Tuesday, September 19, 2017

களத்தில் குதித்த பி.எஸ்.என்.எல்.,; 2,000 ரூபாயில் மொபைல் போன்
பதிவு செய்த நாள்19செப்
2017
05:10


புதுடில்லி : ‘ஜியோ, ஏர்­டெல்’ ஆகி­ய­வற்றை தொடர்ந்து, பொதுத் துறை­யைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னம், மைக்­ரோ­மேக்ஸ், லாவா ஆகிய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, குறைந்­த­பட்­சம், 2,000 ரூபாய் விலை­யில், மொபைல் போனை வெளி­யிட உள்­ளது.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., தலை­வர் அனு­பம் ஸ்ரீவத்­ஸவா கூறி­ய­தா­வது: நாங்­கள், மைக்­ரோ­மேக்ஸ், லாவா நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, சொந்த மாடல்­களில், தொலை தொடர்பு சேவை­யு­டன் கூடிய மொபைல் போன்­களை, அறி­மு­கம் செய்ய உள்­ளோம். இந்த மொபைல் போன்­களின் குறைந்­த­பட்ச விலை, 2,000 ரூபா­யாக இருக்­கும். இவை, இல­வச அழைப்­பு­கள் வச­தி­யு­டன் கிடைக்­கும்.

அக்­டோ­ப­ரில், தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு, இத்­திட்­டத்தை அமல்­ப­டுத்த உள்­ளோம். இதை தொடர்ந்து, மேலும் பல மொபைல் நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, தொலை தொடர்பு வச­தி­யு­டன் கூடிய மொபைல் போன்­களை வெளி­யிட உள்­ளோம். இவ்­வாறு அவர் கூறி­னார். பி.எஸ்.என்.எல்., 10.5 கோடி மொபைல் போன் சந்­தா­தா­ரர்­களை கொண்­டுள்­ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025