Saturday, September 23, 2017

வங்கி கணக்கு துவக்கம் ஏர்டெல்லுக்கு, ‘நோட்டீஸ்’
பதிவு செய்த நாள்23செப்
2017
00:28



புதுடில்லி : பார்தி ஏர்­டெல் நிறு­வ­னம், அரசு உத்­த­ர­வுப்­படி, மொபைல் போன் வாடிக்­கை­யா­ளர்­களின், ‘ஆதார்’ விப­ரங்­களை பெற்று வரு­கிறது. அவற்­றின் மூலம், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தெரி­விக்­கா­மல், அதன், ‘ஏர்­டெல் பேமென்ட் பேங்க்’கில் கணக்கு துவக்கி விடு­வ­தாக, ஆதார் ஆணை­யத்­திற்கு புகார்­கள் வந்­துள்ளன.

இதை­ய­டுத்து, ஆணை­யம், பார்தி ஏர்­டெல், ஏர்­டெல் பேமென்ட்ஸ் பேங்க் ஆகி­ய­வற்­றுக்கு, ‘நோட்­டீஸ்’ அனுப்­பி­யது.அதில், மொபைல் போன் வாடிக்­கை­யா­ள­ரின் ஒப்­பு­த­லின்றி, ஏர்­டெல் பேமென்ட் பேங்க் கணக்கு துவக்­கு­வது, சட்­ட­மீ­றல் மற்­றும் அப­ரா­தம் விதிக்­கக் கூடிய குற்­றம் என்­றும், உட­ன­டி­யாக, தகுந்த நட­வ­டிக்கை எடுத்து, அறிக்கை அனுப்­பும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இதற்கு, ‘வாடிக்­கை­யா­ள­ரின் ஒப்­பு­த­லு­டன் மட்­டுமே, வங்­கிக் கணக்கு துவக்­கப்­ப­டு­கிறது. சட்ட விதி­க­ளின்­படி, வாடிக்­கை­யா­ள­ருக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தி, வெளிப்­ப­டை­யான செயல்­பா­டு­களை தொடர்ந்து மேற்­கொள்­வோம்’ என, பார்தி ஏர்­டெல் மற்­றும் ஏர்­டெல் பேமென்ட் பேங்க் பதில் கடி­தம் அனுப்பி உள்ளன.
திருப்பதி பிரமோற்சவ விழா : ரேணிகுண்டாவுக்கு சிறப்பு ரயில்

பதிவு செய்த நாள்23செப்
2017
00:01


சென்னை: திருப்பதி பிரமோற்சவ விழாவையொட்டி, அரக்கோணம் - ரேணிகுண்டா; சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே, இன்று முதல், அக்., 2 வரை, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

l அரக்கோணத்தில் இருந்து, மாலை, 3:00க்கு புறப்படும் ரயில், மாலை, 5:00 மணிக்கு, ஆந்திரமாநிலம், ரேணிகுண்டா சென்றடையும். திருத்தணி, ஏகாம்பரகுப்பம் மற்றும் புத்துார் நிலையங்களில் நின்று செல்லும்

l ரேணிகுண்டாவில் இருந்து, மாலை, 5:35க்கு புறப்படும் ரயில், இரவு, 9:00 மணிக்கு, சென்னை கடற்கரை சென்றடையும். புத்துார், ஏகாம்பரகுப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர் மற்றும் பெரம்பூரில் நின்று செல்லும்

l சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, பயணியர் வருகையொட்டி, தேவையான நேரங்களில், அரக்கோணத்திற்கு, தினசரி பாசஞ்சர் ரயில் இயக்கப்படும்

l சென்னை சென்ட்ரலில் இருந்து, அரக்கோணத்திற்கு, மதியம், 1:00க்கு இயக்கப்படும், விரைவு பயணியர் ரயில், பட்டாபிராம் சைடிங் நிலையத்தில் இருந்து, புறநகர் மின்சார ரயில் பாதையில் இயக்கப்படும். இதனால், இன்று முதல், அக்., 2 வரை, திருநின்றவூரில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மானாமதுரையில் மர்மக்காய்ச்சல் பரவுகிறது சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு
பதிவு செய்த நாள்22செப்
2017
23:33


மானாமதுரை மானாமதுரை ஒன்றியத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஏற்கெனவே 3 பேர் பலியான நிலையில் நேற்று ராஜகம்பீரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலியானார்.

மானாமதுரை ஒன்றியத்தில் தற்போது கடந்த 15 நாட்களாக ராஜகம்பீரம்,பீக்குளம்,காட்டுஉடைகுளம்,மேலப்பிடாவூர், கீழமேல்குடி,உட்பட பல ஊர்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் மானாமதுரை மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏ.பீக்குளம்
கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவர் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மதுரை தனியார் மருத்து
வமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.அதே போன்று காட்டு உடைகுளத்தில் 10 வயது
மருது என்ற பள்ளி மாணவனும்,65 வயது மூதாட்டி ஒருவரும் மர்மக் காய்ச்சலுக்கு பலியாயினர். 

இந்நிலையில் ராஜகம்பீரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசண்முகம் 32 மனைவி பிரியா30,என்பவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.
இறந்து போன பிரியாவிற்கு 4 மற்றும் 3 ,1வயதில் மூன்று ஆண்குழந்தைகள் உள்ளனர்.

கிராமங்களில் பரவும் மர்மக்காய்ச்சல்:

மானாமதுரை ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன.தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் கிராமங்களில் ஆங்காங்கே குப்பை அகற்றப்படுவதில்லை. சரியான வாறுகால் வசதியில்லாமல் வீடுகளின் முன்பு சாக்கடைநீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி கிராமங்களில் பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் வசதி கிடைக்காமல் பலர் அசுத்தமான நீரை பருகுவதினாலும் பலருக்கு காய்ச்சல்,வாந்தி,வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவதிக்குள்ளாகிவருகின்றனர்.இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதினால் மர்மக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.
ஆகவே மாவட்ட நிர்வாகத்தினர் மானாமதுரை ஒன்றியத்தில் காய்ச்சல் பரவி வரும் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தி தீவிரமாக பரவிவரும் மர்மகாய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று கிராம மக்களும்,சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து
வருகின்றனர்.
அசல் ஓட்டுனர் உரிமம் மறந்தால் சிறையா?: ஐகோர்ட் கேள்வி

பதிவு செய்த நாள்23செப்
2017
04:33



சென்னை: 'அசல் ஓட்டுனர் உரிமத்தை மறந்து வைத்து விட்டாலும், சிறை தண்டனை விதிப்பது சரியா?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

உத்தரவு:

வாகனங்களை ஓட்டுபவர்கள், அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என, தமிழக போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்தது. அதை தொடர்ந்து, 'ஓட்டுனர் உரிமம் இல்லாமல், வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு, அபராதம் அல்லது மூன்று மாத சிறை தண்டனை விதிக்க, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி.,யின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விசாரணை:

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், ஆஜரான வழக்கறிஞர்கள் சுப்ரமணியன், கோவிந்தராமன், 'அசல் உரிமம் இல்லை என்றால், சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க, சட்டத்தில் இடமில்லை. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்' என, கோரினர்

தண்டனை சரியல்ல

அதற்கு, தலைமைநீதிபதி, ''வாகனங்கள் ஓட்டும் போது, அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும். உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்பது வேறு; ஓட்டுனர் உரிமம் இல்லாமல், வாகனத்தை ஓட்டுவது என்பது வேறு. ''இந்த வேறுபாட்டை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. அதற்காக, ஒருவர், உரிமத்தை எடுத்து வர மறந்து விட்டால், சிறை தண்டனை என்பது சரியல்ல,'' என்றார். பின், விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது.
திருமண மோசடி செய்யும் என்.ஆர்.ஐ.,பாஸ்போர்ட்...மத்திய அரசுக்கு
உயர்நிலை நிபுணர் குழு பரிந்துரை


புதுடில்லி: 'என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களை திருமணம் செய்து பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், என்.ஆர்.ஐ.,யின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யலாம்' என, மத்திய அரசுக்கு உயர்நிலை நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.



'திருமணத்துக்கு பின் மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதில்லை; அங்கு அவர்களை கொடுமைபடுத்துகின்றனர்' என, என்.ஆர்.ஐ.,க்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருகின்றன.தேசிய பெண்கள் ஆணையத்தின் தகவலின்படி, 2014ல் மட்டும், என்.ஆர்.ஐ.,க்களை திருமணம் செய்த பெண்கள், 346 புகார்களை அளித்துள்ளனர்.

இதை தடுக்கவும், பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவும், மத்திய வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜும், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர், மேனகாவும் இணைந்து, ஒரு குழுவை அமைத்தனர்.

ஓய்வு பெற்ற நீதிபதியும், பஞ்சாப் மாநில, என்.ஆர்.ஐ., கமிஷன் முன்னாள் தலைவருமான, அரவிந்த் குமார் கோயல் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது;

இந்தக் குழு, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது. அதனடிப்படையில், மத்திய அரசக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.

நிபுணர் குழு பரிந்துரைகள் குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:பாதிக்கப்படும் பெண்கள் அளிக்கும் புகாரின் அடிப்படை யில்,சம்பந்தபட்ட, என்.ஆர்.ஐ., யின் பாஸ்போர்ட் முடக்கப்படுவதன் மூலம், விரைவாக நீதி கிடைக்க வாய்ப்புள்ளது. பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ், என்.ஆர்.ஐ., மீது எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் அல்லது கோர்ட் உத்தரவு கிடைத்தால், அவரை நாடு கடத்தும் நடவடிக்கையை எடுக்க முடியும்.

ஆனாலும், இது குறித்து விழிப்புணர்வு இல்லாதது மற்றும் மிகவும் சிக்கலான நடைமுறைகளால், இதை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையையும், நாடு கடத்தும் சட்டப் பிரிவு களில் சேர்க்க வேண்டும்; இதன் மூலம், இந்தக் குற்றங்களை செய்வோரை நாடு கடத்தி வந்து, அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
வெளிநாட்டில் உள்ள பெண், அங்கு வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் நிதியுதவியை, 1.8 லட்சம்ரூபாயில் இருந்து, 3.6 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு பல பரிந்துரைகளை, உயர்நிலை நிபுணர் குழு வழங்கியுள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு, சட்ட வடிவம் கொடுக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமண பதிவு கட்டாயம்:

மத்திய அரசு நியமித்து உள்ள உயர்நிலை நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் கூறப்பட்டு உள்ளதாவது: திருமணம் செய்து ஏமாற்றுவது உள்ளிட்டவற்றை தடுக்கவும், உடனடி நடவடிக்கை எடுக்கவும், என்.ஆர்.ஐ., திருமணத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு சட்டம் நிறைவேற்றுவதற்கு முன், மாநில அரசுகள் அதை செயல்படுத்தலாம்.

திருமணப் பதிவின்போது, என்.ஆர்.ஐ.,க்களின் பாஸ்போர்ட் விபரம், சமூக பாதுகாப்பு எண், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முகவரிகள் ஆகியவற்றை குறிப்பிடுவதை கட்டாயமாக்க வேண்டும். பஞ்சாபில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

தேசிய பெண்கள் ஆணையத்தைத் தவிர, என்.ஆர்.ஐ., திருமண பிரச்னையை கவனிக்க, உள்துறை, வெளியுறவு, பெண்கள் வளர்ச்சி துறைகள் இணைந்த ஒரு குழுவை அமைக்க வேண்டும்.இவ்வாறு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

Thursday, September 21, 2017

Chennai to get new world-class airport in five years and a fancy aero-city around it


By Express News Service  |   Published: 20th September 2017 09:13 PM  |  
For representational purposes (File | EPS)
CHENNAI: Chennai is all set to go hip, with a new Greenfield world-class airport, and a Gurgaon like aero-city developed around it.  All this in just five years, according to plans revealed by the Centre.
The Centre on Wednesday said it was working with the state government on firming up plans for a second airport in Chennai and creating urban development around it.
Union Minister of State for Civil Aviation Jayant Sinha told reporters that efforts were on to acquire 1,000 to 2,000 acres of land to develop a world-class airport from scratch, and make Chennai a global hub for aviation.
The minister said the aero-city would be developed on the lines of Gurgaon with globally-advanced facilities. He also said the new airport would be built within next five years as Chennai airport would have attained saturation by then.
What happens then to existing plans for expanding the present Arignar Anna International Terminal? Asked about this, the minister said work was progressing and bids for building new terminals as part of Phase II expansion of Chennai airport will be floated in January next year.
“From the date of bidding, it will take 24 to 36 months to complete the entire second phase of Chennai airport expansion,” he said.
Expansion work is likely to cost more than Rs 2,000 crore, and would include walkators (like an escalator on a flat surface) within and connecting terminals, like in several new airports where distances between gates are too long to walk.
The minister, who was in the city to inaugurate the opening of air services from Chennai to Mysuru, said the first phase of regional connectivity scheme has been a success with large players like Indigo, Jet Airways and Spicejet wanting to take part in the bids under the second phase.
“There are 400 airstrips in India and under the first phase, we are planning to open 100 of them. So we still have 300 more airstrips to be opened,” he said.
The minister also revealed that he was looking into suggestions of having more international flights to Coimbatore and Tiruchy and improved services to Madurai.
Trujet connects second rung cities
Hyderbad based low-cost airline Trujet began operations from Chennai to Mysuru under the regional connectivity scheme with more than 49 passengers boarding the flight from Chennai on Wednesday. “The inaugural price is Rs 1,000 while normal fare for booking of first 35 seats would be Rs 2,000. The maximum fare will be Rs 3,000,” said the managing director of Trujet V Mahesh.
“We will be starting operations from Salem under the regional connectivity scheme from November first week,” said Mahesh. Trujet will also be launching a service from Thoothkudi to Chennai on November, which does not come under the regional connectivity scheme.
Was Tamil Nadu's NEET Ordinance not even read by Union Health Ministry?

By Thinakaran Rajamani | Express News Service | Published: 20th September 2017 02:17 AM |

Last Updated: 20th September 2017 09:22 AM

MADURAI: When Attorney General KK Venugopal reversed his own position and trashed Tamil Nadu’s NEET exemption Ordinance, he did so after being asked to take a relook by the Union Health Ministry, which provided him what was reported as additional facts and past judgments of the apex court.

However, as information obtained under RTI reveals, the ministry had not even received the Ordinance, much less discussed it, before prodding Venugopal to reconsider his stand.

To put this in perspective, the information that Venugopal had reversed his stand appeared in the media on August 21. The next day, the apex court made NEET mandatory, for even TN. However, according to its own admission, the Health Ministry received a copy of the Ordinance from the Home Ministry only on August 23.

“There was no meeting held in this regard,” said the chief public information officer of the Union Health Ministry, in reply to request from this correspondent under RTI, seeking minutes of the meeting, if any. “It is painful to know that the ministry was adamant about rejecting the Ordinance without even holding a discussion,” said a senior health department official here, who spent long hours in pursuit of the sanction from the Centre.

After TN forwarded the copy of the Ordinance to the Union Home Ministry on August 14 seeking sanction to proceed, it was referred to the HRD and law ministries. When the latter sought his opinion, Venugopal had given positive response, which buoyed the mood back in Tamil Nadu. However, when it was the turn of Health Ministry, it reportedly asked the A-G to reconsider the position. “The ministry was reluctant to approve the Ordinance even after the two other ministries had cleared it,” said the TN official.

The State submitted the Ordinance only after the Union minister Nirmala Sitharaman said that the Centre would cooperate, the official pointed out. “When an Ordinance is unanimously adopted by a State, it should be respected by the ministries concerned at the Centre,” he added.

Anna University VC appointment: Madras HC upholds appointment of member in search committee


By PTI  |   Published: 20th September 2017 11:30 PM  |  
Last Updated: 20th September 2017 11:30 PM   
Anna University Building, Guindy (File | EPS)
CHENNAI: The Madras High Court today upheld the appointment of Anantha Padmanabhan as a member of the search committee to select the vice chancellor of Anna University.
"We find no illegality in the appointment of Anantha Padmanabhan as a member of the search committee," the first bench of Chief Justice Indira Banerjee and Justice M Sundar said as it dismissed the petition by Students Federation of India (SFI) assailing his inclusion.
Yesterday the court was informed by state Advocate General Vijay Narayan that former Chief Justice of India R M Lodha, who heads the search committee, has decided to quit, as inclusion of Padmanabhan in the committee has been assailed in the court.
The court declined to accept the contentions of the counsel for SFI that Padmanabhan was holding the post of Professor of Eminence in the university when he was nominated as a committee member, which is against the bye-laws.
He is also a research supervisor in the university, they contended.
Yesterday the court had raised doubts about the authenticity of the resignation letter of Padmanabhan, as it found two such letters in the case documents, one with an official stamp and other on a plain paper.
The Advocate General then informed the court that he will produce all the records on the resignation of Padmanabhan as the Professor of Eminence in the university.
When the PIL was taken up for hearing today, the advocate general produced the original copies of the letter.
The court said he has resigned from the post of Professor of Eminence before being nominated to the search committee.
The research supervisor post is one without any remuneration, the bench said.

PONDY OFFICIALS

BUS STRIKE

KLE varsity ‘cleanest in South India’

The inspection was conducted by HRD Ministry

The Union government has selected the KLE University campus here as the fourth cleanest in the country, and the cleanest in South India.
This includes the university’s campus and those of Jawaharlal Nehru Medical College and other constituent colleges in Belagavi. The contest was organised by the Union Ministry of Human Resource Development.
HRD Minister Prakash Javadekar presented the award to KLE University in New Delhi recently, said KLE Society chairman and university Chancellor Prabhakar Kore. The first three slots went to institutions in Rajasthan, Haryana and Himachal Pradesh.
Of the over 3,000 university and college campuses in the country, KLE University was listed among the best 174. A high-level committee inspected the 174 campuses.
The campuses were inspected on yardsticks such as repeated cleaning, extent of green cover, cleanliness in the kitchen, functioning drainage and sewage systems, solid waste management, availability, optimal utilisation, and recycling of water, both on campus and in hostels on the premises.
Inspired by this, KLE University is set to organise a competition among its 300-odd institutions in and around Belagavi for maintaining cleanliness.

Private medical colleges searched

Search team seized documents relating to admission

Sleuths from the Central Bureau of Investigation (CBI) conducted searches in deemed universities and private medical colleges regarding certain alleged irregularities in admission of students.
The team searched the premises of the institutes and seized certain documents relating to admission and collected details of students who were admitted.
However, it is not clear whether the CBI search is related to alleged irregularities in the admission process for this year or the previous year.
The Medical Council of India (MCI) had directed the territorial administration to discharge around 770 MBBS students who were not admitted through the Centralised Admission Committee (Centac) in deemed universities and in the self-financing private medical colleges for the academic year 2016-17.
The Madras High Court stayed the directive of the MCI on writ petitions filed by a batch of 91 affected students.

கடைசியில் எனது 33 வருட கனவு நிறைவேறியது: குஷ்பூ!


By சரோஜினி  |   Published on : 20th September 2017 03:16 PM  |
khushbu_sundharmmm

 

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலுமாகக் கூட குஷ்பூ சுந்தரைத் தெரியாதவர்கள் யாருமிருக்க முடியாது. அந்த அளவுக்கு குஷ்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, இந்தி, மராத்தி என அத்தனை மொழிப்படங்களிலும் நடித்திருப்பதோடு தற்போது அரசியல்ரீதியாகவும் அகில இந்திய காங்கிரஸின் பிரபலமான அடையாளங்களில் ஒருவராக இருப்பதால் குஷ்பூவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகம். அது மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு ரசிகர்கள் கோயில் கட்டினார்கள் என்றால் அது குஷ்பூவுக்காகத் தான். இப்படி தன்னைச் சுற்றியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களைக் கொண்டவரான குஷ்பு யாருடைய பரம ரசிகர் தெரியுமா? அதை, தான் நடிக்க வந்தது முதல் இன்று வரை தனது பல நேர்காணல்களிலும் குஷ்பூவே பெருமை பொங்கப் பலமுறை கூறியிருக்கிறார். 
அப்படி குஷ்பூவின் மனதை மொத்தமாகக் குத்தகை எடுத்துக் கொண்ட நபர், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தான். குஷ்புவின் பள்ளிக் காலத்தில் அவரது மனம் கவர்ந்த ஹீரோ என்றால் அது ரவி சாஸ்திரி மட்டுமே. சாஸ்த்ரியின் மேல் அப்படியொரு தீராக் காதலில் இருந்தார் குஷ்பு. பிடித்த கிரிக்கெட்டர் என்பதற்காக, குஷ்பு ஒன்றும் உடனடியாக அவரைச் சந்தித்து விடவில்லை. அதற்கு சூழலை முன்னிட்டுப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் கடந்த வாரம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள ரவி சாஸ்திரி வந்தது தெரிந்ததும், குஷ்பூ ஒரேயடியாகக் குளிர்ந்து போனார். அதோடு மட்டுமல்லாமல் உடனடியாகக் கிளம்பிச் சென்று போட்டியை ரசித்து விட்டு, தனக்குப் பிரியமான ஹீரோவான ரவி சாஸ்த்திரியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய கையோடு புகைப்படமும் எடுத்து, அதை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
அதனால குஷ்பூ இப்போ ரொம்ப, ரொம்ப ஹேப்பி!

கமல் அரசியல்: எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுப்பும் சில கேள்விகள்!


By எழில்  |   Published on : 20th September 2017 03:55 PM  |
kamal21
Ads by Kiosked

கடந்த சில வாரங்களாக தனது அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார் கமல். இந்நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, கமல் அரசியல் - சில கேள்விகள் என்கிற தலைப்பில் தனது இணையத்தளத்தில் சில பதிவுகளை எழுதியுள்ளார். அவற்றின் தொகுப்பு:
கமல் அரசியல் – சில கேள்விகள்
இப்போதுதான் கொஞ்ச நேரம் முன்பு நீங்கள் ஏன் கமலுக்கு இத்தனை எதிர்ப்பாக இருக்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர். தயவுசெய்து நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பாருங்கள். கமல் பிக் பாஸ் வீட்டுக்குள் போனதும் அங்கிருந்த ஒரே ஒரு பெண்ணைத் தவிர மற்ற அனைவரும் அவர் காலில் விழுகிறார்கள். அதிலும் சிநேகன் விட்டால் அப்படியே தரையிலேயே படுத்துக் கிடப்பார் போல் இருக்கிறது. அந்தக் காலத்தில் ராஜாக்கள் ஆட்சியில் அடிமைகள் எப்படி உடலை வளைப்பார்களோ, மந்திரிகள் மந்திரி சபையில் எப்படி உடம்பை வளைப்பார்களோ அப்படி வளைக்கிறார் சிநேகம். பார்க்கவே அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இருக்கிறது. இது ஏன் கமலுக்கு அசிங்கமாக இல்லை. ஜெயலலிதாவின் முன்னால் அம்பது மந்திரிகளும் கூழைக் கும்பிடு போட்டார்களே, அதேபோல் அத்தனை பேரும் அவர் காலில் விழுந்து கூழைக் கும்பிடு போடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை நாலு கோடி பேர் – இப்போது ஓவியா போன பிறகு ஒன்றரை கோடி பேர் – பார்க்கிறார்கள் என்பது கமலுக்குத் தெரியாதா? இத்தனை படித்தவருக்கு இது ஒரு அசிங்கம் ஆபாசம் என்று தெரியவில்லையா? ஜெயலலிதாவுக்குக் கூழைக் கும்பிடு போட்டால் அசிங்கம். தனக்குப் போட்டால் ஜாலியா? என்னய்யா நியாயம் இது? இத்தனைக்கும் இவர் பகுத்தறிவுப் பகலவர் வேறு? பகுத்தறிவுக்காரர்கள்தானே தன்மானம் சுயமரியாதை எல்லாம் பேசினவர்கள்? இத்தனை பேர் கமலுக்கு முன்னால் சுயமரியாதையே இல்லாமல் காலில் விழுகிறார்கள். இதை கமல் எப்படி அனுமதிக்கிறார்? காலில் விழுந்தால் அந்த நிமிடமே தகுதி நீக்கம் செய்யப்படும் என்று பிக்பாஸை விட்டு அறிவிப்புக் கொடுத்தால் யாராவது இப்படிக் காலில் விழுவார்களா?
பொதுவாகவே சினிமாக்காரர்கள் தங்களைக் கடவுளாக நினைத்திருக்கிறார்கள். அவர்களை அப்படி நினைக்க வைப்பது பொதுஜனம். நடிகர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித் தங்களைக் கடவுள்களாக சூப்பர் மேன்களாக நினைக்கும் சினிமாக்காரர்களுக்கு அந்தக் காரணத்தினாலேயே அரசியலுக்கு வரும் தகுதி இல்லாமல் போகிறது. அதில் முதலில் வருபவர் கமல்.
என்றைக்காவது, கமல் அவர் வாழ்நாளில் மற்றவர் பேசுவதை ஐந்தே ஐந்து நிமிடம் காது கொடுத்துக் கேட்டிருக்கிறாரா? இதை நான் கமலின் மனசாட்சியிடம் கேட்கிறேன். அஞ்சு வயதில் அம்மா பேசுவதைக் கேட்டேன் என்று சொல்லக் கூடாது. கடந்த இருபது ஆண்டுகளில் அவர் என்றைக்காவது ஒரு நாளாவது ஒரு தருணத்திலாவது அஞ்சே அஞ்சு நிமிடம் மற்றவர் பேசுவதைக் கேட்டிருக்கிறாரா? மனசாட்சியைத் தொட்டு அவர் இதற்கு மட்டும் பதில் சொல்லட்டும். நான் கேள்விப்பட்டவரை அவர் ஆறு மணி நேரம் கூடப் பேசுவார். மற்றவர் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட குணநலன் கொண்ட ஒருவர் அரசியலுக்கு எப்படி வர முடியும்?
மேலும், மோடி பற்றிய அவரது அரசியல் பார்வை என்ன? பண நோட்டுக்களைக் காணாமல் ஆக்கி கோடானுகோடி மக்களை நடுத்தெருவில் நிற்கவைத்தாரே மோடி, அது பற்றி கமல் கருத்து என்ன?
மாட்டை இழுத்துக் கொண்டு போனவரெல்லாம் கொலை செய்யப்பட்டார்களே, அது பற்றி கமல் கருத்து என்ன? மோடியின் மாடு பாலிடிக்ஸ் பற்றி கமல் என்ன கருதுகிறார்?
சினிமாவில் ஆரம்பத்தில் தேசிய கீதம் போடுவது பற்றி கமல் கருத்து என்ன?
அடுத்த ஆட்சி, திமுக. அந்த வாக்குகளைப் பிரித்து, திரும்பவும் அதிமுகவின் பொம்மை ஆட்சி வருவதற்காக, மற்றும் பாஜகவை தமிழகத்தில் பலப்படுத்துவதற்காக மோடி போட்ட திட்டமே கமலின் அரசியல் எண்ட்ரி என்று பலர் நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன். இது பற்றி கமல் கருத்து என்ன? நான் சொல்வது தவறாக இருந்தால் உங்கள் வாதத்தைச் சொல்லுங்கள். நான் ஏற்க முயல்கிறேன்.
கமல் ரஜினியை அழைக்கும் காரணம், ரஜினி மோடியின் காவி ஏஜெண்ட். கமல் மோடியின் கருப்புச் சட்டை ஏஜெண்ட். இதுவும் தவறு என்றால் என் கருத்தை மாற்றுங்கள். உங்களை ஒப்புக் கொள்ள முயல்கிறேன்.
*
அன்புள்ள நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு,
வணக்கம்.  
மேலே கண்ட குறிப்பு கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும். ஆனால் சில விஷயங்களை இப்போதாவது வெளிப்படையாகப் பேசியாக வேண்டியுள்ளது. பொதுவாக என் கட்டுரைகளையும் முகநூல் குறிப்புகளையும் பற்றி உடனுக்குடன் கருத்து தெரிவிக்கும் நண்பர் மேற்கண்ட குறிப்பு பற்றி வாயே திறக்கவில்லை. என்ன விஷயம் என்று கேட்ட போது, இதில் ஒன்றும் பெரிதாக இல்லை என்றார். ஆனால் நான் சொன்னேன், பெரிதான விஷயம் என்று.  புகழின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் கமல் போன்ற ஒருவரை விமர்சிப்பதன் மூலம் கமலையும், சினிமாவில் கமலைச் சார்ந்திருக்கும் அத்தனை பேரையும் நான் பகைத்துக் கொள்பவன் ஆகிறேன். இது ரிஸ்க் இல்லையா, இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் அவலமான அரசியல் நிலை பற்றி எழுதுவதற்கு இந்த ரிஸ்கைப் பற்றியெல்லாம் யோசிக்க முடியுமா என்று நண்பரிடம் கேட்டேன். இனிமேல் பொது இடங்களில் தங்களிடம் கை குலுக்கித் தங்களுக்கு தர்மசங்கடத்தை உண்டு பண்ண மாட்டேன். கவலை வேண்டாம். தனிப்பட்ட விருப்பு வெறுப்பை விட சமூக நலன் இப்போது எனக்கு மேலானதாகப் படுகிறது.
தமிழ்நாட்டு அரசியலை வாங்கு வாங்கு என்று வாங்கும் நீங்கள் இந்திய அரசியல் நிலவரம் பற்றி ஏன் வாயே திறக்க மாட்டேன் என்கிறீர்கள்? உலகம் பூராவிலும் உள்ள அத்தனை புத்திஜீவிகளும் கவலைப்படுகிறார்கள். எழுதுகிறார்கள்.  நியூயார்க் டைம்ஸிலிருந்து நம் கடலூரில் வரும் லோக்கல் தமிழ் தினசரி வரை இந்தியா இப்போது போய்க் கொண்டிருக்கும் சர்வாதிகார அரசியல் பற்றித் தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
காரைக்குடி ரெயில் நிலையம் முன்பு மழைநீர் குளம்போல் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் பயணிகள் கோரிக்கை


காரைக்குடி ரெயில் நிலையம் முன்பு மழைக்காலங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செப்டம்பர் 20, 2017, 04:45 AM

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலா தலமாக விளங்குவது காரைக்குடி. இங்குள்ள ரெயில் நிலையம் ஜங்‌ஷன் அந்தஸ்து பெற்ற ரெயில் நிலையமாக இருந்து வருகிறது. காரைக்குடி ரெயில் வழித்தடத்தில் 10–க்கும் மேற்பட்ட ரெயில்களும், வாராந்திர மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் சென்று வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது காரைக்குடி–பட்டுக்கோட்டை இடையே அகல ரெயில் பாதை பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் மீண்டும் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து நடைபெற உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காரைக்குடி ரெயில் நிலையம் கடந்த 2007–ம் ஆண்டு நவீன மையமாக்கப்பட்டு தற்போது புதிதாக காட்சியளிக்கிறது. மேலும் ரெயில் நிலையம் முன்பு அழகிய வேலைப்பாடுகள், டிஜிட்டல் அறிவிப்பு போர்டுகள் உள்ளிட்ட வசதிகளும், ரெயில் நிலையத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் சமீப காலமாக மழை பெய்யும்போது காரைக்குடி ரெயில் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பது வழக்கமாகி வருகிறது. போதிய வடிகால் அமைக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ரெயில் நிலையம் முன்பு மழைநீர் குளம்போல் தேங்குவதால், அங்கு பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் தேங்கிய மழைநீர் நாளடைவில் சாக்கடை நீராக மாறி, நோய் பரப்பி வருகிறது. மேலும் தண்ணீர் தேங்குவதால், அங்கு பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்கள் சேதமடையும் நிலையும் உள்ளது.

இதுபோக காரைக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதை உள்பகுதியிலும் இந்த மழைநீர் அப்படியே குளம்போல் தேங்கி நிற்பதால், அவ்வழியாக வாகன போக்குவரத்து செய்யமுடியாமல் போகிறது. எனவே ரெயில் நிலையம் முன்பு தேங்கும் மழைநீர் வெளியேறும் வகையில் குழாய் பதித்து தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியும் என்று சமூக ஆர்வலர்கள், ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட செய்திகள்

புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 449 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது


உலகத்தில் உள்ள முஸ்லிம்கள், தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள்.

செப்டம்பர் 21, 2017, 04:30 AM


ஆலந்தூர்,


இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 4 குழந்தைகள் உள்பட 3,444 பேர் சென்றனர். புனித ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் சென்னையில் இருந்து கடந்த மாதம் 12–ந் தேதி சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டு சென்றது.

இந்தநிலையில் புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியாவில் இருந்து முதல் விமானம் 222 பெண்கள் உள்பட 449 பேருடன் நேற்று சென்னை திரும்பி வந்தது.

புனித ஹஜ் பயணம் முடிந்து சென்னை திரும்பிய ஹாஜிகளை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், ஹஜ் கமிட்டி செயல் அலுவலர் முகமது நசிமுத்தீன், தமிழக அரசு சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர்.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் கூறுகையில், ‘‘ஹஜ் பயணிகள், எந்தவித சிரமமும் இன்றி தங்கள் கடமையை நிறைவேற்ற தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. இதற்காக ஹஜ் பயணிகள் மத்திய–மாநில அரசுகளுக்கும், ஹஜ் கமிட்டிக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இந்த பயணத்தின் போது தமிழகத்தில் இருந்து சென்ற 11 பேர் வயது முதிர்வு காரணமாக இறந்து உள்ளனர்’’ என்றார்.
உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்; பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 248 பேர் பலி



மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 248 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செப்டம்பர் 21, 2017, 05:30 AM

மெக்சிகோ சிட்டி,

வட அமெரிக்க கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது மெக்சிகோ நாடு. இதன் மத்திய பகுதிகளில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் மெக்சிகோ சிட்டி, பெபுலா, மோர்லோஸ், மெக்சிகோ மாநிலம், குவரெரோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.

ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழுவினருடன், ராணுவமும் இணைந்து மீட்பு பணிகளில் இறங்கினர். அவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றக்கூடிய ராட்சத எந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் காயமடைந்தவர் களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றனர். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது.

மெக்சிகோ சிட்டியின் புறநகர் பகுதி ஒன்றில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்று இந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன. 3 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் ஏராளமான குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 21 குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து 11 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சுமார் 40 பேர் வரை அங்கு சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 20 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 1985-ம் ஆண்டுக்குப்பின் நிகழ்ந்த மிகப்பெரிய இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 248 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போர் இன்னும் முழுமையாக மீட்கப்படாததால், உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சமயபுரத்தில் 5 ஆண்டுக்கு பிறகு அங்கபிரதட்சணம் செய்ய அனுமதி
பதிவு செய்த நாள்20செப்
2017
23:44

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஐந்து ஆண்டுக்கு பிறகு இன்று முதல் அங்கபிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள பிரசித்த பெற்ற மாரியம்மன் கோவிலில், 2010ல் குடமுழுக்கு செய்வதற்கான பணிகள் துவங்கியபோது, கோவிலின் பிரகாரங்களும் சீரமைக்கப்பட்டது. இதனால், ஐந்துஆண்டுகளுக்கு மேலாக, பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்த, பிப்ரவரி, 6ம் தேதி குடமுழுக்கு நடந்து, தற்போது கோவில் பிரகாரங்கள் விரிவாக்கப் பணிகளும் முடிந்துள்ளது. இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அங்கபிரதட்சணத்துக்கு, இன்று முதல், அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

அங்கபிரதட்சணம் தினமும் காலை, 5:30 மணி முதல் காலை 9:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கபிரதட்சணம் செய்யும் பக்தருடன், ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்.

'கோவிலின் கிழக்கு ராஜகோபுர வாசலில் உள்ள கொடிமரம் முன் துவங்கி, தெற்கு, மேற்கு, வடக்கு பிரகாரம் வழியாக வந்து, கிழக்கு பிரகாரம் கொடிமரம் முன் அங்கபிரதட்சணத்தை முடித்துக் கொள்ள வேண்டும்' என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அங்கபிரதட்சணம் செய்ய வருபவர்கள் கோவில் கண்காணிப்பாளரிடம் அனுமதி சீட்டு பெற்று வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PIL In SC Seeks Painless End for Death Convicts; Suggests Shooting, Injection Or Electrocution Instead Of Hanging [Read Petition] | Live Law

PIL In SC Seeks Painless End for Death Convicts; Suggests Shooting, Injection Or Electrocution Instead Of Hanging [Read Petition] | Live Law: Holding that “dying with dignity is part of right of life”, a first-of-its-kind PIL has been filed in Supreme Court for abolishing the present practice of executing a death row convict by hanging which involves “prolonged pain and suffering” and to replace it with intravenous lethal injection, shooting, electrocution or gas chamber in which death …
Sitting, retired HC judges under scanner for MBBS admission scam

Dhananjay Mahapatra| TNN | Sep 21, 2017, 01:30 IST

HIGHLIGHTS

Investigating agencies have also lodged an FIR against two IAS officers serving in Puducherry
They headed the committee looking after admissions to medical colleges
The apex court is examining two judges of the Allahabad high court



Representative photograph

NEW DELHI: The rot in medical education has been laid bare, with the Supreme Court and probe agencies looking into the role of sitting and retired judges of HCs in enabling private medical colleges admit students to MBBS courses despite the apex court's order to the contrary.

Investigating agencies have also lodged an FIR against two IAS officers serving in Puducherry, former health secretary B R Babu and Narendra Kumar, who headed the committee looking after admissions to medical colleges, for allegedly denying admissions to deserving students and selling seats to others at "exorbitant" rates.

The apex court is examining two judges of the Allahabad high court, Justices S N Shukla and Virendra Kumar, for permitting a private medical college to admit students despite the apex court's categorical order that no HC would allow any college to fill MBBS students for academic year 2017-18.

Chief Justice Dipak Misra is learnt to have ordered the scrutiny after learning about an escalating probe by agencies into what could have led Justices Shukla and Kumar of the Lucknow bench of Allahabad HC to pass the unusual order. The CJI is understood to be contemplating "structured stringent action" against erring judges if the "unbelievable charges" were found prima facie true.

The malaise in medical education was also brought out starkly on Wednesday when CBI registered a corruption case against a retired Orissa HC judge, Ishrat Masroor Quddusi, and five others for allegedly conspiring to settle a Medical Council of India order debarring a private medical college from MBBS admissions.

TOP COMMENT   In China they shoot corrupt judges; in USA they will go to jail;Most of the civilized world at least they loose their job and pension. In India it is a qualification to the next level'' amazing super power  TPaul

Quddusi has been accused by the CBI of offering legal guidance to the promoters of the private medical college on how to get around the admission ban and even promising a favourable order from the apex court. Sources said CBI was also examining the possibility of promoters of private medical colleges enlisting him and another retired HC judge to get around the order restraining them from admitting students to the MBBS course.
4 city librarians awarded for their great service

TNN | Sep 20, 2017, 23:47 IST

Chennai: Four city librarians were awarded for great service, as part of the 125th birth anniversary function of SR Ranganathan, who is also known as 'Father of Library Science in India', on Wednesday. Organised by MOP Vaishnav College for Women in collaboration with the Tamilnadu Library Association, the event was addressed by K Malaiswamy former home secretary and state election commissioner, who urged the students to cultivate the reading habit and focus on prioritising and time management, ahead of their exams.

Lalitha Balakrishnan, principal, MOP Vaishnav College for Women, said, "It's upsetting to see that the reading habit is diminishing among students, which we want them to develop and expand. When I was in school, my librarian would ask me to read one page of the Britannica Encyclopedia every day. It was quite useful. However much you read from a Kindle or collect information from Google, the touch and feel of the book is important. We also have outside library visits organised for the students."

G Krishnamoorthy, library director, Anna University, received the award for the best university librarian; K Rajkumar, librarian at Dr Ambedkar Government Arts College, received the award for the best college librarian; C Haripriya, librarian at MOP Vaishnav College for Women was awarded the best women's college librarian and S Elango, librarian, LLA Branch Library, Thiruvanmiyur, was awarded the best LLA public librarian.
உயர் சிறப்பு மருத்துவ காலியிடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
2017-09-21@ 00:55:25




புதுடெல்லி : தமிழகத்தில் காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களை நிரப்ப, 3வது கட்டமாக கலந்தாய்வு நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு (டிஎம்எச்) 1,215 இடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 192 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த இடங்களில் தற்போது மற்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் சேரலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. மருத்துவ சேவை தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) தான் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தும்’என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில், கடந்த ஆகஸ்டில் இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வை தமிழக அரசு இரு கட்டங்களாக நடத்தியது.

இந்நிலையில், உயர் சிறப்பு மருத்துவ படிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று புதிய மனு தாக்கல் செய்தது. அதில், ‘தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதில், மொத்தமுள்ள 192 இடங்களில் 99 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப 3ம் கட்டமாக கலந்தாய்வு நடத்த அவகாசம் அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, நாளை அவசர வழக்காக விசாரிக்க உள்ளது. இதே வழக்கில் நேற்று முன்தினம் 75 மருத்துவர்கள் கலந்தாய்வு நடத்த அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி மருத்துவ மேற்படிப்பு முறைகேடு : 13 பேர் மீது வழக்கு பதிவு

2017-09-20@ 19:24:31

புதுவை : புதுச்சேரியில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேடு தொடர்பாக 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நரேந்திரகுமார், பாபு, சுகாதார துறை இயக்குனர் ராமன், சென்டாக் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மாணவர்களின் புகாரை அடுத்து விசாரணை நடத்திய சிபிஐ 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூக்கில் தொங்க விடுவதை நிறுத்த கோரி மனு தாக்கல்
பதிவு செய்த நாள்20செப்
2017
23:02

புதுடில்லி: துாக்கில் தொங்கவிட்டு, மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், ரிஷி மல்ஹோத்ரா என்பவர், நேற்று தாக்கல் செய்த மனு: 'துாக்கில் தொங்க விடுவது, ஒருவர் கவுரவமாக இறக்கும் உரிமையை பறிக்கும் செயல்; அதிகபட்ச தண்டனை, குறைந்த பட்ச பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்' என, ஐ.நா., சமூக, பொருளாதார கவுன்சில் தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது. இதை மீறும் வகையில், துாக்கில் போடும்போது, கடுமையான வலியும், காயங்களும் ஏற்படுகின்றன. மரண தண்டனையை நிறைவேற்றும் முறை, எளிமையாகவும், விரைவானதாகவும் இருக்க வேண்டும்; குற்றவாளிகளின் பயத்தை அதிகரிப்பதாக இருக்க கூடாது. உடனடியாக, தன்னிலை மறந்து, மரணத்தை விரைவாக அடைய வேண்டும்; உடலை சிதைக்கக் கூடாது.

'வளர்ந்த, வளரும் நாடுகளில், துாக்கில் தொங்க விடுவதற்கு பதிலாக, விஷ ஊசி போடுவது அல்லது துப்பாக்கியால் சுடுவது ஆகியவற்றின் மூலம், மரண தண்டனையை நிறைவேற்றுவதை பின்பற்றுகின்றனர்' என, இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

எனவே, குற்றவாளிகள் அமைதியாகவும், விரைவாகவும் மரணம் அடைவதை உறுதி செய்யும் வகையில், துாக்கில் தொங்க விடுவதற்கு பதிலாக, வேறு முறையில், மரண தண்டனையை நிறைவேற்றும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மருத்துவ கல்வி இயக்குனர் நியமனம் ரத்து: ஐகோர்ட்
பதிவு செய்த நாள்20செப்
2017
22:58


மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனராக, எட்வின் ஜோவை நியமித்த, தமிழக அரசின் அரசாணையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

மதுரை, ரேவதி தாக்கல் செய்த மனு: எம்.பி.பி.எஸ்., முடித்து, தமிழ்நாடு மருத்துவ சேவை துறையில், 1987ல், பணியில் சேர்ந்தேன். மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக பணிபுரிந்தேன். தற்போது, கரூர் மருத்துவக் கல்லுாரி டீனாக உள்ளேன். 2018 பிப்., 28ல், ஓய்வு பெறுவேன். பணி மூப்பு அடிப்படையில், என்னை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க, அனைத்து தகுதிகளும் உள்ளன. கோவை மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த, எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்து, 2017 ஏப்., 25ல், தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டது. அவருக்கு போதிய தகுதிகள் இல்லை. நியமனத்தில் விதிமீறல் உள்ளது. அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க உத்தர விட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி, ஆர்.மகாதேவன் விசாரித்தார். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'தகுதியானவர்கள் பட்டியலை பரிசீலித்து, வெளிப்படை தன்மைஉடன், எட்வின் ஜோ நியமனம் நடந்தது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.

நீதிபதி: மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனத்தில் பணி மூப்பு, தகுதி, திறமையை சமமாக கருத்தில் வைத்து, பரிசீலிக்க வேண்டும். மனுதாரர், எட்வின் ஜோவை விட பணியில் மூத்தவர். மனுதாரருக்குகூடுதல் தகுதிகள் உள்ளன.

எட்வின் ஜோ நியமனத்திற்கு, அரசு தரப்பில் கூறப்படும் காரணங்கள்போதுமானதாக இல்லை. எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த, அரசாணையை ரத்து செய்கிறேன். ரேவதிக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு

பதிவு செய்த நாள்20செப்
2017
22:45

புதுடில்லி: ஊழல் வழக்கில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

ஒடிசாவில், பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த, நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும், பிரபல தனியார் மருத்துவ கல்லுாரியில், போதிய வசதிகள் இல்லாததால், அந்த கல்லுாரியில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை எதிர்த்து, கல்லுாரி நிர்வாகத்தின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கில், கல்லுாரி நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வர உதவி செய்வதாகக் கூறி, அம்மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, இஸ்ரத் மஸ்ரூர், ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று, இஸ்ரத் மஸ்ரூர் மற்றும் கல்லுாரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரின் வீடுகளில் சோதனை நடத்தினர். 

இந்த சோனையின் போது, ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, இஸ்ரத் மஸ்ரூர் உட்பட, ஐந்து பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
ஐ.ஆர்.சி.டி.சி., ஊழல் : ரப்ரி தேவிக்கு, 'சம்மன்'
பதிவு செய்த நாள்20செப்
2017
20:41

புதுடில்லி: ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான, ரப்ரி தேவிக்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பி உள்ளது. பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஐ.ஆர்.சி.டி.சி.,யில் நடந்த ஊழல் தொடர்பாக, அவரிடமும், அவர் மகன் தேஜஸ்வி யாதவிடமும் விசாரணை நடத்த, சி.பி.ஐ., நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

. இந்த ஊழல் விவகாரம் குறித்து, ரப்ரி தேவியிடம் விசாரணை நடத்த, அமலாக்கத்துறை, நேற்று, 'சம்மன்' அனுப்பி உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., முன்னாள் உயரதிகாரி உட்பட மேலும் இருவருக்கும், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது; இவர்களிடம், அடுத்த வாரம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக, அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐ.ஆர்.சி.டி.சி.,யில், ஓட்டல் நடத்துதல், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்க, பீஹார் தலைநகர் பாட்னாவில், மூன்று ஏக்கர் நிலம், லஞ்ச மாக வழங்கப்பட்டதாகவும், அந்த இடம், தேஜஸ்வி, ரப்ரி தேவி பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
6 வங்கி காசோலைகளை பயன்படுத்த எஸ்.பி.ஐ., தடை
பதிவு செய்த நாள்21செப்
2017
00:35


புதுடில்லி : எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா வங்கி, தன்­னு­டன் இணைந்த, ஆறு துணை வங்­கி­களின் காசோலை புத்­த­கங்­களை, வாடிக்­கை­யா­ளர்­கள் பயன்­ப­டுத்த வேண்­டாம் என, கேட்­டுக் கொண்­டுள்­ளது.

எஸ்.பி.ஐ., உடன், ஸ்டேட் பேங்க் ஆப் பிகா­னிர் அண்டு ஜெய்ப்­பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் திரு­வாங்­கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்­டி­யாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஐத­ரா­பாத், பார­திய மகிளா வங்கி ஆகிய ஆறு துணை வங்­கி­கள், ஏப்., 1ல் இணைந்­தன. இதை­ய­டுத்து, இந்த ஆறு வங்­கி­களின் வாடிக்­கை­யா­ளர்­கள், அதே வங்­கிக் கணக்கு எண்­க­ளு­டன், எஸ்.பி.ஐ., வாடிக்­கை­யா­ளர்­க­ளாக மாறி­னர்.

இந்­நி­லை­யில், எஸ்.பி.ஐ., வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், ‘எஸ்.பி.ஐ., உடன் இணைந்த, ஆறு துணை வங்­கி­களின் காசோலை புத்­த­கங்­களை, வாடிக்­கை­யா­ளர்­கள், செப்., 30 முதல் பயன்­ப­டுத்த வேண்­டாம்’ என, கூறப்­பட்­டுள்­ளது. ஏப்­ர­லில், வங்கி கணக்­கில் மாத சரா­சரி இருப்பு தொகையை பரா­ம­ரிக்­காத வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, எஸ்.பி.ஐ., அப­ரா­தம் விதித்­தது.

இது பற்றி, எஸ்.பி.ஐ., தேசிய வங்கி குழு­வின் நிர்­வாக இயக்­கு­னர் ரஜ்­னிஷ் குமார் கூறு­கை­யில், ‘‘வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் இருந்து, அப­ரா­தம் குறித்து நிறைய புகார்­கள் வரு­கின்றன. இதை, பரி­சீ­லித்து வரு­கி­றோம்,’’ என்­றார்
அமெரிக்காவில் இந்திய அறுசுவை உணவு
பதிவு செய்த நாள்
செப் 19,2017 18:26

அமெரிக்கா, மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள இந்திய பாரம்பரிய உணவு விடுதியான தர்பார், பல்வேறு வகையான இந்திய சைவ உணவு வகைகள், சிற்றுண்டிகள், தந்தூரி ரகங்கள், அசைவ உணவு வகைகள், பல்வேறு சாத வகைகள், சூப், ஐஸ்கிரீம், ஊறுகாய், அப்பளம் போன்றவை கிடைக்கும்.

முகவரி: 152 ஈ 46வது தெரு, மிட் டவுன், மன்ஹாட்டன், நியூயார்க்
போன்: (212) 681- 4500

திறந்திருக்கும் நேரம்: பகல் 11:30 முதல் இரவு 11:30
இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!
பதிவு செய்த நாள்21செப்
2017
00:18




எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு, அருகிலுள்ள கடையில் மட்டும் தான், இந்த பொருட்களை வாங்க முடியும்.

ரூ.5,400 கோடி

வீடு மாறி செல்வோர், அந்த விபரத்தை, உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் தெரிவித்து, முகவரி மாற்றம் செய்ய வேண்டும். அங்கு தரும் சான்றை, புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கி, பொருட்களை வாங்க முடியும்.

இந்நிலையில், எந்த ரேஷன் கடையிலும், உணவுப் பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உணவு மானியத்திற்காக, தமிழக அரசு, 5,400 கோடி ரூபாய் செலவிடுகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் செய்யும் முறைகேடுகளால், ரேஷன் பொருட்கள், முழுமையாக மக்களை சென்றடையவில்லை. இதற்கு, காகித ரேஷன் கார்டு, பதிவேட்டில் விற்பனை விபரம் பதிவு உள்ளிட்டவை, முக்கிய காரணம்.தற்போது, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புதல், விற்பனை விபரம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு என, ரேஷன் தொடர்பான அனைத்து பணிகளும், கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.

முறைகேடுகளுக்கு முடிவு

இதனால், கன்னியாகுமரியில் உள்ள, ஒரு ரேஷன் கடையில் இருக்கும் பொருட்களின் விபரத்தை, சென்னையில் இருந்து கண்காணிக்க முடிகிறது.இன்னும், 20 லட்சம் பேருக்கு மட்டும் தான், ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டி உள்ளது. அந்த பணி முடிந்ததும், யார் வேண்டுமானாலும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டம் துவக்கப்படும். 

ஒரே மாதத்தில், இரு இடங்களில் பொருட்களை வாங்குவது உள்ளிட்ட முறைகேடுகள், இனி செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
வங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'

பதிவு செய்த நாள்20செப்
2017
23:54

சென்னை: வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.

ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனி யார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட் கள் விடுமுறை கிடைத்துள்ளது. செப்., 29 முதல் அக்.,2 வரை வங்கிகள் இயங்காது. அதனால் வாடிக்கையாளர்கள் 28ம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடித்து கொள்வது சிறந்தது. ஏற்கனவே, ஆக., 12 முதல், 15 வரை, நான்கு நாட்கள் வங்கிகளுக்கு, தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
அறுவை சிகிச்சை நிபுணர்கள் அரசு பணியில் சேர வாய்ப்பு

பதிவு செய்த நாள்20செப்
2017
20:38


சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 744 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணியிடங்களுக்கு, அக்., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசு மருத்துவமனைகளில், மயக்கவியல், உயிரி வேதியியல், தோல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட, 19 துறைகளில், 744 உதவி மருத்துவ நிபுணர்கள் இடங்கள், காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, எம்.ஆர்.பி., எனப்படும், மருத்துவ பணியாளர் தேர்வாணையம், ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கு, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம். எழுத்து, வாய்மொழி தேர்வு கிடையாது. தகுதியின் அடிப்படையில், நேர்காணல் மூலம் இடங்கள் ரப்பப்படும்.விண்ணப்பங்களை, அக்., 10க்குள் அனுப்ப வேண்டும். தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என, எம்.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
திவ்ய தரிசன 'டோக்கன்' ரத்து

பதிவு செய்த நாள்20செப்
2017
22:58

திருப்பதி: திருமலைக்கு, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு பாத யாத்திரை மார்க்கத்தில் வரும் பக்தர்களுக்கு, தினசரி, 20 ஆயிரம் திவ்ய தரிசன, 'டோக்கன்'கள் வழங்கப்படுகின்றன.

புரட்டாசி சனிக்கிழமைகளில், பாத யாத்திரையாக அதிக பக்தர்கள் வருவர்.
அதனால், புரட்டாசி முதல் சனிக்கிழமையான, செப்., 23, இரண்டாவது சனிக்கிழமையான, செப்., 30 ஆகிய நாட்களிலும், கருடசேவை நாளான, செப்., 27ம் தேதியும், பாத யாத்திரை பக்தர்களுக்கான, திவ்ய தரிசன டோக்கன் வழங்குவதை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு 'போனஸ்' அறிவிப்பு

பதிவு செய்த நாள்20செப்
2017
22:56


புதுடில்லி: ரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாள் ஊதியத்தை, போனசாக வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ரயில்வே ஊழியர்களுக்கு, மத்திய அரசு போனஸ் வழங்கி வருகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான போனஸ் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிஉள்ளது. 'கெசடட்' அந்தஸ்து பெறாத, ரயில்வே ஊழியர்களுக்கு, உற்பத்தி அடிப்படையில், 78 நாள் ஊதியத்தை, போனசாக வழங்க, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

'போனஸ் தொகை, தசரா விடுமுறைக்கு முன் வழங்கப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 12.30 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன் அடைவர். ஆர்.பி.எப்., மற்றும் ஆர்.பி.எஸ்.எப்., போலீசாருக்கு, இந்த உத்தரவு பொருந்தாது.

'ரயில்வே ஊழியர்களுக்கு, போனஸ் வழங்கப்படுவதன் மூலம், மத்திய அரசுக்கு, 2,245 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய வழித்தடங்களில் விரைவில்... மகளிருக்காக மகளிர் மட்டும்! போக்குவரத்துக் கழகம் உறுதி
பதிவு செய்த நாள்21செப்
2017
00:46




கோவை : கோவையில், 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், 'மகளிர் மட்டும் சிறப்பு பஸ்கள்' இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அப்போது இயங்கிய மகளிர் மட்டும் பஸ்களின் வழித்தட வரைபடம் மற்றும் அப்போது அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளை துாசுதட்டி வருகின்றனர், போக்குவரத்துக்கழக அதிகாரிகள்.கோவை நகரில், 217 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் பகுதியில், 127 பஸ்களும்;நகர் பகுதியில், 90 பஸ்களும் இயக்கப்படுகின்றன. புதியதாக வந்த, 49 பஸ்களில், 29 பஸ்கள் புறநகர் பகுதிக்கும், 20 பஸ்கள் கோவை நகரிலும் இயக்கப்படுகின்றன.நகர் மற்றும் புறநகர் பகுதியில் இயங்கும் அனைத்து பஸ்களையும் பராமரிக்க, கோவை நகர் மற்றும் நகரை ஒட்டிய பகுதிகளில், 15 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இவற்றில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.கடந்த, 1995 முதல் 1997ம் ஆண்டு வரை, கோவை நகரிலுள்ள ஐந்து முக்கிய வழித்தடங்களில், 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில், கண்டக்டர் மற்றும் டிரைவர் மட்டுமே ஆண்களாக இருந்தனர். பயணிகள் அனைவரும் மகளிர்.பெரிநாயக்கன்பாளையத்திலிருந்து, பீளமேடு வரையும், சிட்ராவிலிருந்து பேரூர் வரையும், ஒண்டிப்புதுாரிலிருந்து வடவள்ளிவரையும், சரவணம்பட்டியிலிருந்து காந்திபுரம் வரையும், மருதமலையிலிருந்து ஆவாரம்பாளையம் வரையும் மகளிர் மட்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த பஸ்களின் முன்னும் பின்னும் உள்ள பெயர் பலகையில், மகளிர் மட்டும் என்று எழுதப்பட்டு, வழித்தட எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.இந்த பஸ்கள் அறிமுகமான போது, குறைந்த எண்ணிக்கையிலான மகளிர் மட்டுமே பயணித்தனர். நாளடைவில் இந்த பஸ்களில் பயணிக்க இடம் கிடைப்பது அரிதானது.கோவை நகரில் நடைபெற்ற கலவரம்; குண்டுவெடிப்பு; அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்பட்ட மாற்றம்; அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் நடத்திய காலவரையற்ற போராட்டம் உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்துக் கழகம் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது.அப்போது மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கையால், மகளிர் மட்டும் சிறப்பு பஸ்கள் அனைத்தும், சாதாரண பஸ்களாக மாற்றப்பட்டன. ஒரே ஒரு வழித்தடத்தில் மட்டும் இன்றும் மகளிர் ஸ்பெஷல் பஸ்சாக இயக்கப்படுகிறது. அதுவும் காலை, மாலை இரண்டு வேளைகளில், தலா ஒரு நடை மட்டும் மகளிர் ஸ்பெஷல் பஸ்சாக இயக்கப்படுகிறது

.இந்நிலையில் தற்போது, 'ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி, கோவை நகரில் மகளிருக்காக, 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்' என, மகளிர் அமைப்புகள், மகளிர் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர் கலெக்டரிடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.இவர்களது கோரிக்கையை ஏற்று, கோவையிலுள்ள, பொள்ளாச்சி, பாலக்காடு, மருதமலை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், அவிநாசி, திருச்சி ஆகிய சாலைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவியர் பயனடையும் வகையிலும், அலுவலகம் செல்லும் மகளிர் வசதிக்காகவும், காலை மற்றும் மாலை நேரங்களில் மகளிர் மட்டும் சிறப்பு பஸ்களை விரைவில் இயக்க உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மகளிர் அமைப்பினரும், மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பணிகள் வேகமெடுக்கும்!அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பாண்டி கூறியதாவது:கடந்த, 20 ஆண்டுளுக்கு முன்பு இருந்த, 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்களின் இயக்கம் குறித்தும், அந்த பஸ்களின் வழித்தட வரைபடம் மற்றும் அப்போதைய அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகள் குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளை கொண்டு, 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான வழித்தடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வுக்குப்பின், கோவை நகரில் 'மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதற்கான பணிகள் வேகமாக துவங்கும்.இவ்வாறு பாண்டி கூறினார்.
'ஸ்டிரைக்' ஆசிரியருக்கு சம்பளம் 'கட்'
பதிவு செய்த நாள்21செப்
2017
02:21




வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது, அரசு பணியாளர் நடத்தை விதிகளில் நடவடிக்கை எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். செப்., 7 - 15 வரை, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர். அதனால், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கின.

இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, பணிக்கு வராத நாட்களுக் கான சம்பள பிடித்தம் செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.மேலும், பணிக்கு வராதவர்கள் மீது, தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 25ம் தேதிக்குள், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பவும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- நமது நிருபர் -

NEWS TODAY 21.12.2025