Tuesday, September 19, 2017

மாணவர்கள் உடல் பருமன் கூடுகிறது; சீருடை அளவு பெரிதாகிறது

சிங்கப்பூர் மாணவர்களிடையே உடல் பருமன் கூடிவருவதன் காரணமாக பள்ளிக்கூடச் சீருடை அளவு பெரிதாகி வருகிறது. இந்தத் தொழில்துறையில் 50 ஆண்டு காலமாக இருந்து வரும் ஷங்காய் ஸ்கூல் யுனிஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த திருவாட்டி டோரிஸ் இயோ, “நம்முடைய மாணவர்கள் அளவில் பெருத்து வருகிறார்கள். இப்போது அவர்களுக்குத் தோதாக உடைகளைப் பெரிதாக தைக்க வேண்டியிருக்கிறது,” என்று கூறினார். குறிப்பாக கால்சட்டைகளைப் பெரிதாகத் தைக்க வேண்டியிருக்கிறது என்றார் அவர். சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களிடையே உடல்பருமன் விகிதம் அதிகமாகி வருகிறது. 2000ஆம் ஆண்டில் 10% ஆக இருந்த அந்த விகிதம், 2014ல் 12% ஆகியது.

‘Retirement benefits under CPS to be disbursed shortly’


By Express News Service  |   Published: 19th September 2017 02:03 AM  |    

CHENNAI: The State government has submitted that orders were issued as early as in February 2016 to the effect that the Contributory Pension Scheme (CPS) accumulation i.e. the employee’s contribution along with government contribution and interest thereon up to the date of final authorisation in respect of retired, resigned, died employees and whose services are terminated due to various reasons be settled immediately, subject to obtaining an undertaking from them and the legal heirs of the deceased that they would not make any further claims under the CPS.
The secretary (Expenditure) said this in his counter-affidavit filed before Justice N Kirubakaran in response to writ petitions from Sri Venkateswara Aided Middle School in Namakkal district and others, on Monday.On September 15, the judge had directed the State government to furnish certain information with regard to the contributory pension scheme (CPS) introduced by it recently.As per the report of the Commissioner of Treasuries and Accounts, 7,409 applications requesting CPS final settlement have been received up to August 31 last. Of this, final authorisation was issued in respect of 3,288 retired/resigned employees/deceased employees for `125,24,24,317 and remaining applications would be authorised on receipt of processed requisite documents, the counter said.
Denying the charge, the counter said the government has been contributing its share regularly after the deduction of the employees’ contribution. There is no failure in making the government contribution.

The total amount of employee and government contribution with interest is being deposited in the public account every year. A sum of `18,016 crore has been accumulated, including interest up to March 31 last. Account slips for 2016-17 had already been issued to the individuals concerned and the same had been uploaded in the website, the counter added.
The matter has been adjourned till September 22.

No extra lock for rented house without owner nod


By C Shivakumar  |  Express News Service  |   Published: 19th September 2017 02:12 AM  |  

CHENNAI: In an effort to streamline dispute-ridden rent agreements, the rules drafted under the Tamil Nadu Regulation of Right and Responsibilities of Landlords and Tenants Rules - 2017  propose to put in place stipulations, including barring tenants from making any alterations. This will cover even installation of an additional lock in any door without prior consent.The tenant will have to pay the rent in advance if the premises is left unoccupied for 15 days or more, failing which the landlord has the right to take immediate possession of the property and to bar the tenant from returning.
On the other hand, if the landlord defaults in returning the advance paid, he is liable to pay 18 per cent annual interest on the sum, from the date of recovery of possession of the tenant’s  premises, under the proposed rules.If a landlord recovers the possession of premises, he will have to take the permission of a rent court to re-let part or the entire premises within three years from the date of obtaining such possession. If he re-lets it without permission, he is liable to pay a penalty of ` 10,000.
Under the rules, such rent courts will play a significant role in settling disputes between tenants and landlords. Across the State, 36 courts will be set up, including three in Chennai Corporation limits alone —one each in Chennai North, Chennai Central and Chennai South.Similarly, the government has constituted a principal rent tribunal in Chennai having the jurisdiction of Madras High Court, and a rent tribunal at Madurai having the rent jurisdiction of Madurai Bench of Madras High Court.
As per the new rent Act, the courts and tribunals will not be bound by the procedure in the Code of Civil Procedure,  but shall be guided by principles of natural justice and shall have the power to regulate their own procedure.The draft rules exempt buildings owned by cooperative society, government companies registered under Companies Act, monuments or any building for five years from the date on which the construction is completed and notified to local authority concerned.
Factfile

A tenant can’t make any alteration without landlord’s prior consent
No additional lock should be installed on any door without permission of landlord

If the tenant leaves the premises unoccupied for 15 days without paying rent in advance, the landlord has the right to take possession of the property and to bar the tenant from returning
 

Soon, no reservation charts on trains leaving Chennai Central


By Venkatesan Parthasarathy  |  Express News Service  |   Published: 19th September 2017 02:15 AM  |  

In a bid to save money and paper, the Railway Board is planning to do away with reservation charts stuck outside coaches in six stations across India
CHENNAI: Soon, reservation charts will not be pasted on trains leaving Chennai Central and six other select major stations across the country. The Railway Board has decided to do away with the charts on coaches of trains that start from New Delhi, Nizamuddin, Mumbai Central, Mumbai Chatrapathi Shivaji Terminus, Howrah, Sealdah and Chennai Central. The board also has sent a circular to all the zones concerned. The charts contain the list of passengers and their reserved seat numbers. It especially helps those with tickets that get confirmed in the last minute and passengers who had applied for upgradation.
A senior Southern Railway official told Express that the proposal will most likely be implemented within this month. He also said the initiative will save about ` 30 lakh per year, besides reducing paper requirement.The railway board had taken the decision a few days ago based on the feedback from South Western Railway, which had stopped using reservation charts since last year for trains leaving Bengaluru and Yeshwantpur stations. According to the circular, the measure will be implemented on an experimental basis for three months. A final decision on continuation will be taken after receiving feedback.
The pasting of charts at Central and Egmore is outsourced, with the contract costing the public exchequer around `30 lakh every year. Railways also prints and supplies around 4000 sheets of paper to the contractors, with Central station alone requiring about 75 percent of the quantity. “By ending the practice at Central, we will be able to save some money,” the official said.
Another senior official said they will implement the decision after adequate publicity (on alternate measures) is given. Presently, there is a centralised chart for the benefit of wait-listed and RAC passengers at the entrance of the station.


However, V Rama Rao, director of Traffic and Transportation forum, said he was disappointed with the decision as it would cause hardship to passengers. “Senior citizens and women especially depend on the charts.” Those rushing to the station at the last moment may not find time to go to the enquiry counter or see the centralised chart, he added.
‘தைரியமாக இருங்கள்... நான் இருக்கிறேன்!’ - எம்.எல்.ஏ-க்களுக்கு தினகரனின் ஆறுதல் #VikatanExclusive
எஸ்.மகேஷ்






தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த எம்.எல்.ஏ-க்களிடம் போனில் பேசிய தினகரன், 'தைரியமாக இருங்கள்.. நான் இருக்கிறேன்' என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தினகரன் தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. தினகரனை ஆதரித்த 22 எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள், இன்று தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்குத் தகவல் தெரிந்ததும், சில எம்.எல்.ஏ-க்கள் சோகத்தில் மூழ்கினர். சொகுசு விடுதியில் இல்லாத எம்.எல்.ஏ-க்கள், தங்களுடைய ஆதரவாளர்களிடம் மனவருத்தத்தைப் பகிர்ந்துகொண்டனர். நடவடிக்கை எடுக்கப்படாத எம்.எல்.ஏ-க்களும் அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தினகரனை ஆதரித்த ஜக்கையன் எம்.எல்.ஏ., மனம் மாறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தகுதிநீக்க அறிவிப்பு வெளியானதும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான வெற்றிவேல், ‘இந்தத் தகுதி நீக்கம் செல்லாது’ என்று ஆவேசமாகக் கூறினார். அடுத்து, 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்திலும் சபாநாயகரின் நடவடிக்கைக்குத் தடை பெற மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம்குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். தகுதிநீக்கத்துக்குக் கண்டனமும் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களிடம் தினகரன் போனில் பேசியுள்ளார். அப்போது அவர், 'தைரியமாக இருங்கள்... நான் இருக்கிறேன்' என்று எம்.எல்.ஏ-க்களுக்கு ஆறுதல் கூறியதாகத் தகவல் வெளியானது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், “எங்களைத் தகுதிநீக்கம் செய்த தகவல் கிடைத்ததும் தினகரன் போனில் தொடர்புகொண்டார். எங்களிடம் ஆறுதலாக அவர் பேசினார். திருச்சி பொதுக்கூட்டத்துக்குப் பிறகு சசிகலாவைச் சந்தித்துவிட்டு, அடுத்த நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். சட்டரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். நிச்சயம், சபாநாயகரின் தகுதிநீக்க நடவடிக்கைக்குத் தடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.



இதற்கிடையில், நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, கர்நாடகவிலிருந்து இன்று இரவு புறப்படுகிறோம். திருச்சியில், தினகரனை நேரில் சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பயம்வந்துவிட்டது. சட்டசபையில் நாங்கள் இருந்தால், அவரால் நிச்சயம் பெருபான்மையை நிரூபிக்க முடியாது என்று கருதியே, எங்களைத் தகுதி நீக்கம் செய்துள்ளார். தைரியமிருந்தால், எங்களைத் தகுதிநீக்கம் செய்யாமல் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், ஜனநாயகத்துக்கு விரோதமாக அவர் செயல்பட்டுள்ளார். கட்சி தாவியதாக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநரிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும், இந்த ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகத்தான் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தோம். ஆனால், அரசியல் காழ்பு உணர்ச்சியால் நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளோம். நீதிமன்றத்தில் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்” என்றனர்.

தொடர்ந்து, தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்துள்ளார் ஸ்டாலின். அந்தக் கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்குகுறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த வழக்கில், செப்டம்பர் 20-ம் தேதி வரை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடத் தடை உள்ளது. செப்டம்பர் 20-ம் தேதிக்குப் பிறகு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நீதிமன்றமோ அல்லது ஆளுநர் தரப்பிலோ உத்தரவிடப்பட்டால், அதைச் சமாளிக்கவே 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் என்று சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கும் நடவடிக்கையும் தலைமைச்செயலகத்தில் தீவிரமாக நடந்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து நடக்கும் அரசியல் பரபரப்புக்கிடையே, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வருகிறார். அவரது வருகையும் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது.

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “குறுக்குவழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற முடியாது. தகுதிநீக்கம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்” என்று சுருக்கமாகத் தெரிவித்தார்.
Posted Date : 00:25 (19/09/2017)

சென்னையில் கனமழை: பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

பிரேம் குமார் எஸ்.கே.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை முதல் பரவலாக நல்ல மழை பெய்தது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே போன்று தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்தது.

சென்னையில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரம் முதல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. பலர் அலுவலகம் முடித்து வீடு செல்லும் நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது.

கூடவே மாலை முதல் பெய்த்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டது. எழும்பூர், கிண்டி, கோடம்பாக்கம், கோயம்பேடு, திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட பல இடங்களில் நல்ல மழை பெய்தது. தமிழகத்தின் பிற மாநிலங்களை பொருத்தவரை தேனி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இன்னும் மூன்று நாள்கள் மழை தொடரும் என அறிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: வி. நாகமணி
தகுதி நீக்க விவகாரம்: உத்தரகாண்ட் தீர்ப்பும், தமிழக நிலவரமும்

Published : 18 Sep 2017 18:10 IST

மு.அப்துல் முத்தலீஃப்சென்னை





18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் பலரும் எடியூரப்பா வழக்கு தீர்ப்பை உதாரணம் காட்டி வந்தாலும், இதே போன்ற விவகாரத்தில் உத்தரகாண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அது குறித்து ஒரு அலசல்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களாக செயல்பட்ட 18 பேரை சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் இதற்கு முன்னர் நடந்த நீதிமன்ற தீர்ப்புகளை பலரும் காரணம் காட்டி பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனேகம் பேர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் எம்.எல்.ஏக்களை இடை நீக்கம் செய்தது செல்லாது என்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டப்பேரவை தலைவர் தனபாலின் முடிவைப் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

சிலர் உத்தரகாண்ட் மாநில விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சிலர் உதாரணம் காட்டுகின்றனர். கர்நாடக மாநில விவகாரம் 2011 ஆம் ஆண்டு நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு உத்தரகாண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 9 பேர் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் சபாநாயகர் தீர்ப்பு சரி, உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என்ற வாதம் வைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இதே போன்றதொரு நிகழ்வு நடந்த பொழுது சபாநாயகர் 9 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத்தை மாற்ற வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் 9 எம்.எல்.ஏக்களும் வழக்குத் தொடர்ந்தனர்.

தாங்கள் காங்கிரஸ் கட்சியிலேயே தொடருவதாகவும், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற தங்களது கோரிக்கை ஜனநாயக மரபுதான் என்றும், தகுதி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களது மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு ஆதரவாக சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதே நேரத்தில் முதல்வர் மீது ஆளுநரிடம் முறையிடச் சென்ற பாஜக எம்எல்ஏக்களுடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் சென்றது கட்சித் தாவல்தான் என காங்கிரஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி யூ.சி.தியானி தீர்ப்பளித்தார். தகுதி நீக்கத்தை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால் உச்ச நீதிமன்றம் சபாநாயகர் உத்தரவை ஏற்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

ஆனால் இதில் சிறிய வித்தியாசம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக எம்.எல்.ஏக்களுடன் சென்று மனு அளித்தனர் ஆனால் தினகரன் தரப்பில் அவர்கள் தனி அணியாக இயங்கி வருகின்றனர் என்பது தமிழகத்தில் உள்ளதால் இதை வேறு கோணத்தில் பார்க்கும் நிலையும் வரலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Alagappa University earns another honour for maintaining cleanliness

174 out of 3,500 institutions were short-listed for Swachhta ranking

Alagappa University, Karaikudi, has won the third place in Swachhta ranking 2017 among the institutions of higher education in the country.
Union Human Resource Development Minister Prakash Javedekar presented the awards to 25 institutions, including Alagappa University, at a function in New Delhi recently, said a release from the university.
Alagappa University was among the 3,500 institutions of higher education that responded to an online invitation from the Ministry of Human Resource Development (HRD) and submitted details on the prescribed format.
After the HRD Ministry shortlisted 174 institutions that scored 95% and above, officials from the University Grants Commission and the All India Council for Technical Education inspected the university premises to get first-hand information, the release said.
Later, the top 25 institutions across various categories such as universities, colleges, technical institutions and government institutions were selected.
The exercise was aimed at generating peer pressure among institutions to focus on cleanliness.
University Vice-Chancellor Prof. S. Subbiah told reporters on Monday that the officials visited the university premises on August 22 and 23 and checked the garbage disposal system in hostels and academic buildings, the disposal techniques, water supply systems and student-toilet ratio, the parameters for the award.
The team also inspected the kitchen, availability of running water, modernity of toilet and kitchen equipment and campus green cover, he said.
The Swachhta ranking was another feather in the cap of the university, the VC said adding the A plus Grade university had already won the World Clean and Green University Campus Award.
The Alagappa alumni garden, scientific waste management systems, hygienic ambience and societal linkages through village placement programmes spoke about the thrust given by the university on sustainable development.
In the process, the university had sensitised the student community about the importance of tree planting, he added.

Kumbakonam railway station gets free Wi-Fi

The Railways has extended free WiFi facility for passengers and public accessing the Kumbakonam railway station. The facility, that was tested for about a week, was launched on Monday. The Railways had decided two years back to extend the facility to stations and junctions that were categorised as “A Grade’’ with a commendable revenue. As per that decision, the Thanjavur District Train Travellers’ Welfare Association had petitioned the Railways for the facility and reiterated their demand through the Mayiladuthurai MP R. K. Bharathi Mohan again some time back.
Every day around 38 trains pass through the Kumbakonam station that witnesses a footfall of at least 5,000 people daily.
“We thank the Railways and those who made it happen”, said members of the association.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை நீட்டிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்ட வட்டம்

By DIN | Published on : 19th September 2017 01:13 AM |

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இது தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த திருமா மங்கள், மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 'இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மேல் இருத்தல் ஆகாது என உச்ச நீதிமன்றம் கடந்த 1992-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு அமலில் உள்ளதால் மருத்துவக் கல்லூரியில் சேரும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் 2017-18 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் பொதுப் பிரிவின் கீழ் சேர்ந்து படிக்க உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கே.எம். விஜயன், சிவபால முருகன் ஆஜராகினர்.
அப்போது நீதிபதிகள், 'மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தை அணுகவில்லை. இடைக்கால உத்தரவு பிறப்பித்த பிறகு ஏன் நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்கள். இவ்வளவு தாமதம் ஏன்? தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான கலந்தாய்வு தேதியை நீட்டிப்பதாக இல்லை' என்றனர்.

இதைத் தொடர்ந்து, வழக்குரைஞர் கே.எம். விஜயன், ' நீட் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நிலவிய பிரத்யேக சூழல் காரணமாக மருத்துவ மாணவர் சேர்க்கை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீடித்தது. மனுதாரருக்கு செப்டம்பர் 2-ஆம் தேதிதான் அழைப்புக் கடிதம் கிடைத்தது. அதன் பிறகு காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது' என்றார். அவரது வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மஹாளய அமாவாசை தர்ப்பணம் குறித்த சந்தேகங்களும், பதில்களும்...
Published on : 18th September 2017 02:53 PM


மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு கொடுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் குறித்த பொதுவான சந்தேகங்களுக்கு தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் பதிலளித்துள்ளார்.

• சரி, முன்னோர்களை வழிபட என்னென்ன முறைகள் உள்ளன?
அவர்கள் இறந்த திதி, வருடா வருடம் வரும், அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கட்டாயம் கீழ்க்கண்ட பெயர்களை
சொல்லிச் செய்ய வேண்டும்.

தாய் வழி
உங்கள் தாயாரின் தகப்பனார் - தாயார்
உங்கள் தாயாரின் தாத்தா - பாட்டி
உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி

தந்தை வழி
உங்கள் தகப்பனாரின் தகப்பனார் - தாயார்
உங்கள் தகப்பனாரின் தாத்தா - பாட்டி
உங்கள் தகப்பனாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி

மேற்கண்டவர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். மேலும் உங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் இறந்திருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள் இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.

• கேள்வி: பெண்கள் செய்யலாமா?

பதில்: தங்களுடன் சகோதரர்கள் பிறக்காத நிலையில் கட்டாயம் செய்யலாம்.

• கேள்வி: இதை ஆற்றங்கரையில்தான் செய்ய வேண்டுமா?

பதில்: எங்கு வேண்மானாலும் செய்யலாம். ஆற்றில், கடலில், அருவியில், கிணற்றடியில், நமது பூஜையறையில், ஹாலில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். மனம் சுத்தமாயிருக்க வேண்டும்.

• கேள்வி: வெளிநாடுகளில் இருப்போர் என்ன செய்யலாம்?

பதில்: வீட்டில் செய்வது நல்லது.

• கேள்வி: தர்ப்பணத்திற்கு தனியாக ஆட்களை வைத்துத்தான் செய்ய வேண்டுமா?

பதில்: அவசியம் இல்லை. தங்களுக்கு முறைகள் தெரிந்திருக்கும் பக்ஷத்தில் தாங்களே செய்து கொள்ளலாம். எனினும் கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது நல்லது.

• கேள்வி: தர்ப்பணம் செய்யும் முறைகளைச் சொல்லுங்களேன்?

பதில்: முதலில் அவரவர்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு உண்டான திதி கண்டுபிடித்திருப்பீர்கள். அந்தத் திதி ஒவ்வொரு வருஷமும் வரும் போதும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தாய் தந்தை இருவருமே இருப்பவர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாரம் கிடையாது. தாயோ தந்தையோ இல்லாதவர்கள், அல்லது இருவருமே இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்யலாம்.

தர்ப்பணம் அன்று விரதம்

முதலில் தர்ப்பணம் செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது. மதியம் சாப்பிடலாம். கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மாமிசம் உண்ணுதல்
கூடாது. மிளகு சேர்ப்பதும் நன்மையைத் தரும். புரிகிறதா? பச்சரிசி உண்ண வேண்டும். இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது. இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிடலாம்.

தர்ப்பணம் செய்யும் முறைகள்

முதலில் யாருக்கு திதியோ அவருக்குத் தர்ப்பணம் செய்தல் வேண்டும். உதாரணமாக திதி உங்கள் தந்தையாருக்கு என்றால் முதலில் உங்கள் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். பின் தந்தை வழி உள்ளவர்களுக்கு, பின் தாய் வழியில் உள்ளவர்களுக்குச் செய்யலாம்.

கேள்வி: என்றெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்:

பதில்: ஒரு வருடத்தில் தாய் தந்தையர் இறந்த திதிகளை தவிர, ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும், ஒவ்வொரு கிரஹணத்தன்றும், சூரிய சந்திர கிரஹண காலங்களில், ஒவ்வொரு மாத அமாவாஸ்யையின் போதும் செய்யலாம்.

வரலாறு திரும்புகிறது அன்று பி.எச்.பாண்டியன்-இன்று தனபால்
By DIN | Published on : 19th September 2017 01:31 AM |




சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்த பிறகு, பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறை 29 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் உருவாகியுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-இல் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு யார் முதல்வர் என்ற சர்ச்சை அதிமுகவில் வெடித்தது. ஆர்.எம்.வீரப்பனின் ஆலோசனை மற்றும் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார்.
இதனை கட்சியின் மற்றொரு தலைவராக விளங்கிய ஜெயலலிதா ஏற்கவில்லை. அப்போது தமிழக சட்டப் பேரவையில் அதிமுகவுக்கு 132 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தது. அவர்களில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர். மற்றவர்கள் ஜானகி அணியை ஆதரித்தனர். அப்போது பேரவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன் ஜானகி அணியை ஆதரித்தார்.
பேரவையில் நடந்தது என்ன? பேரவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையில் இருந்து நீக்கினார். இந்தச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1986-இல் திமுகவின் பத்து உறுப்பினர்கள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அரசியலமைப்புச் சட்ட நகலை எதிர்த்தனர். இதற்காக அவர்கள் அவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

எனவே, சட்டப் பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 191-ஆகக் குறைந்தது. இந்த குறைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஜானகி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 1988-ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை, அவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, பேரவை கூடியதும் திடீரென அறிவிப்பை ஒன்றை அவர் வெளியிட்டார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களது பதவியில் இருந்து விலகுவதாக தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால், அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த கூச்சல்-குழப்பத்தைத் தவிர்க்க பேரவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார். மீண்டும் பேரவை கூடியதும், ஜெயலலிதா தரப்பு எம்.எல்.ஏ.-க்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அதில், ஜானகி ராமச்சந்திரன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போதைய நிகழ்வு: இப்போது அதிமுக உறுப்பினர்களில் தினகரன் அணியைச் சேர்ந்த 18 பேரை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 108-ஆகக் குறைந்துள்ளது. அப்போது பி.எச்.பாண்டியன் எடுத்த அஸ்திரத்தை, இப்போது பி.தனபால் எடுத்துள்ளார்.

முதுமை போற்றுவோம்


By கே.ஜி. இராஜேந்திரபாபு  |   Published on : 19th September 2017 01:23 AM  |   
மற்ற பருவங்களைப் போலவே முதுமைப் பருவமும் மகிழ்ச்சிக்குரிய பருவம்தான் என்பதை ஏனோ பலரும் ஏற்றுக் கொள்வதில்லை.
முதுமைப் பருவம் எய்திவிட்டாலே வெந்ததைச் சாப்பிட்டுவிட்டு விதிவழியே போகவேண்டியதுதான் என்று விரக்தியாய் பேசிக்கொண்டு, வந்து போகிறவர்களிடமெல்லாம் தன் துயரத்தைப் புலம்பி, கண்ணீரால் முகத்தை அலம்பி, மூலையிலே குந்தத்தான் தனக்குத் தகுதி, கூடத்திலே அமர அருகதையில்லை என்று தனக்குத்தானே கோடிட்டுக் கொண்டு, இனியென்ன வாழ்க்கை இருக்கிறது என்றும் என்னை யார் மதிக்கிறார்கள் என்ற சுயபச்சாதாபத்தோடும் காலம் தள்ளும் பருவம் என்று பலரும் எண்ணுகிறார்கள்.
முதுமை என்பது கலங்கும் பருவமல்ல; கம்பீரமான பருவம்.
முதியவர்கள் தங்கள் மனத்தில் தாழ்வு மனப்பான்மை அனுமதிக்க வேண்டாம். வயதை இழந்துவிட்டோம் அதனால் வாழ்க்கையில் ஒதுக்கப்படுவோமோ என்று வதங்க வேண்டாம்.
முதியவர்கள் இளைஞர்கள் போல் இயல்பாக இருக்கலாம். உடற்பயிற்சி செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம். வானொலி கேட்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். கம்ப்யூட்டரிலோ, லேப்-டாப்பிலோ இணையத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தினமும் புதிய புதிய நூல்கள் படிக்கலாம். இனி படித்து என்ன செய்யப்போகிறோம் என்ற விரக்தி மனப்பான்மை கூடாது. விரக்தி மனப்பான்மை வயதைக் கூட்டிவிடும்.
புதிய புதிய செய்திகளைப் பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லலாம். அவர்கள் வயதுக்குத் தக்கவாறு கதைகளையோ, தகவல்களையோ சொன்னால் பேரப்பிள்ளைகள் தாத்தாவை விரும்பி தினமும் எதிர்பார்ப்பார்கள்.
தனது வயது நபர்களுடன் நட்பு பாராட்டி ஒரு குழுவாக அமர்ந்து பேசலாம். குடும்பத்தில் உள்ள குறைகளையோ, மனக்குறைகளையோ சொல்லி அதிலேயே ஒரு சுகம் காணுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியான செய்திகளையே பேசலாம். 
ஏதாவது ஒன்றின் சார்பாக வாதிட்டுக் கொண்டு மனதிற்குள்ளேயே எதிர்ப்பலையை ஏற்படுத்திக் கொண்டு நிம்மதியை இழந்து விட வேண்டாம். குழுவாய் அமர்ந்து பேசுவதே மனத்தை மென்மைபடுத்தத்தானே!
வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் மகனோ மருமகளோ கொஞ்சம் கவனக் குறைவாக நடந்தால், உதாரணத்திற்கு, சாப்பிடும்போது கூப்பிட மறந்தால் - தான் அலட்சியம் செய்யப்பட்டுவிட்டோம், ஓய்வுபெற்ற உடனேயே ஒதுக்கப்பட்டுவிட்டோம் என்று எண்ண வேண்டாம்.
சொந்த வீட்டில் எப்போதும் ஒருவரை ஒருவர் மதித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
முதியவர்கள், ஒவ்வொன்றுக்கும் மரியாதையை எதிர்பார்ப்பதற்குக் காரணம் ஓய்வு பெற்றவுடன் தான் ஓரங்கட்டப்பட்டுவிட்டோம் என்ற எண்ணத்தை ஏற்கெனவே மனத்தில் ஏற்படுத்திக் கொண்டதால்தான். அந்தக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்க்கும்போது அவர்களுக்கு அப்படித்தான் தெரியும். 
இன்னும் சிலர் தாங்கள் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலகத்திற்குச் சென்றால் அங்கு தங்களை மதிக்கவில்லை என்று புலம்புவார்கள். ஒரு வாடிக்கையாளருக்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தை தங்களுக்குக் கொடுத்தால் போதும் என்று நினைத்தால் இந்த மன உளைச்சல் இருக்காது.
முதியவர்களில் இரண்டு வகையினர் உண்டு. ஒன்று இயன்றவர்கள் (ஓய்வு ஊதியமாகவோ பிற வடிவிலே வருமானம் உள்ளவர்). இன்னொரு வகையினர் இயலாதவர்கள்.
இயலாதவர்கள் வாரிசுகளை நம்பி வாழ்கிறவர்கள்.
இயலாத பெற்றோரைப் பிள்ளைகள் பாதுகாக்க வேண்டும். கெளரவத்தோடு நடத்த வேண்டும். சோறுபோட்டு துணி எடுத்துக் கொடுத்தால் மட்டும் போதாது. 
அவர்களின் தேவையை அறிந்து சேவை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது பெற்றோருடன் அளவளாவ வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அவர்கள் இயலாமையைச் சுட்டிக்காட்டி வேதனைப்படுத்தக்கூடாது. எந்தச் சூழலிலும் பெற்றோரை அலட்சியப்படுத்தக்கூடாது. 
பெற்றோர் கேள்வி கேட்டால் அதை காதிலே வாங்காத மாதிரி அலட்சியப்படுத்தக்கூடாது. அவர்களை மதித்து பதில் சொல்ல வேண்டும்.
குடும்பத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். பிள்ளை தங்களைக் கலந்தாலோசிக்கிறான் என்பதே பெற்றோர்க்குப் பூரிப்புத் தரும். 
வீட்டில் தாங்கள் உரிமையுள்ளவர்கள் என்ற உணர்வைப் பெற்றோர்களுக்கு ஊட்ட வேண்டும்.
குழந்தைகள், பெற்றோர், தாத்தா, பாட்டி முதலிய பெரியவர்கள் என்ற அடுக்குள்ள குடும்பம் அழகாக இருக்கும். பிள்ளைகளைப் பெற்றோர் கண்டிப்பர். தாத்தாவும், பாட்டியும் செல்லம் கொஞ்சுவர். 
பிள்ளைகளுக்கு இரண்டுமே வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படுத்தாத எண்ணங்களை தாத்தா பாட்டியிடம் கொட்டுவர். கூடுதலான சுதந்திரத்தோடு விளையாடுவர்.
பெற்றோர் சுமையென பிள்ளைகள் நினைத்தல் கூடாது. சிறு சிறு குறைகள் முதியவர்களிடம் இருந்தாலும் பொறுக்க வேண்டும். இளம் வயதில் தன்னுடைய குறைகளை பொறுத்தவர்கள்தான் என்பதை நினைவுகூர வேண்டும்.
பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது பிள்ளைகளுக்குப் பெருமை மட்டுமல்ல; பாதுகாப்புமாகும்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ரூ.18 ஆயிரம் கோடி டிபாசிட்
பதிவு செய்த நாள்18செப்
2017
23:53


சென்னை: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டு வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டதை தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஆசிரியர் போராட்டம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றமும், கண்டனம் தெரிவித்திருந்தது. அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழக அரசு செலுத்திய தொகை குறித்து, நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு, தமிழக அரசு தரப்பில் அளித்த அறிக்கை:

* பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில், ௧௦ சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது; அதே தொகைக்கு இணையாக, அரசும் வழங்குகிறது

* ஒவ்வொரு ஆண்டும், ஊழியர்கள் மற்றும் அரசு பங்களிப்பு தொகை, பொது கணக்கில், 'டிபாசிட்' செய்யப்படுகிறது. ௨௦௧௭ மார்ச் வரை, வட்டியுடன் சேர்த்து, ௧௮ ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது

* பங்களிப்பு திட்டத்தின் கீழ், இறுதி, 'செட்டில்மென்ட்' கேட்டு, ௭,௪௦௯ விண்ணப்பங்கள் வந்துள்ளன; ௩,௨௮௮ பேருக்கு, ௧௨௫ கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ளவர்களிடம், உரிய ஆவணங்களை பெற்ற பின், விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்

* அரசு தரப்பில், பங்களிப்பு தொகையை வழங்க தவறவில்லை.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, நீதிபதி கிருபாகரன், நேற்று பிறப்பித்த உத்தரவில், 'அரசு அளித்துள்ள தகவல்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிய வேண்டும். அரசு அளித்துள்ள விபரங்கள், உரிய ஆவணங்களுடன், மனுவாக தாக்கல் செய்யப்பட வேண்டும். விசாரணை, நாளை தள்ளிவைக்கப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.

எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் போராட்டம்

பதிவு செய்த நாள்19செப்
2017
01:05

ஆண்டிபட்டி;தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களை அவதுாறாக பேசி தாக்கியதாக எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மருத்துவ கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள்போராட்டம் நடத்தினர்.தேனி மருத்துவ கல்லுாரி மாணவர்கள் சிலர் செப்.16ல் இருசக்கர வாகனத்தில் தேனி சென்றுள்ளனர். பங்களா மேடு அருகேவாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ெஹல்மெட் அணியாமல் இருசக்கரவாகனத்தில் சென்ற மாணவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த எஸ்.ஐ.அமுதன்மூன்றாம் ஆண்டு மாணவர் நிரஞ்சனை அவதுாறாக பேசியதுடன், தாக்கியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கல்லுாரி நிர்வாகத்திடம் முறையிட்ட மாணவர்கள்தாக்கிய எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.பாஸ்கரனிடம் மனுகொடுத்தனர். எந்த நடவடிக்கையும் இல்லாததை கண்டித்து நேற்றுவகுப்புகளை புறக்கணித்து கல்லுாாரி வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.மாணவர்களை தகாத வார்த்தையால் திட்டிய எஸ்.ஐ.,மீது நடவடிக்கை எடுப்பதாக ஆண்டிபட்டி டி.எஸ்.பி.,குலாம் உறுதி அளித்தார். இதனைதொடர்ந்து நேற்று கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு மற்றும் மாணவர்கள் சார்பில்மீண்டும் அவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதன் பின் மாணவர்கள் போராட்டத்தைகைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.
அமைச்சர் அலுவலகத்தில் அனாதையாக, 'அண்ணாதுரை'
dinamalar
பதிவு செய்த நாள்18செப்
2017
21:55




திருநெல்வேலி: தமிழக செய்தித் துறை அமைச்சர் ராஜுவின், எம்.எல்.ஏ., அலுவலக நுழைவாயிலில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை, அனாதையாக கிடக்கிறது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜு. இவர் தான், தமிழக செய்தித் துறை அமைச்சர். இவரது தொகுதி அலுவலகம், எட்டயபுரம் சாலையில் உள்ளது. கோவில்பட்டி - எட்டய புரம் சாலையை, நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி, தற்போது நடந்து வருகிறது.
இதனால், இந்த சாலையில் இருந்த, சுந்தரலிங்கம், அம்பேத்கர், அண்ணாதுரை சிலைகள் அகற்றப்பட்டு, அந்தந்த சிலை பராமரிப்பு கமிட்டியிடம் ஒப்படைக்கப் பட்டன.

சுந்தரலிங்கம் சிலை, சாலை விரிவடையும் பகுதியில் இருந்து, சற்று தள்ளி நிறுவப்பட்டிருக்கிறது. அம்பேத்கர் சிலை, அரசு மருத்துவமனைக்கு அருகில் நிறுவப்பட்டு விட்டது. அண்ணாதுரை சிலை மட்டும் இன்னும் நிறுவப்படாமல், ராஜுவின், எம்.எல்.ஏ., அலுவலக வாசலில், கவனிப்பாரின்றி கிடக்கிறது.

இந்த சிலை, 30 ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க.,வினரால் நிறுவப்பட்டது. அதனாலேயே, அ.தி.மு.க.,வினர் வசம், சிலை ஒப்படைக்கப் பட்டது.
பதவி, மற்றும் உட்கட்சி பூசலில் கவனம் செலுத்தவே நேரம் இல்லாத நிலையில், அண்ணாதுரை சிலையை நிறுவும் பணியை, அ.தி.மு.க., நிர்வாகிகள் கிடப்பில் போட்டுவிட்டனர். 

அதுவும், அமைச்சரின் அலுவலக வாசலிலேயே, அண்ணாதுரை அனாதையாக கிடக்கிறார்.

'அண்ணாதுரையின் கொள்கைகளை தான் மறந்து விட்டனர். அவரது சிலையையாவது, அலுவலகத்தின் உள்ளே வைத்து பராமரிக்கலாமே...' என, உண்மையான, அ.தி.மு.க., தொண்டர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
களத்தில் குதித்த பி.எஸ்.என்.எல்.,; 2,000 ரூபாயில் மொபைல் போன்
பதிவு செய்த நாள்19செப்
2017
05:10


புதுடில்லி : ‘ஜியோ, ஏர்­டெல்’ ஆகி­ய­வற்றை தொடர்ந்து, பொதுத் துறை­யைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னம், மைக்­ரோ­மேக்ஸ், லாவா ஆகிய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, குறைந்­த­பட்­சம், 2,000 ரூபாய் விலை­யில், மொபைல் போனை வெளி­யிட உள்­ளது.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., தலை­வர் அனு­பம் ஸ்ரீவத்­ஸவா கூறி­ய­தா­வது: நாங்­கள், மைக்­ரோ­மேக்ஸ், லாவா நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, சொந்த மாடல்­களில், தொலை தொடர்பு சேவை­யு­டன் கூடிய மொபைல் போன்­களை, அறி­மு­கம் செய்ய உள்­ளோம். இந்த மொபைல் போன்­களின் குறைந்­த­பட்ச விலை, 2,000 ரூபா­யாக இருக்­கும். இவை, இல­வச அழைப்­பு­கள் வச­தி­யு­டன் கிடைக்­கும்.

அக்­டோ­ப­ரில், தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு, இத்­திட்­டத்தை அமல்­ப­டுத்த உள்­ளோம். இதை தொடர்ந்து, மேலும் பல மொபைல் நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, தொலை தொடர்பு வச­தி­யு­டன் கூடிய மொபைல் போன்­களை வெளி­யிட உள்­ளோம். இவ்­வாறு அவர் கூறி­னார். பி.எஸ்.என்.எல்., 10.5 கோடி மொபைல் போன் சந்­தா­தா­ரர்­களை கொண்­டுள்­ளது.
கிரிக்கெட் போட்டி : ரூ.49 லட்சம் வருவாய்
பதிவு செய்த நாள்18செப்
2017
23:07


சென்னையில் நடந்த, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியால், தமிழக அரசுக்கு, 49 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே, நேற்று முன்தினம், '50 ஓவர்' கிரிக்கெட் போட்டி நடந்தது. அங்கு, இதற்கு முன், 45 ஆயிரம் பேர் போட்டியை காண வசதி இருந்தது. 

இவற்றின், டிக்கெட் விற்பனை வழியே, அரசுக்கு, கணிசமான, 'வாட்' வரி கிடைத்தது.

சில காரணங்களால், மூன்று மாடங்களுக்கு சென்னை மாநகராட்சி, 'சீல்' வைத்துள்ளது. அதனால், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, 12 ஆயிரம் இருக்கைகள் காலியாக உள்ளன.

இந்நிலையில், ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், முதன்முறையாக, சர்வதேச ஒரு நாள் போட்டி, அங்கு நடந்துள்ளது. 2015ல் நடந்த போட்டியின் போது, 750 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச டிக்கெட் விலை, தற்போது, 1,200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதிகபட்சமாக, 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. அதற்கு, ஜி.எஸ்.டி.,யாக, 98 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. அதில், தலா, 50 சதவீதத்தை, மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டன.
அதன்படி, தமிழகத்திற்கு, 49 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது என, வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -
வரிசை கட்டுது விடுமுறை - கல்லா கட்டுது மதுக்கடை
பதிவு செய்த நாள்18செப்
2017
23:06


விடுமுறை காலம் துவங்க உள்ளதால், 'டாஸ்மாக்' கடைகளில், முழு அளவில் மது வகைகள் இருப்பு வைக்குமாறு, ஊழியர்களுக்கு, மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 5,000 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகள் விற்பனை செய்கிறது. இவற்றில், தினமும் சராசரியாக, 70 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. இம்மாத இறுதியில், ஆயுத பூஜை, விஜயதசமி துவங்கி, திபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வரை, அதிக விடுமுறைகள் வருகின்றன. இதனால், மது விற்பனையை வழக்கத்தை விட அதிகரிக்க, டாஸ்மாக் திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து, டாஸ்மாக் மேலாளர் ஒருவர் கூறியதாவது: சென்னை, கோவை போன்ற நகரங்களில், ஒரு கடையில், தினமும் சராசரியாக, 10 லட்சம் ரூபாய் வரையும், மற்ற பகுதிகளில், மூன்று லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனை நடக்கிறது. கடை இட வசதியை பொறுத்து, ஏழு நாட்களுக்கு தேவையான சரக்குகள் இருப்பு வைக்கப்படும். இட வசதி இல்லாத கடைகளுக்கு, தினமும், ஒரு லாரியில் சரக்கு அனுப்பப்படும். இனி, அதிக விடுமுறை வருவதால், வழக்கத்தை விட, மது விற்பனை அதிகம் இருக்கும். இதனால், இரு வாரங்களுக்கு தேவையான சரக்குகளை இருப்பு வைக்குமாறும், இட வசதி இல்லாத கடைகளில், தினமும், இரு முறை, 'லோடு' வாங்கி கொள்ளுமாறும், கடை ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
குடந்தை ரயில்வே ஸ்டேஷனில் இலவச, 'வைபை' வசதி துவக்கம்
பதிவு செய்த நாள்18செப்
2017
22:19

தஞ்சாவூர்: கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு நாள்தோறும், 38 ரயில்கள் வந்து செல்கின்றன. தினமும், 5,000த்துக்கும் மேற்பட்டோர் இந்த ஸ்டேஷனை பயன்படுத்துகின்றனர்.

முக்கிய கோவில் நகரமாகவும், வணிக மையமாகவும் கும்பகோணம் திகழ்வதால், சுற்றுலா பயணியரும், வர்த்தகர்களும் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர். அதிக டிக்கெட் வருவாய் உள்ள, 'ஏ' கிரேடு ரயில்வே ஸ்டேஷனில் இலவச, 'வைபை' வசதி ஏற்படுத்த, ரயில்வே நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் முடிவெடுத்தது. இதையடுத்து, நேற்று முதல், கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில், இலவச வைபை வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக, நிலைய மேலாளர் தெரிவித்துள்ளார்.



காவிரியில் புனித நீராட அலை மோதும் பக்தர்கள் : 'இன்று மஹாளய அமாவாசை'
பதிவு செய்த நாள்18செப்
2017
23:41



காவிரி மகா புஷ்கரம் விழா, 12 குருப்பெயர்ச்சியை கடந்து, 144 ஆண்டுகளுக்கு பின் கொண்டாடப்படுகிறது. குரு பகவான், கன்னி ராசியிலிருந்து, காவிரி நதிக்கு உரிய, துலாம் ராசிக்கு மாறும்,
குரு பெயர்ச்சி காலத்தில் இவ்விழா கொண்டாடப்படும். இந்த கால கட்டத்தில் காவிரியில் நீராடுவதால், பல தோஷங்கள் நீங்கி, பஞ்சம் அகன்று, உலகம் சுபிட்சம் பெறும் என்பது நம்பிக்கை.

புஷ்கரம் என்றால் ஜலதேவதை : குரு கிரகம், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குள் நுழையும் போது, சில குறிப்பிட்ட நதிகள், அனைத்து தேவதைகளின் சக்தியை பெற்று கொள்ளும். இதுவே 'புஷ்கரம்' எனப்படுகிறது. புஷ்கரம் என்றால் 'ஜல தேவதை' என்று அர்த்தமாகும்.

ஸ்ரீ ரங்கபட்டணாவில் அலை மோதும் பக்தர்கள் : மைசூரு மாவட்டம், ஸ்ரீ ரங்கபட்டணாவில், நடந்து வரும் புஷ்கரத்தில், காவிரி நதியில் புனித நீராட, பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. இன்று மஹாளய அமாவாசை என்பதால், பக்தர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ ரங்கப்பட்டணாவில், காவிரி புஷ்கரம் நடந்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உட்பட பல மாநிலங்களில் இருந்தும், கர்நாடகாவின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள், ஸ்ரீரங்கப்பட்டணா வருகை தந்து, காவிரி நதியில் புனித நீராடி மகிழ்கின்றனர். பக்தர்கள், நதிக்கரையில் அமர்ந்து தியானம், யாகம், மந்திரம் பாராயணம் செய்வது, மூதாதையர்களுக்கு தர்ப்பணம், கோதானம் என பல வித வழிபாடுகளை செய்கின்றனர். காவிரி புஷ்கரணிக்கு வரும், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஸ்ரீ ரங்கபட்டணாவின் ராஜ வீதி, காவிரி ஆற்றுக்கு செல்லும் ரோடுகளில், வாகன நெருக்கடி அதிகரித்துள்ளது. வாகன போக்குவரத்தை நிர்வகிக்க முடியாமல், போக்குவரத்து போலீசார் திணறுகின்றனர். காவிரியில் நீராடும் பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீரங்கநாதசுவாமியை தரிசித்தனர். நேற்றும் கூட, பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று மஹாளய அமாவாசை என்பதால், பக்தர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

காவிரியை வரவேற்கும் முதல் புண்ணிய ஸ்தலம் : ஹாசன் மாவட்டம், ஹரகலகூடு தாலுகா, ராமநாதபுரத்தில், வரலாற்று பிரசித்தி பெற்ற ஸ்ரீராமேஸ்வரர் கோவில் உள்ளது. கிருத யுகத்தில், அக்னி தேவன், இங்குள்ள வகினி புஷ்கரணியில், நீராடி, சிவலிங்கத்தை பூஜித்தார். அதே போன்று, புராணத்தில், வாசவபுரி என்று அழைக்கப்பட்ட, ராமநாதபுரத்தின் ஸ்ரீராமேஸ்வர் கோவில் அருகில் பாய்ந்து ஓடும் காவிரியின் வகினி புஷ்கரணியில் புனித நீராடிய ராமர், தானாக உருவாகியிருந்த சிவலிங்கத்தை அர்ச்சித்ததால், இந்த ஸ்தலத்துக்கு ராமநாதபுரம் என்று பெயர் வந்தது. இப்படியாக, வாசவபுரி, ராமநாதபுரமாக மாறியதாக ஐதீகம்.
குடகு தலைக்காவிரியின் பிரம்மகிரியில் பிறந்து, பாயும் காவிரி நதியை வரவேற்கும் ராமநாதபுரம், முதல் புண்ணிய ஸ்தலமாகும். இந்த கோவில் அருகில் பாய்ந்து ஓடும் காவிரி நதிக்கரையில், இம்மாதம் 12 ம் தேதி துவங்கிய மகா புஷ்கரம், இம்மாதம் 23 ம் தேதி வரை நடைபெறுகிறது.

காவிரி ஆரத்தி : வாரணாசியில் கங்காரதி செய்வது போன்று, ராமநாத புரத்தில், முதன் முறையாக, ஒவ்வொரு நாள் இரவும், காவிரி ஆரத்தி பூஜைகள் நடக்கிறது. இந்த பூஜைகள், பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

தானம், தர்ப்பணம் : காவிரி ஆற்றில் புஷ்கரம் நடக்கும் போது, மேற்கொள்ளும் பூஜைகள், யாகம், மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வது, கோ தானம் போன்றவைகளை செய்தால், பெரும் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எந்த ராசிக்கு எந்த நதியில் புஷ்கரம் :
'குரு கிரகம்' மேஷம் -'கங்கை'
ரிஷபம் - 'நர்மதா'
மிதுனம் - 'சரஸ்வதி'
கடகம் - 'யமுனா'
சிம்மம் - 'கோதாவரி'
கன்னி - 'கிருஷ்ணா'
துலாம் - 'காவிரி'
விருச்சிகம் - 'பீமா'
தனுசு - 'தபசி'
மகரம் - 'துங்கபத்ரா'
கும்பம் - 'சிந்து'
மீனம் - 'மகாநதி'
12 ராசிகளில், குருபகவான் நுழையும் நாளிலிருந்து 12 நாட்கள், புண்ணியகாலம் எனப்படுகிறது. இந்த நேரத்தில், மகரிஷிகள், தேவதைகள், சப்தரிஷிகள், நதிகளில் நீராடுவர் என்ற ஐதீகம் உள்ளது.
ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்
பதிவு செய்த நாள்18செப்
2017
19:40


'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவினர், செப்., 7 முதல், ஏழு நாட்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பேச்சு நடத்தியும், சுமுக முடிவு கிடைக்கவில்லை. பின், நீதிமன்ற தலையீட்டால், செப்., 15ல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், போராட்டம் நடந்த போது, அரசு விதிகளை மீறி, போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், விளக்கம் கேட்டு, ஆசிரியர்களுக்கு, 'மெமோ' வழங்கபட்டு வந்தது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, 'மெமோ' அனுப்பும் பணியை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிறுத்தி உள்ளனர். பதிவு தபாலில் அனுப்பப்பட்ட மெமோக்களையும், ஆசிரியர்கள் வாங்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

- நமது நிருபர் -
ஜனவரி முதல் பணபரிவர்த்தனைகள் நிறுத்தம்:வங்கியில் ஆதார் எண் இணைக்காவிடில்

பதிவு செய்த நாள்18செப்
2017
23:24

திண்டுக்கல்:வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களின் பரிவர்த்தனைகள் ஜனவரி முதல் நிறுத்தப்பட உள்ளது. 12 வங்கிகளில் ஆதார் போட்டோ எடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்களது வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

டிச., 31ம்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிடில், வரும் 2018, ஜனவரி முதல் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பரிவர்த்தனை நிறுத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 85 சதவீத வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இன்னும் 15 சதவீதம் பேர் இணைக்க வேண்டியுள்ளது.வங்கிகளில் ஆதார் மையம்: வாடிக்கையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆதார் போட்டோ எடுப்பதற்காக வங்கிகளில் முதல் கட்டமாக 12 ஆதார் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல், பழநி, நத்தம், ஆத்துார் ஆகிய ஊர்களில் உள்ள கனரா வங்கிகளிலும், திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, வேடசந்துார், நத்தம் பகுதிகளில் ஐ.ஓ.பி., வங்கி கிளைகளிலும், ஓட்டன்சத்திரம் பெடரல் வங்கிக் கிளையிலும் ஆதார் மையங்கள் அமைக்கப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் குடும்பத்தினரும் ஆதார் அடையாள அட்டை பெற போட்டோ எடுக்கலாம் என, மாவட்ட முன்னோடி கனரா வங்கி மண்டல மேலாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
Former BJP MP Tarun Vijay addresses students of Chennai's MGR Educational and Research Institute

TIMESOFINDIA.COM | Sep 18, 2017, 18:38 IST



CHENNAI: Former BJP MP Tarun Vijay addressed students of Dr MGR Educational and Research Institute on Friday. Speaking at convocation ceremony of engineering students as the chief guest, he discussed with students the importance of rural and agricultural sector in India and the need for technological innovation in this sector.

"Some of the challenges plaguing this sector are scarcity of water, lack of infrastructure, illiteracy and lack of finances. To meet the forthcoming demand and challenges, we need young minds to engage in this challenge and suggest new ideas and methods to improve lives of the Indians," he told students.

He also remembered Dr MGR and said he was a legendary and charismatic leader who introduced many innovative ideas in film industry as well as in politics. Vijay said that many of the welfare schemes introduced by MGR were later implemented by central govt like mid-day meal schemes. He said that following Thirukural must inspire young students to be innovative and respect the rural talent among poor farmers and village artisans.

Er ACS Arun Kumar, President Dr MGR Educational and Research Institute felicitating Tarun Vijay

LATEST COMMENTI s he a medical man ? Why should he address Medical students ? He said that North Indians tolerate Dark South Indians to show that they are not racists.BJP thinks Tamils are first rate idiots.Hammer

Talking to students, he said, "I wish in your next convocation function we may see rural farmers and artisans in their traditional attire occupying front row seats in this university". They are the professors of agriculture and arts and craft in the traditional wisdom area". He said that it is after centuries one gets a great PM like Narendra Modi. "Use all your talent to make the most of the positive atmosphere prevailing for skill development and Make In Indiaprojects. If your innovations are not helping improve rural sector, then it's a luxury. Copiers can only become followers, only innovators can become leaders," Vijay added.

Have you seen any innovation in the instruments of our masons, farmers, agriculturists and plumbers since last one hundred years? Have you been able to introduce a new gear system and a better axle mechanism to our bullock carts ? Then what is the use of your expensive education and research if it is not changing the lives of the poor farmers and craftsmen, he asked among thunderous applause by young students. Learn to respect your parents and rural people who are better equipped in protecting cultural, ancestral and traditional knowledge and wisdom, he said.
Madras HC directs EC to conduct RK Nagar bypoll by Dec 31

PTI | Sep 18, 2017, 17:09 IST




CHENNAI: The Madras high court today directed the election commission to conduct the by-election to RK Nagar assembly constituency here, lying vacant following the demise of Tamil Nadu chief minister J Jayalalithaa, "preferably" by December 31.

The first bench of Chief Justice Indira Banerjee and Justice M Sundar gave the direction to the EC after taking up a PIL by K K Ramesh.

The PIL petition sought a court direction to the Chief Election Commissioner to conduct the by-poll.

Disposing of the PIL, the bench in its order said, "It is expected that the Election Commission of India will announce the election date at the earliest and conduct the elections preferably by December 31, 2017."

The by-election scheduled for April 12 in RK Nagar was canceled by the poll body following allegations of distribution of cash to voters.

The PIL petitioner had submitted that not conducting elections in the constituency was not good for democracy and the society.

He said that as per the Representation of the People Act, 1951, if any legislator died, a by-election should be conducted within six months, whereas the date of polls had not been announced for the RK Nagar constituency so far.

The petitioner said he had made a representation on July 3 in this regard to the EC which had not evoked any response, and hence he filed the current plea.

LATEST COMMENTSC , HC and EC should ban all mid term poles , to run Govt smoothly and stop wasteful expenditure. Disqualify who changes parties.Mpraomokkapati

He further alleged that two major parties in the state had indulged in bribing of voters in the assembly elections held in May 2016, adding that the EC, which received several complaints from various constituencies, only cancelled the election to two constituencies (Aravakurichi and Thanjavur).

The by-election to RK Nagar constituency was necessitated following the death of Jayalalithaa on December 5, 2016.

Tamil Nadu Speaker disqualifies 18 MLAs supporting TTV Dhinakaran

B Sivakumar and Julie Mariappan| TNN | Updated: Sep 18, 2017, 14:53 IST


HIGHLIGHTS

The MLAs were disqualified under Schedule 10 of the Indian Constitution which speaks about the anti-defection law

Chief minister EPS earlier accused Dhinakaran of colluding with DMK to topple government

AIADMK (Amma) deputy general secretary TTV Dhinakaran, along with the MLAs supporting him, 

addressing a press conference at a resort in Puducherry (File photo)


CHENNAI: Tamil Nadu assembly Speaker P Dhanapal on Monday disqualified 18 AIADMK MLAs+ who are supporting sidelined party deputy general secretary TTV Dhinakaran. The MLAs were disqualified+ under Schedule 10 of the Indian Constitution, which deals with the anti-defection law.

"The Speaker has taken action under schedule 10 of the constitution and therefore the following MLAs are disqualified and therefore they lose their MLA post," said a statement issued by assembly secretary K Boopathy on Monday morning.

The MLAs are S Thangatamilselvan (Andipatti), R Murugan (Harur), S Mariappan Kennedy (Manamadurai), K Kadirkamu (Periyakulam), Jayanthi Padmanabhan (Gudiyattam), P Palaniappan (Pappireddypatti), V Senthil Balaji (Aravakurichi), S Muthiah (Paramakudi), P Vetrivel (Perambur), N G Pathiban (Sholingur), M Kodandapani (Tiruporur), T A Elumalai (Poonamallee), M Rengasamy (Thanjavur), R Thangadurai (Nilakottai), R Balasubramani (Ambur), S G Subramanian (Sattur), R Sundaraj (Ottapidaram) and Uma Maheswari (Vilathikulam).

The speaker had summoned all the rebel MLAs to appear before him. However, only a few of them appeared before him despite the speaker sending notices to all a couple of times.

Last month, 19 MLAs met Governor C Vidyasagar Rao and gave separate letters withdrawing support to the chief minister Edappadi K Palaniswami after the EPSfaction and the faction group led by former chief minister O Panneerselvam merged.

With the disqualification of the 18 MLAs, the strength of AIADMK has come down to 116 (including the speaker). The DMK has 89 members, the Congress has eight MLAs and the IUML has one member. The assembly had 234 elected members, with RK Nagar seat which former chief minister J Jayalalithaa represented remaining vacant.

With 18 MLAs disqualified, there are 19 seats vacant now. This means the assembly has only 215 elected members. The government needs only 108 votes to prove its majority in the assembly now in case of floor test.

Reacting to the decision of the speaker, TTV supporters said they would go to court against the speaker's decision.

"The EPS govt which can't prove majority in the floor of House is resorting to disqualification of MLAs. We will move court seeking relief," Vetrivel, one of the disqualified MLAs, told TOI.

Vetrivel said MLAs staying in resort at Coorg in Karnataka were being intimidated by the Tamil Nadu police. "The EPS government acts like a demon," he said.

"This is murder of democracy by the Speaker to help CM. He could have disqualified the MLAs if they acted against the party whip during floor test, but he disqualified those who expressed their differences outside the assembly. I have lost my respect for Speaker,"" said DMK deputy floor leader S Duraimurugan.
தேசிய செய்திகள்

50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் வழங்க கோரிய தமிழக மாணவியின் மனு தள்ளுபடி



50 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், தனக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழகத்தைச் சேர்ந்த மாணவி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

செப்டம்பர் 19, 2017, 05:18 AM

புதுடெல்லி, 

தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவி திருமா மகள் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘தமிழக அரசு கடைப்பிடிக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக செய்து வருவது போல் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி, அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்கி தகுதி அடிப்படையில் உரிய மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவியருக்கு இந்த கல்வி ஆண்டு மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும், தான் நீட் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்று 1,138–வது இடத்தில் தேர்வு பெற்று இருப்பதாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதி பட்டியலில் 50 சதவீதத்துக்குள் வருவதாகவும், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டினால் தன்னுடைய வாய்ப்பு பறிபோனதாகவும் மனுவில் அந்த மாணவி குறிப்பிட்டு இருந்தார்.இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் விஜயன் மற்றும் வக்கீல் சிவபாலமுருகன் ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணை தொடங்கியதும், 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக முன்பு வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மூத்த வக்கீல் விஜயன் வாசித்து காட்டினார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி வாதாடுகையில், கடந்த ஆண்டுகளில் வழங்கியது போல இந்த ஆண்டும் அதேபோன்ற உத்தரவை கோர்ட்டு பிறப்பிக்கலாம் என்று கூறினார்.அதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான வக்கீல் கவுரவ் சர்மா, மனுதாரர் தாமதமாக கோர்ட்டை அணுகி இருப்பதாகவும், கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை போன்றவை முடிவடைந்த இந்த நேரத்தில் இதுபோன்ற உத்தரவுகள் தற்போதைய மாணவர் சேர்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

உடனே மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜயன், தங்கள் தரப்பில் தாமதம் ஏதும் இல்லை என்றும், தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 25–ந்தேதிதான் தொடங்கியது என்றும் கூறினார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்டு 31–ந்தேதி வரை மட்டுமே அனுமதி வழங்க முடியும் என்றும், மனுதாரர் அந்த தேதிக்கு பிறகு வந்ததால் அவருக்கு இடம் வழங்குமாறு உத்தரவிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்
மாவட்ட செய்திகள்

சுங்குவார்சத்திரத்தில் இன்று மின்தடை



காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம், குண்ணவாக்கம் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

செப்டம்பர் 19, 2017, 03:00 AM

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம், குண்ணவாக்கம் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே சுங்குவார்சத்திரம், மொளச்சூர், திருமங்கலம், மாம்பாக்கம் சிப்காட், குண்ணம், அயிமிச்சேரி, சந்தவேலூர், சோகண்டி, சூரகாபுரம், வயலூர், பண்ணூர், கண்ணூர், குண்ணவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது என ஸ்ரீபெரும்புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
மாவட்ட செய்திகள்

மறைமலைநகரில் நாளை மின் தடை


காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர், நீர்வள்ளூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

செப்டம்பர் 19, 2017, 03:30 AM

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர், நீர்வள்ளூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே மறைமலைநகர், தொழிற்பேட்டை, காட்டாங்கொளத்தூர், பொத்தெரி, திருக்கச்சூர், பேரமனூர், சிங்கப்பெருமாள்கோவில், செங்குன்றம், மெல்ரோசாபுரம், கோவிந்தாபுரம், சட்டமங்களம், கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு, நந்திவரம், மகாலட்மிநகர், கோவிந்தராஜபுரம், மாடம்பாக்கம், தைலாவரம், ஊரப்பாக்கம், ஆதனூர், நீர்வள்ளூர், சின்னையன்சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், தொடூர், மேல்மதுரமங்கலம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்கலம், செல்வழிமங்களம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம், பரந்தூர், செல்லம்பட்டடை, எடையார்பாக்கம், பிச்சிவாக்கம், காரை, வேடல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
.தலையங்கம்

சீரமைக்க வேண்டிய ‘அம்மா உணவகம்’


சங்ககால பாடல்களில் புறநானூற்று பாடல்கள் எக்காலத்திலும் பின்பற்றப்பட வேண்டிய பல அரிய கருத்துக்களை கூறியுள்ளன.

செப்டம்பர் 19 2017, 03:00 AM

சங்ககால பாடல்களில் புறநானூற்று பாடல்கள் எக்காலத்திலும் பின்பற்றப்பட வேண்டிய பல அரிய கருத்துக்களை கூறியுள்ளன. அதில், குடபுலவியனார் என்ற சங்ககால புலவர், ‘‘உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்’’ என்று எழுதியது, அந்தக் காலத்திலிருந்தே எல்லோருக்கும் ஒருபாடமாக விளங்குகிறது. அதாவது, ‘உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்பதுதான் இதன் பொருளாகும். இந்த வழியைப் பின்பற்றித்தான் சென்னை நகர மேயராக சைதை துரைசாமி இருந்தபோது, சென்னை மாநகரில் வாழும் ஏழை–எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சுகாதார மற்றும் தரமான உணவுகளை மலிவுவிலையில் வழங்குவதற்காக சிற்றுண்டி உணவகங்களை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதலில் மலிவுவிலை உணவகம் என்று தொடங்கப்பட்ட இந்த உணவகம், பின்பு ‘அம்மா உணவகம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதிலும் இயங்கி வருகிறது.

அம்மா உணவகங்களில் இட்லி 1 ரூபாய், பொங்கல் ரூ.5, பலவகை சாதங்கள் மற்றும் மாலை நேரத்தில் 2 சப்பாத்தி, பருப்பு கடைசல் 3 ரூபாய்க்கு என ஏழை–எளிய மக்கள் இந்த உணவகங்களில் குறைந்த விலைக்கு சாப்பிடும் இந்தத்திட்டம், தற்போது சென்னை மாநகராட்சி பகுதிகளில் 400 இடங்களிலும், சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 7 இடங்களிலும், தொடர்ந்து அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்தத்திட்டத்தை பிறமாநிலங்களிலிருந்து ஏராளமானவர்கள் வந்து பார்த்து, தங்கள் மாநிலங்களில் தொடங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். ஒருசில மாநிலங்களில் அம்மா உணவகத்தைப்போல உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு, ‘அம்மா உணவகம்’ போல, உணவகங்களை அமைத்தால் மக்களின் பேராதரவைப் பெறமுடியும் என்ற நோக்கத்தில் ‘இந்திரா உணவகம்’ என்ற பெயரில் தமிழ்நாட்டைப்போல உணவகங்களை திறந்துள்ளது. காலை டிபன் ரூ.5–க்கும், மதிய உணவும், இரவு உணவும் தலா ரூ.10–க்கும் என ஒரு நாளில் ரூ.25–க்கு நல்ல உணவு வழங்குகிறோம் என்றபெயரில் இந்தத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்திரா உணவக திட்டத்தை தொடங்கிவைத்த ராகுல்காந்தி தன் பேச்சின்போது, ‘இந்திரா உணவகம்’ என்று சொல்ல வந்தவர் ‘அம்மா’ என்று சொல்லிவிட்டு, பிறகு உடனடியாக இந்திரா என்று திருத்திக்கொண்டார் என்றால், அம்மா உணவகத்தின் தாக்கம் எந்தளவிற்கு ராகுல்காந்தி வரை போய்ச்சென்றிருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது.

அம்மா உணவகத்தை பார்த்து மற்ற மாநிலங்கள் எல்லாம் தரமான உணவுடன், மலிவுவிலையில் உணவு வழங்கவேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருக்கும் நேரத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அம்மா உணவகங்கள் யாராலும் கவனிக்கப்படாத குழந்தைபோல, சவலை குழந்தைகளைப்போல ஆகிக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் அம்மா உணவகத்தில் பெரும்கூட்டம் இருக்கும். தரமான உணவு கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது உணவின் தரமும், ருசியும் குறைந்து கொண்டே போவதால், மக்கள் கூட்டம் அலைமோதிய நிலைபோய், அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நின்று சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் கையேந்தி பவன்களில் கூட கொஞ்சம் பணம் கொடுத்தால் பரவாயில்லை தரமான உணவு கிடைக்கிறது என்பதுதான் மக்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது. எனவே, எந்த நோக்கத்திற்காக அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டது என்பதை உணர்ந்து, உள்ளாட்சி அமைப்புகள் அம்மா உணவகங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இந்த உணவகங்களுக்கு செலவழிப்பதற்கு போதுமான நிதி வசதியில்லை என்று உள்ளாட்சி அமைப்புகளின் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, இதற்கென தனியாக நிதி ஒதுக்க அரசும் முன்வரவேண்டும். மொத்தத்தில் அம்மா உணவகம் சுவையான உணவை குறைந்தவிலையில் தருகிறது என்ற பெயரை எப்போதும் நிலைநாட்ட வேண்டும்.
After Kajal Aggarwal photo, Lord Vinayaka picture finds place on smart card issued by TN govt

Rajasekaran RK| TNN | Updated: Sep 18, 2017, 19:00 IST



Lord Vinayaka's photograph appeared on a smart card issued by the Tamil Nadu Civil Supplies and Consumer Protection Department

TIRUPUR: Lord Vinayaka can remove all obstacles in one's life. But the question is: will a picture of Lord Vinayaka on a smart card issued by a state government department remove obstacles or create more hindrances for the card holder?

Lord Vinayaka's photograph has appeared on a smart card issued by the Tamil Nadu Civil Supplies and Consumer Protection Department to a resident of Udumalpet in Tirupur district.

N Nallasivam of Vadugampalayam was surprised when he collected the smart card from a ration shop in the area on Friday last. Instead of his photo, he found Lord Vinayaka's picture on the smart card.

TOP COMMENTWhat is wrong with rajasekharan ? Why he is so anti hindu ? Some thing might have happened. There might be some overlook, somewhere. In the place of ganesh , suppose there is some other symbol , of ... Read MorePvs Prasad

On Monday, Nallasivam submitted the smart card to a civil supplies office in the area to get a new one carrying his photo.

Recently, Saroja Periyathambi, a 64-year-old woman at Kaamalapuram in Salem district, found actress Kajal Aggarwal's photo when she received her smart card from a ration shop in the area.

NEWS TODAY 30.12.2025