவும், செம்மலை செயல்பட்டு வந்தார். நேற்று சேலம் வந்த முதல்வர் பழனிசாமியை, உள்ளூரில் இருந்த போதும், செம்மலை சந்திக்கவில்லை.

இது குறித்து செம்மலை ஆதரவாளர்கள் கூறியதாவது:
இரு அணிகளின் இணைப்பின் போது, முதல்வர் பழனிசாமியின் தலையீட்டால், செம் மலைக்கு முக்கியத் துவம் அளிக்கப்படவில்லை.
தொகுதி நலப்பணிகளை கூட, செம்மலையால் மேற்கொள்ள முடியவில்லை. எதிர்கால நலன் கருதி, முக்கிய முடிவு மேற்கொள்ளவே, செம்மலை அமைதி காக்கிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
செம்மலை கூறியதாவது:
எப்போதும் தலைமைக்கு கட்டுப்படுபவன். சென்னையில் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று, வரும், 30ல் சேலம் திரும்புவேன். அப்போது, என் நிலை குறித்து தெளிவுபடுத்துவேன்.
இவ்வாறு செம்மலை கூறினார்.
தமிழகத்தில் பா.ஜ.க.,ஆட்சி:நயினார் நாகேந்திரன் பேச்சு

பதிவு செய்த நாள்27ஆக
2017
23:41

திருநெல்வேலி:அ.தி.மு.க.வில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் பா.ஜ.,வில் இணைந்தேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியை சேர்ந்த அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் நேற்றுமுன்தினம் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். நேற்று அவர் நெல்லை மாவட்ட பா.ஜ.,அலுவலகத்திற்கு வந்தார்.அவருக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர், மாநில விவசாய அணி செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். 

நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கட்சியில் எம்.ஜி.ஆர்.,காலத்தில் இருந்தே மாணவர் அணியில் பணியாற்றியுள்ளனே். ஜெ.,எனக்கு நான்கு முறை சட்டசபையில் போட்டியிடும் வாய்ப்பளித்தார். ஒரு முறை அமைச்சராக்கினார். ஜெ.,மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டது. அணிகளாக பிரிந்து தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. இ.பி.எஸ்.க்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த ஓ.பி.எஸ்.,சை மீண்டும் துணை முதல்வராக்கியுள்ளனர். எனவே ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற முழக்கத்தின்படி மத்தியில் மோடி அரசைப்போல தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளேன். 

நான் இணையும்போது ஆதரவாளர்கள் என யாரையும் அழைத்துச்செல்லவில்லை. எனக்கு அனைத்து சமூகங்களிலும் நண்பர்கள் உள்ளனர். எனவே நான் பா.ஜ.,விலும் மற்ற மதத்தினரை ஆதரித்து செயல்படுவேன். தமிழகத்தில் அ.தி.மு.க.பலவீனமடைந்துவிட்டதா என கேட்கிறீர்கள்.அ.தி.மு.க.,பலவீனம் அடைந்துவிட்டது என கூறமாட்டேன். ஆனால் பாரதிய ஜனதா பலமடைந்துவருகிறது என்பேன் என்றார்.

எம்.பி.பி.எஸ்., படிப்பு: அரசு ஒதுக்கீடு, 'ஹவுஸ்புல்'


பதிவு செய்த நாள்28ஆக
2017
00:03

சென்னை: அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டு இடங்களை தவிர்த்து, அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின.

தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,534 இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 592 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
அதேபோல, பல் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,198 பி.டி.எஸ்., இடங்களும், சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்களும் உள்ளன.

இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சென்னை, பல்நோக்கு அரசு மருத்துவமனையில், 24ம் தேதி துவங்கியது. முதல் நாள் சிறப்பு பிரிவினருக்காக கவுன்சிலிங்கில், 14 இடங்கள் நிரம்பின. இரண்டாம் நாளில், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்கியது. 

அன்று, 1,029; மூன்றாம் நாளில், 1,260 இடங்கள் நிரம்பின. மூன்று நாட்களில், அரசு, சுய நிதி கல்லுாரிகளில் உள்ள, 80 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின.

இந்நிலையில், நேற்றைய கவுன்சிலிங்கிற்கு, 1,596 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டு இடங்களை தவிர, அனைத்து, எம்.பி.பி.எஸ்., இடங்களும், பிற்பகலுக்குள் நிரம்பின. 

எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பிய நிலையில், பி.டி.எஸ்., படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பார்மசி கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா

பதிவு செய்த நாள்27ஆக
2017
23:01

ஊட்டி : ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியர், சிறப்பு பூஜை செய்தனர்.ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி மாணவ, மாணவியர், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, 11 நாட்களுக்கு, தினசரி, காலை மற்றும் மாலையில், சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்குவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விழா முடிவில், விநாயகர் சிலையை கல்லுாரியில் உள்ள கிணற்று நீரில் கரைப்பர்.
தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கி யுள்ள நிலையில், தமிழக அரசியலில் இன்று முதல் அதிரடி ஆட்டம் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.





.தி.மு.க., தலைமையகத்தில், இன்று நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை பறிக்க, முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், தலைமை செயலகத்தில், சட்டசபை உரிமை குழு கூடி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறது.

இந்த இரு கூட்டங்களிலும் எடுக்கப்படும் முடிவுகள், தமிழக அரசியலில் புயலை கிளப்ப லாம் என்பதால், ஆளும் கட்சி தொண்டர்கள் உட்பட, அனைத்து தரப்பினரும், முடிவுகளை அறிய ஆர்வமாக உள்ளனர். தமிழகத்தில், தற்போது குழப்பமான அரசியல் சூழல் நிலவு கிறது. அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், அவர்களால் ஒதுக்கப்பட்ட தினகரன், தனி அணியாக செயல்பட துவங்கி உள்ளார்.

அவருக்கு, 21 எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு அளித்துள்ளனர். அவர்களில், 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவ தாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.



சந்திப்பு


எனவே, 'சட்டசபையை கூட்டி, பெரும்பான் மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தர விட வேண்டும்' என, கவர்னருக்கு எதிர்க்கட்சி கள் கடிதம் அனுப்பி உள்ளன. சட்டசபை எதிர்க் கட்சி துணைத் தலைவர், துரைமுருகன் தலைமையில், எதிர்க்கட்சி பிரதிநிதிகள், கவர்னரை நேற்று சந்தித்து, இது தொடர்பாக கடிதம் அளித்தனர்.

அதனால், கவர்னர் என்ன முடிவெடுக்கப் போகி றார் என, அனைத்து கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.அதே நேரத்தில் பழனிசாமிக்கு ஆதரவான எம்.எல்.ஏ.,க்களில்


சிலர், 'ஆட்சியை கலைத்து விட்டு, தேர்தலை சந்திக்கலாம்' என, வலியுறுத்த துவங்கி உள்ளனர்.



முக்கிய முடிவு


இந்த சூழ்நிலையில், இன்று காலை, 9:30 மணிக்கு, அ.தி.மு.க., - எம்.பி., - எம்.எல். ஏ.,க்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.இதில், தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.,க்கள் பங்கேற்பரா என, தெரியவில்லை.

இக்கூட்டத்தில், கட்சி பொதுக்குழுவை கூட்டு வது; மன்னார்குடி கும்பலை ஒட்டுமொத்தமாக ஒதுக்கும்வகையில், சசிகலாவின் கட்சி பதவியை பறிப்பது; கட்சியிலிருந்து அவரை நீக்குவது உட்பட, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.பின், அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்; இரட்டை இலையை மீட்க, தேர்தல் கமிஷனில் கொடுக்க வேண்டிய ஆவணங்கள் போன்றவை குறித்தும் முடிவெடுக்கப்படுகிறது.இதில், எடுக்கப்படும் முடிவை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, தினகரன் மற்றும் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

அதே போல, சட்டசபை உரிமைக்குழு கூட்டமும், இன்று தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. தடை செய்யப்பட்ட, போதை பாக்குகளை, தி.மு.க.,வினர் சட்ட சபைக்கு எடுத்து வந்த விவகாரம், விவாதிக்கப் பட உள்ளது. இதில், எடுக்கப் போகும் முடிவும், அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு கூட்டங்களிலும், எடுக்க உள்ள முடிவுகள், தமிழக அரசியலில் பெரும் மாற் றத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆளுங்கட்சி யினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும், கூட்ட முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.



தினகரன் வலையில் 5 மந்திரிகள்


இன்று நடக்கும், அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட் டத்தில், சசிகலா, தினகரன் இருவரையும், கட்சி யின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து


Advertisement

நீக்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதை அறிந்த தினகரன், முதல்வர் பழனிசாமி வகித்த, சேலம் புறநகர் மாவட்ட செயலர் பதவியை நேற்று பறித்துள்ளார். மேலும், தினகரன் விரித்த வலையில், ஐந்து அமைச்சர்கள் சிக்கி உள்ளனர்.

'சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி னால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம்' என, அவர் கள், தினகரன் ஆதரவாளர்களிடம் கூறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



மோதல் ஏற்படும் அபாயம்


'பழனிசாமியை நீக்கிவிட்டு, சபாநாயகருக்கு, முதல்வர் பதவி வழங்கினால், சமரசத்திற்கு தயார்' என, திவாகரன் தரப்பினர் அறிவித்தி ருந்தனர். ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த, 25 எம்.எல்.ஏ.,க் களும், இந்த கோரிக்கையை வலியுறுத்தவும், சசிகலாவை நீக்கினால், எதிர்ப்பு தெரிவிக்கவும், திட்ட மிட்டுள்ளனர்.இதனால், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில்,மோதல் சம்பவங்கள் நடக்குமோ என்ற அச்சம், கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.



தாவும் எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமி அதிர்ச்சி


அ.தி.மு.க.,வின் அணிகளும் இணைந்த பின், தினகரன் அணிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் தாவி வருவதால், முதல்வர் பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தினகரன் அணியில், 19 எம்.எல். ஏ.,க்கள் மட்டுமே, முதலில், புதுச்சேரிக்கு சென்று தங்கினர். பின், அறந்தாங்கி ரத்ன சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய இருவரும், தினகரனுக்கு ஆதரவு அளித்தனர். நேற்று, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ், தேனியில் தினகரனை சந்தித்து ஆதரவு அளித்தார். பின், 'நான் முதல்வர் பழனிசாமி அணியில்தான் இருக்கிறேன்' என, பல்டி அடித்தார்.

ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ., சந்திரபிரபா, தினகரன் அணியிலிருந்து, பழனிசாமி அணிக்கு தாவினார். தற்போது, மீண்டும் தினகரன் அணிக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி, எந்த நேரத்தில், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம் பிடித்து விடுவரோ என்ற குழப்பம் நீடிப்பதால், முதல்வர் பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Sunday, August 27, 2017

உயிர் வளர்த்தேனே 40: சமச்சீர் சாம்பார்

Published : 17 Jun 2017 12:13 IST



சாம்பாரில் பருப்பின் வாயிலாகப் புரதச் சத்தும், அதில் சேர்க்கும் வெங்காயம், மிளகாய், தக்காளி, காய்கள் மசாலாப் பொருட்கள் ஆகியவற்றின் மூலமாக உயிர்ச் சத்துக்களும், தாதுச் சத்துக்களும் கிடைக்கின்றன. தாளிதத்திற்கும், பருப்பு அவிப்பதற்கும் சேர்க்கும் எண்ணையும், சுவைக்குச் சேர்க்கும் தேங்காய்ப்பூவும் கொழுப்புச் சத்தை அளிக்கிறது. சாம்பாருக்கு ஆதாரமாக உணவாகிய சோறு அல்லது இட்லி, தோசை போன்றவை நமக்கு எரிமச் சத்தை அளிக்கின்றன.

ஆக, சாம்பாருடன் கூடிய உணவை நாம் உண்டால் போதும் நமக்கு அவசியமான சத்துக்கள் அனைத்தும் கிடைத்து விடுகிறது. ஆனால் பொதுவாக இன்று மத்தியதர உணவு ஒரு சாம்பார், இட்லி – தோசை, சோற்றுடன் முடிவதில்லை.

உண்ணும் முறை சரியா?

இட்லி என்றால் ஒன்று அல்லது அதற்கு மேலான சட்னி வகைகள், பொடி. சோறு என்றால் சாம்பாருக்குக் கூடுதலாக ஒரு பொரியல், கூட்டு, அப்பளம், ஊறுகாய், ரசம், தயிர் அல்லது மோர் அல்லது இரண்டும் என்று சேர்த்துக் கொள்கிறோம். விசேஷ சாப்பாடு என்றால் கேட்கவே வேண்டாம் முதலில் ஒரு கலந்த சாதம் பின் மேற்படி வகையறாக்களுடன் காரக்குழம்பு, வடை, பாயாசம் என்று நம்மை ஆயாசப்படுத்தும் வகைகளைச் சேர்த்துக் கொண்டே போகிறோம்.

சாம்பாருடன் சட்னியைக் கலக்கி உண்போரும் உண்டு. கெட்டித் தயிரைச் சோற்றுடன் பிசைந்து அதில் மண்டிச் சாம்பார் ஊற்றிச் சுவைப்போரும் உண்டு. ஒரு சாம்பார், சோறு அல்லது இட்லி என்று ஒரு சிற்றுரையோடு முடித்துக் கொண்டால் நிறைவு ஆவதில்லை. சரி, திருப்தியாக ஃபுல்கட்டு கட்டலாம் என்று இறங்கினால் அன்று முழுவதும் உடல் நவம்பர் மாதத்து வானம் போல மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது.

சிலருக்குப் புயல் சின்னம் கரையைக் கடந்து காற்று வீச்சும், அதி மழைப் பொழிவும் நிகழ்வதுண்டு. சிலருக்குக் கரையிலேயே நின்று ஒரு காட்டு காட்டி விடுவதும் (வாந்தி) உண்டு.

இவையிரண்டும் நடக்காத போது நல்லது… தொந்தரவில்லை என்று இருந்து விட முடிகிறதா என்றால் இல்லை. காற்றழுத்த உயர்வு மண்டலம் உடலின் பல பாகங்களில் சுற்றிச் சுற்றி வந்து `கடமுடா’வென்று இடி முழக்கம் செய்கிறது. உட்கார்ந்து எழுந்தால் கண்ணுக்குள் மின்னல் வெட்டுகிறது.

இவற்றிற்கெல்லாம் காரணம் நமது மிகையான உண்ணும் முறை, குறைவான உடலுழைப்பு முறை. சரி, உடலுக்கு நலம் பயக்கும் விதமாக எப்படி உண்பது என்பதை தொடரின் இறுதிப் பகுதியில் பார்க்கலாம். இப்போது நாம் சாம்பாருக்கு வருவோம்.

ஒருநேர முழுமையான உணவுக்கு, அனைத்து சத்துக்களும் நிரம்பிய சம்பிரதாயமான சாம்பார் சோறு அல்லது இட்லி – தோசை போதும். அதிலும் சோறு என்றால் சுமார் நூறுகிராம். இட்லி என்றால் மூன்று போனால் போகிறது உங்களுக்காக நான்கு. இதுதான் நாம் சாம்பாருக்கு மரியாதை செய்வதாக இருக்கும்.

மேலும் இதுவோர் முழுமையான உணவு என்று நம்பினால் நிறைவு கிடைக்கும். அடுத்த வேளை முழுமையாகப் பசிக்கும் வரை இடைப்பலகாரம் எதுவும் உண்ணாமல் இருந்தால் “வாயு பக்வான்” தொல்லை ஒன்றும் கொடுக்கமாட்டார்.

உணவுக்கு மரியாதை இருக்கிறதா?

இன்றைக்கு நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களில் சமைக்கும் அவசரச் சாம்பாரில் பருப்புக்கும் மரியாதையில்லை, உடலுக்கும் மரியாதை இல்லை, சமையலுக்கும் மரியாதை இல்லை. “வேறென்ன செய்யிறது இந்த அவசர உலகத்துல” என்று ஒருசேர `மைண்ட் வாய்ஸ்’ எழுவதைக் கேட்க முடிகிறது.

அவசர உலகத்தில் ஓடிஓடி சம்பாதிப்பதில் கை நிறைய வருவது போலத் தோன்றுகிறது. ஆனால் விரலின் நக நுனி கூட நனைவதில்லை. வந்த திசை தெரிகிறது. போகிற கோணங்கள் தெரிவதே இல்லை. “உள போல இல்லாகிக் கெடுகிறது” ஒரு சாம்பாரை நிதானித்துச் சுவைக்க முடியவில்லை என்றால் நாம் என்ன பெரிதாக வாழ்ந்து விட்டோம்! சாம்பாரில் நிறைவு கொள்ள முடியாமல்தான் அதில் பொரியலைத் துவட்டிப் பார்க்கிறோம். அப்பளத்தைக் கடித்துப் பார்க்கிறோம். ரசத்தில் மசித்துக் குடித்துப் பார்க்கிறோம். இறுதியாகத் தயிரோடு மோர் மிளகாயைக் கடித்தாலும் வயிற்றில் தான் சுள்ளென்று இறங்குகிறதே ஒழிய நா நிறைவு கொள்வதில்லை. உடல், மந்தமடைகிறது ஆனந்தமடைவதில்லை.

இங்கே பரிந்துரைக்கும் இருவகைச் சாம்பார்கள் உடலுக்கு நலம் தருவது மட்டுமல்லாமல் நாவிற்குச் சுவையாகவும், வேலை விரைவில் முடிவதாகவும் இருக்கும்.

தொண்டருக்கும் மயக்கம் தராத சாம்பார்

மண் சட்டியை அடுப்பில் ஏற்றி ஒரு ஸ்பூன் கடுகை லேசாக வெடிக்கும் பதத்திற்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். நாம் போடப் போகும் பருப்பிற்கு ஏற்ப நீர் வைத்துக் கொள்ளவும். மேற்படி மண் சட்டி ஏற்கெனவே சூடேறியதால் விரைவில் கொதித்து விடும். இப்போது பருப்பைப் போட்டு உடன் இரண்டு ஸ்பூன் அளவுக்கு விளக்கெண்ணை எனப்படும் ஆமணக்கு எண்ணையை ஊற்றி விடவும். ஐந்து பருப்பு அளவிற்கான இஞ்சியை நன்றாகத் தட்டி உலையில் போடவும். ஐந்தாறு பல் பூண்டையும் உடன் சேர்க்கவும்.

நாம் சேர்த்துள்ள எண்ணை, இஞ்சி, பூண்டு யாவும் பொங்கும் பருப்பு நுரையைத் தணிக்கும். பருப்பு வேகும் போதே பருப்பின் வாயுச் சீற்றத்தைத் தணிப்பதோடு நாம் உண்ட பின்னரும் உடலில் வாயு, மிக விடுவதில்லை. பருப்பு விரைந்து வேகவும் துணை புரிகிறது.

அடுத்து வெங்காயத்தை வெட்டிப் போட்டு, தொடர்ந்து நீர்த் தன்மை மிகுந்த சுரை, வெண் பூசணி, பீர்க்கன் காய்களில் எவற்றேனும் ஒன்றையோ அனைத்தையுமோ சிறிய அளவில் வெட்டிப் போடவும்.

அவை வெந்து கொண்டிருக்கும் போதே மூன்று நான்கு காய்ந்த மிளகாய்களைப் பொடியாகக் கிள்ளிப்போட்டு உடன் மல்லித் தழையையும் தரித்துப் போட வேண்டியது. தக்காளியைப் பிசைந்து ஊற்ற வேண்டியது. இறுதியாகப் பொடித்து வைத்த கடுகை சப்பாத்திக் கட்டை கொண்டு நோவாமல் உருட்டி கொதிக்கும் கலவை மீது தூவவும்.

அனைத்தும் இதே வரிசையில் போட்ட பிறகு சுமார் இரண்டு நிமிடம் மூடி வைத்திருந்தால் போதும். இறுதியாக கல்லுப்பு போட்டுக் கலக்கி இறக்கி விட வேண்டியது. இது நமது வழக்கமான சாம்பாரைப் போல் தொரத் தொரவென இருக்காது. பருப்பு, காய்கள் அனைத்தும் மலர வெந்திருக்கும் ஆனால் குலைந்து அடையாளம் திரிந்து போயிருக்காது. சற்றே நீர்த் தன்மையுடன் இருக்கும்.

குக்கரில் வைப்பதைக் காட்டிலும் விரைவாக முடியும். இந்த சாம்பாரில் எந்தச் சத்தும் சிதையாமல் இருப்பதால் தனித்துவமான சுவையுடன் இருக்கும். சாதத்துடன் ஊற்றிப் பிசைந்து, மென்று உண்கிற போது நாவெங்கும் சுவை தழுவும். வயிற்றில் இதமாக இறங்கும். இந்த சாம்பாரும், சோறும் மட்டுமே போதும், உண்ட நிறைவு முழுமையாகக் கிடைக்கும்.

நம்முடைய வழக்கமான சாம்பார் ஒன்றோடு ஒன்றை குழையச் செய்வதாக இருப்பதால் அதன் உயிர்ப் பண்பு கெட்டு வாயு மிரட்டலாக, வயிற்று உப்பலாக, தொண்டை எரிச்சலாக இருக்கிறது. மேற்படி முறையில் சமைக்கும் சாம்பாரை உண்போருக்கு தொண்டரின் மயக்கம் இருக்காது. நாள் முழுதும் சுறு சுறுப்பு துரத்தும்.

கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
உயிர் வளர்த்தேனே 42: சாம்பார் காதல் ஏன் குறைவதில்லை?





நம்முடைய பருப்புப் பயன்பாட்டில் அறுதிப் பெரும்பான்மைக்கும் மேலான இடங்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்திவருவது துவரம் பருப்புதான். காரணம், தானியத்தில் கோதுமை அதிக பசைத்தன்மையைக் கொண்டிருப்பதைப் போல பருப்பில் துவரம் பருப்பு மிகுந்த பசைத்தன்மை கொண்டதாக இருக்கிறது.

சுமார் நூறு, நூற்றைம்பது கிராம் எடுத்துப் போட்டால் போதும். மொத்தக் குடும்பத்துக்கும் இரண்டு வேளைக்கும் பாத்திக் கட்டிப் பிசைந்தடிக்க சாம்பார் தயாரித்து விடலாம். எனவே, பொருளாதாரரீதியாகவும் கைக்கு அடக்கமாகத் தோன்றுகிறது. கடந்த ஆண்டு துவரம் பருப்பு விலை 300 ரூபாய்வரை உச்சத்துக்குப் போனது. அதற்கான பின்னணி அரசியல் - வியாபாரக் காரணத்தை ஆராய்ந்து எழுதினால், அந்த எழுத்தே பொசுங்கிப் போகும் அளவுக்கு வெப்பமானது.

துவரைக்கு அடிமையாவது ஏன்?

நம்மவர்கள் சாம்பாருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள். பலருக்கும் குறிப்பிட்ட ஒரு உணவை மீண்டும் மீண்டும் சாப்பிட நேர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த உணவு ஒரு நேரம் கிடைக்கவில்லை என்றாலும், உடல் முரண்டு பிடிக்கத் தொடங்கிவிடும். அதாவது அச்சுவைக்குரிய அம்சம் உடலிலிருந்து தீர ஆரம்பிக்கிறபோது, அதை மீண்டும் நாடத் தூண்டும்.

சிகரெட் பிடிக்கிறவர் எத்தனையோ கோயிலில் சத்தியம் செய்து, ஆயிரம் மனச் சங்கல்பம் எடுத்துக்கொண்டு ஒருவேளை, இரண்டு வேளை பிடிக்காமல் இருப்பார்கள். அப்போது, திசுக்கள் எங்கும் படிந்திருக்கிற நிக்கோட்டின் தீரத் தொடங்கியதும் அவை தீர்ந்துபோவதைப் பொறுக்க முடியாத திசுக்கள் அரற்றி அடம் பிடித்து, மீண்டும் `ஒன்னே ஒன்னு’ என்று சமாதானம் சொல்லிப் பிடிக்க வைத்துவிடுகிறது. இதேபோலத்தான் நம்மில் பலர் குறிப்பிட்ட உணவுக்கு அடிமையாக இருக்கிறோம்.

சாம்பார் அடிமைகள்

டெல்லியில் உணவகம் நடத்திக்கொண்டிருந்த தம்பியும் நானும் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தோம். சட்டென்று ஒரு இடத்தில் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தி, `அண்ணே இதப் பாரு..’ என்று சாலையோரத்தில் கிடந்த மஞ்சள் பொட்டலம் போலக் கிடந்த ஒன்றைக் காட்டினான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

‘தெரியல, நல்லாப் பாரு’ என்று திருவிளையாடல் சிவாஜிபோல அழுத்தமாகச் சொன்னான். கொஞ்சம் நெருங்கிச் சென்று பார்த்தேன். நன்றாக மஞ்சள் தேய்த்துக் குளித்ததுபோல, மஞ்சள் நிறத்தில் உப்பி செத்துக் கிடந்தது ஒரு பெருச்சாளி. குத்திட்டு நிற்கும் கம்பி போன்ற முடியில்கூட மஞ்சள் முலாம் படிந்திருந்தது.

என்ன என்று தெரிந்ததும் எனக்குக் குமட்டுவது போலாயிற்று. ‘இதையேண்டா எனக்குக் காட்டிட்டு இருக்கிற… எடு வண்டிய’ என்றேன். சிரித்தவாறு வண்டியை ஓட்டியபடி கூறினான்.

‘அது சாம்பார் வட்டையில் விழுந்து இறந்த எலி. அதுக்காக வட்டைச் சாம்பாரைத் தூக்கி `டிச்சுல’ ஊத்திருப்பாங்கன்னு நினைக்கிறியா? அதெல்லாம் கெடையாது. இங்கே கஸ்டமர் முன்னாடியே எடுத்துப் போட்டுட்டு, அதே சாம்பாரை ஊத்தினாக்கூட இட்லியைக் கரைச்சு விட்டுக் குடிச்சிட்டுப் போவாங்க. அந்த அளவுக்கு நம்ப மதராஸிவாலா சாம்பார் மேல மோகம்’ என்றான்.

உண்ணத் தூண்டும் சுவை

துவரம் பருப்பின் பசைத்தன்மை மட்டுமல்ல, அதன் மஞ்சள் நிறமும், அதன் சுவையும் மீண்டும் மீண்டும் நம்மை உண்ணத் தூண்டுவதாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு பயறும் நம்முடைய ஒவ்வொரு உள்ளுறுப்புக்கும் ஆற்றலை வழங்கக் கூடியது. அந்த வகையில் துவரம் பருப்பு மண்ணீரலுக்கு ஆற்றல் தரக்கூடியது. இயற்கை உடலியலின்படியும், துவரையின் துவர்ப்பு மண்ணீரலுக்கான சுவையாகும். ‘துவர்’ என்ற சுவையைக் காரணப் பெயராகக் கொண்டது துவரை.

துவரம் பருப்பின் இயற்கைப் பண்பு சிதையாமல் சமைத்து உண்டால் நம் உடலின் தசையை இறுக்கம் கெடாத நெகிழ்வுத்தன்மையுடன் கட்டுச் செட்டாக வைத்திருக்கும். அதுவே அளவு கூடுகிறபோது சதை இறுக்கம் விட்டு துவளத் தொடங்கிவிடும்.

அதே துவரம் பருப்பை தோலுடன் முழுமையாகவோ அல்லது உடைத்துப் பாதியாகத் தோலுடனோ பயன்படுத்தும்போது மருத்துவப் பண்புமிக்கதாக மாறி விடுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் முழுத் துவரையை அவித்து வடித்த நீரை, வாத நோய்க்கு மருந்தாகக் குடிக்கச் சொல்கிறார்கள்.

இரண்டும் சேர்ந்த கலவை

பசைத்தன்மையை சமனப்படுத்தும் நார்த்தன்மை உடைய தோலுடன்தான் துவரையை இயற்கை நமக்கு அளிக்கிறது. பசைத்தன்மை என்பது அமிலக் கூறு, நார்த்தன்மை என்பது காரக் கூறு. ஒன்றை ஒன்று தணிக்கும் கூறுகளை பயறுகள் இயல்பாகவே தம்மிடம் கொண்டுள்ளன. ஆக, இயற்கைப் பண்பு சிதையாமல் உண்கிறபோது மருந்தாகப் பயன்படும் துவரை, இயற்கைப் பண்பைச் சிதைத்து உண்கிறபோது நமக்கு நோய்க் காரணியாகி விடுகிறது.

இன்றும்கூட பெரிய சந்தைகளில் உள்ள மளிகைக் கடைகளில் பயறு வகைகளை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்து, பருப்பின் சந்தை விலையில் பாதி விலைக்கு விற்கிறார்கள். ஒரு பொருள் பல கைகள் சுற்றாமல் வந்தடைகிறபோது நமக்கும் குறைந்த விலைக்குக் கிடைக்கும். அதை உற்பத்தி செய்தவரும் கூடுதல் பயன் பெறுவார்.

இறைச்சிக்கு இணையான புரதம்

தோல் நீக்காத துவரைப் பயிரை வாங்கி வந்து முன்னிரவில் ஊற வைத்து மண் பாத்திரத்தில் அவித்து, வடித்த நீரைக் கீழே ஊற்ற வேண்டியதில்லை. மேற்படி அவித்த பயறுடன் காய்கள் சேர்க்க வேண்டியதில்லை. வெங்காயம் தக்காளி, மிதமான அளவு மசாலாப் போட்டு, தேங்காய் அரைத்துவிட்டு குழம்பு செய்தால், அது முழுச் சுவையான உணவாக மட்டுமல்ல, முழுமையான நல உணவும் ஆகும்.

உடைக்கப்படாத துவரம் பருப்பு இறைச்சிக்கு இணையான புரதச் சத்தையும், உயிர்ச் சத்துகளையும், தாதுச் சத்துகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதைத் தோலுடன் அவித்து சிறிதளவு உப்பு, மிளகு - சீரகத் தூள் கலந்து தாளிப்புக் கூட்டி உண்டால் உடலில் பலம் பெருகுவதை உணர முடியும். ஆயிரம் வைட்டமின் மாத்திரைகள் போட்ட பிறகு கிடைக்கும் ஆற்றலை, ஒருநாள் துவரைப் பயறுப் பயன்பாட்டின் மூலம் பெறலாம்.

பிரியாணிக்கு இணை

துவரையை அவித்து வடித்த துவர்ப்புச் சுவை மிகுந்த நீருடன் என்னென்ன சேர்த்தால் நாவுக்கு இசைவான சுவை கிடைக்குமோ, அவற்றைச் சேர்த்து குடும்பத்தில் அனைவரும் சூப்புபோலக் குடிக்கலாம். நோயிலிருந்து மீண்டவர்கள், செரிமானத் திறன் குறைந்தவர்கள் துவரைச் சூப்பு குடிக்கும்போது செரிமானமும் எளிதாக நடைபெறும் உடலின் ஆற்றலும் கூடும்.

முழுத் துவரையை பன்னிரண்டு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து மேலும் சுமார் பதினெட்டு, இருபது மணி நேரம் வைத்திருந்தால் முளை கட்டும் பக்குவத்துக்கு வரும். அதே அளவுக்கு சிவப்பு அரிசியை ஊறவைத்து இரண்டையும் சேர்த்து கொரகொரப்பாக ஆட்டிக்கொள்ள வேண்டும்.

அதனுடன் தேங்காய்ப்பூ, சின்ன வெங்காயம், சிறிதளவு காய்ந்த மிளகாய், உடைத்த சீரகம், மிளகு போட்டு மல்லித் தழை கலந்து செக்கிலாட்டிய நல்லெண்ணெய் விட்டு அடை சுட்டுச் சாப்பிட்டால், ஒரு முழு பிரியாணி உண்ட நிறைவை அடையலாம்.

கடின உடலுழைப்பில் ஈடுபடுவோர், ஜிம்முக்குச் செல்லும் இளைஞர்கள், நீண்ட தூரம் ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்கள், போட்டிக்கான விளையாட்டுப் பயிற்சி செய்வோர் மேற்படி துவரைப் பயறு அடையை உண்டால் எரித்த ஆற்றலை உடனே பெறலாம். ஒரு அடையே போதுமானதாக இருக்கும். வயிற்றை நிறைக்கவும் செய்யாது, தொந்தரவும் செய்யாது.

துவரைப் பயறு நமது ராஜ உறுப்புகளில் ஒன்றான மண்ணீரலுக்கு ஆற்றல் தருவதைப் போல, மற்ற பயறுகள் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆற்றலைத் தருகின்றன; அவற்றைச் சமைக்கும் முறை என்ன என்பதை அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம்.

- கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு:kavipoppu@gmail.com

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்: சாத்தியமா? சங்கடமா?


விபத்துக்களை தடுக்க வரும் செப்டம்பர் 1 முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு சாத்தியமாகுமா? என்பது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பினோம்.
அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துப் பேசியதாவது:
சாலை விபத்துகள் அதிகரித்து வருவதும், வாகன திருட்டுகள், குற்றச்செயலில் ஈடுபடுவோர் திருட்டு வாகனங்களை பயன்படுத்துவது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது போன்ற நடைமுறை சிக்கல்களை களைய இனி வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் செப்.1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இது பொதுமக்களிடையே அச்சத்தையும், சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. பொதுவாக ஒரு சட்டம் அமல் படுத்தும்போது அதற்கு எதிர்ப்பு வருவது இயற்கையே ஆனால் பொதுமக்கள் அச்சத்தையும் சந்தேகத்தையும் போக்குவது அரசுக்கு உள்ள கடமை என்ற அடிப்படை உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சிலரிடம் கருத்துகள் கேட்டோம்.
ஐடி ஊழியர் அருள்: இது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று, ஏற்கெனவே போக்குவரத்து போலீஸார் சாலைகளில் மடக்கி மோட்டார் சைக்கிள் சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டு அலைய விடுகின்றனர். அசல் ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த உத்தரவு மேலும் வாகன ஓட்டிகளுக்கு தொல்லையாகத்தான் அமையும்.
கல்லூரி மாணவர் மணி: இரவில் சினிமாவுக்கு சென்றுவிட்டு வந்தால் எல்லா ஆவணங்களும் இருந்தாலும் மடக்கி அதைக் கொடு இதைக்கொடு என்பவர்களுக்கு அசல் ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு மூலம் லைசென்ஸை பிடுங்கி வைத்துக் கொண்டு அலைய வைக்கும் நிலைதான் ஏற்படும்.
வாடகை வாகன ஓட்டுநர் நட்ராஜ்: எந்த ஒரு சட்டம் போட்டாலும் அதை நடைமுறைப்படுத்துபவர்கள் அதிகாரிகள்தான். பொதுமக்கள் அரசின் அறிவிப்பை ஏற்று ஒழுங்காக நடக்கும் போது அதிகாரிகள் அவர்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது. ஆனால் நடைமுறையில் நடப்பது அனைத்து ஆவணங்களைக் காட்டிய பின்னரும் எதாவது ஒரு காரணத்தை சொல்லி வழக்கு போடுவதை வாடிக்கையாக வைத்திருந்தால் எப்படி கடைபிடிக்க முடியும்?
ஆட்டோ ஓட்டுநர் ஜெரோம்: லைசென்ஸ் கொடுத்தால்தான் ஆட்டோவை உரிமையாளர் ஆட்டோவை வாடகைக்கு கொடுப்பார். அப்படி இருக்கும் போது ஒரிஜினல் லைசென்ஸ் கையில் வைத்திருக்கணும் என்றால் யார் ஆட்டோ தருவார், நான் எப்படி பிழைக்க முடியும்?
காவல்துறை தரப்பில் இது குறித்து விசாரித்த போது அவர்கள் கூறியது சமீபத்தில் அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு, செயின் பறிப்பு, மோட்டார் சைக்கிள் ரேஸ் போன்றவை நடக்கிறது. இவைகளை தடுக்க இது போன்ற அறிவிப்புகள் வரும்போது லைசென்ஸ் இல்லாதவர்கள் வாகனத்தை இயக்குவது குறைந்துவிடும் என்கின்றனர்.
தற்போதுள்ள நவீன டெக்னாலஜி வரவுகளில் ஒருவரின் லைசென்ஸை போட்டோஷாப் மூலம் வேறு ஒருவர் போட்டோ பெயர் போட்டு மாற்றி ஜெராக்ஸ் போன்று வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் போலி ஆட்கள் வாகனங்களை இயக்குகிறார்கள். இவையெல்லாம் இதன் மூலம் தடுக்க முடியும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்க மாநில நிர்வாகி அ.சவுந்தரராஜன்: இதை நாங்கள் எதிர்க்கிறோம், இது போன்ற அறிவிப்புகள் மக்கள் மீது, தொழில் புரிவோர் மீது மேலும் சுமையைத்தான் ஏற்றும். ஒரிஜினல் லைசென்ஸ் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? தவறு செய்தால் அவருக்கு போலீஸ் நோட்டீஸ் கொடுத்து அபராதம் விதிக்கப்போகிறார்கள், லைசென்ஸ் வேண்டுமென்றால் நாளை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒரிஜினல் லைசென்ஸை கொண்டு வந்து காட்டுங்கள் என்றால் மறுக்கவா போகிறார்கள். விபத்து ஏற்படுத்தியவர்களே மறுநாள் தான் லைசென்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள்.
ஒரிஜினல் லைசென்ஸை கையில் வைத்திருக்கும் போது அது தொலைந்து போனால் மீண்டும் லைசென்ஸ் எடுக்கும் வரை அது பிரச்சினை. ஆட்டோ, லாரி, வேன் போன்ற வாடகை வாகனங்களை ஓட்டுபவர்கள் லைசென்ஸை தொலைத்துவிட்டால் அவர்களுக்கு அது பிழைப்புக்கே பிரச்சனையாக மாறும் ஆகவே இது தேவையற்ற ஒன்று என்று தெரிவித்தார்.
மணல் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில நிர்வாகி யுவராஜ்: ஓவர் லோடு அதன் மூலம் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க ஓவர் லோடு ஏற்றினால் லைசென்ஸ் பறிமுதல் என்று அறிவித்தார்கள், அதை நாங்கள் வரவேற்றோம். ஆனால் நடைமுறையில் அதிகாரிகள் அதை ஒழுங்காக அமல் படுத்தாமல் வேறு நோக்கத்துடன் செயல்படுவதால் இன்றும் ஓவர்லோடு பிரச்சினை தீரவில்லை.
ஒரிஜினல் லைசென்ஸ் விஷயத்திலும் அதுதான் நடக்கும். இதனால் எந்த பயனும் இல்லை. லாரி உரிமையாளர்கள் டிரைவரிடம் லாரியை ஒப்படைப்பதே லைசென்ஸ் தங்கள் கையில் இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான். லைசென்ஸை அவர்கள் கையில் வைத்திருக்கவேண்டும் என்றால் விபத்து எதாவது நடந்தால் ஓட்டுநர்கள் தலைமறைவாகிவிடுவார்கள் நாங்கள் எங்கே அவர்களை தேடி கண்டுபிடிப்பது.
ஹெவி லைசென்ஸ் கையில் வைத்திருக்கும் போது தொலைந்தால் மீண்டும் எடுக்க அதிக செலவாகும். மேலும் போலீஸார் லைசென்ஸை பிடுங்கி வைத்துக்கொண்டு அலைக்கழிக்கும் சம்பபவங்களும் நடக்கும் இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளை சந்திக்க உள்ளோம் என்றார்.
இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:
அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகிறோம். லைசென்ஸ் ஒரிஜினல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை.
லைசென்ஸ் ஒரிஜினல் தொலைந்து போனால் அது இன்னொரு பிரச்சினையை கொண்டு வரும் என்று லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவிக்கிறார்களே?
அதையெல்லாம் எளிதாக்குகிறோம், முதலில் உள்ளது போல் இருக்காது இதற்காக இரண்டு மூன்று கூட்டங்கள் நடத்தப் போகிறோம். அனைத்தையும் ஆன்லைன் முறையாக்க போகிறோம். இனி எஃப்.ஐ.ஆர் முறை இருக்காது. கூட்டம் முடிந்தவுடன் அது பற்றி சொல்வோம்.
டிஜிலாக்கர் என்ற ஒரு முறை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதே அதில் ஒரிஜினல் ஆவணங்களை இணைக்கும் முறை மூலம் இதை தவிர்க்கலாமே?
லைசென்ஸ்  ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாறப் போகிறது அது வந்துவிட்டால் இவையெல்லாம் எளிதான நடைமுறையாகிவிடும். அது பற்றிய ஆலோசனை நடக்கிறது. அது முடிந்தவுடன் அறிவிக்க உள்ளோம்.
டிஜிலாக்கர் முறை எளிதானது, அதை ஊக்கப்படுத்தும் திட்டம் கொண்டு வரலாமே?
தமிழ்நாட்டின் பயன்பாட்டாளர்கள் தான் அதிகம் உள்ளனர். தமிழகத்தில் ஸ்மார்ட் போன் வசதி அனைவருக்கும் இருக்கிறதா என்பது ஒரு நடைமுறை சிக்கல் , ஆனாலும் டிஜிலாக்கர் முறையைப்பற்றியும் பரிசீலிக்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
எந்த வளர்ச்சியும் எளிதாக பொதுமக்களுக்கு பயன்படும் விதத்தில் அமைய வேண்டும். தமிழக அரசு டிஜிலாக்கர் முறைக்கு மாறினால் தான் மக்களும் மாறுவார்கள் என்பது தகவல் தொழில் நுட்பத்தை அறிந்தவர்கள் கருத்தாக உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார்

Published : 26 Aug 2017 19:09 IST



நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்.

சென்னை

அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் 1989-ல் அதிமுகவில் இணைந்தார். பணகுடி நகரச் செயலாளார், திருநெல்வேலி மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் 2001ல் முதன் முறையாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று போக்குவரத்துத் துறை அமைச்சரானார்.

2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே சசிகலா, தினகரனை ஆதரித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார். டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் நயினார் நாகேந்திரன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இது தமிழகத்தில் மிக ஆழமாக காலூன்ற வேண்டும் என்ற பாஜகவின் கனவுக்கு செயல்வடிவம் கொடுப்பதாக இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.   
முதுகலை மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக ரூ.2.20 கோடி 

மோசடி: டெல்லியில் தலைமறைவாக இருந்தவர் கைது
Published : 26 Aug 2017 20:02 IST

மயிலாப்பூரை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் பேத்திக்கு முதுகலை மருத்துவ பட்டப்படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக ரூ.2.20 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை டெல்லியில் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் கலாவாணி(70) மருத்துவர். இவரின் பேத்தியும் மருத்துவர். கடந்த 2013 ம் ஆண்டு இவர் பேத்தியின் முதுகலை பட்டப்படிப்பிற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது டெல்லி ஹரிநகர் ஆஷ்ரம் பகுதியை சேர்ந்த இப்ராஹிம்(53) , சென்னையை சேர்ந்த வெங்கட்ராமன், லாவண்யா ஆகிய மூன்று பேர் அறிமுகமாகியுள்ளனர்.

மருத்துவப் படிப்பிற்காக இவர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வங்கி மூலம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரத்தை கலாவாணி அளித்துள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றவர்கள் சொன்னபடி மருத்து இடம் வாங்கித் தராமல் தலைமறைவாகிவிட்டனர்.

இதையடுத்து தன்னிடம் மூவரும் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கலாவாணி கடந்த ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். புகார் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. போலீஸாரின் தீவிர விசாரணையில் கடந்த ஆண்டு வெங்கட்ராமனும், லாவண்யாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த இப்ராஹிமை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த 24 ம் தேதி கைது செய்த போலீஸார் சென்னை அழைத்து வந்தனர்.

இன்று சென்னை அல்லிக்குளம் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஷபீர் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி இப்ராஹிமை சிறையில் அடைத்தனர்.

மருத்துவத்தேர்வு, நீட் போன்ற வெளிப்படையான முறைகளில் மருத்துவப் படிப்புகள் தேர்வு நடக்கும்போது இது போன்ற போலி ஆசாமிகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீஸார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்,
மொட்டைக் கடுதாசி எனும் சராஹா!

Published : 18 Aug 2017 10:20 IST


குண்டக்க மண்டக்க வரும் மொட்டைக் கடிதத்தால் குடும்பத்தில் குழப்பக் கூத்துகள் நடந்த வரலாறெல்லாம் முந்தைய தலைமுறையினுடையது. இந்தத் தலைமுறையினர்தான் டிஜிட்டல் தலைமுறையினர் ஆயிற்றே? ‘மொட்டைக் கடுதாசி போடுங்க’ எனக் கெஞ்சாத குறையாகக் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். மொட்டைக் கடுதாசி போடுவதற்காக ‘சராஹா’ (Sarahah) எனும் செயலி, இந்தத் தலைமுறையினருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே இளசுகளை யோசிக்கவிடாத அளவுக்கு மூழ்கடித்துக்கொண்டிருக்கும் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களுக்கு மத்தியில், மொட்டைக் கடுதாசி பாணியிலான இந்த சராஹா மீதான மோகம் நல்லதா?

இந்தியாவில் வைரல்

சராஹா புதிதாக வந்த செயலி என்று அல்ல. ஏற்கெனவே ‘அனானிம்ஸ்’ சாட், ‘ஸ்டிரேஞ்சர்’ சாட் என விதவிதமான முகம் தெரியாத சாட்டிங்குகளைக் கொண்ட செயலிகள் நிறைய உள்ளன. அதுபோன்ற ஒரு செயலிதான் இதுவும். இந்தச் செயலியை உபயோகப்படுத்துவது எளிது. முதலில் இந்தச் செயிலியில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவுசெய்ததும் நமக்கென ஒரு பிரத்யேக சராஹா இணைப்பு கிடைக்கும். அதை நண்பர்களுடன் பகிர்ந்தால், அவர்கள் தங்களது பெயரை வெளியிடாமல் நமக்குக் குறுஞ்செய்திகளை அனுப்புவார்கள். தகவல் அனுப்பியவர் யார் என்றே இதில் தெரியாது என்பதுதான் சராஹாவின் முக்கிய அம்சம்.

சவுதி அரேபியா, எகிப்து என இரு நாடுகளில் மட்டும் அறியப்பட்ட இந்தச் செயலி திடீரென ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பிரிட்டன், அமெரிக்காவில் கடந்த மாதம் வைரலாகப் பரவியது. இந்த மாதம் இந்தியாவில் அதிரடியாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஒரே வாரத்தில் இந்தச் செயலியை சுமார் 75 லட்சம் பேர் இந்தியாவில் மொபைல்களில் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

அடையாளம் சொல்லாத செயலி

சவுதி அரேபியாவைச் சேர்ந்த சயின் அல் அபிதின் தவுபிக் என்பவர் இந்தச் செயலியைக் கடந்த ஆண்டு உருவாக்கினார். அரேபியப் சொல்லான ‘சராஹா’ என்பதற்கு ‘நேர்மையான’ அல்லது ‘வெளிப்படையான’ என்று பொருள். இந்தச் செயலியை உருவாக்கியபோது, ஒரு நிறுவனத்தின் தலைவரும் தொழிலாளர்களும் ஒளிவுமறைவின்றித் தங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இது உருவாக்கப்பட்டதாக அபிதின் தவுபிக் சொன்னார். ஆனால், இப்போது இந்தச் செயலியைப் பயன்படுத்திக்கொண்டிருப்போர் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் அந்த ரகத்தில் இல்லவே இல்லை.



அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தகவல்களை அனுப்பும் முறை, குறை கேட்பு நிகழ்ச்சிகள் நடத்துவோருக்கு வேண்டுமானல் சரிப்பட்டு வரலாம். அதேபோல மக்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிய அரசுக்குப் பயன்படலாம். ஆனால், சராஹா செயலி, இளைஞர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருவியாகவே இருக்கிறது.

சீண்டும் தகவல்கள்

சராஹாவில் தம்மைப் பற்றிப் பாராட்டுகள் அல்லது தன்னுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள் என எதிர்பார்த்து சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சிதான் கிடைத்து வருகிறது. இதில் பாராட்டுகளைவிட வசைபாடுதலைக் கேட்டவர்கள்தான் அதிகம். ஒரு ஒவியனுக்கு, “உன் ஒவியம் எதற்கும் உதவாது, உன் ஒவியம் படு மோசம்’’ என்பது போன்ற கருத்துகளை அனுப்புவது, அந்த ஒவியனுக்கு தன் திறமை மீதான நம்பிக்கையைக் கண்டிப்பாகக் குறைக்கும் அல்லவா? அப்படியான சராஹா தகவல்கள் வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. உடல் குறைபாடுகளைக் கேலி செய்வது, விளையாட்டாக சிண்டு முடிக்கும் கருத்துகளை அனுப்புவது என சராஹாவின் தகவல்கள் எதுவுமே ஒருவர் மேம்படுத்திக்கொள்ளும்விதமாக இல்லை.

இது ஒருபுறம் இருக்க, பெண்களைச் சீண்டுவதற்கென்றே இருக்கும் ஆண்களுக்கு இந்தச் செயலி கடவுள் கொடுத்த வரம். இதுநாள்வரை, அடையாளம் தெரிந்துவிடுமே என்ற பயத்தில் கண்ணியமாக நடந்துகொண்ட ஆண்கள்கூட, இப்போது பெயர் தெரியாதே என்ற மகிழ்ச்சியில், தவறான பல செய்திகளைச் துணிச்சலாக அனுப்பவும் செய்கிறார்கள். ‘உன்னை ரசித்துக்கொண்டே இருக்கிறேன்’, ‘டேட்டிங் செல்வோமா’, ‘ஐ லவ் யூ’ என்றெல்லாம் பெண்களுக்குத் தகவல்கள் வருகின்றன. இதைப் பார்க்கும் பெண்கள், இந்தக் குறிப்பை அனுப்பியது யார் என்று குழம்பி, தங்களுக்கு வரும் தவறான கருத்துகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, “தைரியம் இருந்தால் உன் பெயரை சொல்” என்று கேட்பதைப் பார்த்து, சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

குழம்பும் நண்பர்கள்

விளையாட்டாக அனுப்பும் பல தகவல்கள் பிறரின் வாழ்கையையே பாதிக்கக்கூடும் என்ற அச்சத்துக்கெல்லாம் சராஹாவில் வேலையே இல்லை. ஆக்கப்பூர்வமான குறிப்புகளைப் பகிர இது உதவும் என்றாலும், பெரும்பாலும் இதை சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளவும், நமக்குப் பிடிக்காதவர்களைத் திட்டவும், பாலியல்ரீதியான கேள்விகளை எழுப்பவுமே பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் நிதர்சனம். இதை எழுதி அனுப்பியது யாராக இருக்கும் என்று நினைத்து, நண்பர்கள் அனைவரையும் சந்தேகித்து மனதைக் குழப்பிக்கொள்வது தேவைதானா?

இணையத்தில் புதிதாக ஒரு வதந்தி சில நாட்களுக்கு முன் பெரிதாகப் பரவியது. அது, சராஹா நிறுவனம், குறிப்புகளை அனுப்பியவர்களின் அடையாளத்தைச் சில தினங்களில் வெளியிடும் என்ற வதந்திதான் அது. ஆனால், இந்தச் செய்தி தவறு என்று சரஹா மறுப்பு வெளியிட்டது. இந்த மறுப்பு செய்தியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவர்கள் பலர். அது மட்டும் உண்மையாக இருந்திருந்தால் பலர் நட்பையும் உறவையும் இழந்திருப்பார்கள்.

ஏனென்றால் ‘மொட்டைக் கடுதாசி’ செய்யும் வேலை எப்பவுமே அப்படித்தானே!
தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில் முதியோர் உதவித்தொகை பயனாளிகள் 50 சதவீதம் பேரின் பெயர் நீக்கம்

2017-08-27@ 02:04:08



வேலூர் : தமிழகத்தில் சொந்த நிலம், வீடு இல்லாமல் 60 வயதை கடந்த ஆதரவற்றோர், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளின் சிபாரிசு கடிதத்தால் வசதி படைத்தோரும் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். இதனால்
அரசுக்கு பல கோடி ரூபாய் செலவு ஏற்பட்டு வந்தது. உண்மையான பயனாளிகளை கண்டறிய அதிகாரிகளை கொண்ட தனிப்படை அமைத்து வீடு வீடாக சென்று விசாரணை நடத்தியும் பயனில்லை. இதனால் போலியானவர்கள் அரசு உதவித்தொகை பெறுவதை தடுக்க முடியாமல் அதிகாரிகள் குழம்பி வந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதற்காக குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், புகைப்படம், ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகிய தகவல்கள் அனைத்தும் பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் பதிவேற்றப்பட்டது.

அப்போது, குடும்பத்துடன் வசித்துக்கொண்டு முதியோர் உதவித்தொகை பெற்று வந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. அவ்வாறு தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தவர்கள் 50 சதவீதம் பேரின் பெயர்கள் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடும்ப உறுப்பினர்களில் யார் முதியோர் உதவித்தொகை வாங்குகிறார்களோ அவர்களின் பெயர் இல்லாமல்தான் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டுகளில் இருந்த முதியோர் உதவித்தொகை பயனாளிகள் பெயர் பட்டியலை அந்தந்த மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது 50 சதவீதம் பேருக்கு முதியோர் உதவித்தொகையும் கட் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Common Counselling Crisis : 1200 MBBS Seats may go empty this year, says report

Common Counselling Crisis : 1200 MBBS Seats may go empty this year, says report 0Colleges, Editors Pick, Medical Education, News, PolicyAugust 26, 2017 27A+A- Share this: inShare EmailPrint New Delhi: 50% MBBS seats in deemed universities and private medical colleges continue to remain vacant this year, despite the fact that the authorities have followed the Supreme Court directive of conducting centralized counselling to admit students to both MBBS and dental courses. The Dental scenario is...

Read more at Medical Dialogues: Common Counselling Crisis : 1200 MBBS Seats may go empty this year, says report http://education.medicaldialogues.in/common-counselling-crisis-1200-mbbs-seats-may-go-empty-this-year-says-report/

நான்கு நாள்கள், 10 ஆயிரம் ‘விவேகம்’ டிக்கெட்டுகள்: போரூர் ஜிகே திரையரங்கத்தின் சாதனை!

By எழில்  |   Published on : 26th August 2017 01:11 PM  |   


சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.


இந்தப் படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது.

இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள ஜிகே திரையரங்கத்தில் விவேகம் படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்த தகவல்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.


ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 27 வரை, இந்த 4 நாள்களில் மட்டும் 10,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளதாக ஜிகே திரையரங்கம் சார்பாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 2-ம் நாளான வெள்ளிக்கிழமை காலை 1.45 மணிக்குச் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டுள்ளது. அதன்பிறகு காலை 5 மணிக் காட்சியும் தொடர்ந்துள்ளது. விவேகம் படத்தின் வசூல் நிலவரங்கள் இதுபோன்று பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.


சென்னையில் உச்சபட்ச வசூல்: இரண்டாம் நாளிலும் வசூலில் சாதனை செய்துள்ள அஜித்தின் ‘விவேகம்’!
By எழில் | Published on : 26th August 2017 03:39 PM |




தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் ஒருநாளில் ரூ. 1.50 கோடி வசூலித்த படம் என்கிற சாதனையை அஜித் நடித்துள்ள விவேகம் படம் அடைந்துள்ளது. இந்தப் படம் தனது இரண்டாவது நாளிலும் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.


சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தப் படம் கடந்த 24-ம் தேதி வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது.

சென்னையில் முதல் நாளன்று விவேகம் படம் ரூ. 1.21 கோடி வசூலித்தது. இது கபாலியின் முதல் நாள் வசூலை விடவும் அதிகம். சென்னையில் முதல் நாளன்று கபாலி, தெறி, விவேகம் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே ரூ. 1 கோடி வசூலை முதல் நாளன்று பெற்றுள்ளன.

சென்னை: முதல்நாள் வசூல்

1. விவேகம் - ரூ. 1.21 கோடி

2. கபாலி - ரூ. 1.12 கோடி

3. தெறி - ரூ. 1.05 கோடி

4. பாகுபலி 2: ரூ. 91 லட்சம்

முதல் நாளில் உலகளவில் ரூ. 33 கோடியை வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ. 16.20 கோடியும் இந்தியாவில் ரூ. 26 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 7 கோடியும் என முதல் நாளிலேயே நம்பமுடியாத அளவுக்கு வசூலித்துள்ளது. அஜித் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைக் கண்ட படம், கபாலிக்கு அடுத்ததாக அதிகமாக வசூலித்த படம் ஆகிய பெருமைகளை அடைந்துள்ளது விவேகம். கபாலி தமிழ்நாட்டில் முதல் நாளன்று ரூ. 21 கோடியை வசூலித்தது. அந்தச் சாதனையை இதுவரை எந்தப் படத்தாலும் முறியடிக்கமுடியவில்லை.

தமிழ்நாடு: முதல்நாள் வசூல்

கபாலி: ரூ. 21 கோடி

விவேகம்: ரூ. 16.20 கோடி

பாகுபலி 2: ரூ. 11 கோடி

இரண்டாம் நாளன்று சென்னையில் மட்டும் விவேகம் படம் ரூ. 1.51 கோடி வசூல் பெற்றுள்ளது. இதையடுத்து இரு நாள்களில் சென்னையில் மட்டும் ரூ. 2.72 கோடியைப் பெற்று சாதனை செய்துள்ளது. சென்னையில் இதுவரை எந்தப் படத்தின் வசூலும் ஒரே நாளில் ரூ. 1.50 கோடியைத் தாண்டியதில்லை. நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறைத் தினமாக இருந்ததாலும் பல திரையரங்குகளில் அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடைபெற்றதாலும் இந்த வசூலை எட்டமுடிந்தது. சென்னை ரோஹிணி திரையரங்குத் தரப்பில் இதுபற்றி கூறும்போது, முதல் இருநாள்களில் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு அதிக வசூலை விவேகம் படம் அள்ளியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஞாயிறு வரையிலான முதல் நான்கு நாள்களில் சென்னையில் மட்டும் ரூ. 5 கோடி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விவேகம் படத்தின் இரண்டாம் நாளின் முழு வசூல் விவரங்கள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவேகம்: முதல் நாள் - ரூ. 33 கோடி

சென்னை ரூ. 1.21 கோடி
தமிழ்நாடு ரூ. 16.20 கோடி
இந்தியா ரூ. 26 கோடி
வெளிநாடுகளில் ரூ. 7 கோடி

விவேகம்: இரண்டாம் நாள்

சென்னை: ரூ. 1.51 கோடி

Special trains to Velankanni announced

This is to clear the extra rush of passengers

The Southern Railway has announced that the following special trains would be operated to and from Velankanni to clear the extra rush:
Train No.07060 Secunderabad – Velankanni special train will leave Secunderabad at 7.30 a.m. on September 05 and reach Velankanni at 9.35 a.m. the next day.
Train No. 07059 Velankanni – Secunderabad special train will leave Velankanni at 6.45 p.m. on September 9 and reach Secunderabad at 8.05 p.m. the next day.
The trains will stop at Secunderabad, Jangaon, Kazipet, Warangal, Khammam, Tenali, Nidubrolu, Bapatla, Chirala, Ongole, Kavali, Nellore, Gudur, Renigunta, Katpadi, Villupuram, Tirupadanpuliyur, Cuddalore Port, Chidambaram, Mayiladuthurai, Tiruvarur and Nagapattinam.
Train No.07061 Kakinada – Velankanni special train will leave Kakinada at 9 a.m. on September 5 and reach Velankanni at 9.35 a.m. the next day.
Train No. 07062 Velankanni – Kakinada special train will leave Velankanni at 6.45 p.m. on September 9 and reach Kakinada at 6 p.m. the next day.
The trains will stop at Kakinada Town, Samalkot, Rajamundry, Nidadavolu, Tadepalligudem, Eluru, Vijayawada, Tenali, Nidubrolu, Bapatla, Chirala, Ongole, Kavali, Nellore, Gudur, Renigunta, Katpadi, Villupuram, Tirupadanpuliyur, Cuddalore Port, Chidambaram, Mayiladuthurai, Tiruvarur and Nagapattinam.
Train No.07413 Velankanni - Vijayawada special train will leave Velankanni at 12.50 p.m. on September 6 and reach Vijayawada at 7.30 a.m. the next day.
Train No. 07412 Vijayawada - Velankanni special train will leave Vijayawada at 3.10 p.m. on September 8 and reach Velankanni at 12.25 p.m. the next day.
The trains will stop at Velankanni, Nagapattinam, Tiruvarur, Mayiladuthurai, Chidambaram, Cuddalore Port, Tirupadanpuliyur, Villupuram, Katpadi, Renigunta Gudur, Nellore, Kavali, Ongole, Chirala, Bapatla, Nidubrolu and Tenali.
Train No.00108 Velankanni – Sawantwadi Road special fare special train will leave Velankanni at 8.15 p.m. on August 28 and September 4.
The train will reach Sawantwadi Road at 10.25 p.m. the next day.
Train No.00107 Sawantwadi Road - Velankanni special fare special train will leave Sawantwadi Road at 10.25 p.m. on August 27 and September 3.
The train will reach Velankanni at 1 p.m. the next day.
Train No.00110 Velankanni – Sawantwadi Road special fare special train will leave Velankanni at 11.45 p.m. on September 8. The train will reach Sawantwadi Road at 12.40 a.m. on September 10.
Train No.00109 Sawantwadi Road - Velankanni special fare special train will leave Sawantwadi Road at 9.30 a.m. on September 6 and reach Velankanni at 1 p.m. the next day, according to a Southern Railway press release.

A party loyalist in the limelight

Dhanapal  

Dhanapal’s string of electoral wins testify to his popularity in western region

If the Sasikala group’s ploy of projecting Speaker P. Dhanapal as their choice of Chief Minister succeeds, the senior leader of the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) might create history by becoming the first Dalit Chief Minister of Tamil Nadu.
Mr. Dhanapal has remained a loyal man since the days of MGR and emerged as the Dalit face of the party under the leadership of Jayalalithaa.
He became an important leader, which was evident from his being fielded as a candidate in Assembly elections ever since the party jumped into the poll fray for the first time in 1977.
The list of candidates fielded by the AIADMK in the May 2016 Assembly elections included five leaders considered as senior most in the election scenario – ‘Panrutti’ S. Ramachandran, C. Ponnaiyan, S. Semmalai, Mr. Dhanapal and K. A. Sengottaiyan.
All of them were fielded as candidates by late MGR in the Assembly elections fought by the AIADMK for the first time in 1977.
Student days
Mr. Dhanapal joined the AIADMK in his student days as soon as MGR launched the party, breaking away from the DMK in 1972.
He was only 26 when MGR fielded him from Sankagiri (reserved) constituency in Salem district in the 1977 Assembly elections.
He won with a 21,000-vote margin over his DMK rival. He won from Sankagiri again in 1980 and 1984with handsome margins.
After the split in the party following the death of MGR, Mr. Dhanapal threw his weight behind Jayalalithaa, constested from Sankagiri for the fourth time, but lost. This, however, was the only defeat he suffered in his four decade-long political career.
His popularity in the western belt could be gauged from his wins from Rasipuram (reseved) constituency in the neighbouring Namakkal district in 2011 and Avinashi (reserved) constituency in Tirupur district in 2016.
Jayalalithaa recognised his presence by including him in the Cabinet and allotting the vital food portfolio for a few years in her 2001-06 regime. He was elected Deputy Speaker in 2011 and elevated as Speaker in October 2012, becoming the first Dalit to occupy this post since 1955.
Born into the Arundathiar community in Karuppur village in Salem district, Mr. Dhanapal has kept a low profile all through, despite being one of the senior most in party. And, this has been to his advantage, say his supporters.
A senior leader of the party stated that Mr. Dhanapal had a rich political experience by remaining in the party since his student days. It was his loyalty to the party that made Jayalalithaa honour him with important posts such as Minister, Deputy Speaker and the Speaker.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...