Tuesday, September 19, 2017


எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் போராட்டம்

பதிவு செய்த நாள்19செப்
2017
01:05

ஆண்டிபட்டி;தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களை அவதுாறாக பேசி தாக்கியதாக எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மருத்துவ கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள்போராட்டம் நடத்தினர்.தேனி மருத்துவ கல்லுாரி மாணவர்கள் சிலர் செப்.16ல் இருசக்கர வாகனத்தில் தேனி சென்றுள்ளனர். பங்களா மேடு அருகேவாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ெஹல்மெட் அணியாமல் இருசக்கரவாகனத்தில் சென்ற மாணவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த எஸ்.ஐ.அமுதன்மூன்றாம் ஆண்டு மாணவர் நிரஞ்சனை அவதுாறாக பேசியதுடன், தாக்கியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கல்லுாரி நிர்வாகத்திடம் முறையிட்ட மாணவர்கள்தாக்கிய எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.பாஸ்கரனிடம் மனுகொடுத்தனர். எந்த நடவடிக்கையும் இல்லாததை கண்டித்து நேற்றுவகுப்புகளை புறக்கணித்து கல்லுாாரி வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.மாணவர்களை தகாத வார்த்தையால் திட்டிய எஸ்.ஐ.,மீது நடவடிக்கை எடுப்பதாக ஆண்டிபட்டி டி.எஸ்.பி.,குலாம் உறுதி அளித்தார். இதனைதொடர்ந்து நேற்று கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு மற்றும் மாணவர்கள் சார்பில்மீண்டும் அவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதன் பின் மாணவர்கள் போராட்டத்தைகைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025