Tuesday, September 19, 2017

அமைச்சர் அலுவலகத்தில் அனாதையாக, 'அண்ணாதுரை'
dinamalar
பதிவு செய்த நாள்18செப்
2017
21:55




திருநெல்வேலி: தமிழக செய்தித் துறை அமைச்சர் ராஜுவின், எம்.எல்.ஏ., அலுவலக நுழைவாயிலில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை, அனாதையாக கிடக்கிறது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜு. இவர் தான், தமிழக செய்தித் துறை அமைச்சர். இவரது தொகுதி அலுவலகம், எட்டயபுரம் சாலையில் உள்ளது. கோவில்பட்டி - எட்டய புரம் சாலையை, நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி, தற்போது நடந்து வருகிறது.
இதனால், இந்த சாலையில் இருந்த, சுந்தரலிங்கம், அம்பேத்கர், அண்ணாதுரை சிலைகள் அகற்றப்பட்டு, அந்தந்த சிலை பராமரிப்பு கமிட்டியிடம் ஒப்படைக்கப் பட்டன.

சுந்தரலிங்கம் சிலை, சாலை விரிவடையும் பகுதியில் இருந்து, சற்று தள்ளி நிறுவப்பட்டிருக்கிறது. அம்பேத்கர் சிலை, அரசு மருத்துவமனைக்கு அருகில் நிறுவப்பட்டு விட்டது. அண்ணாதுரை சிலை மட்டும் இன்னும் நிறுவப்படாமல், ராஜுவின், எம்.எல்.ஏ., அலுவலக வாசலில், கவனிப்பாரின்றி கிடக்கிறது.

இந்த சிலை, 30 ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க.,வினரால் நிறுவப்பட்டது. அதனாலேயே, அ.தி.மு.க.,வினர் வசம், சிலை ஒப்படைக்கப் பட்டது.
பதவி, மற்றும் உட்கட்சி பூசலில் கவனம் செலுத்தவே நேரம் இல்லாத நிலையில், அண்ணாதுரை சிலையை நிறுவும் பணியை, அ.தி.மு.க., நிர்வாகிகள் கிடப்பில் போட்டுவிட்டனர். 

அதுவும், அமைச்சரின் அலுவலக வாசலிலேயே, அண்ணாதுரை அனாதையாக கிடக்கிறார்.

'அண்ணாதுரையின் கொள்கைகளை தான் மறந்து விட்டனர். அவரது சிலையையாவது, அலுவலகத்தின் உள்ளே வைத்து பராமரிக்கலாமே...' என, உண்மையான, அ.தி.மு.க., தொண்டர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Mid-air mishap: Hot curry spills on passenger, costs airline ₹25k

Mid-air mishap: Hot curry spills on passenger, costs airline ₹25k  CONSUMER IS KING  Vindhya.Pabolu@timesofindia.com 02.02.2026 Bengaluru : ...