Saturday, September 23, 2017

திருப்பதி பிரமோற்சவ விழா : ரேணிகுண்டாவுக்கு சிறப்பு ரயில்

பதிவு செய்த நாள்23செப்
2017
00:01


சென்னை: திருப்பதி பிரமோற்சவ விழாவையொட்டி, அரக்கோணம் - ரேணிகுண்டா; சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே, இன்று முதல், அக்., 2 வரை, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

l அரக்கோணத்தில் இருந்து, மாலை, 3:00க்கு புறப்படும் ரயில், மாலை, 5:00 மணிக்கு, ஆந்திரமாநிலம், ரேணிகுண்டா சென்றடையும். திருத்தணி, ஏகாம்பரகுப்பம் மற்றும் புத்துார் நிலையங்களில் நின்று செல்லும்

l ரேணிகுண்டாவில் இருந்து, மாலை, 5:35க்கு புறப்படும் ரயில், இரவு, 9:00 மணிக்கு, சென்னை கடற்கரை சென்றடையும். புத்துார், ஏகாம்பரகுப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர் மற்றும் பெரம்பூரில் நின்று செல்லும்

l சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, பயணியர் வருகையொட்டி, தேவையான நேரங்களில், அரக்கோணத்திற்கு, தினசரி பாசஞ்சர் ரயில் இயக்கப்படும்

l சென்னை சென்ட்ரலில் இருந்து, அரக்கோணத்திற்கு, மதியம், 1:00க்கு இயக்கப்படும், விரைவு பயணியர் ரயில், பட்டாபிராம் சைடிங் நிலையத்தில் இருந்து, புறநகர் மின்சார ரயில் பாதையில் இயக்கப்படும். இதனால், இன்று முதல், அக்., 2 வரை, திருநின்றவூரில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

TN Kangeyam Government College students struggle for degree certificates even after three years

TN Kangeyam Government College students struggle for degree certificates even after three years 21.04.2025 Another student of the same batch...