Wednesday, September 27, 2017

கல்லூரி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து இன்ஜினியரிங் மாணவி தற்கொலை
2017-09-27@ 00:57:04




திண்டுக்கல்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவி, விடுதியின் மூன்றாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், கொந்தகை அருகே முனியாண்டிபுரத்தை சேர்ந்தவர் பரணிதாஸ். இவரது மகள் தாரணி (19) திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ (ஐடி) 2ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் அவர் தங்கி இருந்தார்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் விடுதியின் மூன்றாம் மாடியில் இருந்து அவர் திடீரென கீழே குதித்தார். படுகாயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தாரணி ப்ளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தாரணிக்கும், விடுதி வார்டனுக்கும் தகராறு இருந்து வந்ததாகவும் தெரிகிறது. அதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தாரணி தற்கொலை சம்பவத்தால் நேற்று கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மகள் சாவில் மர்மம்: தந்தை பரபரப்பு பேட்டி

மாணவி தாரணி மரணம் குறித்து தந்தை பரணிதாஸ் கூறும்போது, ‘‘கடந்த 25ம் தேதி இரவு 10 மணியளவில், தாரணி மற்றொருவர் செல்போனில் இருந்து எங்களிடம் பேசினார். அப்போது நன்றாக பேசியவர், இரவு சுமார் 12 மணிக்கு மீண்டும் போன் செய்து, ‘இங்கே ரொம்ப டார்ச்சர் செய்றாங்க. என்னை கூட்டிட்டு போங்க..’ என்று அழுதார். உடனே இணைப்பு ‘கட்’ ஆனது. அந்த நேரத்தில்தான் ஏதோ நடந்துள்ளது. அதன்பின் அந்த எண்ணை தொடர்பு கொண்டும், யாரும் போனை எடுக்கவில்லை. தாரணியின் உடலில் எலும்பு முறிவோ, பலத்த காயமோ இல்லை. கீழே குதித்து விட்டதாக கூறுவது பொய். அவரிடம் ேபான் இல்லாதபோது, எப்படி ப்ளூவேல் விளையாடி இருக்க முடியும்? எனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவரை யாரோ துன்புறுத்தி உள்ளனர். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி, உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும்,'' என்றார்.
இறந்த மாணவியின் கண்கள், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
தருமபுரி, சேலத்தில் பரவும் மர்மகாய்ச்சல்

2017-09-26@ 20:01:19

dinakaran

சேலம்: தருமபுரி, சேலம் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதாக தனியார் மருத்துவமனைகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிப்பதால் தொடர்ந்து நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளிகள் அதிகரிப்பால் படுக்கை வசதி செய்ய முடியாமல் தனியார் மருத்துவமனை உள்ளிட்டவை திணறி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி ஆவின் கிப்ட் ரெடி
2017-09-27@ 00:03:23

சென்னை: எட்டு வகையான ஆவின் பொருட்கள் அடங்கிய கிப்ட் பாக்சை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது. இந்த கிப்ட்பாக்சில் நெய் 200 கிராம் பாக்ஸ் 1, லாங்லைப் குலோப்ஜாமுன் 250 கிராம் பாக்ஸ் 1. ஆவின் சாக்லேட் (2 வகை ) 45 கிராம். பாதாம் மிக்ஸ் பவுடர் 200 கிராம் பாக்ஸ் 1, மாவின் 200 மி.லி.2 டெட்ரா பாக்கெட். இனிப்பு வகைகள் என 650 கிராம் எடையில் மொத்தம் 8 பொருட்கள் இந்த கிப்ட் பாக்சில் இருக்கும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள கிப்ட்பாக்சுக்கு அதிகப்பட்ச சில்லறை விலை ரூ.500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கிப்ட் பாக்ஸ் கடைகளில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து கிடைக்கும்,
தீபாவளிக்கு 4,820 சிறப்பு பஸ்கள்!
பதிவு செய்த நாள்26செப்
2017
23:52

சென்னை: ''தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து, 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

தீபாவளி சிறப்பு பஸ் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை, பல்லவன் இல்லத்தில், நேற்று நடந்தது. அதில், அமைச்சர், போக்குவரத்து துறை செயலர், டேவிதார், இணை ஆணையர், வேலுச்சாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: அடுத்த மாதம், 18ம் தேதி, தீபாவளி வருவதை முன்னிட்டு, அக்., 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களும், சென்னை மற்றும் முக்கிய மாவட்டங்களில் இருந்து, சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து வழக்கமாக, தினமும், 2,275 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

அதனுடன் சிறப்பு பஸ்களாக, 4,820 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்., 15 முதல், 17ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும், 7,095 பஸ்கள், சென்னையில் இருந்து இயக்கப்படும்.

சிறப்பு பஸ் நிலையங்கள் : சென்னையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, கடந்த ஆண்டு தீபாவளிக்கு, ஐந்து இடங்களில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, பஸ்கள் பிரித்து இயக்கப்பட்டன. இந்த ஆண்டும், கோயம்பேடு, தாம்பரம் சானிட்டோரியம், அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி, கே.கே.நகர் அல்லது கிண்டி ஆகிய இடங்களில், சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, பகுதிவாரியாக பஸ்கள் இயக்கப்படும். சென்னை மாநகருக்குள் வரும் கனரக வாகனங்கள், புறநகர் பகுதிகளில் நிறுத்தப்படும். 'ஆன்லைனில்' இதுவரை, 32 ஆயிரத்துக்கும் அதிகமான பயணியர், தீபாவளிக்காக முன்பதிவு செய்துள்ளனர்.சென்னையில், முன்பதிவு டிக்கெட்டுகள் வழங்கும் தேதியும், 'கவுன்டர்' எண்ணிக்கையும், விரைவில் அறிவிக்கப்படும்.வழக்கமான கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிக்கும், 'ஆம்னி' பஸ்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த தீபாவளிக்கு, அதிக கட்டணம் வசூலித்த, 57 பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.சென்னையில் இருந்து, மூன்று நாட்களுக்கு, தலா, 6,483 பஸ்கள் இயக்கப்பட்டன. 5.44 லட்சம் பேர் பயணித்தனர்; 1.38 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

எந்தெந்த ஊர்களுக்கு எங்கெங்கு?

= செங்குன்றம் வழியாக, ஆந்திரா செல்லும் பஸ்கள், அண்ணா நகர் மேற்கு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

= கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலுார், காஞ்சிபுரம் செல்லும் பஸ்கள், கே.கே.நகர் அல்லது கிண்டியில் இருந்து புறப்படும்

= திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக, கும்பகோணம், தஞ்சை செல்லும் பஸ்கள், தாம்பரம் சானிட்டோரியம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

= வேலுார், தர்மபுரி செல்லும் பஸ்கள், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

= தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில்
இருந்து புறப்படும்

= அனைத்து பஸ் நிலையங்களுக்கும், சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும், மாநகர பஸ்கள் இயக்கப்படும்.
ரயில்வே புது அட்டவணை மீண்டும் தள்ளிவைப்பு
பதிவு செய்த நாள்26செப்
2017
23:34

சென்னை;தெற்கு ரயில்வே, ரயில் கால அட்டவணை வெளியிடுவது, நவம்பர், 1க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே, ரயில் கால அட்டவணை ஆண்டுதோறும், அக்., 1ல் வெளியிடப்படும். 'இந்தாண்டு, அக்., 15ல் வெளியிடப்படும். அதுவரை, தற்போதைய ரயில் கால அட்டவணைப்படி, ரயில்கள் இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.தற்போது, ரயில் கால புதிய அட்டவணை வெளியீடு, நவ., 1க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான காரணம் குறித்தோ, புதிய அட்டவணை வெளியீடு குறித்தோ, ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம், அக்., 31 வரை, தற்போதைய கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே கூறி உள்ளது.





தாம்பரம் அரசு பள்ளிக்கு தூய்மைக்கான விருது
பதிவு செய்த நாள்26செப்
2017
23:16

தாம்பரம்;மாவட்ட அளவிலான துாய்மை பள்ளிக்கான விருதை, தாம்பரம் அரசுப் பள்ளி பெற்றது.தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு, துாய்மைக்கான விருது அறிவிக்கப்பட்டு, அதற்கான தேர்வு நடந்தது.மொத்தம், பங்கேற்ற, 25 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், வெற்றி பெற்ற பள்ளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பழைய தாம்பரம் பகுதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி, விருது வென்றுள்ளது.இந்த பள்ளியில் படிக்கும், 141 மாணவர்களுக்கு, சுத்தமான குடிநீர், மேற்கத்திய முறை கழிவறைகள், சோப் மற்றும் துண்டுடன் கூடிய கை கழுவுமிடம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.மொத்தம் உள்ள, 71 மாணவிகளுக்கு, கழிவறைகளில், நாப்கின் எரியூட்டி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் தரமாக செய்யப்பட்டுஉள்ளதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன் தெரிவித்தார்.பள்ளியை பாராட்டி, 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
இ - பைலிங்' செய்வோருக்கு வருமான வரித்துறை, 'அட்வைஸ்'
பதிவு செய்த நாள்26செப்
2017
22:18

வருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் தகவல், சரியாக சென்றடைவதற்காக, தனி நபர்கள், தங்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, அத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாட்டில், 2.9 கோடி பேர், வருமான வரி செலுத்துவதற்காக, 'பான் கார்டு' பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில், 60 லட்சம் பேர் மட்டுமே, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்கின்றனர். அதனால், அனைத்து தரப்பினரையும், வருமான வரி வலையில் சேர்க்க, 2017 - 18ம் நிதியாண்டில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, தாங்கள் அனுப்பும் தகவல்கள், உரிய வருமான வரி கணக்குதாரருக்கு போகிறதா என்பதை உறுதிப்படுத்த, வருமான வரித்துறை, புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரியை, http://incometaxindiaefiling.gov.in என்ற எங்கள் இணையதளத்தில், ஏராளமானோர் செலுத்துகின்றனர். ஐந்து லட்சத்திற்கு அதிக வருவாய் உடையவர்கள், அந்த இணையதளத்தில், 'இ - பைலிங்' வாயிலாக, வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயம். அவர்களில் சிலர், தங்கள் மொபைல் போன் எண் மற்றும் இ - மெயில் போன்றவற்றை அடிக்கடி மாற்றுகின்றனர். அதனால், நாங்கள் அனுப்பும் தகவல், சில சமயங்களில், அவர்களை சென்றடைவது இல்லை. அதனால், இ - பைலிங் செய்பவர்கள் அனைவரும், தங்கள் முகவரி, வங்கிக் கணக்கு, மொபைல் போன் எண், இ - மெயில் உள்ளிட்ட விபரங்களை, இணையதளத்தில், 'இ - பைலிங்' கணக்கில் பதிவு செய்ய வேண்டும்.பின், மொபைல் போனுக்கு, ஓ.டி.பி., எனும், ஒரு முறை பயன்படுத்தும், 'பாஸ்வேர்டு' அனுப்பி, தகவல்கள் சரிபார்க்கப்படும். இதன் வாயிலாக, வருமான வரி செலுத்துவோருக்கு, தகவல் சென்று சேர்வது உறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

-நமது நிருபர் -

கரூர் மருத்துவ கல்லூரி வடிவமைப்பில் மாற்றம்

பதிவு செய்த நாள்26செப்
2017
20:02

போதிய நிலம் கிடைக்காததால், கரூர் மருத்துவக் கல்லுாரியின் வடிவமைப்பில், மாற்றம் செய்யும் பணி நடக்கிறது. கரூர் மாவட்ட மருத்துவமனை, 2014ல், மருத்துவக் கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகளுக்காக, 229 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதற்கான வரைபடங்களை, பொதுப்பணித் துறை தயாரித்தது. நிலம் அடையாளம் காண்பதில் ஏற்பட்ட பிரச்னையால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது, பொதுப்பணித் துறை வசம், 20 ஏக்கருக்கு குறைவான இடமே ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே, கட்டட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது.

- நமது நிருபர் -
நவராத்திரியில் பெண் குழந்தை பிறந்தால் இலவச மருத்துவம்

பதிவு செய்த நாள்26செப்
2017
21:24

தன்பாத்: 'நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, பெண் குழந்தைகளை பிரசவிக்கும் பெண்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை' என, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முடிவு செய்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர், ரகுபர் தாஸ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

மத்திய அரசின், 'பெண் குழந்தைகளை காப்போம், பெண்களுக்கு கல்வி அளிப்போம்' பிரசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், நவராத்திரியில், பெண் குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச சிகிச்சை வழங்க, தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முடிவு செய்துஉள்ளது.

இதுகுறித்து, அந்த மருத்துவமனையின் தலைவர், டாக்டர் அகர்வால் கூறியதாவது:

நவராத்திரி துவங்குவதற்கு முதல் நாளான, செப்., 21 முதல் எங்கள் மருத்துவமனையில், பெண் குழந்தைகளைபிரசவிக்கும் பெண்களிடம்எந்த வித கட்டணமும்வசூலிக்கவில்லை.

இதுவரை, 24 பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்துள்ளோம்.
எங்கள் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு, குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய, பரிசு பெட்டி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
'ரயில் டிக்கெட்டை பரிசோதிக்க போலீசுக்கு அனுமதி இல்லை'

பதிவு செய்த நாள்26செப்
2017
21:23


புதுடில்லி: ''ரயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, பயணியரின் டிக்கெட்டை பரிசோதிக்கும் அதிகாரம் இல்லை,'' என, ரயில்வே போலீஸ் படைஇயக்குனர், தர்மேந்திர குமார் தெளிவுபடுத்தியுள்ளர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஜான்சியில், ரயிலில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணி ஒருவரை, ரயில்வே போலீசார் விரட்டி பிடிக்க முற்பட்டதால், அவர், ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரயில்வே மண்டல பொறுப்பாளர்களுக்கு, ரயில்வேபோலீஸ் படை இயக்குனர், தர்மேந்திர குமார் கடிதம்எழுதியுள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது: ரயில் பயணியரின் டிக்கெட்டை பரிசோதனை செய்வது, போலீசாரின் பணி அல்ல. ரயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே அவர்களது பணி.

இதுதொடர்பாக, ரயில்வே போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதை, மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


98 வயதில் எம்.ஏ., பட்டம் சாதனை படைத்த தாத்தா

பதிவு செய்த நாள்
செப் 26,2017 21:22



பாட்னா: பீஹாரைச் சேர்ந்த, 98 வயதாகும் ராஜ்குமார் வைஷ்யா, அதிக வயதில் முதுகலை பட்டம் பெற்றவர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.

பீஹார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்தவர், ராஜ்குமார் வைஷ்யா. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், உத்தர பிரதேசத்தின் பரேலியில் பணியாற்றினார். கடந்த, 1938ல், பி.ஏ., பட்டம் பெற்ற இவர், 1940ல், சட்டமும் முடித்தார்.முதுகலை பட்டம் பெற வேண்டும் என, நீண்டகாலமாக ஆசைப்பட்டு வந்த அவர், 2015ல் பாட்னாவில் உள்ள, நாளந்தா திறந்த வெளி பல்கலையில், எம்.ஏ., பொருளாதாரம் படிக்க பதிவு செய்தார். கடந்த ஆண்டு, முதலாம் ஆண்டு தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றார்.

தற்போது, இரண்டாம் ஆண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்று, எம்.ஏ., பட்டம் பெற உள்ளார்.

மிக அதிக வயதில், முதுகலை பட்டப் படிப்பை படிப்பவர் என, 'லிம்கா' இந்திய சாதனை புத்தகத்தில் இவருடைய பெயர் இடம்பெற்றது.

“இந்த வயதில் படிப்பது என்பது சற்று கடினமாகவே இருந்தது. இருப்பினும், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும்,” என்கிறார், வைஷ்யா.
சென்னையில் அரசு அலுவலகங்கள் களை கட்டுது! ஆயுத பூஜைக்கு தடபுடல் ஏற்பாடுகள்

பதிவு செய்த நாள்
செப் 26,2017 23:32



சென்ற ஆண்டு, இதே நேரத்தில், முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், ஆயுத பூஜை கொண்டாட்டம் நின்றுபோன அரசு அலுவலகங்களில், இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை ஏற்பாடுகள், தடபுடலாக நடந்து வருகின்றன. இதனால், சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும், சுத்தம் செய்யப்பட்டு, பளிச்சென்று தோற்றம் அளிக்கின்றன.சென்னையில், தலைமை செயலகம், எழிலகம், மின் வாரிய தலைமை அலுவலகம் உள்ளிட்ட, ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

அன்பளிப்பு

ஆயுத பூஜையை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன்பே, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில், தினசரி பயன்படுத்தும் பொருட்களை, ஊழியர்கள் சுத்தம் செய்வது வழக்கம். அதே போல், இம்முறையும் அரசு அலுவலகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, வண்ண வண்ன ஜிகினா தாள் ஒட்டப்பட்டு, அரசு அலுவலகங்கள் களைகட்டியுள்ளன.ஆயுத பூஜை தினத்தன்று, பொரி, கடலை, பழங்கள் போன்றவற்றை, கடவுள் படங்கள் முன்னால் வைத்து, பூஜை செய்வர். அதோடு, அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அன்றாடம் பயன்படுத்தும் அலுவலக பொருட்களையும், பூஜைக்கு வைத்து வணங்குவர்.

பூஜைகள் முடிந்த பிறகு, ஊழியர்களுக்கு பொரி, சர்க்கரை பொங்கல், சுண்டல் ஆகியவற்றுடன் பரிசு பொருட்களும் வழங்கப்படும். இதற்காக முன்கூட்டியே சீட்டு நடத்தி அல்லது அன்பளிப்பு வசூல் செய்து பணம் திரட்டி இருப்பார்கள்.
விடுமுறைஆயுத பூஜை மற்றும் விஜய தசமிக்கு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால், இந்த கொண்டாட்டங்கள், அரசு அலுவலகங்களில், ஆயுத பூஜைக்கு முந்தைய நாளே கோலாகலமாக நடக்கும்.சென்ற ஆண்டு ஆயுத பூஜையின்போது, முதல்வர் ஜெயலலிதா, உடல்நல குறைவு காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவரது உடல்நிலை குறித்து, எந்த தகவலும் சரியாக தெரியாத சூழ்நிலையில், அரசு அலுவலகங்களில், அப்போது ஆயுத பூஜை நடக்கவில்லை.

 பல அலுவலகங்களில், ஆயுத பூஜை மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது.தலைமை செயலகம் போன்ற முக்கிய அலுவலகங்களில், ஆயுதபூஜை கொண்டாட்டம் அடியோடு தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை, ஆயுத பூஜை வருகிறது. இதற்காக, தலைமை செயலகம், எழிலகம், மின் வாரிய தலைமை அலுவலகம், குறளகம், பனகல் மாளிகை உள்ளிட்ட அலுவலகங்களில், தற்போது, சுத்தம் செய்யும் பணி முழு வீச்சில் நடக்கிறது. சென்னை, மாநகராட்சிக்கு சொந்தமான ரிப்பன் கட்டடம், மண்டல அலுவலகங்களிலும், ஆயுத பூஜை ஏற்பாடுகள், களைகட்டி வருகிறது.

இதுகுறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது:ஆயுத பூஜை, இந்து பண்டிகையாக இருந்தாலும், அரசு அலுவலகங்களில், மத உணர்வுகளை முன்னிறுத்தி கொண்டாடுவதில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு, மரியாதை அளித்து, பூஜையில் வைத்து கும்பிடுகிறோம்.
தங்க நாணயம்இதை காரணமாக்கி, அலுவலகங்களை சுத்தம் செய்வதுடன், வண்ண காகிதங்களால் அலங்கரிக்கிறோம். தங்க நாணயம் முதல், பாத்திரம் வரை, பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படும். அலுவலகம் சுத்தம் செய்வது, அலங்காரம், பூஜை மற்றும் பரிசு பொருட்களுக்கான செலவை, அதிகாரிகள், ஊழியர்கள் பகிர்ந்து கொள்கிறோம். அதிகாரிகள் பயன்படுத்தும், அரசு கார்களுக்கு, பூஜை போட, அந்தந்த டிரைவர்களிடம், தலா, 500 ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வசூல் தீவிரம்

மின் வாரியம், பொதுப்பணி துறை, சென்னை மாநகராட்சி போன்றவற்றில், கட்டுமானம், உபகரணம் கொள்முதல் உள்ளிட்ட பணிகள், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட அலுவலகங்களில் பணிபுரியும் சிலர், ஆயுத பூஜையை காரணம் காட்டி, ஒப்பந்த நிறுவனங்களிடமும், பணம் வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -
ரூ.1,307 கோடி நன்கொடை: இந்திய தம்பதி தாராளம்

பதிவு செய்த நாள்27செப்
2017
04:59




ஹூஸ்டன்: அமெரிக்காவில் மருத்துவமனை கட்டுவதற்காக, அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் தம்பதி, 1,307 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்து உள்ளனர்.

இந்தியாவை பூர்வீகமாக உடைய, கிரண் படேல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், தம்பாவில், மருத்துவ சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி, பல்லவி படேலும் டாக்டராக உள்ளார். இருவரும் சேர்ந்து, மியாமியைச் சேர்ந்த நோவா சவுத் ஈஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு, 1,307 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

பல்கலை சார்பில், தம்பாவில் புதிய மருத்துவமனை வளாகம் கட்டுவதற்காக, நிலம் மற்றும் ரொக்கத்தை அவர்கள் நன்கொடையாக அளித்து உள்ளனர்.
வருமான சான்றிதழ்: சி.பி.எஸ்.இ., தடை

பதிவு செய்த நாள்27செப்
2017
04:12




சென்னை: 'பெற்றோரின் வருமான சான்றிதழ் கேட்க கூடாது' என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர் விபரத்தை, அந்த பள்ளிகள், சி.பி.எஸ்.இ., தலைமையகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கு அனுமதி வழங்கப்படும்.இதற்காக, பல பள்ளிகள், மாணவர்களின் பெற்றோரிடம், வருமான வரி ரிட்டன் சான்றிதழ் அல்லது வருமான சான்றிதழ் கேட்பதாக, மாணவர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, 'மாணவர் விபரங்களை பதிவு செய்ய, பெற்றோரிடம் வருமான வரித்துறை சான்றிதழோ, வருமான சான்றிதழோ கேட்கக் கூடாது. மாறாக, சுய கையெழுத்திட்ட கடிதம் பெற்றால் போதும்' என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.
சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி
பதிவு செய்த நாள்27செப்
2017
01:25



ஜெத்தா: சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியளித்து அந்நாட்டு அரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதியில்லாமல் இருந்தது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இது பெண்கள் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகவும் பார்க்கப்பட்டது. பல உலக மீடியாக்களில் இந்த விவகாரம் பல சமயங்களில் விவாதப்பொருளானது.

இந்நிலையில் தற்போது சவுதி அரசர் சல்மான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் சவுதியில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட இனி தடையில்லை எனவும், பெண்களுக்கு வாகனம் ஓட்ட இனி லைசன்ஸ் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது வரும் 2018 ம் ஆண்டு ஜுன் மாதம் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட தடை என்ற எந்த சட்டமும் இல்லை எனவும், இஸ்லாமிய மார்க்கத்திலும் பெண்கள் வாகனம் ஓட்ட தடை என எந்த இடத்திலும் கூறப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இத்தகவலை அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளது.
பரவிய வதந்திகளால் பதற்றம்
தமிழகம் முழுவதும், நேற்று திடீரென பரவிய வதந்திகளால், ஆங்காங்கே பதற்றமும், பீதியும் ஏற்பட்டது.



'மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட, ஆயுதப்படை போலீசார், உடனடியாக தலைமையிடத்திற்கு திரும்ப வேண்டும். மாவட்ட போலீசாரை பயன்படுத்தி, சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்களுக்கு, போலீஸ் டி.ஜி.பி., அனுப்பிய கடிதம், நேற்று மாலை வெளியானது.

இது, வழக்கமான நடைமுறை என்ற போதிலும், 'மாநிலம் முழுவதும், போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ஏதோ நடைபெற உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கவே, டி.ஜி.பி., இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்' என, தகவல் பரவியது. இதை, டி.ஜி.பி., மறுத்தார்.

'ஆயுதப்படை போலீசார், தலைமையிடம் திரும்புவது வழக்கமானது' என, விளக்கம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, 'உள்துறை செயலர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, போலீஸ், டி.ஜி.பி., ஆகியோர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். எனவே, ஆட்சி கலைக்கப்படலாம் அல்லது சட்டசபை முடக்கப்படலாம்' என்ற தகவலும் பரவியது. உடனடியாக, 'அதிகாரிகள் யாரும், கவர்னரை சந்திக்கவில்லை' என்ற விளக்கத்தை,ராஜ்பவன் வட்டாரம் தெரிவித்தது.

சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் தலைமையில், சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கும், ஆட்சி கலைப்பு தகவலுக்கும், முடிச்சு போடப்பட்டது. 'இக்கூட்டம், ஒவ்வொரு மாதம் இறுதியிலும் நடைபெறும். இம்மாத இறுதியில், விடுமுறை வருவதால், முன்னதாக நடத்தப்படுகிறது' என, அதிகாரிகள் தரப்பில் அவசர விளக்கம் அளிக்கப்பட்டது.

எனினும், வதந்திகள் குறையவில்லை. தி.மு.க., தலைவர், கருணாநிதி, சசிகலாவின் கணவர், நடராஜன் உடல் நலம் குறித்தும், வதந்திகள் பரவின. அதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பில் மறுப்புதெரிவிக்கப்பட்டது.அடுத்தடுத்து பரவிய வதந்திகளால், மாநிலம் முழுவதும் மக்கள் பதற்றம் அடைந்தனர்.

காரணம் என்ன?

திடீர் பதற்றம் குறித்து, டி.ஜி.பி., அலுவலக உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில், சில தினங்களுக்கு முன், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு எதிராக, பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. அதை கட்டுப்படுத்த, பட்டாலியன் எனப்படும், சிறப்பு காவல் படை போலீசார், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் என, பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க பட்டனர். தற்போது, போராட்டம் தணிந்து இயல்பு நிலை திரும்பிய பின்னும், சிறப்பு காவல் படை போலீசார், திருப்பி அனுப்ப படாமல் இருந்தனர்.அவர்களை, மாவட்டங்களில், வேறு பணிக்கு பயன்படுத்தி வந்தனர்.

இதனால், 'சிறப்பு காவல் படை போலீசாரை, உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். அதுபற்றி, இன்றும், நாளையும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என, டி.ஜி.பி., உத்தரவிட்டார். இந்த உத்தரவு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர்


வாய்க்கு வந்தபடி பேசும் மந்திரிகளால்  முதல்வர், 'அப்செட்': ஜெ., மரணத்தை  பகிரங்கமாக விமர்சிப்பதால் அதிர்ச்சி

ஜெ., மரணம் தொடர்பாக, அமைச்சர்கள், வாய்க்கு வந்தபடி பேசுவதால், முதல்வர் பழனிசாமி, 'அப்செட்' ஆகி உள்ளார். 'இந்த விவகாரத்தில், அனைவரும் ரகசியம் காக்க வேண்டும்' என, அமைச்சர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.



சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 2016 செப்., 22ல், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, ஜெ., அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவரை, மக்கள் பார்க்கவில்லை. சிகிச்சைப் பலனின்றி, டிச., 5ல் இறந்தார்.

மருத்துவமனையில் ஜெ., இருந்தபோது, 'அவரை பார்த்தோம்; நலமாக உள்ளார்; விரைவில் வீடு திரும்புவார்.இட்லி சாப்பிட்டார்; அதிகாரிகளுடன் ஆலோசித்தார்' என, தினமும் ஒரு செய்தியை, மருத்துவமனை வாசலில், அ.தி.மு.க.,வைசேர்ந்ததலைவர்களும், அமைச்சர்களும் தெரிவித்தனர்.

மாறுபட்ட கருத்து

அதே தலைவர்களும், அமைச்சர்களும், இப்போது மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர்.ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் கூறும் கருத்து, அரசுக்கு சிக்கலை யும், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், 'மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட பின், அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் கூறியதைநம்பி, ஜெ., இட்லி சாப்பிட்டார்; சட்னி சாப்பிட்டார் என, பொய் கூறினோம். அதற்காக, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என்றார்.

பயம்

அதேபோல, அமைச்சர் வீரமணி, நேற்று வேலுார் மாவட்டம், சோளிங்கரில் நடந்த பொது கூட்டத்தில் பேசுகையில், ''ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, யாரும் அவரை பார்க்கவில்லை. அவர் குணமாகி வந்ததும், சசிகலா குடும்பத்தினர், ஏதேனும், 'போட்டு' கொடுத்து விடுவர் என பயந்து, அவர்கள் கூறிய பொய்யை வெளியில் தெரிவித்தோம்,'' என்றார்.

சென்னையில், அமைச்சர் ராஜு கூறுகையில், ''மருத்துவமனையில், ஜெ.,யை அனைத்து அமைச்சர்களும் பார்த்தோம். தாயை இழந்த துக்கத்தில் இருக்கிறோம் என்பதால், அவர் இறப்பு குறித்து, விமர்சிக்க தயாரில்லை,'' என்றார்.

விசாரணை கமிஷன்

அமைச்சர் நிலோபர் கபில்,டில்லியில், நேற்று அளித்த பேட்டியில், ''ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, அமைச்சர்கள் குழுவாக சென்று பார்த்தோம். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து, வார்டுக்கு மாற்றும் போது, ஜெ.,யை பார்த்தேன், 'என்றார்.இதற்கிடையில், சென்னையில், அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ''விசாரணை கமிஷன்அமைக்கப்பட்டு, நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, எவ்வித கருத்தும் கூறக்கூடாது. எதுவும் கூற வேண்டியதிருந்தால், விசாரணை கமிஷனிடம் தெரிவிப்போம். அமைச்சர்கள் கூறுவது, அவர்களின் தனிப்பட்ட கருத்து,'' என்றார்.

முற்றுப்புள்ளி

இவ்வாறு அமைச்சர்கள், ஆளாளுக்கு ஒரு கருத்து தெரிவிப்பது, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அமைச்சர்கள் இடையே உள்ள மோதலையும் வெளிப்படுத்தி வருகிறது. ஜெ.,மரணத்தில் உள்ள விஷயங்களை, அமைச்சர்களே மறைக்க முயல்வதும் தெளிவாகி உள்ளது. இது, முதல்வர் பழனிசாமிக்கு, தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, 'விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதால், அமைச்சர்கள் யாரும், ஜெ., மரணம் குறித்து, இனி பேச வேண்டாம்; ரகசியம் காக்க வேண்டும்' என, முதல்வர் உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் -

Tuesday, September 26, 2017

105 கோடி பரிசுத் தொகை வாங்க ஆள் இல்லை: கேரள லாட்டரி சீட் சோகம்!

த.ராம்

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த சில நாள்களுக்கு முன் நடந்து முடிந்தது. அதில் முதல் பரிசாக 10 கோடி யாருக்குக் கிடைத்தது எனப் பலரும் எதிர்பார்த்து இருந்த வேளையில், மலப்புரம் மாவட்டம், பரப்பனங்காடியைச் சேர்ந்த முஸ்தபா என்கிற தேங்காய் வியாபாரிக்குக் கிடைத்தது. அதுபோல அதே ஓணம் பம்பர் லாட்டரியில் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்குக்கு 500 ரூபாய் பரிசு விழுந்தது.



சிலர் லாட்டரி சீட்டு வாங்குவதோடு மட்டும் நின்று விடுகின்றனர். அதற்கு பரிசு விழுந்ததா என்று கூட அவர்கள் பார்ப்பது இல்லை அதிலும் பலர் லாட்டரி சீட்டுகளைத் தொலைத்து விடுகின்றனர். இதனால் பலருக்குக் கிடைக்க வேண்டிய அதிர்ஷ்ட பணம் கிடைக்காமல் போய் விடுகிறது. பஸ் ஸ்டேண்ட்களிலும், ரயில்வே ஸ்டேஷன் அருகிலும் மாற்றுத்திறனாளிகள் லாட்டரி சீட்டுகளை விற்பதால் சிலர் அனுதாபத்திலும் வாங்கிச் செல்கின்றனர். அதை அவர்கள் கவனத்திலும் எடுத்துக் கொள்வது இல்லை. லாட்டரியில் பரிசு விழுந்தால் வங்கியிலோ அல்லது லாட்டரித்துறை அலுவலகத்திலோ டிக்கெட்டை ஒப்படைக்கலாம். லட்ச ரூபாய் வரை பரிசுக்கான தொகையை அந்ததந்த மாவட்ட லாட்டரித்துறை அலுவலகங்களில் இருந்து தொகை வழங்கப்படும்.

அதற்கு மேற்பட்ட தொகையை லாட்டரித்துறை இயக்குநரால் மட்டுமே வழப்படும். பரிசு விழுந்து 30 நாள்களுக்குள் லாட்டரி சீட்டை ஒப்படைக்க வேண்டும். சில முக்கியமான சூழல்களுல் இதை 90 நாள்களுக்கு அதிகரிக்க லாட்டரித்துறை இயக்குநருக்கு அதிகாரம் உள்ளதாம். லாட்டரி சீட்டை ஒப்படைத்த 30 நாள்களுக்குள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். கேரளாவைத் தவிர்த்து வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பரிசுத் தொகை விழுந்தால் அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னரே பரிசுத் தொகைகளை வழங்குவார்கள்.

இந்நிலையில் கடந்த நிதியாண்டில் மட்டும் லாட்டரியில் விழுந்த பரிசுத் தொகைகளை வாங்க ஆள் இல்லாமல் சுமார் 105 கோடி இருப்பதாகத் தகவல் பரவுகிறது.

நவராத்திரி கொலு படியில் என்னென்ன வைக்கலாம்?


Published on : 20th September 2017 01:20 PM  
golu-474x264


மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.
ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகள்.
இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
மூன்றாம் படி: மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
நாலாம் படி: நான்கறிவு உயிர்களாக விளங்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
ஐந்தாம் படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்
ஆறாம் படி: ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
ஏழாம் படி: மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.
எட்டாம் படி: தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவகிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
ஒன்பதாம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர். அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை வைக்கவேண்டும்.

அறிவோம்! தெளிவோம்! 91.6 என்றால் என்ன?


By தொகுப்பு: எம்.எஸ்.ஜி.  |   Published on : 26th September 2017 01:35 AM  |
gold

வழக்கமாக 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலைதான் எழுதி வைத்திருப்பார்கள். நியாயமான கடைகளில் 24 காரட், 22 காரட், 18 காரட் தங்கத்தின் விலையை எழுதி வைத்திருப்பார்கள். 10 கிராம் 24 காரட் விலை ரூ.23,000 என இருந்தால் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை அதில் 91.67 சதவீதமாக ரூ.21,068 ஆகத்தான் இருக்க வேண்டும். இதில் வேறுபாடு இருந்தால் உஷாராகுங்கள்.
சிலர் வரிக்கு பயந்து தங்க நகைக்கு ரசீது வாங்குவதை தவிர்ப்பார்கள். இது சில கடைக்காரர்களுக்கு சாதகமாக மாறும். அவர்கள் தரம் குறைந்த நகைகளை அதிக விலைக்கு விற்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பலர் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மிகவும் அழுக்கடைந்த நிலையில் கடைக்கு கொண்டு செல்வார்கள். இது போன்றவற்றுக்கு அதிக சேதாரம் போடும் நிலை ஏற்படும். இதற்கு பதில் நாமே சோப்பு, பிரஷ் மூலம் சுத்தப்படுத்தி கொண்டு சென்றால் சேதாரம் குறைய வாய்ப்பு உள்ளது.
சில கடைகளில் சேதாரம், செய்கூலி இல்லாமல் விற்பனை செய்வதாக சொல்வார்கள். அந்தத் தங்கம் சுத்தத் தங்கமாக இருக்குமா என்பதை உறுதிப்படுத்தி வாங்க வேண்டியது நுகர்வோருக்கு நல்லது.
91.6 என்றால் என்ன?
தங்க நகைகளில் 91.6 என்பது ஒரு கிராம் தங்கத்தில் 91.6 சதவீதம் சுத்தமான 24 காரட் தங்கமும் மீதி 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி இருக்கும். 91.6 என்பதுதான் 22 காரட் தங்கம்.
சேதாரத்தை தவிர்க்க..!
கைகளால் செய்யப்படும் நகைகள் வலிமையாக இருக்கும். ஆனால், சேதாரம் கூடுதலாக இருக்கும். அதிக சேதாரத்தை தவிர்க்க நினைப்பவர்கள் மிஷின் கட்டிங் நகைகளை வாங்க முற்படலாம். ஆனால், மிஷின் கட்டிங் நகைககளில் பளபளப்பு சீக்கிரமே போய்விடும் அபாயம் உள்ளது.
சேதாரமே இல்லை என்று கூறும் கடைகளில் நகையின் விலை ஏற்றப்பட்டிருக்கும். அல்லது தரம் குறைவாக இருக்கும்...ஜாக்கிரதை. 
ஃபேஷன், ஆன்டிக் நகைகளில் செய்கூலி அதிகம். கூடுதல் விலை என்பதால் தவிர்ப்பது நல்லது. முதலீடு செய்ய நினைப்போர் தங்கக் கட்டிகளை வாங்கி வைக்கலாம்.
தங்கத்தின் 916 கே.டி.எம். (கேட்மியம்) உறுதி செய்யும் ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்பதை பார்த்து நகைகளை வாங்க வேண்டும்.
பராமரிப்பு!
தங்க நகையை புதிதாக வாங்கும் போது பளபளவென்று ஜொலிக்கும். அந்தப் பொலிவு எப்போதும் நீடிக்க நகையை முறையாகப் பராமரிப்பது அவசியம்.
பூசணிக்காய் சாறில் தங்க நகைகளை ஊற வைத்துக் கழுவினால் அவை பளிச்சென்று இருக்கும்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பூந்திக் கொட்டையைப் பொடித்து தண்ணீரில் கலந்து, அதில் நகையை ஊற வைத்துக் கழுவி மென்மையான துணியால் துடைத்தால் நகைகள் பளபளவென இருக்கும். அதிக நாள்கள் நகைப் பெட்டியில் நகைகளை வைத்துவிட்டு கவனிக்காமல் இருந்துவிட்டால், நகை மீது சிகப்பு அல்லது பச்சை நிறம் படியக்கூடும். அதுபோன்ற நகைகளை அப்படியே அணிந்து கொள்ளாமல் சோப் நுரையில் அலசி போட்டுக் கொண்டால் ஜொலிக்கும்.
திருமணம் போன்ற விசேஷங்களுக்கு அணிந்து சென்றுவிட்டு நகைகளை கழற்றி வைக்கும் முன் சோப்பு நுரையில் நன்கு அலச வேண்டும். மேலும் மென்மையான பருத்தி துணியால் துடைத்து வைத்தால் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.
நகைப் பெட்டி இல்லாதவர்கள் நகைகளை மெல்லிதான பனியன் போன்ற பருத்தி துணியில் சுற்றி பீரோவில் பத்திரமாக வைக்கலாம். இதனால், நகைகளின் பளபளப்பு அப்படியே நீடிக்கும்.
கேடிஎம் என்றால் என்ன?
முன்பு எல்லாம் நகை செய்பவர்கள் நகையை பற்ற வைக்க பொடி என்று ஒரு கலவையை பயன்படுத்துவார்கள். தங்கம், வெள்ளி, செம்பு கலந்தது அந்தப் பொடி. இந்தப் பொடியை பயன்படுத்தி நகையை பற்ற வைக்கும் போது பொடியில் உள்ள செம்பு, வெள்ளி ஆகியவை நகையுடன் சேர்ந்து விடும். அதனால், தங்கத்தின் தரம் குறைந்து விடும். ஆனால் கேடிஎம் வந்த பிறகு அந்தப் பிரச்னை இல்லை. ஒரு கிராம் தங்கத்தில்100 மில்லி அளவில் கேடிஎம் சேர்த்தால் போதுமானது. இதைப் பயன்படுத்தி பற்றவைக்கும் போது ஏற்படும் வெப்பத்தில் கேடிஎம் மட்டும் தீய்ந்து போய்விடும். சுத்தமான நகை மட்டுமே இருக்கும்.
Facebook will now show you ads based on the stores you visit in real life

KARRISHMA MODHY | Updated: Sep 25, 2017, 06:07 PM IST, DNA webdesk

Facebook’s ad tools are getting seriously complicated. The world's largest social network will now allow advertisers to target users, based on the shops they visit in real life, thanks to location tracking, a feature many Facebook app users have enabled. The store-tracking tool is currently available for "thousands" of businesses in many countries.

“Driving foot traffic to store locations remains a priority for marketers, and many businesses are doing this with our store visits objective. Facebook store visits reporting is an estimated metric based on information from people with location services enabled on their phone,” says Facebook. “Now, thousands of businesses across more than a dozen countries are eligible to use Facebook's store visits reporting to understand the impact of their ads on foot traffic to their stores.”

The company stated that since the launch of these tools last year, thousands of companies have used Facebook’s offline conversions tool to measure the impact of their campaigns on offline purchases, including in-store sales and phone bookings.

“Select businesses that are eligible for store visits reporting can now also create custom audiences made up of people who have recently visited their store. This feature allows businesses to re-engage in-store audiences with more relevant and compelling campaigns, as well as create lookalike audiences,” Facebook added.
BHU VC in denial mode, says everything is normal

NSUI members protest on Monday (PTI)

On a day that Prime Minister Narendra Modi and BJP President Amit Shah have also expressed their concern over the ongoing situation in Banaras Hindu University (BHU), the Vice Chancellor denied, saying that everything is "normal" on campus and whatever has come to public domain is a propaganda by "outsiders".
Protests sparked in BHU after a female student was molested on the campus on Thursday evening.
Speaking to DNA over the phone, BHU VC GC Tripathi said, "When I became the VC of this university in 2014 there was a much bigger agitation going on here, more than 100 boys were admitted to hospital at that time. Things happen on campus, you cannot stop these things. This time, the matter has been taken out of context because of outsiders. Outsiders, including political parties, have created a negative situation to destroy peace on campus."
On being questioned about student's safety concerns and CCTV cameras, he added, "Ours is the only university that is completely covered by CCTV cameras. We got them installed long ago. In fact, when cameras were being installed the same girls who are protesting today came to us and said that cameras will disturb our privacy. There are 65 points already covered in the campus, which have CCTV cameras installed, there is no question of lack of security."
In a charter of demands that the students had given to BHU administration, they had also mentioned that women security guards should be deployed on the campus, to which the VC said, "As a policy, we can only have ex-military men as security guards on the campus. However, we have initiated the process of getting women guards."

VC's stand

BHU VC GC Tripathi denied that any girls were lathicharged. "There was no police action on girls, it was only the outsiders engaged in violence who were attacked by police," he said.



Karnataka HC rejects plea by first wife for grant of compassionate appointment to second wife's son

P Vasanth Kumar| TNN | Sep 25, 2017, 19:32 IST



BENGALURU: In an interesting case, the Karnataka high court has turned down the petition filed by the first wife a Karnataka State Road Transport Corporation (KSRTC) bus driver, seeking for appointment on compassionate grounds to the son of second wife of her husband. Dismissing the petition filed by Shanthalakshmi, first wife of one K Bheemegowda, Justice B Veerappa has noted that one Kumaraswamy, son of the petitioner was already employed in Bengaluru Metropolitan Transport Corporation(BMTC) when his father died on February 22,2009 and the entire family was living cordially under one roof and there cannot be one more appointment on compassionate ground.

In addition, the court has noted that there is a prohibition regarding bigamous marriage under KSRTC(Conduct and Discipline) regulations , 1971 and that the petitioner has not challenged the same. The petitioner had moved the court seeking appointment on compassionate grounds to K B Pradeep Kumar, son of Shanthamma, second of wife of her late husband who had served the corporation for 16 years before his death. She had claimed that the KSRTC authorities on January 11,2011 rejected her request submitted in March as well as December 2009 on the ground that there is no provision for appointment of son of the second wife of a deceased employee.
Anna University staffer, 46, falls from roof, dies

TNN | Updated: Sep 25, 2017, 08:59 IST



CHENNAI: A 46-year-old office assistant at Anna Universitydied after falling off the roof of a two-storey building on the varsity campus on Saturday.


Police said Chinnadurai, a resident of Kottur who worked in the IT department of the university, was cleaning the building ahead of Ayudha Puja celebrations when he slipped and fell from the roof.

"He sustained major injuries and fractured several bones," a police officer said. "Some students administered first aid before calling for an ambulance and taking him to a private hospital nearby."

LATEST COMMENTan IT staffer cleaning the building? something is fishy.Akbar

They later moved Chinnadurai to Government Royapettah Hospital, where doctors said he died of his injuries. The Kotturpuram police registered a case of accidental death.

"Chinnadurai sustained head injuries that proved to be fatal," the officer quoted a doctor's report as saying. "He died without responding to treatment." tnn
Retired judge to head probe into Jayalalithaa's death

PTI | Updated: Sep 25, 2017, 23:19 IST


Doubts have been raised over the events leading to Jayalalithaa's hospitalisation on Sept 22, 2016 and her dea... Read More

CHENNAI: Tamil Nadugovernment today set up an inquiry commission headed by a retired high court judge to probe AIADMK supremo J Jayalalithaa's death, amid renewed demands for a thorough investigation after a state minister claimed their party leaders had lied about her health condition.

Justice (Retd.) Arumugasamy will head the inquiry into the circumstances leading to the death of Jayalalithaa on December 5 last year after 75 days of treatment at corporate Apollo Hospitals here.

An official release said: "To conduct inquiry and submit a report on the death of former Chief Minister J Jayalalithaa, an inquiry commission headed by retired high court judge Justice Arumugasamy has been constituted."

A government order had been issued for this purpose, it added.

Doubts have been raised over the events leading to Jayalalithaa's hospitalisation on Sept 22, 2016 and her death by various quarters with opposition parties including the DMK demanding a CBI probe.

The probe into the AIADMK supremo's demise was a key pre-condition of rebel leader and now Deputy Chief Minister O Panneerselvam for the merger of two factions led by him and Chief Minister K Palaniswami.

Four days ahead of the merger, Palaniswami had on August 17 announced that a commission of inquiry would go into the death of Jayalalithaa.

After Panneerselvam had made a demand for a probe claiming there were doubts in the minds of people, the Apollo Hospitals had arranged a media conference in February last seeking to put to rest any such apprehensions.

A team of doctors, including UK-based specialist Richard Beale, who had treated Jayalalithaa, had explained in detail the medical attention given to her during hospitalisation.

Today's announcement by the government came amid renewed demands by opposition parties for a probe after Forest Minister Dindigul C Srinivasan last week told a public meeting in Madurai that AIADMK leaders had lied about Jayalalithaa's well being during her hospitalisation.

He had claimed that they had only repeated what Jayalalithaa's close aide V K Sasikala wanted them to state.

The minister had also demanded that the Sasikala camp make public the video evidence which it claimed to possess on the treatment of the late leader.

The government's announcement came even as sidelined AIADMK leader T T V Dhinakaran earlier in the day asserted he would submit before any probe agency a video of Jayalalithaa shot by his aunt Sasikala.

He also sought an inquiry commission headed by a serving senior judge.

Dhinakaran said his family was in possession of a video of hospitalised Jayalalithaa shot by Sasikala and was ready to submit it before any probe agency, including the CBI.

He claimed it had not been released so far since Jayalalithaa at that time was clad in a "nightie".

"Amma (Jayalalithaa) had lost a lot of weight... it was a video shot by my aunt (Sasikala) herself. You all know none would have seen Amma in a nightie, not any functionary.

"Even when Prime Minister Rajiv Gandhi visited Amma following her accident in 1989, she was fully attired... she always maintained that dignity," Dhinakaran said.

The video of Jayalalithaa, attired in a "loose nightie", was shot by Sasikala after the former was shifted from the ICU to a room in the hospital, he told reporters here.

According to Dhinakaran, when the opposition had earlier raised doubts over Jayalalithaa's treatment and death, Sasikala had suggested that "we ourselves should seek a judicial probe" into the matter.

"If that video is released by us now, there would be a debate on its authenticity," he said, adding it could be given to the probe panel.

LATEST COMMENTAll the MLAs who lied earlier should be simply dismissedGurcharan Singh
"We are ready to submit it at an appropriate forum, whether the CBI or even Interpol. We have nothing to fear," he said.

Srinivasan had also claimed that out of fear of Sasikala, they had publicly stated that Jayalalithaa ate idlies, consumed tea and was given sweets.

No one was allowed to meet the late chief minister. Whoever came, would be briefed by Sasikala's relatives that she was "all right", he had said seeking the pardon of public. Jayalalithaa was admitted to Apollo Hospitals for fever and dehydration on September 22, 2016. After a prolonged hospitalisation, she had died on December 5, 2016 following a cardiac arrest. SA VS TVS RT
Health condition of Sasikala’s husband Natarajan worsens

Pushpa Narayan| TNN | Sep 25, 2017, 18:49 IST




CHENNAI: Health condition of M Natarajan - husband of jailed AIADMK leader V K Sasikala-- who has been admitted to Gleneagles Global Health City at Perumbakkam in Chennai has worsened.

Natarajan has been undergoing treatment in the hospital for the past nine months for liver failure.

A bulletin issued by Institute of Liver Diseases and Transplantation director Dr K Illankumaran on Monday said the 74-year-old had been advised a combined kidney and liver transplant.

"Currently he is admitted to the liver intensive care unit with worsening liver failure, kidney failure and lung congestion. His condition remains critical," it said.

It said while he was receiving dialysis and liver failure, he was not on ventilator support and was awaiting the organs for a transplant.

On February 5, he was brought to Apollo Hospitals on the Greams Road after reportedly complaining of breathing problems. He then moved to Global Hospital and has been under the care of liver transplant surgeon Dr Mohamed Rela.

On September 10, the hospital said Natarajan had registered with the Tamil NaduOrgan Sharing Registry for deceased donor liver transplant.

TOP COMMENTWhy is he not taking treatment from Appollo and shifted from there?Dhanvanthri Giri

According to hospital sources, Natarajan's condition has worsened in the past two weeks. The hospital has been giving him a slow, low, efficient, daily dialysis (SLEDD) -- a form of therapy done in the intensive care unit on a regular basis to remove excess fluid from the body.

"He will need a dual transplant before his lung function deteriorates further," a senior doctor said.

COURT ORDER

ஆயுளை நீட்டிக்கும் உறவு

Published : 23 Sep 2017 10:38 IST




பல் துலக்கும் பிரஷ்சை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம். ஒரு பிரஷ்சை தொடர்ந்து பயன்படுத்தும் போது, அதன் முனைகள் தேய்ந்து பல்லிலுள்ள கறைகளை நீக்குவதற்கான வல்லமையை இழந்துவிடுகின்றன. கடையில் ‘சாஃப்ட்’ பிரஷ்களை வாங்குங்கள். பல்லின் முழுவட்ட மேற்பரப்பையும் அவைதான் வளைந்து சுத்தம் செய்யும்.

ஒரு மனிதரின் ஆயுளை நீட்டிப்பதில் முக்கிய அம்சம் வகிப்பது எது?

ஒரு மனிதன் நீண்ட நாள் வாழ்வதற்கு ஆரோக்கியமான உணவோ, உடலிலுள்ள கொழுப்பின் அளவோ, உடற்பயிற்சியோ முதன்மையான காரணங்கள் அல்லவென்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் 80 ஆண்டு ஆய்வு கூறுகிறது. ஆத்மார்த்தமான உறவுகள்தான் ஒருவரின் ஆயுளை நீட்டிக்கும் முக்கியமான அம்சம் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
முக்கிய தகவல் : கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க தேவையில்லை - உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன்.

''தொலைந்த படிப்பு சான்றிதழ்களின் நகல்களை பெற, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும்,'' என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில், 2012 - 2014 வரையிலான, அறிவியல் அறிஞர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை, அண்ணா பல்கலையில், நேற்று நடந்தது. இதில், 29 அறிவியல் அறிஞர்களுக்கு, விருதுகள் வழங்கி, உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் பேசினார்.
பின், நிருபர்களிடம் கூறியதாவது:

பொறியியல் கலந்தாய்வு, 'ஆன் - லைன் 'முறையில் நடத்தப்படும். பொறியியல் படிப்பில், 'நீட்' தேர்வு வந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்கலை மாணவர்கள், தங்களின் சான்றிதழ்கள் தொலைந்தால், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்கலாம். இரண்டு நாட்களில், நகல் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நடைமுறை, இன்று அமலுக்கு வருகிறது. ஒரு பல்கலையில் இருந்து, பிற பல்கலையில் சேர இடப்பெயர்வு சான்றிதழ் பெற தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
டில்லிக்கு இன்று சிறப்பு ரயில்

பதிவு செய்த நாள்25செப்
2017
20:32

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து, டில்லி, ஹஜ்ரத் நிஜாமுதீனுக்கு, இன்று சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், சென்ட்ரலில் இருந்து, மதியம், 1:00க்கு புறப்பட்டு, 28ம் தேதி அதிகாலை, 3:20 மணிக்கு, ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்றடையும். கூடூர், விஜயவாடா உட்பட, 11 நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இதற்கான முன்பதிவு துவங்கி விட்டது. இவ்விவரத்தை தெற்கு ரயில்வே அளித்துள்ளது.
கடைசி நேர முறையீடு : சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு
பதிவு செய்த நாள்25செப்
2017
20:23

புதுடில்லி: கேரளாவில், சில தனியார் மருத்துவக் கல்லுாரிகள் தொடர்பான வழக்கில், மருத்துவ கவுன்சில் கடைசி நேரத்தில், மேல்முறையீடு செய்ததை ஏற்று உத்தரவு பிறப்பிக்க முடியாது என, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
கேரளாவில், சில தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி, மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்தது. 

இதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில், மருத்துவக் கல்லுாரிகள் மனு தாக்கல் செய்தன. மருத்துவ கவுன்சிலின் உத்தரவை ரத்து செய்து, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி, பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில், தற்போது எந்த உத்தரவு பிறப்பித்தாலும், கல்லுாரிகள் மற்றும் மாணவர்களிடையே தேவையற்ற பீதியையும், குழப்பத்தையம் ஏற்படுத்தும்.
இறுதி நேரத்தில் செய்யப்படும் இந்த மேல்முறையீட்டு மனுவின் கீழ், உடனடி உத்தரவு பிறப்பிக்க முடியாது. மருத்துவ கவுன்சில் கல்வியாண்டு துவங்குவதற்கு முன், இந்த விஷயங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை, டிசம்பருக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
ரயில் இயக்க மறுத்து தூங்கிய உதவி டிரைவர்! : பொள்ளாச்சி - திருச்செந்தூர் பயணியர் தவிப்பு

பதிவு செய்த நாள்25செப்
2017
22:36




பொள்ளாச்சி: பொள்ளாச்சி - திருச்செந்துார் ரயிலில், பணிபுரிய மறுத்து, உதவி டிரைவர் துாங்கியதால், ரயில் ஒரு மணி நேரம், 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. நுாற்றுக்கணக்கான பயணியர், பொறுமையிழந்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

பொள்ளாச்சியில் இருந்து தினமும் காலை, 6:20 மணிக்கு, திருச்செந்துாருக்கு பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று காலை, குறிப்பிட்ட நேரத்துக்கு ரயில் புறப்படவில்லை. 

ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமானதால், பயணியர், நிலைய மேலாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உதவி டிரைவர், ஓய்வு நேரம் போதவில்லை எனக்கூறி, பணிக்கு வர மறுத்ததால் ரயில் புறப்பாடு தாமதமானது தெரியவந்தது. குறிப்பிட்ட நேரம் ஓய்வெடுத்த பின், உதவி டிரைவர் பாலமுருகன் பணிக்கு வந்தார். அதன்பின், ஒரு மணி நேரம், 20 நிமிடங்கள் தாமதமாக, காலை, 7:40 மணிக்கு ரயில் புறப்பட்டது. 

திருச்செந்துாரில் இருந்து பொள்ளாச்சி வரும் ரயில், வழக்கமாக இரவு, 9:30 மணிக்கு வந்தடையும். நேற்று முன்தினம், கோவில்பட்டி, நல்லி, குமாரபுரம் பகுதிகளில் தண்டவாள பணி நடந்ததால், இரண்டு மணி நேரம் தாமதமாக, இரவு, 11:45 மணிக்கு தான் பொள்ளாச்சி வந்தது. ரயில் டிரைவர் நாகராஜ் மற்றும் உதவி டிரைவர் பாலமுருகன், அதன்பின் துாங்கச் சென்றனர். இரவு ஓய்வுக்கு செல்ல தாமதமானதால், உதவி டிரைவர் பாலமுருகன், எட்டு மணி நேர ஓய்வுக்கு பிறகே பணிக்கு வர முடியும் என, கூறி விட்டார். இதனால், பொள்ளாச்சியில் இருந்து ரயில் கிளம்ப தாமதமானது.

மாற்று ஏற்பாடு இல்லை! : ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது: இரவு தாமதமானதால், எட்டு மணி நேர ஓய்வுக்கு பிறகே, பணிக்கு வர முடியும் என, உதவி டிரைவர் பாலமுருகன், அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில், மாற்றுப் பணியாளரை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.
காலையில் பாலமுருகனுக்கு தேவையான ஓய்வு கொடுக்காமல், பணிக்குச் செல்ல வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. மாற்றுப் பணியாளரை ஏற்பாடு செய்திருந்தால், தாமதம் ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'நள்ளிரவில் டிரைவர்கள் ஓய்வுக்கு சென்றனர். காலையில், மறுபடியும் திருச்செந்துாருக்கு ரயில் இயக்க வேண்டும். இடைப்பட்ட இரவு நேரத்தில், அந்த வழித்தடத்தில் பயிற்சி பெற்ற மாற்று டிரைவரை, உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை' என்றனர்.
பைக்கில் சென்றவருக்கு 'சீட் பெல்ட்' அபராதம்

பதிவு செய்த நாள்25செப்
2017
21:45




தஞ்சாவூர்: பைக்கில் சென்ற வாலிபர், 'சீட் பெல்ட்' அணியவில்லை எனக்கூறி, போலீசார், 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

தஞ்சை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி பாண்டியராஜன், 29. இவர், 21ம் தேதி, 'பேஷன் புரோ' பைக்கில், பை - பாஸ் சாலையில் வந்தார்.
தஞ்சை தாலுகா போலீசார், பாண்டியராஜன் வாகனத்தை நிறுத்தி, ஆவணங்களை கேட்டுள்ளனர். அவர், அனைத்து ஆவணங்களையும் காட்டிஉள்ளார். மேலும், 'ஹெல்மெட்' அணிந்திருந்தார்.

உடனே போலீசார், அவர் சீட் பெல்ட் அணிந்து வரவில்லை என மிரட்டி, 500 ரூபாய் அபராதம் வசூல் செய்துஉள்ளனர். 

அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன், நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் அண்ணாதுரையிடம் புகார் அளித்தார்.
பின், பாண்டியராஜன் கூறுகையில், ''பைக்கில் செல்ல, எதற்கு சீட் பெல்ட் என, தெரியவில்லை. பொதுமக்களை மிரட்டி, அபராதம் என்ற பெயரில், வசூல் வேட்டையில் ஈடுபடும் போலீசார், மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்,'' என்றார்.
கவுரவம் காக்க பலியான 6 உயிர்கள் : நெருக்கடியை சமாளிக்கும் மனம் தேவை

பதிவு செய்த நாள்25செப்
2017
23:29


மதுரை: 'வாழ நினைத்தால் வாழலாம்; வழியா இல்லை பூமியில்...' என்ற கண்ணதாசன் வரிகள் எந்த மனநிலைக்கும் பொருந்தும். மதுரையில் தற்கொலை செய்து கொண்ட குறிஞ்சிகுமரன், வேல்முருகன் குடும்பத்தினருக்கு எப்படி மனம் ஒத்துக்கொண்டது. எறும்பு கூட வாழ வழிதேடும்போது மனிதனால் முடியாதா. எந்த சூழலிலும் நெருக்கடியை சமாளிக்கும் மனம் தேவை என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
மதுரை சவுராஷ்டிராபுரம் குறிஞ்சிநகர் 4வது தெருவை சேர்ந்த குறிஞ்சிகுமரன்,45, அவரது சகோதரர் வேல்முருகன்,47, ஆகியோர் கடன் தொல்லையால் அவதிப்பட்டனர். இவர்கள் இருவர் உட்பட குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நேற்றுமுன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். நர்சரி பள்ளியை நடத்தி வந்த இவர்கள், பள்ளி விரிவாக்கத்திற்காக பலரிடமும் பல லட்சம் ரூபாய் பெற்றிருந்தனர். தவிர, தீபாவளி பண்டு, ஏலச்சீட்டு போன்றவற்றையும் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்று கடனை அடைக்குமாறு கடிதம் எழுதிவைத்து இரு குடும்பமும் விஷம் குடித்தது. இப்படி கடிதம் எழுதியவர்கள் அந்த சொத்துக்களை விற்று கடனை அடைத்துவிட்டு உயிர் வாழ்ந்திருக்கலாமே. இவர்களின் தற்கொலை முடிவு குறித்து மதுரை அரசு மருத்துவமனை மனநல நிபுணர் குமணன் கூறியதாவது:
இது மனநோயை சார்ந்தது. மனச்சிதைவு, அழுத்தம், உடல் ரீதியான பாதிப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்கின்றனர். மனஉளைச்சல், மனம் சரியில்லாத போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பிரச்னைக்கு நண்பர், உறவினர்கள் மூலம் தீர்வு காணவேண்டும். உணர்ச்சி வசப்படும் போது தான் தற்கொலை முடிவு எடுப்பர். நீண்ட நாளாக திட்டமிட்டே இக்குடும்பத்தினர் முடிவை எடுத்திருப்பர்.

குடும்பத்தில் உள்ள ஒருவர் தற்கொலை முடிவை எடுத்து, அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு மற்ற அனைவரும் சம்மதித்திருப்பர். தொழில் ரீதியாக சூழலை அறிந்து தங்களை தயார்படுத்த வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமானதை சிந்தித்து புத்திசாலித்தனமாக செயல்பட்டால், தொழில், குடும்பம் சிறக்கும். நெருக்கடியை சமாளிக்கும் மனம் தேவை.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை அனைத்து விஷயத்திற்கும் நல்லது தான். ஆனால், அக்குடும்ப தலைவர் திடமாக இருத்தல் வேண்டும். அவர் தவறான முடிவு எடுத்தால் குடும்பத்திற்கே பாதிப்பு வரும். கவுரவம் காக்கவே மதுரையில் 6 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது. 

தொழில், குடும்ப செலவிற்கு கடன் பெறுவோர், தங்களின் குடும்ப சூழல் அறிந்து கடன் பெற்றால் பிரச்னையை சமாளிக்கலாம், என்றார்.
போலீசார் கூறியதாவது: சகோதரர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் யாரும் நேற்று மாலை வரை புகார் கொடுக்க வரவில்லை. பண்டு சீட்டு போட்டவர்களுக்கு, நேற்று மதியம் 12:30 மணிக்கு பணம் தருவதாக குறிஞ்சிகுமரன் தெரிவித்துவிட்டு தற்கொலை முடிவை
தேடி இருக்கின்றனர், என்றனர்.

நேற்று மதியம் 6 பேரின் உடலும் கீரைத்துறை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. விருதுநகர் பொறியியல் கல்லுாரி விடுதியில் தங்கி படிக்கும் வேல்முருகன் மகன் பிரவீன், இறுதி சடங்குகளை செய்தார்.
'தொலைந்த சான்றிதழ் பெற ஆதார் போதும்'
பதிவு செய்த நாள்25செப்
2017
22:59

சென்னை: ''தொலைந்த படிப்பு சான்றிதழ்களின் நகல்களை பெற, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும்,'' என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில், 2012 - 2014 வரையிலான, அறிவியல் அறிஞர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை, அண்ணா பல்கலையில், நேற்று நடந்தது. இதில், 29 அறிவியல் அறிஞர்களுக்கு, விருதுகள் வழங்கி, உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் பேசினார்.

பின், நிருபர்களிடம் கூறியதாவது
:
பொறியியல் கலந்தாய்வு, 'ஆன் - லைன் 'முறையில் நடத்தப்படும். பொறியியல் படிப்பில், 'நீட்' தேர்வு வந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்கலை மாணவர்கள், தங்களின் சான்றிதழ்கள் தொலைந்தால், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்கலாம். இரண்டு நாட்களில், நகல் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நடைமுறை, இன்று அமலுக்கு வருகிறது. ஒரு பல்கலையில் இருந்து, பிற பல்கலையில் சேர இடப்பெயர்வு சான்றிதழ் பெற தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பாண்டியன் உட்பட 9 ரயில்கள் வேகம் அதிகரிப்பால் நேரம் மாற்றம்
பதிவு செய்த நாள்25செப்
2017
22:20

பாண்டியன், வைகை உட்பட, ஒன்பது ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுவதால், நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு, அக்., 15ல் வெளியாகிறது.
தெற்கு ரயில்வேயின், ரயில் கால அட்டவணை, ஆண்டுதோறும், அக்., 1ல் வெளியிடப்படும். 

அப்போது, குறிப்பிட்ட சில ரயில்களின் வேகத்தை அதிகரித்தல்; முக்கிய நிலையங்கள் இடையேயான, ரயில்களை நீட்டித்தல் மற்றும் ரயில்களின் நேரத்தை மாற்றி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். 'இந்தாண்டு, அக்., 1ல், ரயில் கால அட்டவணை வெளியிடப்படாது; அக்., 14 வரை, தற்போதுள்ள அட்டவணைப்படியே, ரயில்கள் இயக்கப்படும். அக்., 15ல், புதிய அட்டவணை வெளியிடப்படும்' என, தெற்கு ரயில்வே, சமீபத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், ரயில்வே போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: விழுப்புரம் - திருச்சி இடையே, இரண்டாவது ரயில் பாதை பணி முடிந்து, இருவழி பாதையில், ரயில் போக்குவரத்து நடப்பதால், மலைக்கோட்டை, பாண்டியன், வைகை, பல்லவன் சூப்பர் பாஸ்ட் உட்பட, ஒன்பது ரயில்களில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இதனால், இந்த ரயில்களின் பயண நேரம், 10 - 30 நிமிடங்கள் வரை குறையும்.

தாம்பரம் முனையம் : தாம்பரம் முனையத்தில் இருந்து, தற்போது, அசாம் மாநிலம், திப்ரூகர் மற்றும் கவுகாத்திக்கு, வாராந்திர ரயில்கள் சோதனை ரீதியாக இயக்கப்படுகின்றன. 

அத்துடன், எழும்பூரில் இருந்து, மும்பை தாதருக்கு இயக்கப்படும், தாதர் எக்ஸ்பிரஸ்; பீஹார் மாநிலம், கயாவுக்கு இயக்கப்படும், கயா வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் போன்றவையும், தாம்பரம் முனையத்தில் இருந்து இயக்கப்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், விரிவான தகவல்களை, தற்போது தெரிவிக்க இயலாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


ஜெ., மரணம் குறித்து விசாரணை :  நீதிபதி பெயரை அறிவித்தது அரசு
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது.






முதல்வராக இருந்த ஜெ., உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்; டிச., 5 இரவு இறந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவர் தொடர்பான புகைப்படம் எதுவும், அரசு தரப்பிலோ, மருத்துவமனை தரப்பிலோ வெளியிடப்படவில்லை. அவருடன், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.

ஜெ.,யின் கைரேகை

ஆனால், 'மருத்துவமனையிலேயே, அதிகாரிகளுடன் ஜெ., ஆலோசனை நடத்தினார்' என, செய்திக்குறிப்பு வெளியானது. அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், 'ஜெ., குணமடைந்து வருகிறார். இட்லி சாப்பிட்டார்; கிச்சடி சாப்பிட்டார்' என்றனர். தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போது, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கான, அங்கீகாரப் படிவங்களில், ஜெ.,யின் கைரேகை பதிவு பெறப்பட்டது. அப்போது, அவர் சுயநினைவோடு இருந்ததாக,மருத்துவர்கள்  தெரிவித்தனர்.

சி.பி.ஐ., க்கு பரிந்துரை

இந்நிலையில், ஜெ., மறைவுக்கு பின், பல்வேறு சந்தேங்கள் எழுந்தன. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, பன்னீர்செல்வம், 'ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்' என, கோரினார்.
அப்போது, அமைச்சர்கள், 'ஜெ., மறைவில் சந்தேகம் இல்லை' என, விளக்கம் அளித்தனர்.

அதேநேரத்தில், அ.தி.மு.க., அணிகள் இணைந்த போது, பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்று, 'ஜெ., மறைவு குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தற்போது, அமைச்சர்கள், 'நாங்கள் யாரும்,மருத்துவமனையில் ஜெ.,வை பார்க்கவில்லை; சசிகலா குடும்பத்தினர் மட்டுமே பார்த்தனர். ஜெ., இட்லி சாப்பிட்டதாக, நாங்கள் கூறியது பொய். அதற்காக, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என, தெரிவித்துள்ளனர்.மேலும், ஜெ., அண்ணன் மகன், தீபக்கோ, 'மருத்துவமனையில் மூன்று நாட்கள் மட்டுமே, ஜெ., நினைவுடன் இருந்தார்' என்ற, அதிர்ச்சி தகவலை, இப்போது வெளியிட்டுள்ளார்.

மர்மம் விலகுமா

இதனால், மருத்துவமனையில் ஜெ., இருந்த போது நடந்தது என்ன என்ற சந்தேகம், அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதில் கிடைக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது.
கோவையை சேர்ந்த, நீதிபதி ஆறுமுகசாமி, 65, மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார். 2014 ஏப்., 17ல், ஓய்வு பெற்றார். இவரது விசாரணைக்கு பின், ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறுமுகசாமி பின்னணி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, தமிழக அரசின் விசாரணை கமிஷனுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

* 1952 ஏப்., 28ம் தேதி கோவையில் பிறந்தார். கோவை நகராட்சி பள்ளியில் படித்தார்.
* 1971 : அரசு கலைக்கல்லுாரியில் பட்டப்படிப்பு முடித்தார்.
* 1974ல் சட்டப்படிப்பு முடித்தார். பின் வழக்கறிஞர் பயிற்சியில் சேர்ந்தார்.
* 1986 மே 16 : ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முனிசிபல் பதவியை ஏற்றார்.
* 1991 ஜூன் 3: அந்நீதிமன்றத்தில் உதவி நீதிபதியானார்.
* 1998 ஜன., 19: மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். பின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றினார்.
* 2009 மார்ச் 31: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரானார்.
* 2010 பிப்., 17: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு.
* 2014 ஏப்., 27: நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு
* 2014 ஏப்., 28 ---- 2016 பிப்., 8: மும்பையில் கடன் மீட்பு மேல்முறையீட்டு தீர்ப்பாணைய தலைவராக இருந்தார்.
* 2016 மார்ச் 21 : மத்திய தீர்ப்பாணையத்தின் சென்னை பெஞ்ச் உறுப்பினராக பொறுப்பேற்பு.- நமது நிருபர் -
குறைந்தபட்ச இருப்பு தொகை : எஸ்.பி.ஐ., புதிய அறிவிப்பு

பதிவு செய்த நாள்25செப்
2017
22:58

மும்பை: சேமிப்பு கணக்குகளில், குறைந்தபட்ச மாதாந்திர இருப்புத் தொகையை குறைத்து, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடந்த ஏப்ரல் மாதம், சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை புதிதாக நிர்ணயித்தது. மாநகரங்களில், 5,000ரூபாய்; நகர் மற்றும் பேரூராட்சிகளில், 3,000ரூபாய்; கிராமங்களில், 1,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை மாற்றி அமைக்கும்படி, தேசிய வங்கிகளின் குழுமம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, மாநகரங்களில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை, 5,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக குறைத்து, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நகர், பேரூராட்சி, கிராமங்களிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு, குறைந்தபட்ச இருப்புத் தொகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கான அபராதத் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. மாநகரம், நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு, 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இனி, 30 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விதிக்கப்படும். பேரூராட்சி மற்றும் கிராமங்களில், 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சமையல், 'காஸ்' சிலிண்டர் மானியம் சரியாக வருவதில்லை: மக்கள் புகார்
பதிவு செய்த நாள்26செப்
2017
03:52




வீட்டு சமையல், 'காஸ்' சிலிண்டர் மானியம், முறையாக வருவதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

மத்திய அரசு, ஆண்டுக்கு, 12 வீட்டு சமையல் காஸ் சிலிண்டருக்கு, மானியம் வழங்குகிறது. தமிழகம் உட்பட, நாடு முழுவதும், 2015 ஜன., முதல், காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி, வாடிக்கையாளர்கள், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானியத்தை, அவர்களின் வங்கிக் கணக்கில், எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும். இந்நிலையில், தற்போது, பலரின் வங்கிக் கணக்கிற்கு, மானிய தொகை முறையாக வருவதில்லை என, புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, பாதிக்கப்பட்டோர் கூறுகையில், 'துவக்கத்தில், காஸ் மானியம், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அந்த விபரம், எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்பட்டது. மூன்று மாதங்களாக, மானிய தொகையும் வரவில்லை; எஸ்.எம்.எஸ்.,சும் வரவில்லை. வங்கி மற்றும் காஸ் ஏஜன்சியில் கேட்டால், சரியான பதில் தருவதில்லை' என்றனர்.

இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: நேரடி மானிய திட்டம் துவங்கிய போது, வாடிக்கையாளரிடம் இருந்து, 'ஆதார்' அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் போன்றவற்றின் நகல்கள் வாங்கப்பட்டன. காஸ் ஏஜன்சிகள், அந்த விபரங்களை சம்பந்தப்பட்ட வங்கியில் வழங்கி, அதனுடன், ஆதார் எண்ணை இணைத்தன. அந்த வங்கிக் கணக்கு எண்ணிற்கு, 'நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' என்ற நிறுவனம் வாயிலாக, மானிய தொகை செலுத்தப்படுகிறது. ஏற்கனவே, வங்கியில் ஆதார் விபரத்தை இணைத்த பலரும், தற்போது, வேறு வங்கிகளில் கணக்கு துவக்குகின்றனர். அங்கும், ஆதார் தருகின்றனர்.

கடைசியாக, எந்த வங்கியில் கணக்கு துவக்கி, ஆதார் வழங்குகின்றனரோ, அங்கு தான், மானிய தொகை செலுத்தப்படும். இந்த விபரம் தெரியாமல், திட்டம் துவக்கிய போது தந்த வங்கிக் கணக்கில், மானியம் வரவில்லை என, சிலர் கூறுகின்றனர். ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின் விபரங்களை, வருமான வரித்துறையில் இருந்து வாங்கும் மத்திய அரசு, அவர்களுக்கான மானியத்தை நிறுத்தி விடுகிறது. மானிய விபரம், எஸ்.எம்.எஸ்., வரவில்லை எனில், வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும். மானிய திட்டத்தில் இணைந்த, அனைவரின் வங்கிக் கணக்கிற்கும், முறையாக மானிய தொகை செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
சட்டீஸ்கர் விவசாயிக்கு ரூ.76.73 கோடிக்கு மின்கட்டணம்
பதிவு செய்த நாள்25செப்
2017
16:16




ரூ.,76 கோடி மின்கட்டணம்; விவசாயி அதிர்ச்சி

ராய்பூர் : சட்டீஸ்கர் மாநிலம் மகாசமுத் மாவட்டத்தில் விவசாயி ராம் பிரசாத் என்பவருக்கு செப்டம்பர் மாத மின்கட்டணமாக ரூ.76.73 கோடி செலுத்தும்படி பில் அனுப்பப்பட்டுள்ளது. 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி ராம் பிரசாத், மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இது தொழிற்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறு என கூறி, சரியான மின்கட்டண தொகையான ரூ.1820 க்கான பில்லை ராம் பிரசாத்திடம் அதிகாரிகள் அளித்துள்ளனர். அதிலும் முந்தைய மாதத்தில் எப்போது மின்கட்டணம் சரிபார்க்கப்பட்டது என குறிப்பிடவில்லை.

இது குறித்த ராம் பிரசாத் கூறுகையில், இத மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே நான் மின்சாரம் பயன்படுத்துகிறேன் என்றார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து இந்த தவறுக்கு காரணமான கிளாக்குகள் இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்திருப்பதாக மின்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

விவசாயி ராம் பிரசாத்திற்கு தவறான மின்கட்டண பில் அனுப்பப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சட்டசபை கூட்டத் தொடரில் எழுப்பின. இது முதல் முறையல்ல எனவும், அந்த மாவட்டத்தை சேர்ந்த பல விவசாயிகளுக்கு ரூ.76 கோடிக்கும் மேலாகவே மின்கட்டணம் செலுத்த பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர். இதற்கு மின்துறை அலுவலர்களின் கவனக்குறைவே காரணம் என குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சிகள், அரசின் இந்த அலட்சியத்தை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தடைன்றி ஏ.டி.எம்.,ல் பணம்: ரிசர்வ் வங்கி உத்தரவு

பதிவு செய்த நாள்
செப் 26,2017 01:19



மதுரை: விடுமுறை நாட்களில் ஏ.டி.எம்.,களில் தடையின்றி பணம் கிடைக்க செய்யவேண்டுமென வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள் மூலம் 21 ஆயிரம் ஏ.டி.எம்., மையங்கள் செயல்படுகிறது. சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்திக்கு செப்., 29, அக்., 2 மற்றும் சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை. மாத சம்பளம் எடுத்தல், தீபாவளி ஆடை வாங்க ஏ.டி.எம்.,களை அதிகம் நாடும்போது பணதட்டுப்பாடு அதிகரிக்கும். இதை தவிர்க்க உரிய ஏற்பாடு செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தேசிய வங்கியின் மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஏ.டி.எம்.,களில் பணம் தட்டுப்பாடின்றி கிடைக்க, ரிசர்வ் வங்கி உத்தரவுபடி, பணம் வழங்கும் வங்கி இயங்கும். அங்கு பணத்தை எடுத்து ஏ.டி.எம்.,களில் நிரப்புவோம். ஏ.டி.எம்.,ஒன்றில் 2,000, 500, 100 ரூபாய் வீதம் 54 லட்சம் வரை வைக்கப்படும்,'' என்றார்.

NEWS TODAY 30.12.2025